இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2020

சொல்லிலக்கணம் - கிளவியாக்கம் [தொல்காப்பியம்]

1) மக்கள் என்று சுட்டப்படுவோர் யார் ? 

                    உயர்திணை

2) அஃறிணை என்பது என்ன ? 

                    மக்கள் அல்லாத பிற

3) ஆயிரு திணையின் இசைக்கும் சொல்லே - ஆயிருதிணை என்பது ? 

                             உயர்திணை, அஃறிணை

4) உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை ? 

                            3 - ஆண்பால், பெண்பால், பலர்பால்

5) உயர்திணை சொற்கள் எத்தனை வகைப்படும் ? 

                            3 ஆடூஉ அறி சொல் (ஆண்பாற் சொல்), 

                             மகடூ அறி சொல் (பெண்பாற்சொல்),

                             பல்லோரறியும் சொல் (பலர்பால் சொல்)

6) அஃறிணைக்கான பால்கள் எத்தனை ? 

                        2 (ஒன்றன் பால், பலவின் பால்)

7) அஃறிணைச் சொல் எத்தனை வகைப்படும் ? 

                        2 (ஒன்றறி சொல், பலவறி சொல்)

8) ‘உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்’ - எவை ? 

                ஆண்மை திரிந்து பெண் தன்மை மிக்கவர் (பேடி) தெய்வம்.

9) உயர்திணை மருங்குப் பால் பிரிந்து இசைய எத்தகு ஈறுகளைப் பெற்று வரும் ?

                உயர்திணை ஈறுகளைப் பெற்று வரும்.

10) ஆண்பால் பெயர்ச்சொல் எந்த விகுதி பெற்று வரும் ? 

                    னகர ஒற்று (னஃகான் ஒற்று)

11) பெண்பால் பெயர்ச்சொல் எந்த ஈற்றைப் பெற்று வரும் ? 

                ளகர ஒற்று (ளஃகான் ஒற்று)

12) பலர்பால் பெயர்ச்சொல் பெறும் ஈறுகள் யாவை ? 

                ரகர ஒற்று [ரஃகான் ஒற்று], பகரம், மார்

13) ஒன்றன்பால் ஈறுகள் யாவை ? 

                து,று,டு (த,ற,ட ஊர்ந்த குற்றியலுகரம்)

14) பலர்பால் பெயர்ச்சொல் ஈறுகள் யாவை ? 

                அ,ஆ,வ

15) ஐம்பால் ஈறுகள் மொத்தம் எத்தனை ? 

                11

16) ஐம்பால் ஈறுகள் எவற்றோடு வரும் ? 

                வினையோடு 

17) ஆண்மை திரிந்த பெண் தன்மை மிக்க (பேடி) பெயர் ஆண்பால் ஈறைப்                  பெற்று வருமா ? 

                    வராது (பேடி வந்தார் தவறு, பேடி வந்தாள் தான் சரி)

18) வினாவும் செப்பே (விடையே) எப்போது ? 

                    வினா எதிர் வருகையில் 

19) மறைமுக வினாக்கள் எப்போது ஏற்கப்படும் ? 

                        விடையாவதற்கு உரிய பொருளைக் கொண்டிருக்கையில்,

20) சினை, முதல் விரவா இடம் எது ? 

                        வினா , விடை

21) வினா, விடையில் சினையும் முதலும் எதன் பொருட்டு மாறலாம் ? 

                        தகுதி, வழக்கு

22) இனம் சிட்டா பண்பும் அடைகொண்ட பெயர்ச் சொற்கள் எவ்வழக்கின ? 

                        செய்யுள் வழக்கு

23) இயற்கை பொருளை எவ்வாறு கூற வேண்டும் ? 

                    இற்றெனக் கூறல் வேண்டும் (இற்றெனக் கிளத்தல்) 

                    சான்று: நிலம் வலியது

24) செயற்கைப் பொருளை எவ்வாறு கூற வேண்டும் ? 

                    ஆக்கத்தோடு கூற வேண்டும் சான்று: வழி அகலமானது

25) ஆக்கக் கிளவியோடு எது முன்வைக்கப்படும் ? 

