இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 செப்டம்பர், 2020

காப்பிய வினா வங்கி 2

  1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 3
  2. சிலப்பதிகாரக் காதைகள் 30
  3. மணிமேகையின் காதைகள் எத்தனை? 30
  4. சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் ? 13
  5. சீவகசிந்தாமணியில் உள்ள பாடல்கள் 3145
  6. வளையாபதியின் பாடல்கள் 72
  7. சூளாமணியின் சருக்கங்கள் 12
  8. சூளாமணியின் பாடல்கள் 2131
  9. நீலகேசியின் சருக்கங்கள் 10
  10. நீலகேசியின் பாடல்கள் 94
  11. கம்பராமாயண படலங்கள் 113 [118 என்பாரும் உளர்]
  12. கம்ப ராமாயண பாடல்கள் 10484
  13. பெருந்தேவனார் பாரதத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் 1180
  14. பெரியபுராண சருக்கங்கள் 13
  15. பெரியபுராண பாடல்கள் 4286
  16. உத்தர ராமாயண படலங்கள் 17
  17. உத்தர ராமாயண பாடல்கள் 1528
  18. நளவெண்பாவின் காண்டங்கள் 3
  19. நளவெண்பாவின் பாடல்கள் 424
  20. வில்லிபாரத பருவங்கள் 10
  21. வில்லிபாரத பாடல்கள் 4351
  22. கந்தபுராண காண்டங்கள் 6
  23. கந்தபுராண பாடல்கள் 10345
  24. உதயண குமார காவிய காண்டங்கள் 6
  25. உதயண குமார காவிய பாடல்கள் 369
  26. நாககுமார காவிய சருக்கங்கள் 5
  27. நாககுமார காவிய பாடல்கள் 170
  28. திருவிளையாடற் புராண பெரும்பிரிவு 3
  29. திருவிளையாடற் புராண உட்பிரிவு 64
  30. திருவிளையாடற் புராண பாடல்கள் 3363
  31. சீறாபுராண காண்டங்கள் 3
  32. சீறாபுராண படலங்கள் 92 
  33. சீறாபுராண பாடல்கள் 5027
  34. தேம்பாவணியின் காண்டங்கள் 3
  35. தேம்பாவணியின் படலங்கள் 36
  36. தேம்பாவணியின் பாடல்கள் 3615
  37. இரட்சணிய யாத்திரிகத்தின் காண்டங்கள் 4
  38. இரட்சணிய யாத்திரிகத்தின் படலங்கள் 47
  39. இரட்சணிய யாத்திரிகத்தின் பாடல்கள் 3800
  40. இரகுவம்ச காண்டங்கள் 3
  41. இரகுவம்ச படலங்கள் 27
  42. இரகுவம்ச பாடல்கள் 2444

பதினெண் கீழ்க்கணக்கு வினா வங்கி 1

  1.  பதினெண் கீழ்க்கணக்கு- இதில் உள்ள கணக்கு என்பதன் பொருள் யாது? நூல்
  2. கீழ் என்பதன் பொருள் யாது? குறைந்த அடி அளவு கொண்டவை
  3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை 'அடிநிமிர்பில்லாச் செய்யுள்' தொகுதி எனக் குறிப்பது? பன்னிரு பாட்டியல்
  4. அடி குறைந்த கெழ்கணக்கு நூல்கள் அம்மை என்னும் அழகு பெற்றுவரும் எனக் கூறும் நூல்? தொல்காப்பியம்
  5. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்கை முன்வைத்தவர்கள்? பேராசிரியர், மயிலைநாதர்
  6. அறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை? 11
  7. புறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை ? 1
  8. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? 6 
  9. கருத்துக்கள் எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 4[நாண்மணிக்கடிகை, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம்
  10. பாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 8 [பழமொழியைப் பழமொழி நானூறு எனக் கொண்டால் 9] 
  11. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் முந்திய நூல்? திருக்குறள்
  12. திருக்குறள் எந்தப்பாவால் ஆனது? குறள் வெண்பா
  13. ஒரு திருக்குறளில் இடம்பெறும் சீர்கள் எத்தனை? 7
  14. திருக்குறளை இயற்றியவர்? திருவள்ளுவர்
  15. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் யாவை?  முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர்
  16. திருவள்ளுவரின் பெற்றோர், மனைவி குறித்துக் கூறும் நூல்? விநோதரசமஞ்சரி
  17. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 133
  18. திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன? 1330
  19. திருக்குறளில் எத்தனைப் பிரிவுகள் உள்ளன?   3 [அறம், பொருள், இன்பம்]
  20. அறத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 38
  21. பொருள்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?  70
  22. காமத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 25
  23. விவிலியத்திற்கு அடுத்து உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல் எது? திருக்குறள்
  24. திருக்குறளின் வேறு பெயர்கள் யாவை? தமிழ்மறை, பொதுமறை, முப்பால், பொய்யாமொழி, தெய்வநூல், வாயுறை வாழ்த்து, உத்திரவாழ்த்து 
  25. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யாவர்? தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், [நிரல்படுத்தப்பட்டது]
  26. பதின்மரில் உரை கிடைக்கும் ஐவர் யாவர்? மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர்
  27. ஐவர் உரையையும் இணைத்து உரை வளம் யாரால் வெளியிடப்பட்டது? தருமை ஆதீனம்
  28. உரைக்கொத்து என்னும் பெயரில் ஆங்கில மொழி பெயர்ப்புடன் திருக்குறள் நூல் வெளியிட்ட அமைப்பு எது? திருப்பனந்தாள் காசி மடம்
  29. திருக்குறளுக்குப் பாடல் இயற்றியவர்களுள் காலத்தால் முந்தியவர் யார்? பரிமேலழகர்
  30. திருக்குறளுக்குக் கலைஞர் இயற்றிய காட்சிப்படுத்தலுடன் கூடிய உரை நூல் எது? குறளோவியம்
  31. திருக்குறளைப் புகழும் பாடற் தொகுப்பு எது? திருவள்ளுவமாலை
  32. "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி                                                      குறுகத் தரித்த குறள்" - யார் கூற்று? ஔவை
  33. திருவள்ளுவ மாலையில் வள்ளுவத்தைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்? 53
  34. திருக்குறள் எந்த நூற்றாண்டில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறாது? கி.பி. 4 [இதற்கு சான்று இல்லை]
  35. திருக்குறளில் காலமாக இராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுவது? கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு
  36. திருக்குறளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனக் குறிப்பவர் யார்? மறைமலையடிகள்
  37. திருக்குறள் ஆறாம் நூற்றாண்டினது எனக்கூறுபவர் யார்? வையாபுரி பிள்ளை
  38. வள்ளுவரின் காலமாக தமிழக அரசு கணிப்பது? கி.மு. 31 
  39. நாலடியாரின் வேறு பெயர் என்ன? நாலடி நானூறு, வேளாண் வேதம்
  40. நாலடியாரில் எத்தனைப்பாடல்கள் உள்ளன? 400
  41. நாலடியாரைத் தொகுத்தவர் யார்? பதுமனார்
  42. நாலடியாரின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்? பதுமனார்
  43. நாலடியார் எத்தனைப் பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளது? அறம், பொருள், இன்பம் [12இயல்கள்]
  44. நாளடியாரில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 40
  45. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? ஜி.யு.போப்
  46. நாலடியாரின் காலம் எது? கி.பி 7ஆம் நூற்றாண்டு
  47. நாலடியாரின் காலத்தைக் கணிக்க உதவுவது எது? பெருமுத்திரையர்கள் பற்றிய குறிப்பு
  48. எத்தனை சமண முனிவர்களில் தப்பியவை நாலடியார் என நம்பப்படுகிறது? 8000 சமண முனிவர்கள்
  49. நாலடியாரை மேற்கோளாகக் கையாண்ட உரையாசிரியர்கள் யாவர்? பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்
  50. சமண முனிவர் நக்கீரரால் நாலடியார் இயற்றப்படதாகக் கூறும் நூல் எது? யாப்பருங்கல உரை [இதற்கு சான்று இல்லை. யாரும் இக்கருத்தை ஏற்கவில்லை]

