இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 மே, 2020

புதிய பாஞ்சாலி (பாகம் - 1)


புதிய பாஞ்சாலி

காட்சி: 1



பங்கேற்போர்: பாஞ்சாலி, கண்ணகி, சீதை, நளாயினி, அகலிகை, சந்திரமதி)



(திரை மூடப்பட்டுள்ளது. பின்னணியில் துரியோதனன் குரல் ஒலிக்கிறது.)



துரியோதனன்: இழுத்து வாருங்கள் அந்த பாஞ்சாலியை. என் அடிமைகளின் மனைவியான அவள் இன்றுமுதல் அரசியல்ல என் அடிமை. இழுத்துவா துச்சாதனா! என் அருமைத் தம்பியே, அவளை இழுத்து வந்து என் காலடியில் போடு. அவளது ஆடைகளைக் களைந்து அவளது திமிரை அடக்குவோம். அவளை இழுத்துவா!



(திரை விலகுகின்றது. மேடையின் ஓரத்தில் பாஞ்சாலி அழுதுகொண்டிருக்கிறாள்.)



பாஞ்சாலி: ஐயோ! நான் என்ன செய்யப் போகிறேன். இதிலிருந்து நான் எப்படித் தப்பிப்பேன். நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏன் இந்த நிலை. இத்தனை மனிதர்கள் நிறைந்த இந்த அவையில் நான் என் கற்பைப் பறிகொடுக்கப்போகிறேன். இதைவிட ஒரு கொடுமை ஒரு பொண்ணின் வாழ்வில் நிகழ்ந்திடக் கூடுமா? நான் என்ன செய்வேன்? இந்த செய்தியைக் கேட்டும் கூட என் உயிர் போகாமல் உயிநோடு நிற்கின்றேனே? ஐயோ! என்னை மீட்க யாராவது வர மாட்டார்களா? ஐயோ…ஐயோ….

(கண்ணகி, சீதை, நளாயினி, அகலிகை, சந்திரமதி மேடைக்கு வருகின்றனர்.)



சீதை : உன் அழுகையை நிறுத்து

அனைவரும்: ஆம் உன் அழுகையை நிறுத்து.

பாஞ்சாலி: நீங்கள்… யார்?

சீதை : நான்தான் மிதிலையின் மைதிலியாய் பிறந்து காட்டிலேயே என் காலத்தைக் கழித்த சீதை.

கண்ணகி : சிலம்பைக் கையிலேந்தி, நினத்தைக் கண்ணிலேந்தி, மதுரையை எhpத்த கண்ணகி நான்.

அகல்யா: நான்… செய்யாத தவறுக்காக கல்லாய் மாற்றப்பட்ட அகலியை நான்.

நளாயினி: தன் கற்பை அடகு வைத்து என் கற்பை சோதித்த கணவனை கூடையில் சுமந்து பரத்தை வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி நான்.

பாஞ்சாலி: அப்படியானால் தாங்கள்?

சந்திரமதி: நான் சந்திரமதி. என் கதையும் உன் கதை போன்றது தான். கணவனின் சூதாட்டத்தால் நான் நாட்டையும், வசதியான வாழ்வையும் இழந்ததோடு பெற்றபிள்ளையையும் பறிகொடுத்து அவனை நல்லடக்கம் செய் கூட முடியாமல் தவித்தவள் நான்.

பாஞ்சாலி: ஓ நீங்கள் தானா அந்த மங்கையற்கரசிகள். பார்த்தீர்களா என் நிலையை. இதிலிருந்து நான் எப்படி தப்பிப்பேன். எனக்கு விமோச்சனமே கிடையாதா? என்னை இந்நிலையிலிருந்து மீட்டெடுக்க யார் வருவார்? ஐயோ நான் என்ன செய்வே. பேசாமல் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.

அனைவரும்: நிறுத்து பாஞ்சாலி. உன் அழுகையை நிறுத்து. என் செய்வது என யோசி.

பாஞ்சாலி: நான் என்ன செய்வது? ஒரு பெண்ணான நான் இப்படியொரு சூழலில் அழுவதைத் தவிர என் செய்ய முடியும்?

