- எழுத்ததிகாரத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 202
- நன்னாலார் எழுத்திலக்கணத்திற்கு அமைத்த பாகுபாடுகள் எத்தனை? 12
- எழுத்திலக்கண பாகுபாடுகள் யாவை? எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ச்சி
- எழுத்து என்பது யாது? மொழியின் முதற் காரணமான அணுத்திரள் ஒலியால் உருவாவது
- எழுத்து வகைகள் யாவை? முதல், சார்பு
- முதல் எழுத்து எத்தனை வகைப்படும் ? உயிர், மெய்
- முதல் எழுத்துக்கள எத்தனை? 30
- சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 10
- சார்பெழுத்துக்களின் வகைகள் யாவை? உயிர்மெய், ஆய்தம் [முற்றாய்தம்], உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
- சார்பெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை யாது? 369
- உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை - 216 [12X18 = 216
- முற்றாய்த எழுத்துக்களின் எண்ணிக்கை - 8
- உயிரளபெடை எழுத்துக்களின் எண்ணிக்கை - 21
- ஒற்றளபெடை எழுத்துக்களின் எண்ணிக்கை - 42
- குற்றியலிகர எழுத்துக்களின் எண்ணிக்கை - 37
- குற்றியலுகர எழுத்துக்களின் எண்ணிக்கை - 36
- ஐகாரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 3
- ஔகாரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 1
- மகரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 3
- ஆய்தக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 2
- பெயரிடுதலின் வகைகள் யாவை? இடுகுறிப்பெயர், காரணப்பெயர் [இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப் பெயர், காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் பெயர்]
- உயிர் எழுத்தை நன்னூலார் எவ்வாறு கூறுகிறார்? ஆவி
- சுட்டெழுத்துக்கள் யாவை? அ, இ, உ
- சுட்டு வகைகள் ? அகச்சுட்டு, புறச்சுட்டு [ நன்னூலார் குறிக்கவில்லை]
- முதலில் வரும் வினா எழுத்துக்கள் யாவை? எ, யா
- இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் யாவை? ஆ, ஓ
- முதலிலும், ஈற்றிலும் வரும் வினா எழுத்து யாது? ஏ
- வல்லின எழுத்துக்கள் யாவை? க, ச, ட, த, ப, ற
- மெல்லின எழுத்துக்கள் யாவை? ங, ஞ, ந, ண, ம, ன
- ஐயின் இன எழுத்து யாது? இ
- ஔ - யின் இன எழுத்து யாது? உ
- இன எழுத்து ஆவதற்கு உரிய காரணங்கள்? தானம், முயற்சி, அளவு, பொருள், வடிவு இவற்றில் ஒன்றோ பலவோ ஒத்து அமைவது.
- எழுத்து உருவாக காற்றுப் பொருந்தும் இடம்? உரம் [நெஞ்சு-நுரையீரல்], கண்டம் [கழுத்து], தலை, மூக்கு
- எழுத்து உருவாகத் தொழிற்படும் உறுப்புக்கள் யாவை? இதழ், நாக்கு, பல், மேல் அண்ணம்
- மிடற்றில் [கழுத்து, தொண்டை] உருவாகும் எழுத்துக்கள் யாவை? உயிர், இடையின எழுத்துக்கள்
- மெல்லெழுத்துக்கள் எங்கு பிறக்கும்? மூக்கு
- வல்லெழுத்துக்கள் எங்கு பிறக்கும்? நெஞ்சு [உரம்]
- அங்காத்தலால் [வாயைத் திறத்தல்] பிறக்கும் எழுத்துக்கள் யாவை? அ,ஆ
- மேல் அண்ணத்தின் பல்லை அடி நாக்கின் விளிம்பு பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? இ, ஈ, எ, ஏ, ஐ