                    காரணம்

26) பால் மயக்குற்ற ஐயக்கிளவி எத்தகு தன்மையது ? 

                       தான் அறிந்த கிளவியால் கூற வேண்டும்

27) வண்ணச் சினை சொல் எவ்வாறு அமையும் ? 

                        பண்பு, உறுப்பு, முதல் என்னும் வரிசையில் அமையும், 

                        சான்று : செங்கால் நாரை (செம்மை + கால் + நாரை)

28) முதனிலைகளால் இடம் உணர்த்தும் சொற்கள் யாவை ? 

                        செல்லுதல், வருதல், தருதல், கொடுத்தல்

29) மூவிடத்தும் உரிய சொற்கள் யாவை ? 

                 செல்லுதல், வருதல், தருதல், கொடுத்தல் (செலவு, வரவு, தரவு, கொடை)

30) அறியா பொருளை வினவுதற்கு உரிய சொற்கள் யாவை ? 

                யாது, எவன்

31) அறிந்த பொருளில் உள்ள ஐயத்தைத் தீர்க்க சொல்லப்படும் வினா சொல் எது ?

                யாது

32) எத்தனை என எண்ணிக்கை அறிந்த இடத்தில் வர வேண்டியது ? 

              உம் (மூவேந்தரும் வென்றனர், முத்தமிழும் சிறப்பு)

33) முழுமையாக இல்லாத பொருளைக் குறிக்கையில் வரவேண்டியது ? 

            உம் (எங்கும் இல்லை, யாரும் வரவில்லை)

34) விடையளிக்கையில் கேட்கப்பட்டது இல்லை, வேறு உள்ளது என்பதைக்                         குறிக்கப் பயன்படும் சொல்

             - அல்லதில்லை (மாம்பழம் உள்ளதா ? எனக்கேட்க அது, இல்லை என்ற                     ‘வாழைப்பழம் அல்லதில்லை’ எனல் (வாழைப்பழம்) மட்டுமே உள்ளது.

35) கேட்கப்பட்டது உள்ளது எனின் விடையளிக்கையில் சுட்டிக்கூற வேண்டும்.  

மாங்கனி உள்ளதா என்று கேட்கையில் இக்கனி உள்ளது.  அக்கனி உள்ளது 

எனக் கூறல்.

36) முதற்பெயர், சுட்டுப்பெயர் இரண்டும் வரும் இடத்தில் முதலில் இயற்பெயர்           கூறி பின் சுட்டுப்பெயர் கூற வேண்டும். சான்று: கண்ணன் வந்தான்                       அவன் நல்லவன்.

37) சுட்டுப் பெயரை அடுத்து இயற்பெயர் எங்கு வரும் ? 

செய்யுள் (அவனெம் இறைவன் அழகர் மாமுருகன்)

38) சுட்டுப் பெயார் போல சுட்டுக் காரணக் கிளவியும் இருக்கும் 

        (சுட்டுப் பெயர்: அவன், அப்பொருள்,

        சுட்டுமுதல் காரணக்கிளவி அதனால், இதனால்)

39) இயற்பெயரை அடுத்துச் சிறப்புப் பெயர் வராது.  முதலில் சிறப்பும் பெயர்         அடுத்து  இயற்பெயர் என தான் எழுத வேண்டும். (பாரதியார்மகாகவி                    கண்ணன் முனைவர்  என்பது பிழை மகாகவி பாரதியார், முனைவர்                     கண்ணன் என்பதே சரியாகும்)

40) ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் வந்தால் அவை வேறு வேறு வினை முடிவு பெறக்கூடாது.  ஒரே வினை முடிவு பெற வேண்டும்.  (மன்னன் கரிகாற் சோழன்  வந்தான்.  மன்னன் வந்தான்.  கரிகாற்சோழன் வந்தான் என்பதே)

41) உயர்திணை ஒருவர் தன்மையில் பேசுகையில் அஃறிணையையும்                                    இணைத்துக் கூறினால் அதையும் உயர்திணை போலக் கூற வேண்டும்.                  (நானும் என் குதிரையும் சென்றோம்)

42) ஒருமைப் பொருளில் பால் குறிக்கும்சொல் யாவை ? 