சீதை: ஓ… அழுதால் தப்பி விட முடியுமா?

பாஞ்சாலி: முடியாதுதான் ஆனால் வேறு என்ன செய்ய முடியும்?

கண்ணகி: ஏன் முடியாது? நீ நினைத்தால் எல்லாம் முடியும்.

பாஞ்சாலி: நான் ஒரு பெண் . என்னை வந்து யாராவது மீட்டால்…

நளாயினி: இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இரட்சகருக்காய் காத்திருக்கப் போகிறாய்? எவரது உதவியுமின்றி உன்னை நீயே காத்திட முயற்சி செய் பாஞ்சாலி. உன்னால் முடியும். பு+கம்பமாய் மாறு! கிளர்ந்து எழு!

பாஞ்சாலி: என்ன…?  இது பேச்சுக்கு வேண்டுமானால் சாpவரும். நடைமுறையில் சாத்தியமற்றது. என்னை விடுங்கள் இங்கிருக்கும் தாங்கள் யாராவது கோபம் கொண்டு எழுந்தீர்களா? வாழ்க்கையோடு போராடினீர்களா? பொறுமையின் சிகரமாய் இருந்தீர்கள். அதனால் தான் தெய்வீகப் பெண்ணாக புராணங்களின் பக்கங்களில் நிலைத்திருக்கிறீர்கள்.

சீதை: (அலட்சியமாக) தெய்வீகப்பெண்கள். தெய்வமென உயர்த்திப் பிடித்துக் கொண்டாடும் இந்த சமூகம் சாதாரண மனிதியாக வாழ விடுவதே இல்லை பாஞ்சாலி. பூப்போன்றவள். நிலம் போன்றவள், தெய்வீகமானவள்…. இவையெல்லாம் நம்மை வீழ்;த்தும் ஆயுதங்கள் பாஞ்சாலி.

அகலிகை: ஆனால், அதனை உணராமல் எங்கள் வாழ்வில் எங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளில் பொறுமை காத்தோம்.

சீதை: கணவனிருக்கும் இடமே என் கோவிலென எண்ணி, இன்பத்திலும், துன்பத்திலும் துணையிருக்க ராமனோடு காட்டில் காய்ந்தேன் நான். ஆனால் அவரோ ஊhpன் முன்னே என் தூய்மையைக் கேள்வி கேட்டார். முதல் முறையே அதனை நான் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தவிர்த்து  அவரது சோதனைக்கு உடன்பட்டேன். கடைசியில் கருவில் குழந்தைகளோடு காட்டிற்கு விரட்டப்பட்டேன் நான்.

கண்ணகி: என்னை மணந்து கொண்ட கோவலன் வேறு ஒரு பெண்ணை நாடிய அந்நாளிலேயே தடுத்திருக்க வேண்டும் நான் அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, பின் என் வாழ்வை இழந்ததற்காக மதுரையையே அழித்தேன் நான்.

சந்திரமதி: என் கணவர் நல்லவர் தான் உத்தமர்தான். ஆனால் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து என்னையும் தவிஜக்கவிட்டார். சூதில் பகடையைத் தொடுமுன்னே அவரைத் தடுத்து எதிர் கேள்விக் கேட்டிருக் வேண்டும் நான். அதைச் செய்யத காரணத்தால் இறுதியில் பெற்ற மகனையே இழந்து அனாதையானேன்.

பாஞ்சாலி: அப்படியானால், ஆண்களை நம்பக் கூடாதா? அவர்களை எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா?

அகலிகை: இல்லை பாஞ்சாலி அது அப்படியில்லை. ஆணும் பெண்ணும் இணைந்ததே பிரபஞ்சம். இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இணையாக வாழப்பிறந்தவர்கள். யாரும் ஆளப்பிறந்தவர் இல்லை.

நளாயினி: அடங்கப்பிறந்தவரும் இல்லை.

அகலிகை: ஆம். நாம் நாமாக வாழப்பிறந்தவர்கள். அதை மறந்ததாலே பெண்ணினம் ஓயாத அடக்குதலுக்கு ஆளாகின்றது.

