- எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை
- எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352
- எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்து உட்பட பாடல்களின் எண்ணிக்கை? 2358
- எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் பற்றியன எத்தனை? 5 [நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு]
- எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் எத்தனை? 2[புறனானூறு, பதிற்றுப்பத்து]
- அகமும், புறமும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? பரிபாடல்
- நானூறு பாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
- பதிக முன்னோடியாக அமைந்த எட்டுத்தொகை நூல்கள் யாவை? ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
- பாவால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? கலித்தொகை, பரிபாடல்
- எண்ணிகையால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 2
- ஆசிரியப்பாவால் அமைந்த எட்டுத்தொகை நூல்கள்? 6
- முழுமையாகக் கிடைக்கும் எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு]
- நானூறு பாடல்கள் அடங்கிய எட்டுத்தொகை நூல்கள் யாவை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
- முதற்பகுதியும், இறுதியும் கிடைக்காத எட்டுத்தொகை நூல்கள் யாவை? 2 [பதிற்றுப்பத்து, பரிபாடல்]
- நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- நற்றிணையைத் தொகுத்தவர் யார்? தெரியவில்லை
- குறைவான அடிகளோ அதிக அடிகளோ இல்லாமல் இடைநிகரவான அடிகளைக் கொண்டு இருப்பதால் நற்றிணை எனப்பட்டிருக்கலாம் என்றவர் யார்? டாக்டர் ந. சஞ்சீவி
- நற்றிணை பாடல் எண்ணிக்கை எத்தனை? 400+1 [401]
- நற்றிணை பாடிய புலவர்களின் எண்ணிக்கை யாது? 187
- நற்றிணை அடிவரையறை - 9 - 12
- நற்றிணையில் எத்தனை மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர்? 10
- நற்றிணையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனைபேர்? 5 [கொட்டம்பலவனார், தும்பிசேர்கீரனார், விழிக்கண்பேதைப் பெருங்க் கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றனார், தனிமகனார்]
- நற்றிணையில் பாடிய பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை? 9
- குறுந்தொகை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு
- குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை? 400+1 [401]
- குறுந்தொகை அடியெல்லை - 4 - 8
- குறுந்தொகையில் 9 அடி உள்ள பாடல் எது? 307
- குறுந்தொகையில் பாடல் இயற்றிய புலவர்கள் எத்தனை பேர்? 203
- குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்? பூரிக்கோ
- குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் யார்? தெரியவில்லை
- முதலில் தொகுக்கப்பட்ட நூல் எது? குறுந்தொகை
- குறுந்தொகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ள பாடல்கள் பாடிய புலவர் யார்? பரணர்
- குறுந்தொகையில் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை? 236
- திருவிளையாடற் புராணத்தில் தருமி வரலாற்றை அறிய உதவும் பாடல்? குறுந்தொகை - கொங்குதேர் வாழ்க்கை
- குறுந்தொகையில் அதிகப் பாடல் பாடிய பெண்பாற் புலவர்கள்? நன்னாகையார், வெள்ளிவீதியார்
- குறுதொகையில் பாடல் இயற்றிய புலவர்களில் ஊர் பெயரோடு பெயர் பெற்றப் புலவர்கள் ? 4 [அள்ளூர் நன்முல்லையார், அரிசில் கிழார், கூடலூர் கிழார், மதுரை நல்வெள்ளியார்]
- குறுந்தொகையில் தொழிலால் பெயர் பெற்றப் புலவர்கள் எத்தனை பேர்? 3 [ ஆசிரியன் பெருங்கண்ணனார், கொல்லன் அழிசி, வள்ளுவன் பெருஞ்சாத்தனார்]
- குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனை பேர்? 18 [அணிலாடு முன்றிலார், குப்பைக் கோழியார், வில்லக விரலினார், விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார், நெடுவெண்ணிலவினார்]
- குறுந்தொகையில் வடமொழி பெயர்கொண்ட புலவர்கள்? 6 [உருத்திரன், சண்டிலியன், உலோச்சன், மாதிரத்தன், பவுத்திரன், பிரமந்தன்]
- தொடரால் பெயர் பெற்றவர்கள் மிகுதியும் உள்ள நூல் எது? குறுந்தொகை
- ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் பெருவழுதி