            ஒருவன், ஒருத்தி, ஒருவர்

43) எண்ணிக்கையைக் குறிக்குமிடத்தில், வியங்கோள் வினைமுடிவு வர 

        அதில் பால் கலந்து வந்தால் அது ஏற்கத்தக்கதே. நீயும் உன் நாயும் வருக.                  மன்னனும்  அவன்   நாடும் செழிக்க.

44) ஒரு பொதுப் பெயருக்குப் பல சிறப்பு வினைகள் வரலாம்.  அவை பொதுப்             பொருளில் வருகையில் மாறி வரக்கூடாது.  உண்டார் என்பது தின்றார்,                 குடித்தார், விழுங்கினார், பருகினார், உறிஞ்சினார் பெண்ப் பால் சிறப்பு                வினையால் குறிக்கப்படும்.  ஆனால் பொது உணவாகிய அரிசி முதலான            வரும் பொழுது பொது வினையைப் பயன்படுத்த வேண்டும் சோறு                       பருகினார், சோறு விழுங்கினார் என்பது தவறு சோறு உண்டார் என்பதே  சரி. 

45) இரட்டிற் பிரிந்திசையா கிளவி எது ? 

இரட்டைக் கிளவி

46) திணை விரவி (உயர்திணை, அஃறிணை கலந்து) வருமிடத்தில் தொடர் எம்முடிவு பெற்று வரும் ? 

அது எண்ணிக்கையோடு வருமாயின் அஃறிணை முடிவு வரும் [வடுகர், அருவாளர், வான்கரு, நாடர், சுடுகாடு, பேய் எருமை என்றிவை ஆறும் குறுகார், அறிவுடையார்]

47) பலபொருள் ஒரு சொல் எத்தனை வகைப்படும் ? 

                    2 (வினை வேறுபடாதது)

48) உயர் திணை சார்ந்தாலும் அஃறிணையாகக் கொள்ளப்படும் பொருள்கள் எத்தனை ? 

                18  [குடிமை, ஆண்மை, இளமை, மூப்பு, அதமை, வன்மை, வருந்து, குழு,                             பெண்மை, அரசு, மகவு, குழவி]

49) பால் பிரிந்து அறியா உயர்திணைச் சொற்கள், அஃறிணை முடிவு பெற்று வரும். (தெய்வம் நின்று கொள்ளும்)

50) பால் பிரிந்து இசையா அஃறிணைக் கிளவி யாவை ?

காலம், உலகம், உயிரே, உடம்பு, தெய்வம் (ஊழ் தெய்வம், பால் வரை                         தெய்வம்), வினை, பூதம், ஞாயிறு, திங்கள், சொல் வரும் 15 சொற்களும்                 பிறவும்.

51) பன்மை பொருளுக்கு உரிய உறுப்புப் பெயர்கள் யாவை ?

