இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 அக்டோபர், 2020

தொல்காப்பியம் - உயிர் மயங்கியல்

அகர இறுதி 

1) அகர இறுதி முன்னர் அல்வழி ப் புணர்ச்சியில், கசதப வரின் எவ்வாறு                      புணரும்?                 க,ச,த,ப ஒற்று மிகும்.

                        1) விள + குறிது - விளக்குறிது

                        2) நுண + குறிது - நுணக்குறிது

2) வல்லொற்று மிகும் இடங்களாக உயிர்  மயங்கியலில் குறிப்பிடுவன                        யாவை ?

1) வினை எஞ்சுகிளவி - உண்ணச் சென்றான்

2) உவமை - புலி போலப் பாய்ந்தான்

3) ‘என’ என்னும் எச்சம் - கொள்ளெனக்

4) சுட்டின் இறுதி - அத்தாமரை

5) உரையசைக் கிளவி - ஆங்கக்

3) அகரச் சுட்டின் முன்னர் ஞ,ந,ம வாpன் எவ்வாறு புணரும் ?

ஞ,ந,ம என்னும் மெல்லினம் தோன்றின் அவற்றுக்குரிய 

          ஒற்று இடையில் வரும்

அ + ஞாலம் - அஞ்;ஞாலம் (ஞ்)

அ + நூல் - அந்நூல் (ந்)

4) சுட்டின் முன்னர் ய,வ வரின் எவ்வாறு புணரும் ?

வகர ஒற்றுத் தோன்றும் 

அ + யாழ் - அவ்யாழ் 

அ + வலை - அவ்வலை

5) சுட்டின் முன்னர் உயிரெழுத்து வரின் எவ்வாறு புணரும் ?

அ + அணி - அவ்வணி என்ற வகரம் தோன்றும்

6) அகரச் சுட்டு செய்யுளில் எவ்வாறு ஒலிக்கும் ?

நீண்டு ஒலிக்கும், அ + இடை - ஆயிடை

7) சாவ என்னும் சொல் எவ்வாறு புணரும் ?

சாவ என்னும் எச்சத்து முன்னர் வல்லினம் வந்தால் இறுதி வகரம் நீங்கும் 

சாவ + குத்தினான் - சாக்குத்தினான் 

8) அகர இறுதி இயல்பாக முடியும் சொற்கள் யாவை ?

அன்ன என்னும் உவமைக் கிளவி - பொன் அன்ன குதிரை

அண்மை சுட்டிய விளிநிலை கிளவி - ஊரகேள்

செய்யும் மன என்னும் தொழில் - உண்மனசோறு

ஏவல் கண்ணிய வியங்கோள் - செல்க குதிரை

செய்த என்னும் பெயரெஞ்சம் - உண் + குதிரை

செய்யிய என்னும் வினையெச்சம் - உண்ணிய சென்றார்

        அம்ம என்னும் உரைப் பொருள் - அம்ம கொற்றா

        பல என்னும் சொலலும் - பல குதிரை

                            இவற்றில் எல்லாம் இயல்பாக முடியும்.

9) வாழிய என்னும் சொல் எவ்வாறு வரும் ?

‘‘செய் வாய்ப்பாட்டு’’ வாழிய என்னும் சொல்லின் இறுதியில் யகரமும் கெடும், சில நேரம்  கெடாமலும் முடியும் 

வாழிய கண்ணா 

வாழி தமிழ்

10) உரைப்பொருள் சொல்லான ‘அம்ம’ எவ்வாறு புணரும் ?

அம்ம என்னும் உரைப்பொருள் கிளவி நீண்டும் உரைக்கும் அம்மா கேளாய்

11) பல, சில என்னும் சொற்கள் எவ்வாறு செய்யுளில் புணரும் ?

நீண்டு வரும்.  பலாஅம், சிலாஅம்

12) பல சில என்னும் சொற்கள் தொடராக வரும்போது எவ்வாறு புணரும் ?

லகரம் றகரமாகத் திரியும் பல + பல - பற்பல

13) பல, சில எனும் சொல்லில் வல்லெழுத்து மிகுமா ?

