1) மக்கள் என்று சுட்டப்படுவோர் யார் ?
உயர்திணை
2) அஃறிணை என்பது என்ன ?
மக்கள் அல்லாத பிற
3) ஆயிரு திணையின் இசைக்கும் சொல்லே - ஆயிருதிணை என்பது ?
உயர்திணை, அஃறிணை
4) உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை ?
3 - ஆண்பால், பெண்பால், பலர்பால்
5) உயர்திணை சொற்கள் எத்தனை வகைப்படும் ?
3 ஆடூஉ அறி சொல் (ஆண்பாற் சொல்),
மகடூ அறி சொல் (பெண்பாற்சொல்),
பல்லோரறியும் சொல் (பலர்பால் சொல்)
6) அஃறிணைக்கான பால்கள் எத்தனை ?
2 (ஒன்றன் பால், பலவின் பால்)
7) அஃறிணைச் சொல் எத்தனை வகைப்படும் ?
2 (ஒன்றறி சொல், பலவறி சொல்)
8) ‘உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்’ - எவை ?
ஆண்மை திரிந்து பெண் தன்மை மிக்கவர் (பேடி) தெய்வம்.
9) உயர்திணை மருங்குப் பால் பிரிந்து இசைய எத்தகு ஈறுகளைப் பெற்று வரும் ?
உயர்திணை ஈறுகளைப் பெற்று வரும்.
10) ஆண்பால் பெயர்ச்சொல் எந்த விகுதி பெற்று வரும் ?
னகர ஒற்று (னஃகான் ஒற்று)
11) பெண்பால் பெயர்ச்சொல் எந்த ஈற்றைப் பெற்று வரும் ?
ளகர ஒற்று (ளஃகான் ஒற்று)
12) பலர்பால் பெயர்ச்சொல் பெறும் ஈறுகள் யாவை ?
ரகர ஒற்று [ரஃகான் ஒற்று], பகரம், மார்
13) ஒன்றன்பால் ஈறுகள் யாவை ?
து,று,டு (த,ற,ட ஊர்ந்த குற்றியலுகரம்)
14) பலர்பால் பெயர்ச்சொல் ஈறுகள் யாவை ?
அ,ஆ,வ
15) ஐம்பால் ஈறுகள் மொத்தம் எத்தனை ?
11
16) ஐம்பால் ஈறுகள் எவற்றோடு வரும் ?
வினையோடு
17) ஆண்மை திரிந்த பெண் தன்மை மிக்க (பேடி) பெயர் ஆண்பால் ஈறைப் பெற்று வருமா ?
வராது (பேடி வந்தார் தவறு, பேடி வந்தாள் தான் சரி)
18) வினாவும் செப்பே (விடையே) எப்போது ?
வினா எதிர் வருகையில்
19) மறைமுக வினாக்கள் எப்போது ஏற்கப்படும் ?
விடையாவதற்கு உரிய பொருளைக் கொண்டிருக்கையில்,
20) சினை, முதல் விரவா இடம் எது ?
வினா , விடை
21) வினா, விடையில் சினையும் முதலும் எதன் பொருட்டு மாறலாம் ?
தகுதி, வழக்கு
22) இனம் சிட்டா பண்பும் அடைகொண்ட பெயர்ச் சொற்கள் எவ்வழக்கின ?
செய்யுள் வழக்கு
23) இயற்கை பொருளை எவ்வாறு கூற வேண்டும் ?
இற்றெனக் கூறல் வேண்டும் (இற்றெனக் கிளத்தல்)
சான்று: நிலம் வலியது
24) செயற்கைப் பொருளை எவ்வாறு கூற வேண்டும் ?
ஆக்கத்தோடு கூற வேண்டும் சான்று: வழி அகலமானது
25) ஆக்கக் கிளவியோடு எது முன்வைக்கப்படும் ?
காரணம்
26) பால் மயக்குற்ற ஐயக்கிளவி எத்தகு தன்மையது ?
தான் அறிந்த கிளவியால் கூற வேண்டும்
27) வண்ணச் சினை சொல் எவ்வாறு அமையும் ?
பண்பு, உறுப்பு, முதல் என்னும் வரிசையில் அமையும்,
சான்று : செங்கால் நாரை (செம்மை + கால் + நாரை)
28) முதனிலைகளால் இடம் உணர்த்தும் சொற்கள் யாவை ?
செல்லுதல், வருதல், தருதல், கொடுத்தல்
29) மூவிடத்தும் உரிய சொற்கள் யாவை ?
செல்லுதல், வருதல், தருதல், கொடுத்தல் (செலவு, வரவு, தரவு, கொடை)
30) அறியா பொருளை வினவுதற்கு உரிய சொற்கள் யாவை ?
யாது, எவன்
31) அறிந்த பொருளில் உள்ள ஐயத்தைத் தீர்க்க சொல்லப்படும் வினா சொல் எது ?
யாது
32) எத்தனை என எண்ணிக்கை அறிந்த இடத்தில் வர வேண்டியது ?
உம் (மூவேந்தரும் வென்றனர், முத்தமிழும் சிறப்பு)
33) முழுமையாக இல்லாத பொருளைக் குறிக்கையில் வரவேண்டியது ?