                கண், தோள், முலை


தொகை மரபு - தொல்காப்பியம்

  1. ங, ஞ, ந், ம் - மெல்லெழுத்தை மொழி முதலாகக் கொண்ட சொற்களை அடுத்து வருமொழியில் க, ச, த, ப வர மெல்லெழுத்து மிகும்.                     [விளம்+கோடு-விளங்கோடு, விளம்+தோல்-விளஞ்செதில்]
  2.  ஞ, ந, ம, ய, வ மற்றும் உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும் வருமொழியாக வரும் நேரத்தில் வேற்றுமை, அல்வழி இரண்டிலும் இயல்பாகப் புணரும். [கனி+மரம்-கனிமரம், உயிர்+யாது-உயிர்யாது]
  3. ஞ, ந, ம மூன்றும் இயல்பாவதோடு உறழ்ந்து முடிதலும் உண்டு.     [கதிர்+நுனி-கதிர்நுனி] 
  4. ண, ன என்னும் சொற்களின் முன் யா, ஞா ஒத்த தன்மையனவாக வரும் [யா-ஞாவாக, ஞா-யா வாக மாறலாம்] -      மண்+யாத்த-மண்ஞாத்த,  மண்+ஞாத்த-மண்யாத்த.
  5. நிலை மொழி இறுதியில் ன, ண வந்து வரு மொழி முதலில் மொழி முதலான 12 எழுத்துக்களும் வர அல்வழியில் இயல்பாகும்.                            [கண்+பெரியது - கண்பெரியது, பொன்+மகவு- பொன்மகவு]
  6. நிலை மொழி இறுதியில் ல,ன வந்து வருமொழி முதலில் த,ந வரின் த,ந - ற, ன ஆகத் திரியும். (கல்+ தீது- கல்றீது, கன்+நன்று- கன்னன்று)
  7. ண,ள முன் த, ந வரின் த- ட என்றும்,  ந-ண என்றும் திரியும்.(மண்+தீது-மண்டீது, மண்+நன்று- மண்ணன்று)
  8. முன்னிலை வினைச் சொல் முன் உயிர்,  மெய்  வருமொழியாக வர இயல்பாகவோ,  உறழ்ந்தோ புணரும். நட+கொற்றா - நடகொற்றா என  இயல்பாகவும்,  நடக்கொற்றா  என உறழ்ந்தும்  புணரும் 
  9. ஒள என்ற எழுத்தை ஈறாகக் கொண்ட முன்னிலை வினைச்சொல் ஞ,ந,ம,வ என்னும் புள்ளி இறுதியும், குற்றியலுகர இறுதியும் உகரம் பொற்று வலி மிகுந்தும் மிகாமலும் புணரும்.  கௌ+கொற்றா -  கௌவு கொற்றா,  கௌவுக்கொற்ற.
  10. உயிர் மற்றும் மெய் ஈறாகிய உயர்திணைப் பெயர்கள் வருமொழியில் நாற்கணமும் வர இயல்பாகப் புணரும். (பாரி+கண்டேன்- பாரிகண்டேன்.)
  11. இகர ஈற்று உயர் திணைச் சொற்கள் வலி மிக்குப புணரும்.  ( கொற்றிக் கேள்)
  12. விரவுப் பெயர்கள் இயல்பாகப புணரும். (சாத்தன் தின்றான்)
  13. மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வரும் உயிர், மெய் ஈறு வலி மிகும் (நாய்+கடிப்பட்டான்-நாய்க்கடிபட்டான்)
  14. இ,ஐ ஈற்றுச் சொற்கள் அல்வழிப் புணர்ச்சியில்  இயல்பாகவோ,  வலி மிகுந்தோ வரலாம். (பருத்தி+செடி - பருத்தி செடி, பருத்திச் செடி)
  15. ஏழாம் வேற்றுமைப் பொருளில் அதோளி, இதோளி, எதோளி,  ஆண்டை,  ,யாண்டை போன்ற இ, ஐ ஈற்றுச் சொற்கள் இயல்பாகவோ,  வலி மிகுந்தோ புணரும். (அதோளி + கொண்டான்- அதோளி  கொண்டான்,  அதோளிக் கொணடான்)
  16. நெடில் அடுத்து வரும்  ஒற்றுக் கெடும். (கோல்+நன்று - கோனன்று)
  17. குறில் முன் வரும் ஒற்று புணர்ச்சியில் இரட்டும் (மண்+அகல்- மண்ணகல்)
  18. ஆறாம் வேற்றுமை,  நான்காம்  வேற்றுமையில் குறில் முன் ஒற்று இரட்டாது. (தம் + அது- தமது, தம்+கு -தமக்கு
  19. நும் வேற்றுமையில் இயல்பாகப் புணரும் (நும் +அது - நுமது,  நும்+கு-நுமக்கு)
  20. முகத்தல்,  நீட்டல்,  எண்ணல் அளவைப் பெயர்கள் ஏகாரம் பெற்றுப் புணரும். (இரண்டு + கால்- இரண்டே கால்)
  21. அரை என்னும் பாதியைக் குறிக்கும் சொல்லில் ஏகாரம் வராது.  
  22. அரைஎன வரூஉம் பால்வரை கிளவிக்கு - இதில் வரும் பால் என்பது குறிப்பது யாது? பாதி [அரை]
  23. குற்றியலுகரத்தோடு குறை என்னும் சொல் சேர இன் சாரியைச் சேரும்.   (பாக்கு+குறை-பாக்கின் குறை)
  24. கலம் என்னும் முகத்தல் அளவை குறை உடன் சேர அத்துச் சாரியைப் பெற்று வரும். (கலம் +குறை- கலத்துக் குறை)
  25. பனை மற்றும் கா அடுத்து குறை வர   இன்  சாரியைப் பெறும்.  (பனை+குறை- பனையின் குறை,  கா+குறை-காவின் குறை)
  26. முகத்தல், நிறுத்தல் அளவைப் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ - என்னும் எழுத்துக்களை மொழி முதலாகக் கொண்டு வரும். [கலம், நாழி, கழஞ்சு, நிறை, உழக்கு, பலம், மா, அந்தை]
  27. யாவர் என்னும் பலர்பால் சொல்லில் உள்ள வகரம்  கெட்டு யார் என்று மரூவியது.
  28. யாது என்னும் ஒன்றன் பால் சொல்லில் வகரம் தோன்றி ஆவது மரூவியது