உறழ்ச்சியாகத் தோன்றும் - மிகும் 

பலப்பல, பலபல

14) வேற்றுமையில் அகர விகுதி எவ்வாறு புணரும் ?

அகர இறுதிச் சொற்கள், அல்வழி புணர்ச்சியில் க,ச,த,ப வரின் மிகுவது                 போல் வேற்றுமையிலும் மிகும்.

திருவிள + கொற்றன் - திருவிளக்கொற்றன்

15) மரப்பெயர் எவ்வாறு அகர இறுதி சொல்லின் முன் வரும் ?

விள + கோடு - விளக்கோடு

விள + கோடு - விளங்கோடு

அகர இறுதி அமைந்த மரப்பெயரச் சொல்லிற் முன் வல்லெழுத்து                             வருமெனின் வலவ்லினம் மிக்கு முடியும், மெல்லினமாகியும் முடியும்.

விளக்கோடு, விளங்கோடு 

16) மக என்னும் சொல்  என்ன சாரியை பெறும் ?

மக என்னும் அகர இறுதிச் சொல் இன் சாரியை பெற்று வரும்.

மக - இன் + கை - மகவின்கை

17) பல சில என்னும் அகர இறுதிப் பெயர் பெறும் சாரியை யாது?

வற்றுச்  சாரியை


                                ஆகார இறுதி


18) ஆகார இறுதி அல்வழியில் எவ்வாறு புணரும் ?

ஆகார இறுதி அல்வழியில் வல்லெழுத்து மிக்கு முடியும் 

சுறா + கடிது - சுறாக்கடிது

அரா + கடிது - அராக்கடிது (பாம்பு)

20) செய்யா என்னும் வினையெஞ்சு கிளவி ஆகார இறுதியில் எவ்வாறு                          முடியும் ?

உண்ணா + கொண்டான் - உண்ணாக் கொண்டான் என வல்லெழுத்து                     மிக்கு முடியும்.

21) உம்மைத் தொகையில் ஆகார ஈற்று எவ்வாறு புணரும் ?

உம்மைத் தொகுத்து நின்ற இரு  பெயராத் தொகைமொழி நிலைமொழி இறுதியில் அகரம் பெற்று முடியும். (எ.கா.)  இராஅப்பகல். அராஅப் பாம்பு எனப் பண்பு தொகைக்கும், இராஅக் கொடிது என எழுவாய் முடிவிகும்’ இராஅக் காக்கை என பெயரெச்ச மறைக்க அகரப் பேறு கொள்க என குறிப்பிடுகிறார்.

22) ஆகார இறுதியில் இயல்பாகும் சொற்கள் யாவை ?

1) ஆவும் - (ஆ) பசு வினை உரைக்கும் ஓரெழுத்து வருமொழி 

2) மாவும் - மா (விலங்கு) வினை உரைக்கும் ஓரெழுத்து வருமொழி 

3) விளிப்பெயர் க்கிளவி - சேய்மை விளியில் ஆகார இறுதியாக 

                வரும் சொல்லும்

4) யா என் வினாவும் - யா என்னும் வினாப் பெயரும்

5) பலவற்று இறுதியும் - ஆகார இறுகி பலவின்பால் வினை முற்றுச்                              சொல்லும்

6) ஏவல் குறித்த வரையசை மியாவும் - ஏவலாக வரும் மியா என்னும்                       சொல்லும்

7) தன் தொழில் வரைக்கும் வினாவின் கிளவியொடு - தம் தொழிலை                         உணர்த்தும்  வினாப் பொருட் சொல்லும் ஆகிய அனைத்தும் இயல்பாய்                 முடியும்.

ஆ கூப்பிடுகிறது

மா தாவுகிறது

முருகா பார் (எ.கா.) இயல்பாய் முடியும்

யா பெரி  யது

கரவா காக்கைகள்

யாரை கேட்டேன் 

23) ஆகார இறுதி வேற்றுமையில் எவ்வாறு புணரும் ?

