- தமிழ் நாட்டில் கிடைக்கும் முதல் நாடகம் எது? பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் [வடமொழி]
- சோழர்காலத்தில் இயற்றப்பட்ட நாடகங்கள் யாவை? இராசராசேச்சுர நாடகம், குலோத்துங்க சோழன் நாடகம், பூம்புலியூர் நாடகம்
- சோழர் காலத்தில் திருவிழாக்களில் நடிக்கும் உரிமை பெற்றிருந்தவள் யார்? உய்யவந்தாள் யசோதை
- மாரிமுத்துப் புலவர் இயற்றிய நாடகம் யாது? திருக்கச்சூர் நொண்டி நாடகம்
- இராமநாடகம் / இராமநாடகக் கீர்த்தனை யாரால் இயற்றப்பட்டது? அருணாச்சலக் கவிராயர்
- மாரிமுத்துப் பிள்ளை இயற்றிய நாடகம் யாது? அநீதி நாடகம்
- காசி விசுவநாத முதலியார் இயற்றிய நாடங்கள் யாவை? டம்பாச்சாரி நாடகம், தாசில்தார் நாடகம், பிரம்மசமாஜ நாடகம்
- அப்பாவுப்பிள்ளை இயற்றிய நாடகம் யாது? அரிச்சந்திர விலாசம்
- இராமச்சந்திர கவிராயர் இயற்றிய நாடகங்கள் யாவை? சகுந்தலை விலாசம், தாருக விலாசம்
- சிறுதொண்டர் விலாசத்தை இயற்றியவர் யார்? பரசுராமக் கவிராயர்
- ஒட்ட நாடகத்தை இயற்றியவர் யார்? கோவிந்த கவிராயர்
- காராளர் கார் காத்த நாடகத்தை இயற்றியவர் யார்? கிருஷ்ணசாமி செட்டியார்
- சோகி நாடகத்தை இயற்றியவர் யார்? சுப்பராயலு முதலியார்
- சோழர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம் யாது? சோழ விலாசம்
- தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தில் இயற்றப்பட்ட பாரத கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள் யாவை? கீசகவிலாசம், தரும விலாசம், பாரத விலாசம்
- புகழேந்திப் புலவர் இயற்றிய நாடகங்கள் யாவை? நளவிலாசம், தமயந்தி நாடகம்
- தமிழ் நாடகத் தாத்தா யார்? கோவிந்தசாமி ராவ் [இன்றைய நாடகங்களின் முன்னோடி]
- இஸ்லாமிய நாடகங்களில் குறிப்பிடத்தக்கன யாவை? அப்பாசு நாடகம், அல்லி பாதுஷா நாடகம்
- கிறித்தவ நாடகங்களில் குறிப்பிடத்தக்கன யாவை? ஞான சௌந்தரியம்மாள் நாடகம், ஞானத்தச்சன் நாடகம்
- தமிழ் நாடகப்பேராசிரியர் யார்? தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
- சங்கரதாஸ் சுவாமிகள் எத்தனை நாடகங்கள் இயற்றியுள்ளார்? 40
- சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களில் குறிப்பிடத்தக்கன யாவை? அபிமன்யு சுந்தரி, அல்லி அர்ஜுனா, இலங்கா தகனம், கோவலன், சதி அனுசுயா, சத்தியவான் சாவித்திரி, சதி சுலோச்சனா, சிறுதொண்டர், சிந்தாமணி, பவளக்கொடி, பக்த பிரகலாதா, நல்ல தங்காள், மணிமேகலை
- சங்கரதாஸ் சுவாமிகள் மொழிபெயர்த்த வடமொழி நாடகம் யாது? மிருச்சகடிகா
- சங்கரதாஸ் சுவாமிகள் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் யாவை? ரோமியோ ஜூலியட், சிம்பலைன் [சிம்பலின்]
- பெ. சுந்தரம்பிள்ளை இயற்றிய நாடகம் யாது? மனோன்மணியம்
- மனோன்மணியத்தின் மூல நூல் எது? லிட்டன் பிரபுவின் இரகசிய வழி
- வி. கோ. நாராயண சாஸ்திரியார் எழுதிய நாடக இலக்கண நூல் யாது? நாடகவியல்
- வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இயற்றிய பாடல் கலந்த நாடக நூற்கள் யாவை? ரூபாவதி, கலாவதி, மானவிஜயம்
- பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக சபை யாது? சுகுணவிலாச சபை
- பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் எத்தனை? 80 [80க்கும் மேல்]
- பம்மல் சம்பந்த முதலியாரின் குறிப்பிடத்தக்க நாடகங்கள் யாவை? மனோகரா, சபாபதி, வேதாள உலகம், காதல் கண்கள், பொன் விலங்கு, சுலோச்சனா சதி, கள்வர் தலைவன், இரு நண்பர்கள், சதிசக்தி, வைகுண்ட வைத்தியர், புத்த அவதாரம், கலையோ காதலோ, விஜயரங்கம்
- இலட்சுமண பிள்ளை இயற்றிய நாடகங்கள் யாவை? விழா நாடகம், ரவிவர்மா நாடகம்
- கிருஷ்ணசாமிப் பாவலர் அமைத்த நாடக சபை யாது? பால மனோகர நாடக சபா
- கிருஷ்ணசாமிப் பாவலர் இயற்றிய புராண நாடகங்கள் யாவை? அரிச்சந்திரன், கோவலன், வள்ளித்திருமணம், தேசிங்குராஜன்
- கிருஷ்ணசாமிப் பாவலர் இயற்றிய தேசிய உணர்வு மிக்க நாடகங்கள் யாவை? கதிரின் வெற்றி, தேசியக் கொடி, பம்பாய் மெயில்
- டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக சபை யாது? ஸ்ரீபாலசண்முகானந்த சபா
- டி. கே. எஸ். சகோதரர்கள் இயற்றிய நாடகங்கள் யாவை? குமாஸ்தாவின் பெண், அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா
- நவாப் ராஜமாணிக்கம் தோற்றுவித்த நாடக சபா யாது? மதுரை தேவபால விநோத சங்கீத சபை
- நவாப் ராஜமாணிக்கம் சபையை இயற்றிய நாடகங்கள் யாவை? சம்பூர்ண ராமாயணம், கிருஷ்ணலீலா, பக்த ராமதாஸ், மனோகரா, சக்திலீலா, ஏசுநாதர், ஞான சௌந்தரி, பிரபல சந்திரா, பிரேம குமாரி, குமார விஜயம், சபரிமலை ஐயப்பா
- நவாப் ராஜமாணிக்கம் பெற்ற பட்டங்கள் யாவை? நாடகக் கலாநிதி, நாடகயோகி
- எஸ்.வி. சகஸ்ரநாமம் தோற்றுவித்த நாடக அமைப்பு யாது? சேவா ஸ்டேஜ்
- எஸ்.வி. சகஸ்ரநாமம் இயற்றிய நாடகங்கள் யாவை? பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன், போலீஸ்காரன் மகள், வடிவேலு வாத்தியார், நாலுவேலி நிலம், பாஞ்சாலி சபதம், ஜீவனாம்சம்
- அவ்வை தி. க. சண்முகம் இயற்றிய நாடகம் குறித்த நூல்கள் யாவை? தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடகக் கலை, நெஞ்சு மறக்குதில்லையே, எனது நாடகக் கலை
- பேரறிஞர் அண்ணா இயற்றிய நாடகங்கள் யாவை? நீதிதேவன் மயக்கம், சந்திரமோகன், வேலைக்காரி, கலிங்க ராணி
- கலைஞர் கருணாநிதி இயற்றிய நாடகங்கள் யாவை? ஒரே முத்தம், தூக்கு மேடை, விமலா அல்லது விதவையின் கண்ணீர், மந்திரி குமாரி, மணி மகுடம், நச்சுக்கோப்பை, வாழ முடியாதவர்கள், நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதய சூரியன், பரப்பிரம்மம், காகிதப்பூ, சிலப்பதிகாரம்
- கே. பாலச்சந்தர் இயற்றிய நாடகங்கள் யாவை? நாணல், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், சதுரங்கம்
- கோமல் சுவாமிநாதன் இயற்றிய நாடகங்கள் யாவை? பெருமானே சாட்சி, தண்ணீர் தண்ணீர், ஒரு இந்தியக் கனவு, அனல் காற்று, யுத்த காண்டம், குமார விஜயம், ராஜபரம்பரை, பாலூட்டி வளர்த்தகிளி
- ஏ. என். பெருமாள் இயற்றிய நாடகங்கள் யாவை? பனிமொழி, பால்மதி, பீலிவளை, மானசீகை
- ஏ. என் பெருமாள் எழுதிய நாடகத் திறனாய்வு நூல்கள் யாவை? தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ் நாடகம் ஓர் ஆய்வு, உலக அரங்கில் நாடகம்
- புராண நாடக வேந்தர் யார்? ஆர். எஸ். மனோகர்
- ஆர். எஸ். மனோகர் தோற்றுவித்த நாடக அமைப்பு யாது? நேஷனல் தியேட்டர்ஸ்
- ஆர். எஸ். மனோகர் இயற்றிய நாடகங்கள் யாவை? இன்பநாள், உலகம் சிரிக்கிறது, இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், காடக முத்தரையன், மாலிக்கபூர், சுக்கிராச்சாரியார், பரசுராமன், துரோணர், விசுவாமித்திரர், நரகாசுரன், சூரபத்மன், இந்திரஜித், சிசுபாலன்
- நிஜநாடக இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? மு. இராமசாமி [1977ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கியது]
- நிஜநாடக இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்த நாடகங்கள் யாவை? வெத்து வேட்டு, ஸ்பார்டகஸ்
- பரீட்சா இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? ஞாநி
- பரீட்சா நாடக இயக்கத்தின் குறிப்பிடத் தகுந்த நாடகங்கள் யாவை? ஏன், நாற்காலிக்காரர், காலம் காலமாக, போர்வை போர்த்திய உடல்கள், மூட்டை, மூர்மார்க்கெட், மனுஷா, வயிறு
- கூத்துப்பட்டறை யாரால் தொடங்கப்பட்டது? ந. முத்துசாமி
- கூத்துப்பட்டறையின் குறிப்பிடத்தகுந்த நாடகங்கள் யாவை? கீசகவதம், சுவரொட்டிகள்
- துளிர் இயக்கம் எங்கு இயங்குகிறது? தஞ்சை
- சுதேசிகன் இயக்கம் எங்கு இயங்குகிறது? மதுரை
- சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி எங்கு இயங்குகிறது? புதுவை
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 17 டிசம்பர், 2020
நாடகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...