இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 நவம்பர், 2020

பாடாண் திணை

     1. பாடாண் எதன் புறத்திணை?

        கைக்கிளை

    2. பாடாண் என்பது யாது?

        பாடு+ஆண் - பாடாண்/ பாடப்படும் ஆண்மகனின் ஒழுக்கம், புகழ், 

        வலிமை, கொடை, இரக்கம் ஆகியவற்றைப் பாடுதல்

    3. பாடாண் திணை வகைகளாகத் தொல்காப்பியம் குறிப்பவை யாவை?

        எட்டு: வெட்சிப்பாடாண், வஞ்சிப்பாடாண், உழிஞைப் பாடாண், தும்பைப் 

        பாடாண், காஞ்சிப் பாடாண், புரைதீர்க்காமம் [தலை மகனைப் பெண் 

        காமுற்றதாகக் கற்பனையில் பாடுதல்], புல்லிய வகை [கடவுளர் 

        மானிடரிடம் கொண்ட காதல்]

    4. செந்துறைப்பாடாண் என்றால் என்ன?

        வழிபடுதல், வாழ்த்தல் முறையில் உலக வழக்கு, இலக்கிய வழக்கைட் 

        தழுவிப் பாடும் பாடாண் செந்துறை வண்ணப்பகுதி எனப்படும்.

    5. காமப்பகுதி கடவுளும் வரையார் - கடவுளரும் காமத்திற்கு உரியோர்

    6. 'குழவி மருங்கினும் கிழவதாகும்' என்பது எதன் முன்னோடியாகக் 

        குறிக்கப்படுகிறது? பிள்ளைத் தமிழ்

    7. 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப'  எதன் முன்னோடி?

        உலா

    8. கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருபவை யாவை?

        கொடிநிலை, கந்தழி, வள்ளி

    9. கொற்றவள்ளை என்பது யாது?

            வெற்றி பெற்ற மன்னனின் சிறப்பை கொற்றவள்ளையாகப் பாடுவது 

            பாடாண் திணையாகும்.

    10.  பாடாண் திணையின் துறைகள் யாவை?

       தொல்காப்பியம் - 22

          புறப்பொருள் வெண்பாமாலை -  47

    11. வாயில் நிலை:

            மன்னனைக் காணச் சென்றப் புலவன் தான் வந்ததை அரசனிடம் கூற

            வாயில் காவலனிடம் உரைப்பது.

    12. கடவுள் வாழ்த்து:

            சிவன், திருமால், பிரம்மன் என்னும் முக்கடவுளரில் அரசரால் 

            வணங்கப்படும் கடவுளின் பெருமையைப் புகழ்ந்து வாழ்த்துதல்.

    13. பூவை நிலை:

            காயாம் பூவைத் திருமாலின் நிறத்தோடு ஒப்பிட்டுக் கூறுவது.

    14. பரிசில் துறை:

            இரவலன் அரசரிடம் போரில் வென்ற யானையைப் பரிசாகக் கேட்பது.

    15. இயன்மொழி வாழ்த்து:

            [இயன்மொழி - இயல்+ மொழி]. அரசரின் தன்மையை உள்ளது 

            உள்ளவாறு  [இயல்பாக] கூறுவது.

    16. கண்படை நிலை:

            போரில் வென்ற நிறைவோடு உறங்கும் மன்னரின் உறக்கத்தைப் பாடல்.

    17. துயிலெடை நிலை:

            பல நாட்டு மன்னர்கள் திரை செலுத்தக் காத்திருப்பதாகக் கூறி, அரசரை 

            உறக்கத்தில் இருந்து எழுப்புதல்.

    18.  மங்கலநிலை:

            துயில் எழுந்த அரசரின் முன் சென்று மங்கலப் பாடல்களைப் பாடல்.

    19. விளக்குநிலை:

            விளக்குச்சுடர் வலப்புறம் சுழன்று நன்மைப் பெருகட்டும் என மன்னரின் 

            அரண்மனைத் திருவிளக்கைப் போற்றிப் பாடல்.