- இதழ் குவிவால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? உ, ஊ, ஒ, ஓ, ஔ
- நாக்கின் அடிப்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? க், ங்
- நாக்கின் இடைப்பகுதி அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள்? ச், ஞ்
- நாக்கின் நுனி அண்ணத்தின் நுனி பொருந்தப் பிறப்பவை? ட், ண்
- அண்பல் [அண்ண அடிப்பகுதி] நா நுனி பொருந்தப் பிறப்பவை? த், ந்
- மீகீழ் [மேல், கீழ்] இதழுறப் பிறப்பவை யாவை? க், ம்
- யகரம் எவ்வாறு பிறக்கும்? அடி நா அடி அண்ணம் பொருந்துதல்
- அண்ணத்தை நுனி நா வருடப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ர், ழ்
- அண்ணப்பல் அடியில் நாக்கின் விளிம்பு பொருந்தப் பிறப்பது? ல்
- அண்ணத்தை நாக்கின் நுனி வருட பிறப்பது? ள்
- மேற்பல் கீழ் இதழைப் பொருந்தப் பிறப்பது? வ்
- அண்ணத்தை நுனி நா பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ற்,ன்
- சார்பெழுத்தாகிய ஆய்தம் பிறக்கும் இடம் எது? தலை
- ஆய்த எழுத்துப் எவ்வாறு பிறக்கும்? வாயை அங்காத்தல்
- ஆய்தம் தவிர்த்த ஒன்பது சார்பெழுத்துக்கள் எவ்வாறு பிறக்கும்? தம் முதல் எழுத்தைப் போலப் பிறக்கும்
- எழுத்துக்களை ஒலிப்பதில் நிகழும் வேறுபாடுகள் யாவை? எடுத்தல் [உயர்த்தல்], படுத்தல் [குறைத்தல்], நலித்தல் [இடைப்பட்டு ஒலித்தல்]
- ஆய்த எழுத்து சொல்லில் எங்கு வரும்? உயிரெழுத்தின் பின்னும், க்,ச், ட், த், ப், ற் என்ற ஆறு வல்லெழுத்தின் முன்னும் வரும்
- முற்றாய்த வகைகள் எத்தனை? 8
- அளபெடையின் வகைகள் யாவை? உயிரளபெடை, ஒற்றளபெடை
- உயிர் எழுத்து எதற்காக அளபெடுக்கும்? செய்யுளில் இசையை நிறைவு செய்ய
- உயிரளபெடை எவ்வாறு எழுதப்படும்? நெட்டெழுத்தை அடுத்து அதன் இனமான குற்றெழுத்து எழுதப்படும்.
- சொல்லில் எங்கெங்கு உயிர் அளபெடுக்கும்? முதல், இடை, கடை
- அளபெடை வகைகள் எத்தனை? 4
- அளபெடை வகைகள் யாவை? இன்னிசை அளபெடை, இசைநிறை அளபெடை, சொல்லிசை அளபெடை, இயல்பு அல்லது இயற்கை அளபெடை [இவை நன்னூலார் கூறும் வகைகள் அல்ல]
- உயிரளபெடைகளின் எண்ணிக்கை? 21[மொழி முதல், இடை, கடை என மூன்று இடங்களில் 7 நெட்டெழுத்துக்கள் 3X7 = 21]
- ஒற்று சொல்லில் எங்கு அளபெடுக்கும்? இடை, இறுதி
- ஒற்று எச்சூழலில் அளபெடுக்கும்? இசையை நிறைவு செய்ய
- அளபெடுக்கும் ஒற்றெழுத்துக்கள் யாவை? ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள்,
- அளபெடுக்கும் ஒற்று அல்லா எழுத்து எது? ஂஅய்தம்
- ஒற்றளபெடையின் எண்ணிக்கை? 42 [மொழியின் இடை மற்றும் இறுதியில் பதினோரு எழுத்துக்கள் அளபெடுக்கும். தனிக்குறிலை அடுத்தோ, இரு குறிலை அடுத்தோ அளபெடுக்கும்: 2X 2X11= 44 இவற்றில் ஆய்தம் குறிலிணையை அடுத்து அளபெடுக்காது. அவை 2 கழிய 42]
- குற்றியலிகரம் என்பது யாது? குறுகி ஒலிக்கும் இகரம்
- தனிச்சொல்லில் எங்கு இகரம் குறுகி ஒலிக்கும்? மியா எனும் அசைச்சொல்
- புணர் மொழியில் எங்கு உகரம் குறுகி ஒலிக்கும்? குற்றியலுகரத்தை அடுத்து யகரம் வர அவை இணைந்து இகரமாக மாறி குறுகி ஒலிக்கும்
- குற்றியலிகர எண்ணிக்கை? 37