உம் (எங்கும் இல்லை, யாரும் வரவில்லை)
34) விடையளிக்கையில் கேட்கப்பட்டது இல்லை, வேறு உள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படும் சொல்
- அல்லதில்லை (மாம்பழம் உள்ளதா ? எனக்கேட்க அது, இல்லை என்ற ‘வாழைப்பழம் அல்லதில்லை’ எனல் (வாழைப்பழம்) மட்டுமே உள்ளது.
35) கேட்கப்பட்டது உள்ளது எனின் விடையளிக்கையில் சுட்டிக்கூற வேண்டும்.
மாங்கனி உள்ளதா என்று கேட்கையில் இக்கனி உள்ளது. அக்கனி உள்ளது
எனக் கூறல்.
36) முதற்பெயர், சுட்டுப்பெயர் இரண்டும் வரும் இடத்தில் முதலில் இயற்பெயர் கூறி பின் சுட்டுப்பெயர் கூற வேண்டும். சான்று: கண்ணன் வந்தான் அவன் நல்லவன்.
37) சுட்டுப் பெயரை அடுத்து இயற்பெயர் எங்கு வரும் ?
செய்யுள் (அவனெம் இறைவன் அழகர் மாமுருகன்)
38) சுட்டுப் பெயார் போல சுட்டுக் காரணக் கிளவியும் இருக்கும்
(சுட்டுப் பெயர்: அவன், அப்பொருள்,
சுட்டுமுதல் காரணக்கிளவி அதனால், இதனால்)
39) இயற்பெயரை அடுத்துச் சிறப்புப் பெயர் வராது. முதலில் சிறப்பும் பெயர் அடுத்து இயற்பெயர் என தான் எழுத வேண்டும். (பாரதியார்மகாகவி கண்ணன் முனைவர் என்பது பிழை மகாகவி பாரதியார், முனைவர் கண்ணன் என்பதே சரியாகும்)
40) ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் வந்தால் அவை வேறு வேறு வினை முடிவு பெறக்கூடாது. ஒரே வினை முடிவு பெற வேண்டும். (மன்னன் கரிகாற் சோழன் வந்தான். மன்னன் வந்தான். கரிகாற்சோழன் வந்தான் என்பதே)
41) உயர்திணை ஒருவர் தன்மையில் பேசுகையில் அஃறிணையையும் இணைத்துக் கூறினால் அதையும் உயர்திணை போலக் கூற வேண்டும். (நானும் என் குதிரையும் சென்றோம்)
42) ஒருமைப் பொருளில் பால் குறிக்கும்சொல் யாவை ?
ஒருவன், ஒருத்தி, ஒருவர்
43) எண்ணிக்கையைக் குறிக்குமிடத்தில், வியங்கோள் வினைமுடிவு வர
அதில் பால் கலந்து வந்தால் அது ஏற்கத்தக்கதே. நீயும் உன் நாயும் வருக. மன்னனும் அவன் நாடும் செழிக்க.
44) ஒரு பொதுப் பெயருக்குப் பல சிறப்பு வினைகள் வரலாம். அவை பொதுப் பொருளில் வருகையில் மாறி வரக்கூடாது. உண்டார் என்பது தின்றார், குடித்தார், விழுங்கினார், பருகினார், உறிஞ்சினார் பெண்ப் பால் சிறப்பு வினையால் குறிக்கப்படும். ஆனால் பொது உணவாகிய அரிசி முதலான வரும் பொழுது பொது வினையைப் பயன்படுத்த வேண்டும் சோறு பருகினார், சோறு விழுங்கினார் என்பது தவறு சோறு உண்டார் என்பதே சரி.
45) இரட்டிற் பிரிந்திசையா கிளவி எது ?
இரட்டைக் கிளவி
46) திணை விரவி (உயர்திணை, அஃறிணை கலந்து) வருமிடத்தில் தொடர் எம்முடிவு பெற்று வரும் ?
அது எண்ணிக்கையோடு வருமாயின் அஃறிணை முடிவு வரும் [வடுகர், அருவாளர், வான்கரு, நாடர், சுடுகாடு, பேய் எருமை என்றிவை ஆறும் குறுகார், அறிவுடையார்]
47) பலபொருள் ஒரு சொல் எத்தனை வகைப்படும் ?
2 (வினை வேறுபடாதது)
48) உயர் திணை சார்ந்தாலும் அஃறிணையாகக் கொள்ளப்படும் பொருள்கள் எத்தனை ?
18 [குடிமை, ஆண்மை, இளமை, மூப்பு, அதமை, வன்மை, வருந்து, குழு, பெண்மை, அரசு, மகவு, குழவி]
49) பால் பிரிந்து அறியா உயர்திணைச் சொற்கள், அஃறிணை முடிவு பெற்று வரும். (தெய்வம் நின்று கொள்ளும்)
50) பால் பிரிந்து இசையா அஃறிணைக் கிளவி யாவை ?
காலம், உலகம், உயிரே, உடம்பு, தெய்வம் (ஊழ் தெய்வம், பால் வரை தெய்வம்), வினை, பூதம், ஞாயிறு, திங்கள், சொல் வரும் 15 சொற்களும் பிறவும்.
51) பன்மை பொருளுக்கு உரிய உறுப்புப் பெயர்கள் யாவை ?
கண், தோள், முலை