    20. கவிலைக்கண்ணிய புண்ணிய நிலை:

            கபிலைப் பசுக்களை அரசர் அந்தணர்க்குத் தானமாக அளிப்பதை 

            பாடுவது.

    21. வேள்வி நிலை:

            அரசன் அறம் பொருட்டு நிகழ்த்தும் வேள்வியைப் பாடுதல்

    22. வெள்ளி நிலை:

            அரசரின் நல்லாட்சியால் வெள்ளிக்கோள் நன்னிலை அடைந்து நாடு 

            சிறக்கும் எனப்பாடுவது.         

    23. நாடு வாழ்த்து:

            மாதம் மும்மாரிப் பொழிந்து நாடு செழிக்கவெனப் பாடுவது.

    24. கிணை நிலை:

            கிணை [தடாரி] இசைக்கருவியை இசைக்கும் கிணையன் தன் வறுமை 

            நீங்க அரசன் செய்த நன்மைகளைக் கூறுவது.

    25. களவழி வாழ்த்து:

            மன்னன் போரால் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பாணன் போற்றிப் 

            பாடுவது.

    26. வீற்றினிருந்தப் பெருமங்கலம்:

            வெற்றியில் சிறந்த மன்னன் தனக்கு ஒப்பானவர்க்ளும், தன்னை விட 

            மிக்கானவர்களும் இல்லை என்னும் பெருமிதத்தோடு அரியணையில்

            வீற்றிருக்கும் சிறப்பைப் புகழ்வது.

    27. குடுமி களைந்த புகழ்சாற்று நிலை:

            குடுமி என்பது மன்னனின் மணி முடியைக் குறிப்பது. பகை நாட்டின் மீது 

            போரிட்டு, அவனைத் தோற்கடித்து, அவன் சூடி இருந்த முடி களைந்து 

            அடிமைப்படுத்தியதைப் பாடுவது. 

    28. மணமங்கலம்:

            அரசர் மகளிரை மணம் புரிவதைக் கூறுவது.

    29. பொலிவு மங்கலம்:

             அரசர் மகனின் பிறப்புப் பொலிவைப் பாடுவது.

    30. நாள்மங்கலம்:

            மன்னன் பிறந்த நாளைச் சிறப்பித்துப் பாடல்

    31. பரிசில் நிலை:

            மன்னன் பிறந்த நாளில் அனைவருக்கும் பரிசளிக்கும் சிறப்பை எடுத்து 

            உரைப்பது.

    32. பரிசில்விடை:

            இரவலருக்கு குதிரை, யானை, தேர் முதலானவற்றைக் கொடுத்து 

            அவர்களை அன்போடு வழியனுப்புதல்

    33. ஆள்வினை வேள்வி:

            தன்னை நாடிவருவோருக்கு விருந்தெனும் வேள்வியளிக்கும் மன்னனின் 

            சிறப்பைப் பாடுதல்.

    34. பாணாற்றுப்படை:

            மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் பாணன் வழியில் சந்திக்கும் 

            வறிய பாணனை மன்னன் பால் ஆற்றுப்படுத்துதல்.

    35. கூத்தராற்றுப்படை  

            மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் கூத்தர் வழியில் சந்திக்கும் 

            வறிய கூத்தரை மன்னன் பால் ஆற்றுப்படுத்துதல்.

    36. பொருநராற்றுப்படை

            மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் பொருநனை வழியில் சந்திக்கும் 

            வறிய பொருநனை மன்னனிடம் ஆற்றுப்படுத்துதல்.

    37. விறலியாற்றுப்படை:

            மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் விறலி வழியில் சந்திக்கும் 

            வறிய விறலியை மன்னனிடம்  ஆற்றுப்படுத்துதல்.