சங்க இலக்கிய வினா வங்கி 4: பத்துப்பாட்டு[ஆற்றுப்படை அல்லாதவை]

  1. முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்? நப்பூதனார்
  2. முல்லைப்பாட்டு  எத்தனை அடிகளைக் கொண்டது? 103
  3. முல்லைப்பாட்டு ஆசிரியரின் ஊர் எது? காவிரிப்பூம்பட்டினம்
  4. முல்லைப்பாட்டு பெயர்க்காரணம் என்ன? முல்லைத் திணையைப் பாடுவது
  5. முல்லைப்பாட்டின் வேறு பெயர்? முல்லை
  6. நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல் எது? முல்லைப்பாட்டு
  7. முல்லைப்பாட்டில் திருமாலின் எந்த அவதாரம் காட்டப்படும்? வாமனன்
  8. யானையைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்திய மொழியாக முல்லைப்பாட்டுக் கூறும் மொழி எது? வடமொழி
  9. தலைவன் உறங்கும் இடத்திற்குக் காவலாக பேச இயலாதவரை அமர்த்தியதைக் கூறும் நூல்? முல்லைப்பாட்டு
  10. பாசறையில் பெண்கள் பணி செய்தமையைக் கூறும் இலக்கியம்? முல்லைப்பாட்டு
  11. குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்? கபிலர்
  12. குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள அடிகள் எத்தனை? 261
  13. குறிஞ்சிப்பாட்டு எழுந்ததன் நோக்கம் என்ன? ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவிக்க.
  14. குறிஞ்சிப்பாட்டு எழுந்த நோக்கம் குறித்துக் கூறும் உரையாசிரியர் யார்? நச்சினார்க்கினியர்
  15. குறிஞ்சிப்பாட்டின் மற்றொரு பெயர் யாது? பெருங்குறிஞ்சி
  16. குறிஞ்சிப்பாட்டை பெருங்குறிஞ்சி என்பவர் யார்? நச்சினார்க்கினியர்
  17. குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர்கள் எத்தனை? 99
  18. குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களை எத்தனை அடிகளில் கூறுகிறது? 34
  19. 'கபிலர் இயற்கையை வர்ணிப்பதில் உலகிலேயே சிறந்தவர் ஆகின்றார்' எனக் கூறியவர் யார்? தனிநாயக அடிகள்
  20. குறிஞ்சிப்பாட்டிற்கு ஆய்வுரை செய்தோர் யாவர்?                 எஸ்.ஆர்.மார்க்க பந்து சர்மா,  தமிழண்ணல்
  21. குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள புணர்ச்சி வகைகள்? களிறுதரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி
  22. கோவை இலக்கியம் தோன்ற வித்தாக அமைந்த நூல்? குறிஞ்சிப்பாட்டு
  23. பட்டினப்பாலையை இயற்றியவர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  24. பட்டினப்பாலை எத்தனை அடிகளைக் கொண்டது? 301
  25. பட்டினப்பாலையில் ஆசிரியப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 138
  26. பட்டினப்பாலையில் வஞ்சிப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 163
  27. பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன? வஞ்சி நெடும்பாட்டு
  28. பட்டினப்பாலையை வஞ்சிப்பா எனக்குறிப்பவர் யார்? இளம்பூரணர்
  29. பட்டினப்பாலையில் சிறப்பிக்கப்படும் மன்னன் யார்? கரிகாற்சோழன்
  30. பட்டினப்பாலையில் அகப்பொருள் கூறும் அடிகள் எத்தனை? 6
  31. பழந்தமிழர் வணிக அறம், கடல் வாணிகம், துறைமுகச் செயல்பாடு குறித்துக்கூறும் நூல் எது? பட்டினப்பாலை
  32. பட்டினப்பாலைக்கு சிறந்த ஆய்வுரை எழுதியோர் யாவர்? மறைமலையடிகள், இராகவையங்கார [சாமி சிதம்பரனார் உரையுள்ளது]
  33. பட்டினப்பாலையைப் பாடியதற்காக உருத்திரங்கண்ணனுக்கு, கரிகாற் பெருவளத்தான் அளித்த பரிசு என்ன? பதினாறு நூறாயிரம் பொற்காசு
  34. மதுரைக்காஞ்சியின்  ஆசிரியர் யார்? மாங்குடி மருதனார்
  35. மாங்குடி மருதன் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? மதுரைக்காஞ்சிப் புலவர், காஞ்சிப் புலவனார்
  36.  மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்
  37. மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகள் எத்தனை? 782
  38. மதுரைக்காஞ்சியின் மையப்பொருள் என்ன? நிலையாமை
  39. மதுரைக்காஞ்சி சிறப்புப் பெயர் என்ன? காஞ்சிப்பாட்டு[காஞ்சித்திணை], கூடற்றமிழ்
  40. மதுரையின் வணிக செயல்பாடுகளைக் கூறுவது? மதுரைக்காஞ்சி
  41. மதுரைக்காஞ்சியில் நிலையாமை குறித்துப் பேசும் பாடலடிகள் எத்தனை? 428
  42. தொல்காப்பிய காஞ்சி விளக்கப்பட்டு எனக் குறிக்கப்படுவது எது? மதுரைக்காஞ்சி
  43. 'ஆறு கிடந்தன்ன அகன் நெடுந்தெரு' என மதுரை நகரத் தெரு குறித்துக் கூறும் நூல் எது? மதுரைக்காஞ்சி
  44. மதுரை அல்லங்காடியில் எழும் ஓசைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது? கடற் பறவைகளின் ஓசை
  45. நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
  46. நெடுநல் வாடையின் பாட்டுடைத் தலைவனாகக் குறிக்கப்படுபவர் யார்? பாண்டிய நெடுஞ்செழியன்[இது முடிந்த முடிவு அல்ல. இதனைப் புற நூல் என்போர் கருத்து. ஆனால் பலர் இதனை அக நூல் என்றே கூறுகின்றனர். அதனாலே இது அகப்புற நூல் எனப்படுகிறது]
  47. நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது? 188
  48. நெடுநல் வாடையை 'சிற்பப்பாட்டு' எனச்சிறப்பித்தவர்? தமிழண்ணல்
  49. 'நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம். நக்கீரர் கண்ட சுரங்கம். தமிழ்ச்சுரங்கம்' என நெடுநல் வாடையைப் போற்றியவர்? திரு.வி.க.
  50. நெடுநல்வாடைக்குக் கோதண்ட பாணி இயற்றிய உரையின் பெயர் யாது? புனையா ஓவியம் 
  51. நெடுநல் வாடைக்கு உரை செய்தோர்? கோதண்டபாணி, செ. வெங்கடாச்சலச் செட்டியார்