ஆகார இறுதி அல்வழி மற்றும் வேற்றுமையில் வல்லினம் மிக்கு முடியும்.

தாரா + கால் - தாராக்கால்

24) குறியதன் முன்னா; மற்றும் ஓரெழுத்து ஒரு மொழி முன்னால் ஆகார                        இறுதியில் ‘அகரம்’  எவ்வாறு தோன்றும் ? வலி மிகும்

பலா + கோடு - பலாஅக்கோடு

கா + குறை - காஅக் குறை 

25) இரா வென் கிளவி எனும் ஆகார ஈறு எவ்வாறு வரும்?

         இரா என்னும் ஆகார ஈற்றுத்தனிச் சொல்லுக்கு முற்கூறிய அகரப் பேறு                 இல்லை (எ.கா) இராக் கொண்டான் 

26) நிலா என்னும் ஆகார ஈறு எவ்வாறு புணரும் ?

அத்துச் சாரியைப் பெறும்

‘நிலா அத்து’ - நிலாத்தில் கொண்டாட்டம்

27) ‘யா’ என்னும் மரப்பெயரும், பிடா, தளர என்னும் பெயர்களும் எவ்வாறு                 முடியும் ?

மெல்லெழுத்து மிகுந்து முடியும்.  யாஅங்கோடு, பிடா அங்கோடு

        வல்லெழுத்து மிக்கு முடிவதும் உண்டு

யாஅக்கோடு, பிடாஅக்கோடு, தளாஅக்கோடு

29) மா,ஆ,மா என்னும் சொற்கள் எவ்வாறு வரும் ?

மா - மரம் குறித்த சொல் - மெல்லெழுத்து கொண்டு முடியும்

ஆ, மா - விலங்கு - னகரப் புள்ளி அடையும்.

மா + கோடு - மாஅங்கோடு

ஆ + கோடு - ஆன்கோடு (ஆ - பசு)

மா + கோடு - மான்கோடு (மா - மான்)

30) ஆவிற்குரிய சிறப்பு விதி யாது ?

ஆன் ஒற்று அகரத்தொடு கூடும்.

ஆன் + நெய் - ஆன் + அ + நெய் - ஆனநெய் - ஆநெய்

31) ‘ஆன்’ என்ற சொல் முன் வரும் ஈகாரத்தொடு கூடிய பகரம் எவ்வாறு வரும்?

‘ஆன்’ என்ற னகரச் சாரியை பெற்ற சொல் முன் வரும் பகர ஈகாரமாகி                 வரும் சொல், தான் தன் ஒற்று மிகுந்து அதிலுள்ள ஈகாரம் இகரமாதல்                      உண்டு.

ஆப்பீ - அப்பி

32) "குறியதன் முன்னர் ----------- உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’’

சினைகெட

இரா - இரவு - உகரம் பெற்று முடியும் 

33) இகர இறுதி வேற்றுமையில் புணர்வது எப்படி?

இகர இறுதி உடைய பெயர்ச் சொற்கள் முன்னர் வேற்றுமை புணர்ச்சியில்         வல்லெழுத்து மிக்க முடியும்.

கிளிக்கால், புலிப்பல்

34. இகர இறுதி அல்வழிப் புணர்ச்சியில் எவ்வாறு புணரும் ?

இனி - காலத்தை உணர்த்தல்

அணி - இடத்தை உணர்த்தல்

இகர இறுதி - வினை எச்சம்

இகர இறுதி சுட்டு ஆகியவை வேற்றுமைப் புணர்ச்சி போல வல்லெழுத்து             மிகும்.

இனிக் கொண்டான்

அணிக் கொண்டான்

தேடிக் கொண்டான் - வினைஎச்சம்

இக்கொற்றான் - சுட்டு

35) செய்யுளில்  இன்றி என்பது எவ்வாறு திரியும் ?

இன்னறி என்னும் வினை எச்ச இறுதி, செய்யுள் வழக்கில் இகரம்                                 உகரமாகத் திரியும்.