    38. வாயுறை வாழ்த்து:

            சான்றோர் வாக்கிற்கு இணங்க நடந்தால் நன்மை கிட்டும் எனக் கூறி

            அரசனை வாழ்த்துதல்

    39. செவியறிவுறூஉ:

            மெய்ப்பொருளையும் நன்னெறியையும் எடுத்துரைத்து அதன்படி நடக்க

            மன்னனை அறிவுறுத்துதல்.

    40. குடைமங்கலம்:

            மன்னனின் வெண்கொற்றக் குடை அதை நாடி, அதன் கீழ் உள்ளோருக்கு

            திங்கள் போல் குளிர்ச்சியையும், அதன் கீழ் வாராதோருக்கு சூரியன் 

            போல் வெம்மையையும் வழங்கும் சிறப்பைப் பாடுவது.

    41. வாள்மங்கலம்:

            அரசரின் வாளைப் புகழ்ந்துப் பாடுவது.

    42. மண்ணுமங்கலம்:

            மன்னன் நீராடும் சிறப்பைப் பாடுவது. [மண்ணுதல் - கழுவுதல்]

    43. ஓம்படை:

            இதைச் செய்தால் இது நிகழும் எனக் கூறி மன்னனுக்குக் காப்புப் 

            பாடுதல். [ஓம்புதல் - காத்தல்]

    44. புறநிலை வாழ்த்து:

            குறைவற்ற [குற்றமற்ற] செல்வத்தோடு வழி வழியாய் சிறந்து வாழ

            அரசனை இறைவன் காக்க வேண்டும் என வேண்டிப் பாடுதல்.

    45. கொடிநிலை:

            சிவன், திருமால், பிரம்மன் என்னும் முக்கடவுளரில் ஒருவரின் 

            கொடியோடு, மன்னரின் கொடியை உவமித்துப் பாடுவது.

    46. கந்தழி:

            திருமால் அசுரர்களின் அரணான சோ என்னும் அரணை அழித்ததைப் 

            பாடுவது.

    47. வள்ளி:

            முருகனுக்காக மகளிர் ஆடும் கூத்து வள்ளிக்கூத்து ஆகும்.

    48. புலவராற்றுப்படை:

            இறையருள் பெற்ற புலவர் இறை அருளைப் பெறத்தக்க மற்றொரு 

            புலவரை இறைவனிடம் ஆற்றுப்படுத்துதல்.

    49. புகழ்ந்தனர் பரவல்:

            தனக்கு வேண்டிய பேறுகளை வேண்டி இறைவனைப் பரவுதல்

    50. பழிச்சினர் பணிதல்:

            உலக இன்பங்களை அடைய இடைவனிடம் வேண்டி அவனைப் பணிதல்

    51. கைக்கிளை:

            தலைவன் மீது காதல் கொண்ட பெண் அவனிடம் மாலை வேண்டுதல்

    52. பெருந்திணை: பொருந்தாக்காமம்

    53. புலவிப் பொருளா தோன்றிய பாடாண்பாட்டு:

            தலைவன் மார்பைத் தானே தழுவுவேன் எனக் கூறி தலைவி தன் 

            வேட்கையை வெளிப்படுத்துதல்.

    54. கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டீர் நயந்த பக்கம்:

            அலைமகள், கலைமகள்,  மலைமகள் என்னும் கடவுள் பெண்டிர் தம் 

            கணவராம் கடவுளரை நயந்தமையைக் கூறல்

    55. கடவுள் மாட்டு மனிதப் பெண்டிர் நயந்த பக்கம்:

            மனிதப் பெண் இறைவனை விரும்புதலைக் கூறுதல்.

    56. குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி:

            தலைவனைக் குழந்தையாகப் பாவித்து அவனை விரும்புவதாகப் பாடல்

    57. ஊரின் கண் தோன்றியக் காமப்பகுதி:

            காதல் கொண்ட ஆணும் பெண்ணும், தம் காதல் தோன்ற 

            நிலைக்கலனாக இருக்கும் ஊரைப் புகழ்ந்து பாடுதல். 