சங்க இலக்கிய வினாடி வினா - 3: பத்துப்பாட்டு [ஆற்றுப்படை]

  1. ஆற்றுப்படை இலக்கணம் கூறும் நூல் ? தொல்காப்பியம் [பு.திணையியல்]
  2. அற்றுப்படுத்துவோர் யார் யார்? கூத்தர், பாணர், பொருநர், விறலி
  3. ஆற்றுப்படையில் மிக நீண்ட நூல் எது? மலைபடுகடாம் [ 583]
  4. ஆற்றுப்படையில் சிறிய நூல் எது? பொருநராற்றுப்படை [248]
  5. ஆற்றுப்படையின் [பத்துப்பாட்டின்] கடவுள் வாழ்த்து? முருகாற்றுப்படை
  6. திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
  7. திருமுருகாற்றுப்படையின் அடிகள் எத்தனை? 317
  8. திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்? முருகு, புலவராற்றுப்படை
  9. அற்றுப்படுத்தப்படும் தலைவனின் பெயரால் அமைந்த நூல் எது? திருமுருகாற்றுப்படை
  10. பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள பத்துப்பாட்டு நூல் எது? திருமுருகாற்றுப்படை
  11. திருமுருகாற்றுப்படையின் தலைவன் யார்? முருகன்
  12. திருமுருகாற்றுப்படை உருவானது குறித்த செவிவழி செய்தி யாது? நக்கீரரைப் புடைத்துத் திண்ண கற்கிமுகி பூதம் சிறைவைக்க அதனிடமிருந்து காக்க முருகனிடம் வேண்டுவது.
  13. ஒருவரைப்போல வேடமிட்டுப் பாடும் கலைஞர் யார்? பொருநர்
  14. பொருநர்கள் எத்தனை வகைப்படுவர்? 2[ஏர்க்களம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர்]
  15. பரணி பாடும் கலைஞர் யார்? பொருநர்
  16. பொருநராற்றுப்படையில் குறிக்கப்படும் புலவர்கள் எவற்றைப் பாடுவர்? போர்க்களம் பாடும் பொருநர்
  17. பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? கரிகாற்பெருவளத்தான்
  18. பொருநராற்றுப்படையின் ஆசிரியர் யார்? முடத்தாமக்கண்ணியார்
  19. பொருநராற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 248
  20. ஆசிரியப்பாவோடு வஞ்சியடிகளும் விரவப்பெற்ற ஆற்றுப்படை நூல் எது? பொருநராற்றுப்படை
  21. பொருநராற்ருப்படையில் எந்தப் போரின் வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? வெண்ணிப் போர்
  22. தாய்வயிற்றில் இருக்கும்போதே அரசு ஏறிய மன்னன் யார்? கரிகால் பெருவளத்தான்
  23. பொருநராற்றுப்படையில் பெண்ணின் பாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள உவமை யாது? ஓடிக்கலைத்த நாயின் நாக்கு
  24. சிறுபாணாற்றுப்படையின்  பாட்டுடைத் தலைவன் யார்? ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
  25. சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் யார்?  நல்லூர் நத்தத்தனார்
  26. சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 269
  27. பண் பாடுவோ எவ்வாறு அழைக்கப்படுவர்? பாணர்
  28. பாணார் எத்தனை வகைப்படுவர்? 3 [இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்]
  29. யாழ்ப்பாணர் எத்தனை வகைப்படுவர்? 2[பேரியாழ்ப் பாணர், சிறிய யாழ்ப்பாணர்]
  30. சிறுபாணாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படும் பாணர்? சிறுபாண்ர்
  31. கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம் பாடும் ஆற்றுப்படை எது? சிறுபாணாற்றுப்படை
  32. சிறுபாணாற்றுப்படையில் இடம்பெரும் ஊர்கள்? வஞ்சி, உறையூர், மதுரை, ஆமூர், வேலூர், மாவிலங்கை
  33. இமயமலையில் வில் பொறித்த குட்டுவன் வரலாறு கூறும் நூல் எது?  சிறுபாணாற்றுப்படை
  34. "தமிழ்னிலை பெற்ற தாங்கரும் மரபின்                                                                       மகிழ்நனை மறுகின் மதுரை" - என மதுரையைப் போற்றும் நூல்? சிறுபாணாற்றுப்படை
  35. பெரும்பாணற்றுப்படையின் ஆசிரியர் யார்?  கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  36. பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் யார்? இளந்திரையன்
  37. பெரும்பாணற்றுப்படை எத்தனை அடிகள் கொண்டது? 500
  38. ஐந்நில மக்களின் இயல்பு, விருந்தோம்பல் பேசும் நூல்? பெரும்பாணாறு
  39. கலங்கரை விளக்கம் குறித்து பேசும் ஆற்றுபடை நூல் யாது? பெரும்பாணாற்றுப்படை [ நீர்ப்பாயல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது]
  40. பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படும் ஊர்? காஞ்சி
  41. மலைபடுகடாமின் ஆசிரியர் யார்? பெருங்குன்றூர் கௌசிகனார்
  42. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்? நன்னன்
  43. மலைபடுகடாமின் பாடல் அடிகள் எத்தனை? 583
  44. மலைபடுகடாமில் ஆற்றுப்படுத்தப் படும் கலைஞர்? கூத்தர்
  45. மலைபடுகடாமின் வேறு பெயர்? கூத்தராற்றுப்படை
  46. மலைபடுகடாம் என பெயர் வரக்காரணம்? மலையில் எழும் ஓசைகளைப் பாடுவதால்
  47. மலைபடுகடாமில் மலையும், அருவியும் எதனால் உவமிக்கப்படுகிறது? மலை - யானை, அருவி - யானையின் மதநீர்
  48. கடாம் என்பதன் பொருள் என்ன? ஓசை
  49. மலைபடுகடாமில் எத்தனை வகையான ஓசைச் சுட்டப்படுகிறது? 20
  50. இசை மருத்துவம் பற்றிக் கூறும் ஆற்றுப்படை நூல் எது? மலைபடுகடாம்