(எ.கா.) (உப்பின்றி புறகை என்பது, ‘உப்பின்று புறக்கை’ என்று வரும்.  இன்றி இன்று ஆனது போல் அன்றி என்பது அன்று என்றும் வரும் என்றார்) - இளம்பூரணர் 2) நாளன்று 

36) சுட்டின் -------------- முற்கிளந்து அற்றே

இயற்கை

                    1) இகர இறுதிச் சுட்டின் இயல்பு, மெல்லினம் வரும் போது                                            மெல்லெழுத்து மிகுதல்.

                  இஞ்ஞானம், இந்நூல், இம்மணி 

                  2) இடையின, உயிர்க்கணம் வரும்பொழுது நிலைமொழி வகரம்                              பெறும் (இவ்யாம், இவ்வடை)

                 3) செய்யுளில் வகரம் கெட்டுச் சுட்டு நீண்டு முடியும் -  ஈவயினான். 

37) தூணின் முன் பதக்கு வரின் எவ்வாறு புணரும் ?

தூணி + பதக்கு - தூணிப்பதற்கு (வல்லெழுத்து)

தூணி என்பது நான்கு மரக்கால்

தூணிப்பதக்கு - உம்மைத் தொகை

தூணியும் பதக்குமாம்

தூணிமுன்திணை - தூணித்திணை

தூணிமுன்சாமை - தூணிச்சாமை 

38) நாழியும் உரியும் எவ்வாறு திரியும் ?

நாழி என்னும் அளவைப் பெயர் முன் உரி என்னும் அளவைப் பெயர்                         வருமானால் நாழி  என்பதன் இறுதி உயிர் மெய் கெட்டு அவ்விடத்து                           டகாரம் வரும்.

நாழி உரி - நாடுரி, நாழிக்காயம், உரிக்காயம் என்பார்  இளம்பூரணர்

நாழி + உரி - நாவுரி

நாவுரி தானும் வேண்டும் (கவிமணி)

39) பனி எனவரும் காலப்பெயர் முன் என்ன சாரியை வரும் ?

அத்து, இன்

பனியத்துக் கொண்டான்

பனியிற் கொண்டான் (இன், இற் ஆகியது)

40) வளி என்நும் சொல் என்ன சாரியை பெறும் ?

இன், அத்து

41) உதி என்னும் மரக்கிளவி எவ்வாறு புணரும் ?

உதி என்னும் மரப்பெயர்ச் சொல் முன் வல்லினம் வரின் மெல்லினம் மிகும்.

உதி + கோடு - உதிங்கோடு, உதிம்பூ

42) புளிமரக்கிளவிக்கு -------------- சாரியை

அம்மே

புளி + அம் + கோடு - புளியங்காடு

புளி + அம் + பூ - புளியம்பூ

43) சுவைப் பெயரையுடைய புளி எவ்வாறு வரும் ?

மரப் பெயர் அல்லாத மற்றைச் சுவைப் பெயர் புளி மெல்லெழுத்து மிகுமே

புளிங்கூழ், புளிஞ்சோறு

        சில நேரம் வல்லெழுத்து மிகுதலும் உண்டு.

புளிக்கூழ், புளிச்சோறு

45) இகர இறுதியடைய நாட்பெயா;கள் எவ்வாறு வரும் இகர இறுதி நாள் பெயா;முன்னா;த் 

  தோன்றும் வினை சொல்லிற்கு ஆள் இடையே வரும்.

பரணி + கொண்டான் - பரணியாற்கொண்டான்  

46) ‘திங்கள்’ எனும் பெயர் முன் எவ்வகைச் சாரியை பெறும்?

         இக்குச் சாரியை பெறும்.

ஆடிக்குக் கொண்டான்.

ஈகார இறுதி

47) ஈகார இறுதி அல்வழியில் எவ்வாறு முடியும் ?