     



வாகைத் திணை

    1. தும்பைத்திணை என்றால் என்ன?

        வீரத்தை, படை வலிமையை மட்டும்  அடிப்படைப் பொருளாக எண்ணி 

        போர்தொடுத்து

   2. தும்பைத் திணை எதன் புறத்திணை?

        தும்பை நெய்தலின் புறத்திணை ஆகும்.

    3. தும்பைத்திணையில் அட்டையாடல் என்றால் என்ன?

        வீரரின் உடலில் அம்பு, வேல் தைக்க, உயிரிழந்த உடல் நிலத்தில் விழாமல் 

        அட்டைப்பூச்சி இறந்த பின்னும்  நீரில் ஆடுதல் போல இருநிலம் 

        தீண்டாமல்  ஆடுதல் ஆகும். 

    4. தும்பைத்திணையின் துறைகளாக தொல்காப்பியர் குறிப்பிடுவன 

        எத்தனை?

        12 

    5. வாகைத்திணை எதன் புறத்திணை?

        பாலைத் திணை

    6. வாகைத்திணை என்றால் என்ன? 

        குற்றமற்ற கொள்கைக் கொண்டவர்கள் தத்தம் ஆற்றலை, வலிமையைக்

        காட்டப்  போரிட்டு வெற்றி பெறுதல்.

    7. வாகை எத்தனைப் பிரிவுகளைக் கொண்டதென தொல்காப்பியர் 

        கூறுகிறார்?

        7 [பார்ப்பன வாகை, அரச வாகை,  வாணிக வாகை, வேளாண் வாகை, 

               அறிஞர் வாகை, தாபதவாகை, பொருநவாகை]

    8. பார்ப்பன வாகை என்பது யாது?

        ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு 

        தொழிலை உடையது பார்ப்பன வாகை [பார்ப்பனப் பக்கம்]

    9. அரசவாகை என்பது யாது?

         ஓதல், வேட்டல், ஈதல், படைவழங்கல், குடி ஓம்பல் என்னும் 5 தொழில் 

        உடையது அரச வாகை

    10.வணிக,  வேளாண் வாகை என்பது யாது?

        ஓதல், உழவு, ஈதல், வாணிகம், விருந்தோம்பல், நிரை காத்தல் என்னும்

        ஆறும் உடையது ஏனோர் பக்கமும். அதாவது வேளான் வாகை, வணிக 

        வாகை

    11. அறிஞர் வாகை [அறிவன் தேயம்] என்பது யாது?

          இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் முக்காலமும் அறிந்தது அறிஞர் வாகை

    12. தாபத வாகை என்றால் என்ன?

          நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலாடை உடுத்தல், சடைபுனைதல், 

       ஊருக்குள் செல்லாமை, காட்டில் உணவு கொள்ளுதல், கடவுட் பூசை, 

        விருந்தோம்பல் என்னும் எட்டையும் கொண்டது தாபத வாகை [பக்கம்]

    13. பொருந வாகை எத்தனை வகைப்படும்?

        பாணர், பாடினி என்னும் இருபாலானது பொருந வாகை.

    14. வாகை என்பது யாது?

           வாகை என்பது போரில் வென்ற நிலையைக் குறிப்பது

    15. வாகைத்துறைகளின் எண்ணிக்கை எத்தனை எனப் புறப்பொருள் 

        வெண்பாமாலை கூறுகிறது?

        32

   16. வாகை அரவம் என்பது யாது?

      போரில் வெற்றி பெற்ற மன்னனின் வீரர்கள் வாகைப் பூ சூடி கடலென ஆர்ப்பரிப்பது

    17. அரசவாகை என்பது யாது?

        வெற்றிகொண்ட அரசனின் செங்கோலையும், அவனது                                 நல்லியல்பையும் புகழ்ந்து பாடுவது. 

    18. முரச வாகை என்றால் என்ன?

         அரசனின் வெற்றி முரசின் தன்மையைக் கூறல். 

           மரக்களவழி என் பது யாது?