- குற்றியலுகரம் என்பது யாது? குறுகி ஒலிக்கும் உகரம்[சொல் இறுதியில் வல்லெழுத்தை ஊர்ந்து வரும் உகரம் குறுகி ஒலிக்கும்
- குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? 6
- நெடில் தொடர் குற்றியலுகரம் என்பது யாது? தனி நெடிலை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [மாடு, ஆடு]
- ஆய்தத்தொடர் குற்றியலுகரம் என்பது யாது? தனிக்குறிலோடு இணைந்து வரும் ஆய்தத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [அஃது]
- உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்பது என்ன? உயிரைத் தொடர்ந்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [முரசு]
- வன்தொடர்க் குற்றியலுகரம் என்பது யாது? வல்லெழுத்தைத் தொடர்ந்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [எட்டு, பற்று]
- மென்தொடர் குற்றியலுகரம் என்பது யாது? மெல்லெழுத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [சங்கு, நண்டு]
- இடைத்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன? இடையெழுத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [சார்பு, மார்பு]
- குற்றியலுகர எழுத்துக்களின் எண்ணிக்கை? 36 [6 வல்லெழுத்து, 6 வகை 6X6 = 36]
- குறுகி ஒலிக்கும் சார்பெழுத்துக்கள் எத்தனை? 6
- குறுக்கம் எனக் குறிக்கப்படும் சார்பெழுத்துக்கள் எத்தனை? 4
- ஐகாரக்குறுக்கம் என்பது யாது? ஐகாரம் தன் 2 மாத்திரையில் இருந்துக் குறுகி ஒலிப்பது.
- ஐகாரம் குறுகும் இடங்கள் யாவை? சொல்லின் முதல், இடை, கடை
- ஐகாரக்குறுக்க வகைகள் யாவை? 3
- ஐகாரம், ஔகாரம் குறுகா இடங்கள் யாவை? தன்னைக் குறிக்கும் இடத்திலும், அளபெடையிலும் குறுகாது.
- ஔகாரம் சொல்லின் எவ்விடத்தில் குறுகி ஒலிக்கும்? முதலில்
- ஔகாரக்குறுக்கம் எத்தனை வகைப்படும்? 1
- மகரக்குறுக்கம் என்பது யாது? மகரம் தன் அரை மாத்திரையில் இருந்துக் குறுகி ஒலிப்பது
- மகரம் எப்போது குறுகி ஒலிக்கும்? னகர, ணகரத்தை அடுத்து வருகையில் குறுகும்.
- மகரக்குறுக்க எத்தனை வகைப்படும்? 3
- ஆய்தம் எப்போது குறுகி ஒலிக்கும்? லகர, ளகரத்தை இறுதியாகக் கொண்ட சொற்கள் நிலை மொழியாகிப் புணர்கையில் ல், ள், ஆய்தமாகத் திரியும். அந்த ஆய்தம் கால் மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும்.
- ஆய்தக்குறுக்கம் எத்தனை வகைப்படும்? 2
- புள்ளி பெறும் மெய் அல்லாத எழுத்துக்கள் யாவை? எ, ஒ[குறில்]
- மாத்திரை என்பது யாது? ஒலி அளவைக் குறிப்பது
- உயிரளபெடையின் மாத்திரை யாது? 3
- இரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் யாவை? நெடில்
- ஒரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் யாவை? குறில், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், ஒற்றளபெடை
- அரை மாத்திரை பெறுபவை யாவை? மெய் எழுத்துக்கள், குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றாய்தம்
- கால் மாத்திரை அளவு பெறுபவை யாவை? மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம்
- மாத்திரை அளவு யாது? இமைத்தல், நொடித்தல்