வல்லெழுத்து முடிகொண்டு முடியும்  தீ + கடிது - தீக்கடிது

48) நீ என் முன்னிலைப் பெயர் பீ என்னும் இடக்கரடக்கர் பெயர்

மீ என்னும் இடப்பெயர் வல்லெழுத்து மிகாமல் இயல்பாக புணரும்

நீ குறியை பெரியை 

பீகுறிது, சிறிது, மீகண், மீதலை 

49) மீ என்னும் இடப் பெயர் முன் வல்லெழுத்து மிகுந்து முடியும் - மீக்கோள்,                                                                                                                                                 மிப்பல்

50) ஈகார இறுதி வேற்றுமையில் எவ்வாறு புணரும்? 

        மிகுந்து ஈ + கால் - ஈக்கால்

51) நீ என்னும் முன்னிலைப் பெயர் எவ்வாறு வரும் ?

நீ என்னும் முன்னிலைப் பெயர் நெடுமுதல் குறுகி முடியும்.

         நின்கை, நின்தலை

உகர இறுதி

52) உகர இறுதி அல்வழியில் எவ்வாறு புணரும்.

உகர இறுதி அல்வழியில் வல்லெழுத்து மிக்கு முடியும்.

கடு + குறிது - கடுக்குறிது

53) உகரச் சுட்டு முன்னர் எவ்வாறு புணரும்.

உகரத்தை இறுதியாக உடைய சுட்டெழுத்து முன்னர் வல்லெழுத்து மிக்கு             முடியும்.

உக்கொற்றன், உப்பூதன்

54) உகரச் சுட்டு எவ்வாறு முடியும்?

    மெல்லெழுத்து மிக்கு முடியும்

உஞ்ஞாண் 

உம்மணி

உவ்யாழ்

உவ்வட்டு இடையினம்

உவ்வுரல் - உயிர்

55. செய்யுளில் உகர ஈற்று சுட்டுப் பெயர் எவ்வாறு புணரும்?

                        அன்று வரும் போது அ- ஆ ஆகும், ஐ வரும்போது உகரம் கெடும்

                        சான்று: அது + அன்று = அதான்று, அது + ஐ - அதை

        56. உகர ஈற்று சொல் வேற்றுமையில் எவ்வாறு வரும்?

                           வல்லெழுத்து மிகும். பீர்க்கு + கொடி - பீர்க்குக்கொடி

        57. எரு, செரு எவ்வாறு புணரும்?

                            அம் சாரியை பெறும். அம் - இல் உள்ள ம் கெட்டு வல்லெழுத்து                                     மிகும். மெல்லெழுத்து மிகுதலும் உண்டு.

        58. உகரம் ஏறிய ழகரம் [ழு] எவ்வாறு புணரும்?

                உகரம் - ஊகாரம் ஆகும். [ழு - ழூ] கூடுதலாக உகரம் பெறும்.                                         பழு+பல்=பழூஉப்பல்

        59. ஒடு என்னும் மரப்பெயர் எவ்வாறு புணரும்?

                    மெல்லெழுத்து மிகும். ஒடு+கிளை = ஒடுங்கிளை

        60. உகர ஈற்றுச் சுட்டு எவ்வாறு புணரும்?

                    அன் சாரியை பெறும். 

                        அது + கிளை = அது + அன் + கிளை = அதன்கிளை  

        61. ஊகார இறுதி அல்வழியில்  எதைப் போன்றது?

                        ஆகார ஈற்றைப் போன்றது. [வல்லெழுத்து மிகும்]

        62. ஊகர இறுதி வினையெச்ச சொல் எவ்வாறு புணரும்?

                        வல்லொற்று மிகும். [ஊண்ணூக் கொண்டான்]

        63. வேற்றுமையில் ஊகார ஈறு எவ்வாறு வரும்?

                        ஒற்று மிகும்

        64. புணர்ச்சியில் ஊகாரத்தை அடுத்து உகரம் தோன்றும் இடங்கள் யாவை?

                        குற்றெழுத்தை அடுத்து வருதல் [உடூ + குறை - உடூஉக்குறை]

                       ஓரெழுத்து ஒருமொழியில் [தூ + குறை - தூஉக்குறை]

        65. பூ என்னும் ஊரெழுத்து ஒருமொழி எவ்வாறு புணரும்?