நளாயினி: என் கற்பைச் சோதிக்க என் கணவர் விபச்சாhpயின் வீட்டிற்குச் சென்றார். தன் கணவாpன் உருவிலிருந்த இந்திரனை அறியால், அவரோடு இணைந்துவிட்டால் அகல்யா. இதில் அறிந்தே என் கணவர் செய்தது சோதனை. மனதறியாமல் உடலளவில் உபயோகிக்கப்பட்ட அகலிகை கற்பிழந்தவள், பாவி, அதற்கு தண்டனையாக சாபம் வேறு. என்ன நியாயம் சொல் பாஞ்சாலி

கண்ணகி: பாஞ்சாலி பல வேளைகளில் ஆண்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் பெண்கள் உடலாலும் மனதாலும் பல துன்பங்களுக்கு ஆளாகிறாள் பெண். இது ஆணினத்தின் தவறு அல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் தவறு.

சீதை: அந்தத் தவறுகள் நடக்கும் போது இரட்சகரைத் தேடி, கண்ணீர் சிந்தி, மௌனம் காத்து தவறுகளைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது போதும் பாஞ்சாலி. யாரோ காப்பரென காத்திருந்த பெண்களின் கதை பழங்கதை ஆகட்டும். நீ புதிய பிரவேசம் எடு. புதிய சகாப்தம் படை. எழு பாஞ்சாலி.

அனைவரும்:   ஆம் உன் கண்ணைத் துடைத்துக்கொள் உன்னில் எழும் கோப அக்கினியை உன் கண்ணீர் அணைத்துவிடக் கூடும். கண்களைத் துடைத்து, அச்சத்தை விடுத்து எனக்கு நீயே துணை என நிரைத்து எடுந்திடு பாஞ்சாலி. உன் அச்சத்திலிருந்து எழு, உன் மடமையிலிருந்து எழு, உன் அறியாமையிலிருந்து எழு. பெண்ணால்; எல்லாம் கூடும் என உலகிற்கு உணர்த்திட எழு.







சங்க காலத்தில் போர் நிகழ்ந்தமைக்கான காரணங்கள்


உலகில் தோன்றிய மனிதன் இயற்கையோடு போராட தொடங்கியது முதலே இவ்வுலகில் போர் தொடங்கிவிட்டது. முதலில் தன்னைத் தாக்க வரும் விலங்குகலோடு போரிட்டு தன்னை, தன் வாழ்வைத் தக்க வைத்துக் கொண்டான். பின் இனக்குழுவாக வாழத்தொடங்கிய பின் தன் இனத்தை காக்க போரடினான். நிலவுடைமை தோன்றிய பின்னர் தன் நிலப்பரப்பை விரிவு செய்ய, அண்டை நிலத்தாரோடு போரிடத்தொடங்கினான். மனிதன் மண் மேல் கொண்ட ஆசையால் உருக்கொண்ட போர்கள் இன்றளவும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
       
          இன்று நிலம் மட்டுமின்றி அதிகாரத்திற்காகவும், ஆசைக்காகவும், மதத்தின் பெயராலும் பற்பல போர்கள் நடந்துகொண்டுள்ளன. இன்றைய காலத்திலேயே  இச்சூழல் எனில் வீரயுகம் எனப் புகழப்படும்  சங்க காலத்தில் எண்ணிறந்த போர்கள் நடைபெற்றன. அக்காலத்தில் போர் நடைபெற காரணமாக இருந்தவை இங்கு பட்டியலிடப்படுகின்றன.

1. கால் நடைகளான ஆடு, மாடுகளை கவரவும், காக்கவும் போர் நடைபெற்றது.

2. எல்லையை விரிவு படுத்தவும், காக்கவும் போர் நடத்தப்பட்டது.

3. பிற நாட்டு வளத்தைக் கவர நடத்தப்பட்டது.

4. தன் தன்மானத்தி காக்க போர் நடைபெற்றது.

5. சிற்றரசுகளைக் கவர போர் நடந்தது,

6. அரசாட்சியைக் கைப்பற்ற போர் நடைபெற்றது.

7. ஒரு அரசரின், சிற்றரசரின் மகளை மணம் முடிக்க முயற்சித்து போர் நடந்தது.


இணைப்பு:


Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...