பொருள் இலக்கண நூல்கள்

  1. அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் பேசும் இலக்கண நூல் எது? தொல்காப்பியம்
  2. அகப்பொருள் இலக்கண நூல்கள் யாவை? இறையனார் அகப்பொருள், தமிழ் நெறி விளக்கம், நம்பியகப்பொருள். களவியல் காரிகை, மாறனகப்பொருள்.
  3. இறையனார் அகப்பொருள் ஆசிரியர் யார்? இறையனார் [சிவபெருமான் என்று கூறுவர். குறுந்தொகையில் உள்ள கொங்குதேர் வாழ்க்கை என்னும் பாடலைப் பாடியதும் இறைவனே என்பர். இரண்டையும் இயற்றியவர் இறையனார் என்னும் கடைச்சங்கப்புலவர் என்றும் கூறுவர்.]
  4.  இறையனார் அகப்பொருளின் நூற்பாக்கள் எத்தனை? 60 
  5. இறையனார் அகப்பொருளின் பிரிவுகள் யாவை? களவியல், கற்பியல்.
  6. களவியலின் நூற்பாக்கள் எத்தனை? 33
  7. கற்பியலின் நூற்பாக்கள் எத்தனை? 27
  8. இறையனார் அகப்பொருளின் சூத்திரங்கள் பெரும்பாலும் சிறியனவே. 15 ஆம் நூற்பா மட்டும் 10 வரிகள் கொண்டது. 
  9. இறையனார் அகப்பொருளின் மற்றொரு பெயர் யாது? இறையனார் களவியல்
  10. இறையனார் களவியலுக்கு உரை எழுதியவர் யார்? நக்கீரர்
  11. நக்கீரரின் காலம் யாது? கடைச்சங்க நக்கீரர் என்று சிலர் கூறுவர். வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் என்றும் சிலர் கூறுவர். 
  12. இறையனார் அகப்பொருள் உரை நக்கீரரால் இயற்றப்பட்டு செவி வழியாக உரைக்கப்பட்டு பின்ஆம் நூற்றாண்டில் முசிறி ஆசிரியர் நீலகண்டனார் காலத்தில் உருப்பெற்றது.
  13. இறையனார் களவியலுக்கு இயற்றப்பட்ட உதாரணச் செய்யுள் கோவை யாது? பாண்டிக்கோவை
  14. பாண்டிக்கோவை யார் மீது இயற்றப்பட்டது? நெடுமாறன் 
  15. சங்கங்கள் குறித்து முதன் முதலில் விவரிக்கும் நூல் யாது? இறையனார் அகப்பொருள் உரை
  16. தமிழ்  நெறி விளக்கத்தின் காலம் யாது? கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
  17. தமிழ் நெறி விளக்கத்தின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 25 [அகப்பொருள் பற்றி மட்டுமே பேசும்]
  18. தமிழ் நெறி விளக்கத்தின் பொருளியலை மட்டும் வெளியிட்டவர் யார்? உ.வே.சா
  19. நம்பியகப்பொருளின் காலம் யாது? கி.பி. 12 , 13 ஆம் நூற்றாண்டு
  20. நம்பியகப்பொருளின் ஆசிரியர் யார்? நாற்கவிராச நம்பி
  21. நாற்கவி என்பவை யாவை? ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி [இந்த நான்கு கவிகளையும் பாட வல்லவர் நாற்கவிராசர்]
  22. நாற்கவிராச நம்பியின் சமயம் யாது? சமணம்
  23. நம்பியகப்பொருள் இயல்கள் எத்தனை? 5
  24. நம்பியகப்பொருளின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 252
  25. நம்பியகப்பொருளின் உரையாசிரியர் யார்? நூலாசிரியரே உரையாசிரியர் ஆவார்.
  26. நம்பியகப்பொருள் உரையின் அமைப்பு யாது? கருத்துரை, பொழிப்புரை, விசேட  உரை மூன்றும் அடங்கியது.