- எழுத்துக்கள் மாத்திரை அளவிறந்து ஒலிக்கும் இடங்கள் யாவை? இசை, விளி [அழைத்தல்], பண்டமாற்று [பொருட்களை விற்பனை செய்கையில்]
- மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் யாவை? 12 உயிர், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங உயிர் மெய்யாக
- வகரம் எப்போது மொழி முதலில் வராது? உ, ஊ, ஒ, ஓ
- ய எவற்றோடு இணைந்து மொழி முதலில் வரும்? அ, ஆ, உ, ஊ, ஒ, ஔ
- ஞகரம் எவற்றோடு இணைந்து மொழி முதலில் வரும்? அ, ஆ, எ
- மொழி இறுதியில் வரும் எழுத்துக்கள் யாவை? 12 உயிர் தனித்தோ மெய்யோடு கூடி உயிர் மெய்யாகவோ வரும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய், குற்றியலுகரம் [24]
- அளபெடையில் மட்டும் மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துக்கள் யாவை? அ, இ, உ, எ, ஒ
- எகரம் உயிராக மட்டுமே மொழி இறுதியில் வரும்,
- க், வ்- உடன் இணைந்து மட்டும் மொழி இறுதியில் வரும் எழுத்து எது? ஔ
- மெய்யெழுத்துக்கள் இணைந்து வருவது யாது? மெய் மயக்கம்
- மெய் மயக்கம் எத்தணை வகைப்படும்? 2 [உடனிலை, வேற்று நிலை]
- உடனிலை மெய் மயக்கம் ஆகும் எழுத்துக்கள் யாவை? ர், ழ் தவிர்த்த 16 எழுத்துக்களும் தம்முடன் தாம் மயங்கும்
- வேற்றுநிலை மெய் மயக்கமாகா எழுத்துக்கள் யாவை? க், ச், த், ப்
- ங் - க் - மயங்கும்
- வ் - ய் - மயங்கும்
- ஞ் - ச், ய் - மயங்கும்
- ந் - த், ய் - மயங்கும்
- ட், ற் - க், ச், ப் - மயங்கும்
- ண், ன் - க், ச், ஞ், ப், ம், ய், வ் - மயங்கும்
- ய்,ற்,ழ் - க், த், ந், ப், ம், ச், ஞ், ய், வ், ங் - மயங்கும்
- ல், ள் - க், ச், ப், வ், ய் - மயங்கும்
- ஈரொற்று நிலை என்றால் என்ன? தனி மெய்யுடன் தனி மெய் மயங்குவது [மெய் + மெய் + மெய்]
- ய்,ர்,ழ் - க், ச், த், ப், ங், ஞ், ந், ம் மயங்கும் [வேய்க்குறை, வேர்ச்சிறை]
- போலி என்பது யாது? போல இருப்பது போலி ஆகும்
- போலி எத்தனை வகைப்படும்? 3 [நன்னூல் கூற்று அல்ல]
- போலி வகைகள் யாவை? முதல், இடை, கடை
- மகரம் போலியாகும் போது எந்த எழுத்தாகத் திரியும்? ன்
- ம் - ன் ஆகத்திரியும் இடம் யாது? சொல்லின் இறுதியில்
- எத்தகு சொற்களில் மகர ஈறு ன் ஆகத் திரியும்? அஃறிணைப் பெயர்களில்
- நன்னூல் குறிக்காத போலிகள் சில : குற்றியலுகரம் சில நேரம் அர் பெற்று முடியும் [சுரும்பு -சுரும்பர் ஆகும்] லகர ஈறு ரகர ஈறாக மாறும் [பந்தல் - பந்தர்] மொழி முதலிலும் போலி வரும் [பசல் - பைசல், மயல் - மையல்]
- மொழிக்கு இடையில் எங்கு போலி வரும்? ஐ, ய அடுத்து வரும் நகரம் ஞகரம் ஆகும் [மைந்நின்ற - மைஞ்ஞின்ற, செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற]
- அகரத்தோடு இகரம் அல்லது யகரம் சேரும் போது எப்படி ஒலிக்கும்? ஐ
- அகரத்தோடு உகரம், வகரம் சேரும் போது எப்படி ஒலிக்கும்? ஔ
- எழுத்துச் சாரியை என்பது யாது? எழுத்துக்களை உச்சரிக்க எழுத்தோடு சேர்த்து சொல்லும் சொல் சாரியை
- மெய்யெழுத்துக்களின் சாரியை யாது? கரம் [க் - ககரம்]
- நெட்டெழுத்தின் சாரியை யாது? காரம் [ஆ- ஆகாரம்]
- காரமும், கான் -உம் பெறும் உயிர் எழுத்துக்கள் யாவை? ஐ, ஔ
