இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 செப்டம்பர், 2020

இலக்கிய இசங்கள் வினா வங்கி 1

  1. அழகியல் கோட்பாடு தோன்றிய காலம் எது? 19ஆம் நூற்றாண்டு
  2. அழகியல் கோட்பாடை உருவாக்கியவர் யார்? கார்ட்டன்
  3. தமிழில் அழகியல் படைப்புகள் யாவை? மு.வ. அகிலன், நா.பார்த்தசாரதி
  4. தமிழில் செவ்வியல் கோட்பாட்டை உருவாக்கியோர் யாவர்?    வேதநாயகம் பிள்ளை
  5. இயற்பண்பியல் கோட்பாடு தோற்றம் பெற்ற காலம் எது? 19ஆம் நூற்,
  6. இயற்பண்பியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
  7. இயற்பண்பியலைத் தொடங்கி வைத்தவர் யார்? பால்சாக்
  8. தமிழில் இயற்பண்பியலைக் கையாண்ட படைப்பாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் யார்? ஜெயகாந்தன்
  9. உள்ளதை உள்ளவாரே காட்டுவது? நடப்பியல்
  10. நடப்பியல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? எதார்த்தவாதம்
  11. நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட பிர்ஞ்சு நாட்டவர்? மாப்பசான்
  12. நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட ரஷ்ய  நாட்டவர்? லியோ டால்ஸ்டாய்
  13. நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட அமெரிக்கர்? ஹென் ஜேம்ஸ்
  14. தமிழில் எதார்த்தவாதத்தைச் சிறப்பாகக் கையாண்ட படைப்பாளர்கள்? புதுமைப்பித்தன், ஜெயகந்தன், பொன்னீலன், செல்வராஜ், சு, சமுத்திரம், பூமணி, மேலாண்மை பொன்னுசாமி
  15. சோசலிச நடப்பியல் எங்கு தோன்றியது? ரஷ்யா
  16. சோசலிச நடப்பியல் எங்கு தோற்றம் பெற்றது.
  17. சோசலிச நடப்பியலுக்குச் சிறந்த சான்று? கார்க்கியின் தாய்
  18. தமிழில் உள்ள சோசலிச நடப்பியல் புதினங்கள்? சிதம்பர ரகுநாதனின் பஞ்சும் பசியும், கனேசலிங்கத்தின் செவ்வானம், டி. செல்வராஜின் மலரும் சருகும், தேனீர், சின்னப்பபாரதியின் தாகம், பொன்னீலனின் கரிசல், சு,சமுத்திரத்தின் ஊருக்குள் ஒரு புரட்சி
  19. சோச்லிச நடப்பியல் கவிதைகளைப் படைப்போர்? பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார், இன்குலாப்,
  20. வெளிப்பாட்டியல் எப்போது தோற்றம் பெற்றது? 20 ஆம் நூற்றாண்டு
  21. தமிழில் யாருடைய சிறுகதை, புதினம் வெளிப்பாட்டியலைக் கொண்டுள்ளது? இந்திரா பார்த்த சாரதி
  22. தமிழில் வெளிப்பாட்டியலைக் கையாண்ட கவிஞர்கள் யாவர்? அப்துல் ரகுமான், அபி. சிற்பி, வைரமுத்து
  23. கருத்துப்பதிவியல் இசம் தோன்றக்காரணமாக அமைந்தது எது? பிளடி மோனட் என்பவரின் ஓவியம்
  24.   கருத்துப்பதிவியல் தோற்றம் பெற்ற காலம்? கி.பி. 19ஆம் நூற். பிற்பகுதி
  25. தமிழில் கருத்துப்பதிவியல் கூறுகள் உள்ள தொன்மை இலக்கியங்கள் யாவை? சங்க இலக்கிய தன்னுணர்ச்சிப் பாக்கள்