  27. நம்பியகப்பொருளின் உதாரணமாக இயற்றப்பட்ட கோவை நூல் எது? தஞ்சைவாணன் கோவை.
  28. நம்பியகப்பொருள் எவற்றை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது? தொல்காப்பிய அகத்திணையியல், இறையனார் அகப்பொருள்
  29. களவியல் காரிகையின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு [13 என்றும் கூறுவர்.]
  30. களவியல் காரிகையின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 60 [60 நூற்பா எனப் பேராசிரியர் கூறுகிறார். இன்று கிடைப்பவை 53 மட்டுமே.]
  31. களவியல் காரிகையின் பாவகை? கட்டளைக்கலித்துறை
  32. களவியல் காரிகையில் கிடைத்தப் பகுதிகளைச் செப்பம் செய்து பதிப்பித்தவர் யார்? எஸ். வையாபுரிப் பிள்ளை.
  33. மாறன் அகப்பொருளின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
  34. மாறனகப்பொருளின் ஆசிரியர் யார்? திருக்குருகைப் பெருமாள் 
  35. மாறனகப்பொருள் மாறன் எனப் பெயரிடப்படக் காரணம் யாது? மாறன் திருக்குருகைப் பெருமாளின் ஆசிரியராம் நம்மாழ்வார் பெயரைக் குறிக்கும்.
  36. மாறனகப்பொருள் யார் முன் அரங்கேற்றப்பட்டது? ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி ஶ்ரீநிவாச ஜீயர்
  37. மாறன் அகப்பொருளின் இயல்கள் எத்தனை? 5
  38. மாறன் அகப்பொருளின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 363
  39. மாறனகப்பொருளில் கிடைக்காத இயல்கள் எத்தனை? 2 [முதல், இறுதி இயல்கள் கிடைக்கவில்லை]
  40. மாறனகப் பொருளுக்கு மேற்கோளாய் அமைந்த இலக்கிய நூல் யாது? திருப்பதிக் கோவை
  41. புறப்பொருள் நூல்கள் எத்தனை? 2 [பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை]
  42. பன்னிருபடலத்தின் ஆசிரியர் யார்? அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் எழுதியதாகக் கூறுவர்.
  43. புறப்பொருள் வெண்பாமாலையின் காலம் என்ன? கி.பி.9 ஆம் நூற்றாண்டு
  44. புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் யார்? ஐயனாரிதனார்
  45. புறப்பொருள் வெண்பாமாலையின் படலங்கள் எத்தனை? 12 [புறத்திணைகள் 9, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை]
  46. புறப்பொருள் வெண்பா மாலையின் நூற்பாக்கள் எத்தனை? 361
  47. புறப்பொருள் வெண்பா மாலையின் இலக்கணச் சுருக்கத்தைக் கொளு என்பர்
  48. கொளுவின் விரிவினை வெண்பா விவரிக்கும்.
  49. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய மூத்த குடி என்னும் வரி இடம் பெற்ற நூல் எது? புறப்பொருள் வெண்பாமாலை[ கரந்தை 14].
  50. புறப்பொருள் வெண்பா மாலைக்கு எழுந்த பழைய உரையின் ஆசிரியர் யார்? சாமுண்டி தேவ நாயகர்







Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...