                        பிற ஓரெழுத்து ஒருமொழி போல உகரம் பெற்று வராது. 

                        ஆனால் வல்லெழுத்து மிகும்.

        66. ஊ அகர ஈற்றுடன் பெறும் மெய் யாது? 

                        ன் பெறும். ஆடூ+கை = ஆடூவின்கை

        67. ஏகார, ஓகார ஈறு எவ்விடத்தில் மொழிக்கு ஈறாக அமையும்?

                        தேற்றம் குறித்தும், சிறப்பு குறித்தும் வரும், முன்னிலை வினைக்கு                         ஈறாக வரும். 

        68. ஏகார, ஓகார ஈறு முன்னிலை வினைக்கு ஈறாக வரும் போது எவ்வாறு ப

                புணரும்? வல்லெழுத்து மிகும்.        ஏஎக்கொற்றா, ஓஒச்செய்தாய்

        69. தேற்றப்பொருளிலும் சிறப்புப் பொருளிலும்வரும் ஏகார, ஓகாரம்                                 எவ்வாறு புணரும்? 

                    வல்லொற்று மிகாமல் இயல்பாகப் புணரும்.                                                                             அவனோஒ செய்தான்

        70. ஏகார ஈற்று சொற்கள் எவ்வாறு புணரும்?

                        ஊகார ஈறு போல வல்லெழுத்து மிக்கு வரும்

                        சே + கடிது - சேக்கடிது

        71. எதிர்மறை, வினா, எண்ணுப் பொருளில் ஏகாரம் எவ்வாறு புணரும்?

                        வருமொழி முதலில் வல்லெழுத்து வர இயல்பாகப் புணரும்.

                        யானே கொண்டேன் [ எதிர்மறை]

                        நீயே சென்றாய்    [வினா]

                        ராஜாவே, ராணியே, மந்திரியே கண்டார் [எண்]

        72. வேற்றுமைப் புணர்ச்சியில் ஏகாரம் எவ்வாறு புணரும்?

                        வல்லெழுத்து மிகும். [வேக்குடம்]

                        சில இடங்களில் எகரம் ஏற்று வரும். [ஏஎப்புழை]

        73.  சே என்னும் மரப்பெயர் எவ்வாறு புணரும்?

                        மெல்லெழுத்து மிகும் [சே+கொம்பு - சேங்கொம்பு]

        74. சே என்னும் விலங்குப் பெயர் எவ்வாறு புணரும்?

                        இன் சாரியை பெறும் [ சே + பால் - சேவின் பால்]

        75. ஐகார இறுதிப் பெயர் வருமொழியில் வல்லெழுத்து வருமிடத்தில்                                  வேற்றுமையில் எவ்வாறு புணரும்?

                        குதிரை + குளம்பு = குதிரைக்குளம்பு

       76. சுட்டெழுத்தை முதலாக உடைய ஐகார இறுதி எவ்வாறு புணரும்?

                          வற்று சாரியை பெற்று, ஐ கெட்டோ, கெடாமலோ புணரும்

                              அவை + தலை - அவை + வற்று + தலை - அவையற்றுத்தலை

                                                                                                               - அவற்றுத்தலை

        77. ஐ ஈற்று மரப் பெயர்கள் எவ்வாறு புணரும்?

                           1.விசை, ஞெமை, நமை என்னும் மரப்பெயர்கள் மெல்லொற்று 

                        மிக்குப் புணரும். [விசைங்கோடு, ஞெமைங்கிளை, நமைங்கிளை]

                           2.  பனை, அரை, ஆவிரை மூன்றும் அம் சாரியை பெறும்.

                                                             [அரையங்காய்]

                            3. பனை, ஆவிரை -யில் ஐ கெடும் 

                                                            [பனங்காய், ஆவிரம்பூ]

        78. பனையை அடுத்து அட்டு வர எவ்வாறு புணரும்

                                ஐ மறைந்து ஆகாரம் வரப் புணரும்

                                                        [பனாஅட்டு]

        79. பனையை அடுத்து கொடி வர நிகழ்வது யாது?