        போர்க்களத்தையும் ஏர்க்களத்தையும் ஒப்பாகக் கொண்டு மன்னனி 

        நிலத்தை உழும் உழவனுக்கு ஒப்பாகக் காட்டுவது   

        [மன்னன் - உழவன், போர்க்களம் - வயல், யானை - மாடுகள்,

         வேல் - கலப்பை, வெகுளி - விதை, புகழ் - தானியம்]

    20. களவேள்வி என்பது யாது?

            போர்க்களத்தில் வேள்வி செய்தல். கொல்லும் வலிமையுடைய பேய்கள்

            வயிறார உண்ண மன்னன் களத்தில் வேள்வி செய்தல்.

    21. முன்தேர்க்குரவை என்பது யாது?

            வாகை சூடிய மன்னன் தேர்முன் பேய்கள் கூத்தாடிச் செல்வது

    22. பின் தேர்க்குரவை என்பது யாது?

            வெற்றி பெற்ற மன்னன் தேரின் பின் வீரர்களும், விறலிகளும் ஆடிப் 

            பாடிச் செல்வது பின்தேர்க்குரவை

    23. பார்ப்பன வாகை என்பது யாது?

            வேள்வி மண்டபத்தில் வேதத்தில் வல்லவர்களாம் பார்ப்பனர்களுக்குச்

            சிறப்புச் செய்வது.

    24. வாணிக வாகை என்பது யாது?

            வணிகர்களுக்கு உழவு, பசுக்களைப் பாதுகாத்தல், வாணிகம், ஓதல்,  

            வேட்டல், ஈதல், என்னும் ஆறு வகை அறங்களை எடுத்தியம்புதல்

    25. வேளாண் வாகை என்பது யாது?

               அந்தனர், மன்னர், வணிகர் பாராட்டும் படி வேளாளர் சிறப்புடன் 

                கடனாற்ற வேண்டும் என எடுத்துரைத்தல்.

    26. பொருதவாகை என்பது யாது?

            தமக்கு ஒப்பானவரும், தன்னைவிட மிக்கானவரும் இல்லை என்னும்

            செருக்கோடு பிறரை இகழக்கூடாது என மன்னனிடம் சான்றோர் 

            அறிவுறுத்துதல்

    27. அறிவன்வாகை என்பது யாது?

            முக்காலத்தையும் தன் அறிவால் உணர்ந்து வருபொருளை 

            [வரவிருப்பதை] உரைக்கும் அறிவனின் சிறப்பைப் பாடுதல்.

    28. தாபத வாகை என்பது யாது?

            தவம் செய்வோர் தம் தவத்தில் இருந்து மாறாமல் இருக்கவேண்டும் 

            என்பதை அறிவுறுத்துதல்.

    29. கூதிர் பாசறை என்பது யாது?

            தன் துணையுடன் கூடியின்புறும் கூதிர்க்காலத்தில் தலைவியை

            நினைக்காமல் போர் ஒன்றையே சிந்தித்து மன்னன் தங்கியிருக்கும்  

            கூதிர்க்காலப் பாசறையின் தன்மையைக் கூறுதல்.

    30. வாடைப் பாசறை என்பது யாது?

            பாசறையில் தங்கியிருக்கும் காலத்தில் கூதிர்கால வாடைக்காற்றின் 

            கொடுமையைப் பற்றிக் கூறுதல்.

    31. அரச முல்லை என்பது யாது?

            பகைமையை அழிக்க ஆற்றல் மிக்க அரசனை, அவனது வீரத்தை 

            எடுத்துரைப்பது.

    32. பார்ப்பனமுல்லை என்பது யாது?

            தம்முள் முரண்பட்ட பகை மன்னர்கள் இருவரையும் சமரசம் செய்வது.

    33. அவைய முல்லை என்றால் என்ன?

            அறங்கூறும் அவையில் இருக்கும் சான்றோரின் திறனைப் பாடுவது

    34. கணிவன் முல்லை என்றால் என்ன?