சங்க இலக்கிய வினா வங்கி -2: பத்துப்பாட்டு

  1.  பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை? 5
  2. பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்கள் எத்தனை? 6
  3. பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள் எத்தனை? 3
  4. பத்துப்பாட்டில் ஆற்றுப்படை அல்லாத புற நூல் எது? மதுரைக்காஞ்சி
  5. பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்த நூல் எது? நெடுநல்வாடை
  6. பத்துப்பாட்டு நூல்கள் எப்பாவால் ஆனவை? ஆசிரியப்பா
  7. பத்துப்பாட்டைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? எட்டு
  8. பத்துப்பாட்டில் இரு பாடல்களைப் பாடிய புலவர்கள் யாவர்?  நக்கீரர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
  9. நக்கீரர் பாடிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
  10. கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பத்துப்பாட்டு நூல்கள் எவை? பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
  11. ஆற்றுப்படை நூல்களை நிரல்படுத்துக. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம்
  12. பத்துப்பாட்டிற்கு முழுமையாக உரை செய்தவர்? நச்சினார்க்கினியர்
  13. மறைமலை அடிகள் ஆராய்ச்சி உரை எழுதிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு
  14. பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ                                                          எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே"                          - யார் கூற்று?  மனோன்மணீயம் சுந்தரனார்
  15. "சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்" என பத்துப்பாட்டு குறித்துக் கூறியவர் யார்? நச்சினார்க்கினியர்
  16. ஊரால் பெயர் பெற்ற பத்துப்பாடு நூல்கள் எவை? மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
  17. பத்துப்பாட்டில் பாட்டு எனப் பெயரிடப்பட்ட நூல்கள் எத்தனை? 2 [முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு]
  18. பத்துப்பாட்டு முதலும், முதலுமாக இருப்பவை? ஆற்றுப்படை
  19. பத்துப்பாட்டில் மிக நீண்ட பாடல் எது?  மதுரைக்காஞ்சி [782 அடிகள்]
  20. பத்துப்பாட்டில் சிறிய பாடல் எது? முல்லைப்பாட்டு [103 அடிகள்]
  21. வஞ்சிப்பா விரவிய பத்துப்பாட்டு நூல்கள் யாவை? பொருநராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை

தமிழின் தொன்மைச்சிறப்பு

  1. தமிழ் பக்தியின் மொழி என்றவர்? தனிநாயக அடிகள்
  2. தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்ற மொழியறிஞர்? மாக்ஸ்முல்லர்
  3.  ஆற்றல் மிக்கதாகவும், சொல்ல வந்த பல கருத்துக்களை சில சொற்களால் புலப்படுத்துவதாகவும் தமிழ் போல் வேறு எம்மொழியும் இல்லை என்றவர் யார்? பெர்சிவல் பாதிரியார்
  4. வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய உலக இலக்கிய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாக கூறியவர்? டேவிஸ் [Rhys Davis]
  5. இந்திய மொழிகள் எவ்வாறு பகுக்கப்படுகின்றது? திராவிட இனம், ஆரிய மொழி இனம்
  6. திராவிட மொழி இனத்தில் உள்ள திருந்திய மொழிகள் எத்தனை?                      6 [தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குடகு, துளு] 
  7. திருந்தா வடதிராவிட மொழிகள் யாவை? பிராகுய், கூர்க், மால்ரோ
  8. திருந்தா மத்திய திராவிட மொழிகள் யாவை? கோலமி- நாய்கி, பார்ஜி, கொண்டி, கோண்டு, குய்-கூவி
  9. திருந்தா தென் திராவிட மொழிகள் யாவை? துளு, கூர்க், துதம், கோதம்
  10. வட, தென், மத்திய திராவிட மொழிகளைப் பகுத்துக் கூறியவர்? பரோ
  11. வட இந்திய மொழிகள் பெரும்பாலானவை எந்த இனத்தைச் சேர்ந்தவை? ஆரியத் திராவிட இனம்
  12. திராவிட மொழி இனத்தின் தாய் மொழி எது? தமிழ்
  13. கால்டுவெல் குறிப்பிடும் திராவிட மொழிகள் எத்தனை? 12
  14. அண்மைக்காலத்தில் குறிக்கப்படும் திராவிட மொழிகளின் எண்ணிக்கை? 20
  15. தமிழும் வடமொழியும் கலந்து வடநாட்டவர் பேசிய மொழி எது? வடகு
  16. தமிழும் வடுகும் கலந்து பிறந்த மொழி என்ன? கன்னடம்
  17. தமிழும் வடுகும் கலந்து கன்னடம் பிறந்ததாகக் குறிக்கும் இலக்கியம் எது? கலிங்கத்துப்பரணி
  18. "மழலைத் திருமொழியிற் சில வடுகும் சில தமிழும்                                                குழறித் தருநாடியார் குறுகிக் கடைதிறமின் - எனும் கலிங்கத்துப்பரணி வரி எம்மொழி குறித்து பேசுகிறது? கன்னடம்
  19. கன்னடத் தொடர்பாலும், கிரந்த எழுத்துக்களின் செல்வாக்காலும் தமிழில் இருந்து பிரிந்த மொழி எது? மலையாளம்
  20. ரிக் வேதத்தில் அயித்ரே பிரமாணத்தில் குறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திராவிட  இனம் எது? ஆந்திரர்
  21. கி.மு.வில் இயற்றப்பட்ட உரோம நாடகத்தில் இருப்பதாகக் கூறப்படும் சொற்கள் எம்மொழிச் சொற்கள்? கன்னடம்
  22. இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் எனக் குறிக்கும் நூல்? பிங்கல நிகண்டு
  23. தமிழ் வையை தண்ணம் புனல் என்னும் பரிபாடல் வரியில்  தமிழ் என்னும் சொல் குறிக்கும் பொருள்? இனிமை
  24. தமிழ் என்பதன் பொருள்கள் யாவை ? இனிமை,  நீர்மை, அழகு, மென்மை
  25. வால்மீகி தமிழை எவ்வாறு குறிக்கிறார்? மதுரமான மொழி
  26. இனிமைத் தமிழ்மொழி எமது - எனக் குறிப்பவர் யார்? பாவேந்தர்
  27. தமிழுக்கு அமுதென்று பேர் - எனப் பாடியவர் யார்? பாவேந்தர்
  28. வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி - எனத் தமிழைச் சிறப்பித்தவர் யார்? மகாகவி பாரதியார்
  29. "குமரி மாந்தன் முதல் மாந்தன். அவன் பேசிய மொழியே முதன்மொழி. அதுவே நந்தம் தாய் மொழியாம் தமிழ்"- என்றவர் யார்? பாவாணர்
  30. செம்மொழிக்குரியதாகச் சொல்லப்படும் பண்புகள் எத்தனை? 16
  31. பிற மொழி தேவையின்றி சொல்வளம், கருத்துவளம், இலக்கணக் கட்டுப்பாடுகள் நிறைந்த மொழி எவ்வாறு அழைக்கப்படும்? தனிமொழி
  32. தனிமொழிகள் யாவை? தமிழ், இலத்தீன், கிரீக், ஹீப்ரு, சமஸ்கிருதம், சீனம்
  33. தமிழில் உள்ள செம்மொழி நூல்கள் எத்தனை? 41 [பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியம், தொல்காப்பியம், இறையனார் களவியல்]

தொல்தமிழக - அயலகத் தொடர்பு வினா வங்கி

    1. உலகில் உயிருடன் உள்ள மொழிகள் எத்தனை? 270
    2. ஹரப்பா, மொகஞ்சதோரா புதைபொருள்களில் இருக்கும்  எழுத்துக்கள்  தமிழ் எழுத்துக்களே - என்றவர்? ஹீராஸ் பாதிரியார்
    3. மொழி வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம் என்றவர்? ஹட்சன்
    4. கவிதை வாழ்க்கையின் ஆய்வு என்றவர்? மாத்யூ அர்னால்டு
    5. தமிழகத்தின் தென்பகுதியே மனிதத் தோற்றத்தின் முதலிடமாக இருக்க வேண்டும் - என்றவர்? வி.ஆர்ஂ. ஆர் தீக்சித்தார
    6. லெமூரியா கண்டமே மனித நாகரிகத்தின் தொட்டில் என்றவர்?                        ஸ்காட் எலியட் [இழந்த லெமூரியா நூல்]
    7. லெமூரியா கண்டத்தை வளப்படுத்திய ஆறுகள் யாவை?           பஃறுளி ஆறு, குமரி ஆறு
    8. குமரிக்கோடு கடல்கோளால் அழிந்ததாகக் கூறும் இலக்கியம்? சிலப்பதிகாரம்
    9. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் தமிழகம் வணிகத்தொடர்பு கொண்டிருந்தா நாடுகள் எவை? சிரியா, பாபிலோனியா, எகிப்து
    10. கி.மு ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து யானையைப் பரிசாகப் பெற்ற மன்னன் யார்? அசிரிய நாட்டு மன்னன்
    11. தமிழகத்திலிருந்து மிளகு பெற்று பொன்னும், மதுவும் கொடுத்தவர்கள்? யவனர்கள்
    12. தமிழகத்திலிருந்து நீலச்சாயம் பூசப்பட்ட துணிகள் என்னாடுகளுக்கு அனுப்பப்பட்டது? எகிப்து, பாரசீகம்
    13. பாண்டிச்சேரி அருகில் உள்ள அகழ்வாய்விடம் எது? அரிக்கமேடு
    14. ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடித்த யவனப்பொறிகள் தமிழகக் கோட்டைகளில் இருந்ததாகக் கூறியவர்? தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
    15. 30000 தங்க நாணயத்திற்கு ஈடான முத்துக்களை அணிந்திருந்த உரோமனாட்டு அரசி யார்? உலோலா
    16. கி.மு. 20இல் பாண்டிய வேந்தன் எந்த கிரேக்க மன்னன் அவைக்கு தூது அனுப்பினார்? அகஸ்டஸ்
    17. அகஸ்டஸின் பெயரால் கோவிலும், உரோமர்கள் படையும் இருந்த துறைமுக நகரம் எது? முசிறி
    18. தமிழக அரசர்களின் வாயில் காப்பாளர்களாக இருந்த  அயல் நாட்டினர்? யவனர்கள்
    19. தொன்தமிழகத்தில் யவனர்கள் உருவாக்கிய பொருள்கள்? புலித்தொடர் சங்கிலி, பாவை விளக்கு
    20. வடநாட்டு வாணிகத்தை விட தென்நாட்டு வணிகமே சிறந்தது என்ற வட நாட்டவர் யார்? சந்திரகுப்த மௌரியர் அமைச்சர் சாணக்கியர்
    21. தென் நாட்டு வணிகமே சிறப்பு என சாணக்கியர் குறிப்பிட்டு உள்ள நூல்? அர்த்தசாஸ்திரம் 