                                வல்லெழுத்து மிகும் [ பனைக்கொடி]

        80. ஐகார ஈற்று திங்கள், நாள் பெயர் எவ்வாறு புணரும்?

                                இக்கு, ஆன் சாரியை பெறும்.

                                சித்திரைக்குக் கொண்டான்

                                ஆதிரையாற் கொண்டான்

        81. மழை என்னும் சொல் எவ்வாறு புணரும்?

                                அத்து, இன் சாரியை பெற்றுப் புணரும். 

                                மழையத்துப் போனான்

                                மழையிற் சென்றான்

         82. செய்யுளில் வேட்கை முன் அவா வர எவ்வாறு புணரும்?

                                ஐகாரம் கெட்டு டகரம் ணகரம் ஆகும்.

        83. ஓகார இறுதி சொற்கள் எவ்வாறு புணரும்?

                                வலி மிகும் - ஓப்பெரிது

        84. எச்சம், வினா, ஐயப்பொருளில் ஓகாரம் எவ்வாறு புணரும்?

                                இயல்பாகப் புணரும். [யானோ செய்தேன்]

        85. ஒழியிசை ஓகாரம் எவ்வாறு புணரும்?

                                இயல்பாகப் புணரும்

        86.  ஓகாரம் இல் பொருளில் எவ்வாறு புணரும்?

                                  இல் முன் வரும் ஓகாரம் இயல்பாகப் புணரும்.

        87. ஒன் சாரியை பெறும் ஓகாரம் எவ்வாறு புணரு? 

                                இயல்பாகப் புணரும்

        88. ஔகார ஈற்று சொற்கள் வருமொழியில் கசதப வரின் எவ்வாறு                                   புணரும்?        

                                வல்லெழுத்து மிகும், உகரம் மிகுதலும் சிறப்பு

                                கௌவுக் கடிது, கௌவுக் கொடுமை

                        

                                                                







                    











 

                











 

நன்னூல் எழுத்திலக்கணம் - உயிரீற்றுப் புணர்ச்சி

 1. அ, இ, உ ஆகிய சுட்டெழுத்துக்களின் பின் வரும் வல்லெழுத்து மிகும்

            அ + பக்கம் = அப்பக்கம்

            இ + பக்கம் = இப்பக்கம்

            உ + பக்கம் = உப்பக்கம் [பழைய வழக்கு]

2.  எ என்ற வினா எழுத்தின் பின் வலி மிகும்

            எ + பக்கம் = எப்பக்கம்

3. அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு என்ற சொற்களுக்குப் பின் வலி மிகும்

            அந்த + பையன் = அந்தப்பையன்

            இந்த + பையன் = இந்தப்பையன்

            எந்த + பையன் = எந்தப்பையன்

            அங்கு + சென்றாள் = அங்குச்சென்றாள்

            இங்கு + சென்றாள் = இங்குச்சென்றாள்

            எங்கு + சென்றாள்  = எங்குச்சென்றாள்

            ஈங்கு + சென்றாள் = ஈங்குச்சென்றாள்

            யாங்கு + சென்றாள் = யாங்குச்சென்றாள்

4. அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை என்ற சொற்களின் பின் வலி மிகும்

            அவ்வகை + செய்தாள் = அவ்வகைச்செய்தாள்

            இவ்வகை + செய்தாள் = இவ்வகைச்செய்தாள்

            எவ்வகை + செய்தாள் = அவ்வகைச்செய்தாள் 

            அத்துணை + தந்தாள் = அத்துணைத்தந்தாள்

            இத்துணை + தந்தாள் = இத்துணைத்தந்தாள்

            எத்துணை + தந்தாள் = எத்துணைத்தந்தாள் 

5. தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தின் பின் வலி மிகும்

               கனா + கண்டேன் = கனாக்கண்டேன்

6. அன்றி இன்றி என்னும் இகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களுக்குப்
             பின் வலி மிகும்     
                  