            போருக்குச் செல்லும் முன்னும், போர்க்காலத்திலும் நாளையும், 

            கோளையும் கணிக்கும் கணிவனின் திற்ம் உரைப்பது.

    35. மூதின் முல்லை என்றால் என்ன?

            காலம் காலமாய் வீரம் நிறைந்த தமிழ்க்குடியில் பிறந்த மகளிரின்

            மற உணர்வைப் புகழ்வது.

    36. ஏறாண் முல்லை என்பது யாது? 

        ஆண்மை மிக்க குடியின்  சிறப்பை உணர்த்தஉணர்த்துதல்

    37. வல்லாண்முல்லை என்பது யாது?

            வீரம் நிறைந்தவனின் ஊர், குடி, பிறப்பு முதலானவற்றைக் கூறி வீரனை

            சிறப்பிப்பது.

    38. காவல் முல்லை என்பது யாது?

           வெற்றி பெற்ற மன்னனின் மன்னனின் நிலக்காவலின் திறனைப் 

            போற்றுவது.

    39.  பேராண்முல்லை என்றால் என்ன?

            வெற்றி பெற்ற அரசனின் பேரண்மையைப் போற்றுவது.

    40.  மறமுல்லை என்றால் என்ன?

            வெற்றி பெற்ற பின் வீரன் ஒருவனின் மறமாண்பைப் பாராட்டிப் பரிசு

            அளிக்கும் போது, பரிசை ஒரு பொருட்டாகக் கருதாமல் போர்க்கள 

            நினைவாகவே இருந்து பகைவர்களை அழிப்பது பற்றி மட்டுமே

            பேசிக்கொண்டிருக்கும் வீரத்தைப் புகழ்வது.

    41.  குடை முல்லை என்றால் என்ன?

            வெற்றிபெற்ற அரசனின் வெற்றிச் சிறப்புடைய வெண்கொற்றக்

            குடையின் சிறப்பினை எடுத்துரைப்பது.

    42. கண்படை நிலை என்றால் என்ன?

          போர் முடிந்து வெற்றி பெற்ற பின் இனி பகைவரே இல்லை என்னும் 

            நிறைவோடு மன்னன் கண்ணுறங்கும் தன்மையைக் கூறுவது.

    43. அவிப்பலி என்றால் என்ன?

            வீரத்தை வேள்வியாக, தவமாகக் கொண்டு வாழும் வீரர்கள் வேள்வி

            இறுதியில் செஞ்சோற்று க்கடன் கழிக்க அவி எழுவதைப் போல மன்னன் மீது கொண்ட விசுவாசத்தால்

            அவனுக்காகத் தம் உயிரைப் பலியாக்கக் கொடுப்பதைப் பாடுவது.

    44.  சால்புமுல்லை என்றால் என்ன?

            இனிய, நற்குணங்கள் அனைத்தும் நிரம்பிய சாண்றோரின் 

            சான்றாண்மையைப் போற்றிப் பாடுவது.

    45.  கிணைநிலை என்றால் என்ன?

            கிணை என்னும் பறையை இசைப்பவன் வயலை உழுது மக்களைக்

            காக்கும் வேளாளனைப் புகழ்ந்து பாடுவது.

    46.  பொருளோடு புகறல் என்பது யாது?

            உலகப்பொருள்களின் மீதான பற்றை நீக்கி மெய்ப்பொருளை விரும்பல்

            உண்மைத் தத்துவப்பொருளைப் பற்றி வாழ்வதே வெற்றி உணர்த்தல்.

    47. அருளோடு நீங்கல் என்பது யாது?

            உலகு நிலையற்றது என்னும் உண்மையை உணர்ந்து நிலை உலகிற்கு

            உரிய அறம் முதலானவற்றைச் செய்ய அறிவுறுத்தல். இதனை 

            அருளோடு புணர்ந்த அகற்சி என்கிறது தொல்காப்பியம்.





              


            


        









 

      

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...