சங்க இலக்கிய வினா வங்கி [எட்டுத்தொகை -அகப்பாடல்]

  1. எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை
  2. எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352 
  3. எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்து உட்பட பாடல்களின் எண்ணிக்கை? 2358
  4. எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் பற்றியன எத்தனை? 5 [நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு]
  5. எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் எத்தனை? 2[புறனானூறு, பதிற்றுப்பத்து]
  6. அகமும், புறமும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? பரிபாடல்
  7. நானூறு பாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் எத்தனை?                        4    [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
  8. பதிக முன்னோடியாக அமைந்த எட்டுத்தொகை நூல்கள் யாவை? ஐங்குறுநூறு,  பதிற்றுப்பத்து
  9. பாவால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? கலித்தொகை, பரிபாடல்
  10. எண்ணிகையால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 2
  11. ஆசிரியப்பாவால் அமைந்த எட்டுத்தொகை நூல்கள்? 6
  12. முழுமையாகக் கிடைக்கும் எட்டுத்தொகை நூல்கள்  எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு]
  13. நானூறு பாடல்கள் அடங்கிய எட்டுத்தொகை நூல்கள் யாவை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு] 
  14. முதற்பகுதியும், இறுதியும் கிடைக்காத எட்டுத்தொகை நூல்கள் யாவை?       2 [பதிற்றுப்பத்து, பரிபாடல்]
  15. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  16. நற்றிணையைத் தொகுத்தவர் யார்? தெரியவில்லை
  17. குறைவான அடிகளோ அதிக அடிகளோ இல்லாமல் இடைநிகரவான அடிகளைக் கொண்டு இருப்பதால் நற்றிணை எனப்பட்டிருக்கலாம் என்றவர் யார்? டாக்டர் ந. சஞ்சீவி
  18. நற்றிணை பாடல் எண்ணிக்கை எத்தனை? 400+1 [401]
  19. நற்றிணை பாடிய புலவர்களின் எண்ணிக்கை யாது? 187
  20. நற்றிணை அடிவரையறை - 9 - 12
  21. நற்றிணையில் எத்தனை மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர்? 10 
  22. நற்றிணையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனைபேர்? 5 [கொட்டம்பலவனார், தும்பிசேர்கீரனார், விழிக்கண்பேதைப் பெருங்க் கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றனார், தனிமகனார்]
  23. நற்றிணையில் பாடிய பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை? 9
  24. குறுந்தொகை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு
  25. குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை? 400+1 [401]
  26. குறுந்தொகை அடியெல்லை - 4 - 8
  27. குறுந்தொகையில் 9 அடி உள்ள பாடல் எது? 307
  28. குறுந்தொகையில் பாடல் இயற்றிய புலவர்கள் எத்தனை பேர்? 203
  29. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்? பூரிக்கோ
  30. குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் யார்? தெரியவில்லை
  31. முதலில் தொகுக்கப்பட்ட நூல் எது? குறுந்தொகை
  32. குறுந்தொகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ள பாடல்கள் பாடிய புலவர் யார்? பரணர்
  33. குறுந்தொகையில் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை? 236
  34. திருவிளையாடற் புராணத்தில் தருமி வரலாற்றை அறிய உதவும் பாடல்? குறுந்தொகை -  கொங்குதேர் வாழ்க்கை
  35. குறுந்தொகையில் அதிகப் பாடல் பாடிய பெண்பாற் புலவர்கள்? நன்னாகையார், வெள்ளிவீதியார்
  36. குறுதொகையில் பாடல் இயற்றிய புலவர்களில் ஊர் பெயரோடு பெயர் பெற்றப் புலவர்கள் ? 4 [அள்ளூர் நன்முல்லையார், அரிசில் கிழார், கூடலூர் கிழார், மதுரை நல்வெள்ளியார்]
  37. குறுந்தொகையில் தொழிலால் பெயர் பெற்றப் புலவர்கள் எத்தனை பேர்? 3 [ ஆசிரியன் பெருங்கண்ணனார், கொல்லன் அழிசி, வள்ளுவன் பெருஞ்சாத்தனார்]
  38. குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனை பேர்?       18 [அணிலாடு முன்றிலார், குப்பைக் கோழியார், வில்லக விரலினார், விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார், நெடுவெண்ணிலவினார்]
  39. குறுந்தொகையில் வடமொழி பெயர்கொண்ட புலவர்கள்? 6 [உருத்திரன், சண்டிலியன், உலோச்சன், மாதிரத்தன், பவுத்திரன், பிரமந்தன்]
  40. தொடரால் பெயர் பெற்றவர்கள் மிகுதியும் உள்ள நூல் எது? குறுந்தொகை 
  41. ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் பெருவழுதி
  42. ஐங்குறுநூறைத் தொகுத்தவர் யார்? கூடலூர் கிழார்
  43. ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை? 500+1 [501]
  44. ஐங்குறுநூறு அடிவரையறை? 3 - 5
  45. ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர்கள்? 5 புலவர்கள்
  46. ஐங்குறுனூறு பதிகம், சதகத்திற்கு முன்னோடி
  47. திணைக்கு ஒரு புலவர் பாடியுள்ளனர்
  48. ஐங்குறுநூற்றில் மருதம் பாடிய புலவர் யார்? ஓரம்போகியார்
  49. ஐங்குறுநூற்றில் நெய்தல் பாடிய புலவர் யார்? அம்மூவனார்
  50. ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பாடிய புலவர் யார்? கபிலன்
  51. ஐங்குறுநூற்றில் பாலை பாடிய புலவர் யார்? ஓதலாந்தையார்
  52. ஐங்குறுநூற்றில் முல்லை பாடிய புலவர் யார்? பேயனார்
  53. ஐங்குறுநூற்றில் அந்தாதித் தொடையில் அமைந்த பத்து எது?       தொண்டிப் பத்து
  54.  ஐங்குறுநூற்றில் முதல் பத்து எது?  வேட்கைப் பத்து 
  55.  பத்துப்பாடல்களிலும் முதல் அடியும் மூறாவது அடியும் ஒன்றாக இருக்கும் பத்து எது? வேட்கைப்பத்து
  56. தோற்றவர் புல் மேயச் செய்த வரலாற்றைக் காட்டும் நூல்? ஐங்குறுநூறு ["வாழி ஆதன் வாழி அவினி/ பகைவர் புல்ஆர்க: பார்ப்பார் ஓதுக"] 
  57. ஐங்குறுநூற்றில் தொடரால் பெயர் பெற்றவர் யாரும் இல்லை
  58. ஐங்குறுநூற்றில் அதிகம் குறிக்கப்படு ஆதன் என அழைக்கப்பட்டோர் யார்? ஆவியர் குடியினைச் சேர்ந்தவர்கள்
  59. கலித்தொகையைத் தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
  60. கலித்தொகையைச் சிறப்பிக்கும் வரிகள்​ : 'கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விம்வலார் கண்ட கலி, நனிஆர்வம் பொங்கும் கலி
  61. கலித்தொகைப் பாடல் எண்ணிக்கை? 149+ 1 [150]
  62. கலித்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை? 5
  63. கலித்தொகை அடிவரையறை? 11 - 80
  64. கலித்தொகையில் பாலையைப் பாடியவர்? பெருங்ககுங்கோ
  65. கலித்தொகையில் குறிஞ்சித் திணை பாடலைப் பாடியவர் யார்? கபிலன்
  66. கலித்தொகையில் மருதம் பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
  67. கலித்தொகையில் முல்லைத் திணை பாடியவர் யார்? நல்லுருத்திரன்
  68. கலித்தொகையில் நெய்தல் பாடியவர் யார்? நல்லந்துவனார்
  69. ஓரங்க நாடகம் போன்ற அமைப்பினைக் கொண்ட சங்க இலக்கியம்? கலித்தொகை
  70. அகநானூறைத் தொகுத்தவர் யார்? உருத்திர சன்மனார் 
  71. அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்? பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  72. அகநானூற்றின் பாகுபாடுகள் யாவை? 3 [களிற்றியானைநிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை
  73. அகநானூறு சிறப்புப் பெயர்கள் யாவை? நெடுந்தொகை, அருந்தொகை நானூறு, அகப்பாட்டு
  74. அகநானூற்றுப் பாடல் எண்ணிக்கை? 400+1
  75. அகநானூற்றுப் பாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? 158 
  76. அகநானூற்று அடியெல்லை யாது? 13 - 31
  77. சங்கப் பாடல்களை இயற்றிய புலவர்களின் எண்ணிக்கை? 473                     [30 பெண்பாற் புலவர்கள்]

  78. களிற்றியானைநிரைப் பாடல்களின் எண்ணிக்கை? 1 - 120
  79. மணிமிடைப் பவளம் பாடல்களின் எண்ணிக்கை? 121 - 300
  80. நித்திலக்கோவை பாடல்களின் எண்ணிக்கை? 301 - 400
  81. அகநானூற்றுப் பாலைத்திணை வைப்பு - 1,3,5 [ஒற்றைப்படை]- 200
  82. அக. நா- குறிஞ்சித் திணை வைப்பு - 2, 8, 12, 18,.... [80] 
  83. அகநானூறு முல்லை வைப்பு - 4, 14, 24 [40]
  84. அகநானூறு மருதம் வைப்பு - 6, 16, 26 [40]
  85. அகநானூறு நெய்தல் வைப்பு - 10, 20, 30 [40]
  86. அகநானூற்றின் செம்பாதி எத்திணைப் பாடல்கள் அதிகம்? பாலை
  87. அகநானூற்றில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்? கீரனார், ஊட்டியார்
  88. தமிழரி திருமண முறையைக் காட்டம் பாடல்? அகம் - 86
  89. சங்க காலத்தில் குடவோலை தேர்தல் முறை இருந்ததைக் காட்டும் பாடல்? அகம் - 77
  90. பெண்கள் உப்பிற்கு விலையாக நெல்லை வழங்கியமைக் காட்டும் பாடல்? 140
  91. குறிஞ்சிப்பண் பாடலைக் கேட்ட யானை திணையை உண்ண மறந்து தூங்குதல்
  92. அகநானூற்றில் இடம் பெற்ற புலவர்களின் எண்ணிக்கை? 10 [அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, எவ்வி, எழினி, உதியஞ்சேரலாதன்,  கரிகால் வளவன், தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 

சங்க கால வரலாறு

  1. முச்சங்கங்கள் குறித்து விரிவாக பேசும் நூல் எது? இறையனார் அகப்பொருள்
  2. இறையனார் அகப்பொருள் தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது? இறையனார் களவியல்
  3. இறையனார் களவியல் உரையை இயற்றியவர் யார்? நக்கீரர்
  4. நக்கீரரின் இறையனார் களவியல் உரைக்கு எழுத்து வடிவம் தந்தவர் யார்? முசிறியைச் சேர்ந்த நீலகண்டர்
  5. இறையனார் களவியல் உரை எழுத்து வடிவம் பெற்ற காலம்? 8ஆம் நூற்
  6. இறையனார் களவியல் உரையின் காலம் 8ஆம் நூற் எனக் கூறக் காரணம்? பாண்டிக்கோவையிலிருந்து மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ளது.
  7. இறையனார் களவியலில் எத்தனை நூற்பாக்கள் உள்ளன? 60
  8. முச்சங்கங்கள் குறித்து பேசும் சில்கப்பதிகார உரையாசிரியர் யார்? அடியார்க்கு நல்லார்
  9.  ஏட்டுச்சுவடியில் முச்சங்கங்கள் குறித்து கூறியவர் யார்? செவ்வூர் சிற்றம்பலக் கவிராயர்
  10.  முதல் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்? தென்மதுரை
  11. முதல் சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்? 4440
  12. முதல் சங்கத்தில் வீற்றிருந்த புலவர்களின் எண்ணிக்கை? 549
  13. முதல் சங்கத்தில் பாடிய புலவர்கள்? 4449
  14. முதல் சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை? 89 [காய்சினவழுதி முதல் கடுங்கோன் ஈறாக]
  15. குறிப்பிடற்குரிய முதற்சங்க நூல்கள் யாவை? முதுநாரை, முதுகுருகு, பரிபாடல், களரியாவிரை
  16. இடைச் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்? கபாடபுரம்
  17. இடைச்சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்? 3700
  18. இடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர்களின் எண்ணிக்கை? 59
  19. இடைச்சங்கத்தில் பாடிய புலவர்கள்? 3700
  20. இடைச்சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை? 59 [வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக]
  21. குறிப்பிடற்குரிய இடைச்சங்க நூல்கள் யாவை? அகத்தியம், மாபுராணம், பூதபுராணம், பெருங்கலி, வெண்டாலி, அகவல், குருகு, வியாழமாலைக்
  22. கடைச் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்? மதுரை
  23. கடைச்சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்? 1850
  24. கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர்களின் எண்ணிக்கை?49
  25. கடைச்சங்கத்தில் பாடிய புலவர்கள்?449
  26. கடைச்சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை? 49 [முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக]
  27. குறிப்பிடற்குரிய கடைச்சங்க நூல்கள் யாவை? பத்துப்பாட்டு, எட்டுத்தொகை [தொல்காப்பியம், அகத்தியம்- இலக்கண நூல்கள்]
  28. "சங்கமுகத்தமிழே, சங்கமலித் தமிழ்" எனக் குறிப்பவர் யார்? திருமங்கையாழ்வார்
  29. "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி                            தருமிக்கருளி னோன்காண்" -யாருடைய கூற்று? திரு நாவுக்கரசர்
  30. சங்கத்தமிழ் மாலை முப்பதும் எனக் குறிப்பிடுபவர் யார்? ஆண்டாள்
  31. "தலைச்சங்கப் புலவனார் தம்முன்" - யார் கூற்று? சேக்கிழார்
  32. "சங்கத்தமிழ் மூன்றும் தா -எனக் குறிப்பவர் யார்? ஔவையார்
  33. "தமிழ்ச் சங்கம் சேர்கிற் பீரேல்" - யார் கூற்று? கம்பர்
  34. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" எனக்குறிக்கும் செப்பேடு எது? சின்னமனூர்ச் செப்பேடு
  35. சின்னமனூர்ச் செப்பேட்டின் காலம் எது? கி.பி. 10ஆம் நூற்றாண்டு
  36. சங்கம் இருந்தமையைக் குறிக்கும் மேலைனாட்டார் குறிப்புகள் எவை? தாலமி, பிளைனி, பெரிப்ளுஸ் குறிப்புகள்
  37. சங்கம் இருப்பதைக் குறிக்கும் இலங்கை வரலாற்று நூல்கள் யாவை? மகாவம்சம், இராசாவளி, இராசரத்னாகிரி
  38. சங்கங்கள் இல்லை என்பவர்கள் யாவர்? கே, என். சிவராசப்பிள்ளை, பி.டி. சீனிவாச அய்யங்கார், எஸ். வையாபுரிப்பிள்ளை, நமச்சிவாய முதலியார்
  39. சங்கம் இல்லை எனக் கூறுவோர் வைக்கும் காரணங்கள் யாவை?  சகரம் மொழி முதலில் வராது, கடவுளர் சங்கங்களில் தமிழ் ஆய்ந்ததாகக் கூறுதல், முதல் இரண்டாம் சங்க புலவர் கால அளவு, புலவர் எண்ணிக்கை கர்பனை போன்ற தோற்றம், சங்க இலக்கியத்தில் சங்கம்  இல்லாமை
  40. முதல், இரண்டாம் சங்கங்கள் பொய் கடைச்சங்கம்  உண்மை என்றவர் யார்? கே. ஏ. நீலகண்ட சாஸ்திர்யார், சேஷகிரி சாஸ்திரியார், இராமச்சந்திர தீட்சிதர்
  41. முச்சங்கங்களும் இருந்தது உண்மை என்றவர்கள் யாவர்? உ.வே.சாமிநாத ஐயர், கா. அப்பாதுரையார், தேவநேயப்பாவணர், கா. சுப்பிரமணிய பிள்ளை  
  42. தாலமி, பிளைனி ஆகியோர் குறிப்புக்களில் சங்கம் பற்றிய குறிப்பு உள்ளது, பெரிபுளூஸ் என்னும் நூலில் சங்கம் பற்றியக் குறிப்பு உள்ளது.

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...