  26. தன்னுணர்ச்சி கோட்பாட்டைக் கையாண்டுள்ள தமிழ்க் கவிஞர்கள் யாவர்? மேத்தா, சிற்பி, குருக்கரம்பை சண்முகம், வைரமுத்து
  27. புனைவியல் தோற்றம் பெற்ற காலம் எது? 18ஆம் நூற்.
  28. புனைவியலைக் கையாண்ட ஆங்கிலக் கவிஞர்கள்? வேர்ட்ஸ்வொர்த், சாமுவேல் டெய்லர், பைரன், ஷெல்லி, கீட்ஸ்
  29. தமிழில் புனைவியலைக் கையாண்ட படைப்பாளர்கள்? கல்கி, அசோக மித்திரன், சாண்டில்யன்,விக்கிரமன், ஜெக சிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி
  30. மீம்மெய்மையியலின் வேறு பெயர்கள் யாவை?  மிகை எதார்த்தவாதம், அடிமன இயல்பியல்
  31. மீம்மெய்மையியல் எப்போது தோற்றம் பெற்றது? 1920
  32. மீம்மெய்மையியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
  33. மீம்மெய்மையியலைச் சிறப்பாகக் கையாண்ட உலகக்கவிஞர்கள்?எலியட், எஸ்.ரா. பவுண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ்
  34. தமிழில் மீம்மெய்மையியலுக்குச் சான்றாகும் புதினம்? தந்திரபூமி
  35. குறியீட்டியலைக் கையாண்ட தமிழின் பண்டை இலக்கியம்?                   சங்க அகப்பாக்கள்
  36. குறியீட்டியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
  37.  குறீட்டியல் எப்போது தோற்றம் பெற்றது? 1885
  38. படிமவியலோடு நெருங்கிய தொடர்புடைய கவிதை வகை? ஹைக்கூ
  39. படிமவியலை முதலில் அறிமுகம் செய்தவர்? எஸ்.ரா. பவுண்ட்
  40. படிமவியல் எங்கு தோன்றியது? அமெரிக்கா
  41. படிமவியல் தோற்றம் பெற்ற காலம்? 1912 -1917க்குள்
  42. தமிழில் குறிப்பிடத்தகுந்த படிமக்கவிஞர்கள்? நா. காமராசன், இன்குலாப், தணிகைச்செல்வம், மீரா, அபி, சிற்பி, அப்துல் ரகுமான்
  43. உயர்ந்த எண்ணங்களை, எண்ணம் கொண்ட தலைவனைக்கொண்டு உருவாகும் படைப்புக்களில் கையாளப்படும் கோட்பாடு? குறிக்கோளியல்
  44. குறிக்கோளியலின் வேறு பெயர்? கருத்து முதல் வாதம்
  45. தமிழில் குறிக்கோளியலுக்கு மாதிரியாக அமைந்த பண்டை இலக்கியங்கள்? சங்க இலக்கியம், திருக்குள், பெருக்காப்பியங்கள்
  46. காரல் மார்க்சின் கருத்துக்கோவையாக அமையும் இசம்? மார்க்சியம்
  47. மார்க்சியத்தைத் திறம்படக்கையாண்ட தமிழ்க் கவிஞர்கள் யாவர்? பாரதியார், பட்டுக்கோட்டையார்
  48. தமிழின் குறிப்பிடத் தகுந்த மார்க்சிய கவிஞர்கள்? சிற்பி, மீரா, தமிழன்பன், மேத்தா, காமராசன், இன்குலாப், தமிழொளி, சக்திக்கனல், புவியரசன்
  49. தமிழின் முதல் மார்க்சிய நாவல் எது? தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும்
  50. குறிப்பிடத்தகுந்த தமிழ் மார்க்சிய நாவல்கள்? அகிலனின் பால்மரக்காடினிலே, பொன்னீலனின் கரிசல், புதிய தரிசனங்கள்,   

ஈழத்தமிழ் படைப்பாளர்கள்

  1. சங்ககால இலங்கைப்படைப்பாளர் யார்? ஈழத்துப் பூந்தேவனார்
  2. ஈழத்துப் பூந்தேவனார் இயற்றிய பாடல்கள் எத்தனை? ஏழு பாடல்கள் [அகம். 88, 231, 307, குறுந்தொகை 182, 343, 360, நற்றிணை 366]
  3. பனைமரம் பற்றி புதிய நோக்கில் இயற்றப்பட்ட ஈழ படைப்பு எது? காசினாத புலவர் தல புராணம் [சுப்பையா]
  4.  சுப்பையா பாடிய வேறு புராணம் எது? கனகி புராணம்
  5. நீதிமன்றம் குறித்து உருவாக்கப்பட்ட ஈழத்து சிற்றிலக்கியம் எது? கோட்டுப்புராணம் [வே.இராமலிங்கம்]
  6. இலங்கையில் இயற்றப்பட்ட முதல் புதினம் யாது? தி.த. சரவண முத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி
  7. இலங்கையில் முதல் புதினம் வெளிவந்த ஆண்டு? 1895
  8. இலன்கையின் முதல் அறிவியல் நாவல் எது? அந்தரத்தீவு
  9. அந்தரத்தீவின் ஆசிரியர் யார்? கே. எஸ். மகேசன்
  10. யாழ்ப்பாணத்தில் பிறந்த பதிப்பு முதல்வர் யார்? சி.வை.தாமோதரம்பிள்ளை
  11. இலங்கையின் இலக்கிய விளக்கு எனப் போற்றப்படுபவர் யார்? ஆறுமுக நாவலர்
  12. ஆறுமுக நாவலரின் தந்தை யார்? கந்தப்பிள்ளை
  13. கந்தப்பிள்ளை இயற்றிய நாடகங்கள் எத்தனை 20
  14. கந்தப்பிள்ளையால் இயற்றப்பட்ட நாடகங்களில் புகழ்பெற்றன யாவை? இராமவிலாசம், சந்திர காசம்
  15. கோவலன் நாடகத்தை இயற்றியவர் யார்? இணுவிற் சின்னத்தம்பி
  16. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோரின் முதல் கவிதைத் தொகுப்பு எது? துருவச் சுவடுகள்
  17. துருவச்சுவடுகள் எங்கிருந்து வெளிவந்தது? நார்வேயில் உள்ள சுவடுகள் பதிப்பகத்தில் இருந்து
  18. புலம்பெயர்ந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் குறிப்பிடத்தகுந்த பெண் படைப்பு எது? மறையாத மறுபாதி
  19. புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளர்கள் சஞ்சிகையில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு எது? மண்ணைத்தேடும் மனங்கள்
  20. மண்ணைத் தேடும் மனங்கள் வெளிவந்த ஆண்டு? 1986
  21. ஈழத்துப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைத்தொகுப்பு எது? புது உலகம் எமை நோக்கி
  22. இலங்கையில் புனைகதை இலக்கியத்தை வளர்த்தவர்கள் - சிவபாத சுந்தரம், டோமினிக் ஜீவா, டேனியல், எச். பொன்னுத்துரை, செ. கணேசலிங்கம்

உலகத்தமிழ் மாநாடு, உலக இணைய மாநாடு

                உலகத்தமிழ் மாநாடு

1. மலேசியா             - கோலாலம்பூர்             -1966
2. இந்தியா                 - சென்னை                     -1968
3. பிரான்ஸ்                -பாரீஸ்                              -1970
4. இலங்கை               -யாழ்ப்பாணம்             -1974
5. இந்தியா                 -மதுரை                            -1981
6. மலேசியா              -கோலாலம்பூர்             - 1987
7. மொரீசியஸ்                                                      - 1989
8. இந்தியா                  -தஞ்சாவூர்                     - 1995
9. மலேசியா               -கோலாலம்பூர்             -2015

        உலக் இணைய மாநாடு

1. சிங்கப்பூர்                                                          -    1997
2. சென்னை                                                           -    1999
3. சிங்கபூர்                                                              -    2000
4. கோலாலம்பூர்                                                  -    2001
5. சான்பிரான்சிஸ்கோ [அமெரிக்கா]       -    2002
6. சென்னை                                                           -    2003
7. சிங்கப்பூர்                                                          -    2004
8. கோலோன்[ஜெர்மனி]                                  -    2009
9. கோயமுத்தூர்                                                   -    2010

உலகச்செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்றது.

மொழியியல் வினா வங்கி

  1. முதன் முதலில் மொழியியற் கருத்துக்களை முன்வைத்தவர் யார்?     மாகறல் கார்த்திகேய முதலியார்
  2. தமிழ் மொழி நூலை எழுதியவர் பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார்
  3. முனைவர் மு. வ. எழுதிய மொழியியல் நூல்கள் யாவை? மொழி நூல், மொழி வரலாறு, மொழியியற் கட்டுரைகள்
  4. பரிதிமாற் கலைஞர் இயற்றிய மொழியியல்  நூல்?                                                                      தமிழ் மொழியின் வரலாறு 
  5. ரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய மொழி சார் நூல்? சொல்லும் அவற்றின் குறிப்பீடும்
  6. தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் மொழியியல் நூல் - தமிழ் மொழி வரலாறு
  7. சோமலே இயற்றிய மொழியியல் நூல் - செட்டிநாடும் தமிழும்
  8. தமிழில் வெளிவந்த கிளைமொழி பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல்? செட்டிநாடும் தமிழும்
  9. முனைவர் அகத்திய லிங்கம் எழுதிய மொழி வரலாற்று நூல்?                               உலக மொழிகள்
  10. உலகச்செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் என்ற நூலைப் படைத்தவர்? வ.சே. குழந்தைச் சாமி
  11. தமிழ்ச் செம்மொழி ஆவணம் என்ற நூலைத் தொகுத்தளித்தவர் யார்?    சாலினி இளந்திரையன்
  12. செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள் என்ற நூலை வெளியிட்டவர்? கலைஞர் மு, கருணாநிதி
  13. மொழியியல் நோக்கில் பதிற்றுப்பத்தினை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்? ச. அகத்தியலிங்கம்
  14. ச. அகஸ்திய லிங்கம் எழுதிய மொழியியல் நூல்கள்? உலக மொழியியல், தொல்காப்பிய மொழியியல், language of Tamil inscription, Bibliography of dravidian Linguistics, Generative Grammar of tamil
  15. Dravidian Nouns- Acomparative study, Aspect of Linguistic  devolopment in  Tamil உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்? செ.வை.சண்முகம்
  16. பேச்சொலியன் என்ற நூலை இயற்றியவர்? க. முருகையன்
  17. மொழியியல் கலைச்சொல் அகராதியை இயற்றியவர்? சு. சக்திவேல்
  18. மொழியியலில் மாற்றிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? பொற்கோ
  19. பொற்கோவின் பிற மொழியியல் நூல்கள்? திராவிட மொழி ஒப்பியல், மொழியியல் நோக்கில் மொழி நடை ஆய்வு, குடகு மொழியின் உயிரெழுத்துக்கள்
  20. தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கருணாகரனின்  மொழியியல் நூலகள் யாவை? மொழியியல், சமுதாய மொழியியல், மொழி திட்டமிடுதல், ஆக்கத்தமிழ் 
  21. சு. ராசாராம் எழுதிய மொழியியல் நூல்கள் யாவை? மொழியும் மொழியியலும், ஒலியியல்
  22. Language of Tamil inscription என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்?                சே.வை. சண்முகம்
  23. The Language of kaliththokai  என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்?              க.முருகையன்
  24. Generative Grammar of Rajapallayam Telugus  என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? ந. குமார சாமிராஜா
  25. A descriptive study of Toda Dialect  என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? சு.சக்திவேல்
  26. A Generative Grammar of modern Literary Tamil  என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? இரா. கோதண்ட ராமன்
  27. Descriptive study of dialect of the kollimlai tribes  என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? கி. கிருபாகரன்
  28. A constructive analysis of Tamil  and kannada  - A Transformational approch  என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்?  சு. ராசாராம்

தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றோர்

  1. கவிஞர் சுரதா                                                         -                                     1978
  2. எஸ்.டி. சுந்தரம்                                                      -                                     1979    
  3. கவிஞர் வாணிதாசன்                                         -                                     1980
  4. பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்          -                                      1981                 
  5. கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம்                 -                                      1982
  6. கவிஞர் வகாப்                                                        -                                      1983
  7. கவிஞர் நா. காமராசன்                                      -                                      1984
  8. கவிஞர் உலகநாதன்                                            -                                      1985
  9. கவிஞர் மு. மேத்தா                                               -                                      1986
  10. கவிஞர் முடியரசன்                                               -                                      1987
  11. கவிஞர் பொன்னிவளவன்                                 -                                      1988
  12. கவிஞர் அப்துல் ரகுமன்                                      -                                      1989
  13. 21 கவிஞர்கள் [பாவேந்தர் நூற்றாண்டு]      -                                      1990
  14. 21 கவிஞர்கள் [பாவேந்திர் நூற்றாண்டு]     -                                      1991
  15.  கவிஞர் முத்துலிங்கம்                                         -                                      1992
  16. புலவர் பெ. அ. இளஞ்செழியன்                        -                                      1993
  17. கவிஞர் கரு நாகராசன்                                       -                                       1994
  18. கவிஞர் மறைமலையான்                                  -                                       1995
  19. கவிஞர் வைரமுத்து                                              -                                        1996
  20. முனைவர் சரளா இராசகோபாலன்              -                                       1997
  21. முரசு நெடுமாறன் [மலேசியா]                        -                                       1998
  22. சிலம்பொலி சு. செல்லப்பன்                            -                                       1999
  23. பாவலர் மணிவேலன்                                          -                                       2000
  24. கவிஞர் மணிமொழி                                            -                                       2001
  25. முனைவர் ச.சு. இராமர் இளங்கோ               -                                       2002
  26. பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி                -                                        2003
  27. பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன்      -                                        2004
  28. விருது வழங்கபடவில்லை                                -                                        2005
  29. முனைவர் கா. செல்லப்பன்                             -                                        2006
  30. திருச்சி. எம். எஸ். வெங்கடாச்சலம்              -                                       2007
  31. தமிழச்சி தங்கப்பண்டியன்                             -                                       2008
  32. கவிஞர் தமிழ்தாசன்                                           -                                        2009
  33. முனைவர் இரா இளவரசு                                  -                                        2010
  34. கவிஞர் ஏர்வாடி க. இராதாகிருஷ்ணன்     -                                        2011
  35. முன்னவர் சே. நா. கந்தசாமி                           -                                        2012
  36. முன்னவர் இராதா செல்லப்பன்                    -                                        2013

பக்தி இலக்கிய வினா வங்கி 4

 1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள்

2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? 

    பாணபத்திரர்

3. திருவாலவுடையார் இயற்றியது -  சேரமானுக்கு இயற்றிய திருமுக பாசுரம்

4. திருமுக பாசுர காலம் எது? கி. பி. ஆறாம் நூற்றாண்டு

5. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன? புனிதவதியார்

6. காரைக்காலம்மையாரின் கணவர் பெயர்? பரமதத்தன்

7. காரைக்கலம்மையார் எங்கு முத்தி பெற்றார்? திருவாலங்காடு

8. காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து சென்ற இடம் எது? கயிலை

9. காரைக்கால் அம்மையாரின் காலம் - ஆறாம் நூற்றாண்டு

10. 63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அடியவர் யார்?

    காரைக்கலம்மையார்

11. சைவ சமய பக்திப் பாடல்களில் பழமையானவை யாருடைய பாடல்கள்? 

    காரைக்கலம்மையார் [திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்,  

    திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி]

12. கல்லாடர் இயற்றிய நூல் ? திருக்கண்ணப்பர் திருமறம்

13. நக்கீர தேவநாயனார் காலம் எது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு

14. திருமுருகாற்றுப்படை நீங்கலாக நக்கீரர் இயற்றிய நூல்கள் - 9

15. நக்கீரதேவ நாயனாரும் சங்க கால நக்கீரரும் வேறு எனக் கூறியவர் -

    உ.வே.சாமிநாத ஐயர்

16. கபிலதேவ நாயனார் காலம் - கி.பி. 11ஆம் நூற்றாண்டு

17. கபில தேவர் இயற்றிய நூல்கள் எத்தனை? 3 [மூத்தநாயனார் திருவிருட்டை 

    மணிமாலை, சிவ பெருமான் திருவந்தாதி,  சிவபெருமான் திருவிரட்டை 

    மணிமாலை

18. மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை - யாரைப் பற்றியது? விநாயகர் 

19. பரண தேவநாயனாரின் காலம் ? கி.பி 10 ஆம் நூற்.

20. பரண தேவர் நூல் எது? சிவபெருமான் திருவந்தாதி 

21. அதிரா அடிகளின் காலம் என்ன? கி.பி. 7ஆம் நூற்

22. மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவையின் ஆசிரியர் யார்? 

    அதிரா அடிகள்

23. சிவபெருமான் மும்மணிக்கோவை பாடியவர் யார்?எம்பெருமானடிகள்

24. எம்பெருமானடிகளின் வேறு பெயர் என்ன? இளம்பெருமானடிகள்

25. ஐயடிகள் காடவர் கோன் எம்மரபைச் சேர்ந்தவர்? பல்லவர்

26. சேத்திர வெண்பா பாடியவர் யார்? ஐயடிகள்

27. சேரமான் பெருமாள் நாயனாரின் இயற்பெயர்? பெருமாக்கோதையார்

28. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்கள் எத்தனை? 3 [திருக்கைலாய 

    ஞான உலா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை

29. பட்டினத்தடிகளின் இயற்பெயர் யாது? திருவெண்காடர்

30. பட்டினத்தடிகளின் காலம் - 10 ஆம் நூற்.

31. பதினோரு திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் யார்? 

    நம்பியாண்டார் நம்பி

32. யாருடைய வேண்டுகோளை ஏற்று நம்பி திருமுறைகளைத் தொகுத்தார்?         

        இராஜராஜ சோழன்

33. தமிழ் வியாசர் எனப்படுபவர் யார்? நம்பியாண்டார் நம்பி

34. நம்பியாண்டார் நம்பியின் ஊர் எது? திருநாரையூர்

35. பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பியின் எத்தனை நூல்கள் 

        இணைக்கப்பட்டு உள்ளன? 10

36. 63 நாயன்மாரின் வரலாற்றைத் தொகுத்து உருவாக்கப்பட்ட புராணம் எது? 

        பெரிய புராணம்

37. பெரிய புராணத்தின் ஆசிரியர் - சேக்கிழார்

38. சேக்கிழார் பெரிய புராணத்திற்கு இட்ட பெயர்? திருத்தொண்டர் புராணம்

39. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன? அருண்மொழித் தேவர்

40. சேக்கிழார் பெற்ற பட்டம் என்ன? உத்தமச்சோழ பல்லவன்

41. சேக்கிழாரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு ஆகும்.

42. சேக்கிழாரை கல்வெட்டு எவ்வாறு குறிக்கிறது? இராமத்தேவர்

43. தொண்டர் சீர் பரவுவார் எனப்பட்டவர் யார்? சேக்கிழார்

44. நாயன்மார் வாழ்வை அடிப்படையாக வைத்து சுந்தரர் பாடிய நூல்? 

    திருத்தொண்டர் தொகை [11 பாடல்கள் கொண்டது]

45. நம்பியாண்டார் நம்பி இயற்றிய சைவ அடியார் குறித்த நூல் எது? 

    திருத்தொண்டர் திருவந்தாதி [89 பாடல்கள்]

46. பெரிய புராணம் சார்பு நூல் என்றும், தொகை விரி என்றும்     

        குறிக்கப்படுகின்றது.

47. பெரிய புராணத்தை சேக்கிழார் மாக்கதை என்று குறிக்கின்றார்.

48. பெரிய புராணத்திற்கு 'உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தவர் யார்? 

        இறைவன்

49. பெரிய புராணத்திற்கு காப்பியத்தலைவன் சுந்தரர் என்றவர் யார்? பெரிய 

        புராணத்திற்கு உரை எழுதிய சி. கே. சுப்பிரமணிய முதலியார்

50. பெரிய புராணம் 13 சருக்கங்களையும், 4286 விருத்தப்பாக்களையும் 

        கொண்டிருக்கும்.

51. பெரிய புராணம் 63 தனியடியாரையும், 7 தொகையடியாரையும் பாடும்

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...