              அன்றி + கெடும் = அன்றிக்கெடும்         

. 7.  இனி, தனி, அன்றி, இன்றி, மற்ற, நாடு, பொது, அணு, முழு, புது, திரு
                                                                             என்ற சொற்களின் பின் வலி மிகும்

            இனி  + காண்போம் = இனிக்காண்போம்
            தனி + சொல்               =  தனிச்சொல்
            அணு + சிதைவு          = அணுச்சிதைவு
            புது + சட்டை                = புதுச்சட்டை
            திரு + குறள்                  = திருக்குறள்

 8. . அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வலி மிகும்

            அப்படி + செல் = அப்படிச்செல்
            இப்படி + போ = இப்படிப்போ
            எப்படி + காண்பேன் = எப்படிக்காண்பேன்

8. ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் சொற்களின் பின் வலி மிகும்

            ஆண்டு + செல் = ஆண்டுச்செல்
            ஈண்டு + காண்  = ஈண்டுக்காண்
            யாண்டு + கேள் = யாண்டுக்கேள்

9. என என்னும் இடைச்சொல்லின் பின் வலி மிகும் 

            என + கொண்டாள் = எனக்கொண்டாள் 
10. மிக என்ற சொல் பின் வலி மிகும்

            மிக + கொடியன் = மிகக்கொடியன்

11. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வரும் வலி மிகும்

            வர + கண்டேன் = வரக்கண்டேன்

12. இகர ஈற்று வினை எச்சத்தின் பின் வரும் வலி மிகும்

            பேசி + பார்த்தான் - பேசிப்பார்த்தான்

13. உரி சொற்களின் பின் வரும் வலி மிகும்

            சால + சிறந்தது = சாலச்சிறந்தது
            தவ + பெரியது = தவப்பெரியது
14. திசைப் பெயர்களின் பின் வலி மிகும் 
            கிழக்கு + தெரு = கிழக்குத்தெரு
            வடக்கு + தெரு = வடக்குத்தெரு
            மேற்கு + பக்கம் = மேற்க்குப்பக்கம்
            தெற்கு + சாலை = தெற்குச்சாலை

15. எல்லா, அனைத்து - சொற்களின் பின் வரும் வலி மிகும்
            எல்லா + சூழல் = எல்லாச்சூழல்
            அனைத்து + பிள்ளைகள் = அனைத்துப்பிள்ளைகள்

16. மெல்ல, உரக்க, நிரம்ப, நிறைய போன்ற அகர ஈற்று வினையடைகளின்                                                                                                  பின் வலி மிகும்
            மெல்ல + சிரி = மெல்லப்சிரி
            உரக்க + பேசு = உரக்கப்பேசு 

17. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வரும் வலி மிகும்
            பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
            தீ + பிடித்தது = தீப்பிடித்தது

18. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்

            அறியா + குழந்தை  = அறியாக்குழந்தை
            பாரா + கடவுள் = பாராக்கடவுள்

19. வன் தொடர் குற்றியலுகரத்தின் பின் வரும் வலி மிகும்

            சுட்டு + கொண்டாள் = சுட்டுக்கொண்டாள்
            பாட்டு + பாடினாள் = பாட்டுப்பாடினாள்

20. திரு, நடு, முழு பொது அனு போன்ற முற்றியலுகரத்தின் பின் வலி மிகும் 

                நடு + பகல் - நடுப்பகல்
                திரு + செல்வன் = திருச்செல்வன்
21 மென் தொடர் குற்றியலுகரத்தின் பின் வலி மிகும்

                சங்கு + சக்கரம் = சங்குச்சக்கரம்

. எண்ணுப் பெயர்களில் அரை, பாதி, எட்டு, பத்து சொற்களின் பின் வலி மிகும்

            அரை +பங்கு       = அரைப்பங்கு
            பாதி + கிணறு    = பாதிக்கிணறு
            எட்டு + தொகை = எட்டுத்தொகை
            பத்தி + பாட்டு     = பத்துப்பாட்டு











Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...