- ஐங்குறுநூறைத் தொகுத்தவர் யார்? கூடலூர் கிழார்
- ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை? 500+1 [501]
- ஐங்குறுநூறு அடிவரையறை? 3 - 5
- ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர்கள்? 5 புலவர்கள்
- ஐங்குறுனூறு பதிகம், சதகத்திற்கு முன்னோடி
- திணைக்கு ஒரு புலவர் பாடியுள்ளனர்
- ஐங்குறுநூற்றில் மருதம் பாடிய புலவர் யார்? ஓரம்போகியார்
- ஐங்குறுநூற்றில் நெய்தல் பாடிய புலவர் யார்? அம்மூவனார்
- ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பாடிய புலவர் யார்? கபிலன்
- ஐங்குறுநூற்றில் பாலை பாடிய புலவர் யார்? ஓதலாந்தையார்
- ஐங்குறுநூற்றில் முல்லை பாடிய புலவர் யார்? பேயனார்
- ஐங்குறுநூற்றில் அந்தாதித் தொடையில் அமைந்த பத்து எது? தொண்டிப் பத்து
- ஐங்குறுநூற்றில் முதல் பத்து எது? வேட்கைப் பத்து
- பத்துப்பாடல்களிலும் முதல் அடியும் மூறாவது அடியும் ஒன்றாக இருக்கும் பத்து எது? வேட்கைப்பத்து
- தோற்றவர் புல் மேயச் செய்த வரலாற்றைக் காட்டும் நூல்? ஐங்குறுநூறு ["வாழி ஆதன் வாழி அவினி/ பகைவர் புல்ஆர்க: பார்ப்பார் ஓதுக"]
- ஐங்குறுநூற்றில் தொடரால் பெயர் பெற்றவர் யாரும் இல்லை
- ஐங்குறுநூற்றில் அதிகம் குறிக்கப்படு ஆதன் என அழைக்கப்பட்டோர் யார்? ஆவியர் குடியினைச் சேர்ந்தவர்கள்
- கலித்தொகையைத் தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
- கலித்தொகையைச் சிறப்பிக்கும் வரிகள் : 'கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விம்வலார் கண்ட கலி, நனிஆர்வம் பொங்கும் கலி
- கலித்தொகைப் பாடல் எண்ணிக்கை? 149+ 1 [150]
- கலித்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை? 5
- கலித்தொகை அடிவரையறை? 11 - 80
- கலித்தொகையில் பாலையைப் பாடியவர்? பெருங்ககுங்கோ
- கலித்தொகையில் குறிஞ்சித் திணை பாடலைப் பாடியவர் யார்? கபிலன்
- கலித்தொகையில் மருதம் பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
- கலித்தொகையில் முல்லைத் திணை பாடியவர் யார்? நல்லுருத்திரன்
- கலித்தொகையில் நெய்தல் பாடியவர் யார்? நல்லந்துவனார்
- ஓரங்க நாடகம் போன்ற அமைப்பினைக் கொண்ட சங்க இலக்கியம்? கலித்தொகை
- அகநானூறைத் தொகுத்தவர் யார்? உருத்திர சன்மனார்
- அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்? பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- அகநானூற்றின் பாகுபாடுகள் யாவை? 3 [களிற்றியானைநிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை
- அகநானூறு சிறப்புப் பெயர்கள் யாவை? நெடுந்தொகை, அருந்தொகை நானூறு, அகப்பாட்டு
- அகநானூற்றுப் பாடல் எண்ணிக்கை? 400+1
- அகநானூற்றுப் பாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? 158
- அகநானூற்று அடியெல்லை யாது? 13 - 31
- சங்கப் பாடல்களை இயற்றிய புலவர்களின் எண்ணிக்கை? 473 [30 பெண்பாற் புலவர்கள்]
களிற்றியானைநிரைப் பாடல்களின் எண்ணிக்கை? 1 - 120- மணிமிடைப் பவளம் பாடல்களின் எண்ணிக்கை? 121 - 300
- நித்திலக்கோவை பாடல்களின் எண்ணிக்கை? 301 - 400
- அகநானூற்றுப் பாலைத்திணை வைப்பு - 1,3,5 [ஒற்றைப்படை]- 200
- அக. நா- குறிஞ்சித் திணை வைப்பு - 2, 8, 12, 18,.... [80]
- அகநானூறு முல்லை வைப்பு - 4, 14, 24 [40]
- அகநானூறு மருதம் வைப்பு - 6, 16, 26 [40]
- அகநானூறு நெய்தல் வைப்பு - 10, 20, 30 [40]
- அகநானூற்றின் செம்பாதி எத்திணைப் பாடல்கள் அதிகம்? பாலை
- அகநானூற்றில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்? கீரனார், ஊட்டியார்
- தமிழரி திருமண முறையைக் காட்டம் பாடல்? அகம் - 86
- சங்க காலத்தில் குடவோலை தேர்தல் முறை இருந்ததைக் காட்டும் பாடல்? அகம் - 77
- பெண்கள் உப்பிற்கு விலையாக நெல்லை வழங்கியமைக் காட்டும் பாடல்? 140
- குறிஞ்சிப்பண் பாடலைக் கேட்ட யானை திணையை உண்ண மறந்து தூங்குதல்
- அகநானூற்றில் இடம் பெற்ற புலவர்களின் எண்ணிக்கை? 10 [அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, எவ்வி, எழினி, உதியஞ்சேரலாதன், கரிகால் வளவன், தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 19 செப்டம்பர், 2020
சங்க இலக்கிய வினா வங்கி [எட்டுத்தொகை -அகப்பாடல்]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக