- தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுள் உறுப்புகள் எத்தனை? 34
- எழுவகை இலக்கியங்களுள் அடிவரையறை உள்ள இலக்கிய வகை எது? பாட்டு
- அடிவரையறை இல்லா இலக்கிய வகைகள் எத்தனை? 6 [நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி]
- நூல் எத்தனை வகைப்படும்? 4 [சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம்]
- சூத்திரம் என்பது யாது? ஆராயாமல் பொருளை எளிதில் உணர்த்துவது.
- சூத்திரத்திற்கு தொல்காப்பியர் தரும் உவமை யாது? ஆடி நிழல் [கண்ணாடி பிம்பம் போல் தெளிவானது சூத்திரம்]
- ஓத்து என்பது யாது? ஒத்த பொருளை ஒரு சேர அமைப்பது ஓத்து ஆகும்.
- ஓத்துக்குத் தரப்படும் உவமை யாது? ஓரின மணியை நிரல்பட வைத்த மாலை
- படலம் என்றால் என்ன? பல இனத்திற்கு உரியவற்றைத் தொகுத்துப் பொது மொழியால் தொடர்புப்படுத்தி உரைப்பது.
- பிண்டம் என்பது யாது? சூத்திரம், ஓத்து, படலம் மூன்றும் அடங்கியது பிண்டம் ஆகும்.
- உரை நடை எத்தனை வகைப்படும்? 4 [பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின்று எழுந்த கிளவி, பொருள் மரபில்லா பொய்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி]
- பாட்டிடை வைத்த குறிப்பு - பாட்டின் இடையில் வரும் உரை நடை சார்ந்த குறிப்பு
- பாவின்று எழுந்த கிளவி - பாக்கள் இல்லாமல் உரைநடையாக அமைவது
- பொருள் மரபில்லா பொய்மொழி - பொருள் மரபற்ற கற்பனைக் கதை
- பொருளோடு புணர்ந்த நகைமொழி - பொருள் உணர்ந்த நகைச்சுவை உடைய மொழி
- உரை எத்தனை வகைப்படும்? 2
- பேராசிரியர் குறிப்பிடும் இரு வகை உரைகள் யாவை? மாந்தர்க்கு உரைப்பவை, மகளிர்க்கு உரைப்பவை
- உரை கூறுதற்கு உரியோர் யாவர்? மகளிருக்கு உரைக்க உரியவர் செவிலி, மாந்தருக்கு உரைக்க உரியவர் யாவரும் [வரையறை இல்லை]
- பிசி என்பது யாது? நொடியொடு புணர்ந்தது பிசி ஆகும்.
- பிசி எத்தனை வகைப்படும்? ஒப்புமை கருதிய உவமை, ஒன்று சொல்ல வேறு ஒன்று தோன்றுவது.
- முதுமொழி என்பது யாது? மிக நுணுக்கமான பொருளோடு சுருக்கமாகவும் தெளிவாகவும் அமைவது. கூறக்கருதிய பொருளை மென்மையாக விளக்குவது
- மந்திரம் என்பது யாது? சொல் தவறாத, பயன் தரும் நிறைவான சொற்களைப் பேசும் பெரியோர் ஆணையிட்டுக் கூறுவது மந்திரம் ஆகும்.
- குறிப்பு மொழி என்பது யாது? எழுத்தொடும் சொல்லொடும் சேராமல் வேறு பொருளை உணர்த்துவது குறிப்பு மொழி
- பண்ணத்தி என்பது யாது? செய்யுளும் இசையும் கலந்து வருவது
- பண்ணத்தியை இளம்பூரணர் எவ்வாறு குறிக்கிறார்? சிற்றிசையும், பேரிசையும் வருவன என்கிறார்.
- பண்ணத்தி எதனை ஒத்தது? பிசியை ஒத்தது.
- பண்ணத்தி எத்தகு அடியோடு வரும்? அடி நீண்டு வரும். அடிப்பெருக்கு பன்னிரு அடி ஆகும்.
- திணை எத்தனை வகைப்படும்? கைக்கிளை முதல் பெருந்திணை வரையிலான திணை ஏழு வகைப்படும்.
- கைக்கோள் எத்தனை வகைப்படும்? 2 [களவு, கற்பு]
- களவு என்பது யாது? காமப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்னும் நான்கு வகை சார்ந்த மறைவான ஒழுக்கம்.
- கற்பென்பது யாது? களவு வெளிப்படுதல், களவின்றி பெற்றோரால் பெறுதல் என்னும் இரு வகை திருமணத்தால் நிகழும், புணர்தல், ஊடல், ஊடல் தீர்தல், பிரிதல் இவற்றோடு கூடி வருதல் கற்பு ஆகும்.
- களவில் கூற்றுக்கு உரியோர் யாவர்? பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி, தலைவன், தலைவி [6]
- கற்பில் கூற்றுக்கு உரியோர் யாவர்? பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி, தலைவி, தலைவன் [12]
- கூற்றுக்கு உரிமை அல்லாதோர் யாவர்? ஊரார், சேரியார், அயலார், நோய் [காதல்] அறிந்தோர், தந்தை, தனையன்
- நற்றாய் கூற்று நிகழா இடங்கள் யாவை? கிழவன், கிழவியொடு நற்றாய் கூறுதல் மிகுதியாக நிகழாது.
- கண்டோர் கூற்று நிகழும் இடங்கள் யாவை? நற்றாய், தோழி, செவிலி, தலைவன், தலைவியோடு கண்டோர்க்குக் கூற்று நிகழும்.
- தலைவனுக்குக் கூற்று நிகழும் இடங்கள் யாவை? உடன்போக்குச் செல்லும் தலைவன் தலைவியோடு கூற்று நிகழும்.
- தலைவன் தலைவியொடு கூற்று நிகழும் இடங்கள் யாவை? 10 [தலைவன் தலைவி ஒழிந்த பத்து இடங்கள்]
- தலைவன், தலைவி கூற்றைக் கேட்போர் யாவர்? பதின்மர்
- பார்ப்பார், அறிவர் கூற்றைக் கேட்போர் இவர் என வரையறை இல்லை.
- பரத்தை பற்றியும், வாயில்கள் பற்றியும் பேசுமிடத்துத் தலைவியைச் சுட்டா இடங்கள் பயன் அற்றது.
- சொல்லுந போலவும், கேட்குந போலவும் வரும் அஃறிணை யாவை? ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், பொழுது, நெஞ்சம்
- ஒரு நெறிப்பட்டாங்கு ஓரியல் முடியும் கரும நிகழ்ச்சி யாது? களம் [இடம்]
- காலம் எத்தனை வகைப்படும்? இறப்பு, நிகழ்வு, எதிர்வு
- பொருண்மையை உய்த்துணரும் பொருட்டு மெய்ப்பட முடிப்பது? மெய்ப்பாடு
- மெய்ப்பாடு எத்தனை? நகை முதலான எட்டு
- எச்சம் என்பது யாது? சொல்லப்பட்டதற்கு அப்பாற்பட்டு குறிப்போடும், வேறொரு சொல்லோடும் முடிவு கொள்வது எச்சம் ஆகும்.
- முன்னம் என்றால் என்ன? ஒரு பொருளை இவரிடம், இவர் கூறுதற்கு உரியது. [இவ்விடத்து, இம்மொழி இவர் இவர்க்கு உரிய என்று அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பது]
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 19 நவம்பர், 2020
செய்யுளியல் - 1 [தொல்காப்பிய செய்யுளியல்]
அணியியல் - வழுவும் வழுவமைதியும்
- அணியிலக்கண வழுக்கள் எத்தனை? 9 [ பிரிபொருட் சொற்றொடர், மாறுபடு பொருள்மொழி, மொழிந்தது மொழிதல், கவர்படு பொருள்மொழி, நிரனிறை வழு, சொல்வழு, யதிவவழு, செய்யுள் வழு, சந்தி வழு
- பிரிபொருட் சொற்றொடர் என்றால் என்ன? ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வெவேறு தொடர்களைக் கூட்டி நோக்க வேறு பொருள் தருமாறு அமைப்பது வழுவாகும்.
- பிரிபொருட் சொற்றொடர் வழுவமைதி எது? கள்ளுண்டு களித்த நிலையிலும், பித்துப் பிடித்த நிலையிலும் கூற்று நிகழ்கையில் தொடர்பற்றவை கூறுவது வழுவமைதி ஆகும்.
- மாறுபடு பொருள் மொழி என்றால் என்ன? ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொற்பொருளொடு, பின்னர் வருவன மாறி வருவது. [உன்னை ஒத்தவர்கள் யாரும் இல்லை எனக் கூறி பின்னர் உன்னை ஒத்தவர்கள் நல்லவர்கள் என்பது.]
- மாறுபடு பொருள் மொழியின் வழுவமைதி யாது? காமம், அச்சம் கைமிக மாறுபடு பொருள் மொழி வரலாம்.
- மொழிந்தது மொழிவு என்றால் என்ன? முன்னர் கூறியதையே மீண்டும் கூறி, அதனால் வேறு பொருள் வழங்காது இருப்பது வழுவாகும். கூறியது கூறல் என்பது இதுவாகும்.
- மொழிந்தது மொழிவின் வழுவமைதி யாது? விரைவு, சிறப்பு ஆகிய இரு காரணங்களால் மொழிந்தது மொழிதல் வருதல் வழுவமைதியாகும்.
- கவர்படு பொருள் மொழி என்றால் என்ன? ஒரு பொருளைத் தெளிவாக உணர்த்த வந்த சொல் அதனையே ஐயுறும் வகையில் பல பொருளுக்குப் பொருந்தி வருவது கவர்படு பொருள் ஆகும். [அரிமருவு சோலை. இதில் வரும் அரி என்பது சிங்கமா, திருமாலா, வண்டா என்ற தெளிவு இல்லாமல் இருப்பது.]
- கவர்படு பொருள் மொழி எப்போது வழுவமைதியாக வரும்? வழு இல்லாமல், தெளிவாக வரும் இடத்தில் கவர்படு பொருள் மொழி ஏற்பதற்கு உரித்து. [உலகைக் காப்பது அரியே - அரி பல பொருள் தரினும் இத்தொடரின் பொருள் திருமாலையே உணர்த்துவது வழுவமைதியாகும்.]
- நிரனிறை வழு என்றால் என்ன? வரிசைப்பட வைக்கும் இடத்தில் முன்னே ஒரு வரிடையில் வைத்து, பின் உள்ளவற்றை வரிசை மாற்றி வைப்பது. [படைத்தல், காத்தல், அழித்தல் முதல் வரிசையில் வைத்து மறு வரிசையில் சிவன், திருமால், பிரம்மன் என மாற்றி அமைப்பது வழுவாகும்.]
- நிரனிறை வழுவமைதி யாது? உய்த்துணரும் வந்தால் நிரனிறை வழுவமைதியாகும்.
- சொல் வழு என்றால் என்ன? சொல்லதிகாரம் கூறும் சொல்லிலக்கண விதிகளுக்கு மாறாமல் வர வேண்டும். விதிக்கு உட்படாமல் மாறி வருவது வழு ஆகும்.
- சொல் வழுவமைதி யாது? வழுவாக வந்தாலும் சான்றோர் ஏற்பவை வழுவமைதியாகும். [மரூவுச்சொல் முதலானவை]
- யதிவழு என்றால் என்ன? யதி வழு என்பது சீர் அமைப்பில் உருவாகும் வழுவாகும். சீர்கட்டமைப்புச் சிதைத்தல் யதி வழுவாகும்
- யதி வழுவமைதி யாது? வகையுளியில் யதி வழுவமைதியாக ஏற்கப்படும். வகையுளி என்பது செய்யுளின் ஓசைக்கும் இலக்கணத்திற்கும் ஏற்ப தேவைப்படின் சீரைப் பிரிப்பது வழுவமைதியாக ஏற்கப்படும்.
- செய்யுள் வழு என்றால் என்ன? யாப்பின் உறுப்புக்களான சீர், தளை, அடி முதலானவை யாப்பிலக்கணத்திற்குப் பொருந்தாமல் வருவது செய்யுள் வழு ஆகும்.
- செய்யுள்வழு ஏற்கப்படும் இடங்கள் யாவை? ஆரிடம் சொல்லும் சூழலில் செய்யுள் வழு ஏற்கப்படும். [இருடிகள் சொல்வது, மந்திரம் சொல்வது]
- சந்தி வழு என்றால் என்ன? எழுத்ததிகார புணர்ச்சி விதிக்குப் பொருந்தாது பாடுவது சந்தி வழு ஆகும். [ஒற்று மிகும் இடத்தில் மிகாமலும், ஒற்று வரா இடத்தில் மிகுந்தும் அமைப்பது]
- சந்தி வழு அமைதி யாது? இரண்டாம் வேற்றுமைக்குப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லெழுத்து வர ஏனைய வேற்றுமைகளோடு மாறுபட்டு வரும்.
- செய்யுள் மலைவுகள் யாவை? இட மலைவு, காலமலைவு, கலை மலைவு, உலக மலைவு, நியம மலைவு, ஆகம மலைவு
- இட மலைவு என்றால் என்ன? மலை, நாடு, ஆறு ஆகிய மூன்றும் இடம் என்பதில் பொருந்தும். அவை முறைப்படி அமைய வேண்டு. அவ்வாறு இல்லாமல் ஒன்றன் இயல்பை மற்றொன்றாக மாற்றி உரைப்பது இட மலைவு ஆகும்.
- கால மலைவு என்றல் என்ன? பொழுதும் [சிறு பொழுது], பருவமும் [பெரும்பொழுது] காலம் ஆகும். அவை முறைப்படி அமைய வேண்டும். இரு பொழுதை மற்றொரு பொழுதைப்போலும், ஒரு பருவத்தை மற்றொரு பருவத்தைப் போலும் மாற்றி அமைப்பது கால மலைவு ஆகும்.
- கலை மலைவு என்றால் என்ன? இன்பம், செல்வம் இரண்டையும் பொருந்தத் தழுவி வரும் கலைகளாம் ஆயக்கலைகள் 64 ஆகும். கலைகள் பொருத்தமின்றி வருது கலை மலைவு
- உலக மலைவு என்றால் என்ன? உலகம் என்பது இந்த உலக வழக்கு , நடைமுறை , ஒழுகலாறு ஆகும். இந்த உலக வழக்கிற்கு மாறாக இலக்கியம் புனைவது உலக மலைவு ஆகும்.
- நியாய மலைவு என்றால் என்ன? நியாயம் என்பது உலக காட்சி, அனுமானம், உவமை, நூல்கள் முதலான அளவைகளாம் பொருளின் செயல்பாட்டைக் கூறுவது. [தத்துவம், சித்தாந்தம்]. இந்த நியாயங்கள் முரண்படுவது நியாய மலைவு ஆகும்.
- ஆகம மலைவு என்றால் என்ன? மனு முதலான அறம் கூறும் நூல் ஆகும். இவை ஒருவருக்கு உரியதாகக் கூறும் அறத்தை மற்றதற்கு உரியதாக மாற்றிக் கூறுவது ஆகம மலைவு ஆகும். [ இல்லறத்தாருக்கு உரிய அறம் எனக் கூறியதை துறவிக்கு உரியதாக மாற்றிச் சொல்வது]
- ஆறு மலைவுகளும் வழுவமைதியாகக் கொள்ளப்படும் இடம் யாது? நாடக வழக்கில் ஆறு மலைவுகளும் வழுவாகக் கொள்ளப்படா. வழு அமைதியாகவே கொள்ளப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...