- உயிர்க் குறிலுக்கான சாரியைகள் யாவை? கரம், கான்
- உயிர் மெய் பெறும் சாரியைகள் யாவை? கரம், காரம், கான்
- எழுத்துக்கள் இணைந்து சொல்லாக மாறினாலும் எழுத்து தன் இயல்பில் இருந்து மாறாது.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 11 அக்டோபர், 2020
நன்னூல் எழுத்ததிகாரம்- எழுத்தியல்
நன்னூல் - பாயிரம்
- நன்னூல் எழுத்ததிகாரத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 5
- எழுத்ததிகார இயல்கள் யாவை? எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல்
- நன்னூல் ஆசிரியர் யார்? பவணந்தி / பவணந்தி முனிவர்
- பவணந்தி முனிவர் தந்தைப் பெயர்? அனுமதி
- பவணந்தி முனிவரின் சமயம்? சமயம்
- பவணந்தி முனிவரின் ஊர்? சனகை, சனகாபுரம் (மைசூர்)
- நன்னூலைச் தெரிவித்தவர்? சீயகங்கன்
- நன்னூலுக்கு முதன் முதலில் உரை செய்தவர் யார்? மயிலை நாதர்
- நன்னூலுக்கு விருத்தி உரை செய்தோர்? மயிலை நாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞான முனிவர்
- நன்னூலுக்கு கண்டிகை உரை செய்தவர்? ஆறுமுக நாவலர்
- நன்னூலின் காலம்? 12 ஆம் நூற்
- நன்னூல் நூற்பா எண்ணிக்கை? 462
- பவணந்தியின் சிறப்புப் பெயர்? பல்கலைக் குரிசில்
- நன்னூல் கடவுள் வாழ்த்து எந்தக் கடவுளுக்கு இயற்றப்பட்டது? அருகக் கடவுள்
- நன்னூல் கூறும் பாயிர வகைகள்?2 (பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம்)
- பாயிரத்திற்கான பெயர்கள் எத்தனை? 7
- பாயிரப் பெயர்கள் யாவை? முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, புனைந்துரை, தந்துரை
- பாயிரத்தில் கூறப்படும் வரலாறு? நூல் வரலாறு, ஆசிரியர் , நூல் கற்பித்தல் , மாணாக்கர் வரலாறு, நூல் கற்றலின் வரலாறு
- நூல் வகைகள் எத்தனை? 3 (முதல் நூல், வழி நூல், சார்பு நூல்
- சார்பு நூலின் வேறு பெயர்? புடை நூல்
- முதல் நூல் என்றால் என்ன? இறைவன் அல்லது இறை அருள பெற்ற சான்றோர் படைப்பது
- வழி நூல் என்றால் என்ன? முதல் நூலை அடியொற்றி எழுதப்படுவது.
- சார்பு நூல் என்பது என்ன? முதல் நூல், வழி நூல் இரண்டையும் சார்ந்து, இரண்டிலிருந்தும் பல வகையில் முரண்பட்டு இருப்பது.
- நூல் பயன் யாவை? அறம், பொருள், இன்பம், வீடு
- நன்னூல் பாயிரம் மதம் எனக் குறிப்பது? மதம்
- மதங்கள் எத்தனை? 7
- பாயிரம் குறிப்பிடும் நூற் குற்றங்கள் எத்தனை? 10
- நூலுக்கான அழகுகள் எத்தனை? 10
- உத்திகள் எத்தனை? 32
- நூலின் உறுப்புகள் எத்தனை? 2
- நூலின் உறுப்புகள் யாவை? ஓத்து, படலம்
- ஓத்து என்பது யாது? ஒரே இன மணியை அடுக்கி வைத்தது போல ஒரே பொருன்மை சார்ந்தவற்றை அடுக்கிச் சொல்வது.
- படலம் என்றால் யாது? ஒரே பொருண்மையாக அன்றி மாறுபட்ட செய்திகளைத் தொகுத்தளிப்பது.
- சூத்திரம் என்பது யாது? சில்வகை எழுத்தால் பல்வகைப் பொருளை அடுக்கி இனிதாகத் தருவது.
- சூத்திரத்திற்கு நன்னூலார் தரும் உவமை யாது? கண்ணாடி
- சூத்திர நிலை எப்படி இருக்கவேண்டும்? ஆற்றொழுக்கு, சிங்கத்தின் பார்வை, தவளைப் பாய்ச்சல், இரை நோக்கிப் பாயும் பருந்து போல இருக்க வேண்டும்.
- சூத்திரம் எத்தனை வகைப்படும்? 6
- சூத்திர வகைகள் யாவை? பிண்டச் சூத்திரம், தொகைச் சூத்திரம், வகைச் சூத்திரம், குறிச் சூத்திரம், செய்கைச் சூத்திரம், புறனடைச் சூத்திரம்
- நூலுக்கான உரை எத்தனை வகையாக உரைக்கப்படும்? 14
- உரை வகைகள் யாவை? காண்டிகை உரை, விருத்தி உரை
- காண்டிகை உரை உறுப்புகள் யாவை ? கருத்துரை, பதவுரை, சான்று, வினா விடையோடு ஐந்தும் காண்டிகை உரை உறுப்புகள் (இது ஐங்காண்டிகை எனப்படும். ஆறுமுக நாவலர் செய்த உரை)
- முக்காண்டிகை உரை என்றால் என்ன? கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு மட்டும் அமைந்த உரை. (மயிலை நாதர் செய்த உரை)
- காண்டிகை உரை என்பது யாது? சுருங்கச் சொல்வது.
- விருத்தி உரை என்பது யாது? மெய்ப்பொருளை விரித்துரைப்பது.
- நூலுக்கான பெயர்க்காரணம் யாது? சொல் பஞ்சாக, செய்யுள் இழையாக புலவன் நூற்கும் பெண், வாய் கையாக , அறிவு கதிராகக் கூடி உருவாக்கப்பட்டது.
- ஆசிரியர் பொருள்? ஆசு- குற்றம், இரிதல்- நீக்குதல் (குற்றத்தை நீக்குபவர்)
- ஆசிரியனுக்கு அளிக்கப்படும் பிற பெயர்கள்? நுவல்வோன், சொல்லுவோன்
- நல்லாசிரியருக்குக் கூறப்படும் உவமைகள் யாவை? நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர்
- ஆசிரியர் ஆகாதவருக்குத் தரப்பட்டுள்ள உவமைகள் யாவை? கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு
- மாணாக்கர் (மாணவர்கள்) வகைகள் எத்தனை? 3 தலை மாணாக்கர், இடை மாணாக்கர், கடை மாணாக்கர்
- தலை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்? அன்னம், பசு(ஆ)
- இடை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்? மண், கிளி
- கடை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்?ஓட்டைக் குடம், ஆடு, எருமை, பன்னாடை
- ஆசிரியர் மாணவர் உறவு எதைப் போன்று இருக்க வேண்டும்? தீக்காய்வார் போல.
- நூலுக்குப் பெயரிடுதல் எத்தனை வகைப்படும் ? 8 (படைப்பார் (ஆக்கியோன்) பெயர், நூல் வந்த வழி, நூல் படைக்கப்பட்ட இடம் (எல்லை), நூலின் பெயர், யாப்பு, நூலின் பொருண்மை , கேட்போர், நூலால் விளையும் பயன்)
- நூலுக்கான பெயரிடலுக்குக் பிற காரணம்? காலம், நூல் அரங்கேறிய இடம்(களம்), காரணம், முதல் நூல், பெரும்பாண்மையாகப் பேசப்பட்ட செய்செய்வித்தோன் (நூல் உருவாகப் பொருளுதவி செய்த புரவலன்), நூலின் தன்மை, நிமித்தம், இடுகுறி
- ஆக்கியோன் பெயரால் பெயர் பெற்ற நூல் - தொல்காப்பியம்
- அளவால் பெயர் பெற்ற நூல் - நாலடியார், அகநானூறு, திணை மொழி ஐம்பது
- முதல் நூலால் பெயர் பெற்ற நூல் - பாரதம், இராமாயணம்
- மிகுதிப் பொருளால் பெயர் பெற்ற நூல் - களவியல், இன்னா நாற்பது
- பொருளால் பெயர் பெற்ற நூல்- நம்பி அப்பொருள், புறப்பொருள் வெண்பா மாலை
- செய்வித்தோன் பெயரால் பெயரிடப்பட்ட நூல் - வீரசோழியம்
- நூலின் தன்மையால் பெயர் பெற்ற நூல் - நற்றிணை, நன்னூல்
- இடத்தால் பெயர் பெற்ற நூல்- களவழி நாற்பது
- காலத்தால் பெயர் பெற்ற நூல்- கார் நாற்பது
- நூல் இயற்றியவரின் ஆசிரியர் பெயரால் பெயர் பெற்ற நூல் - நேமிநாதம்
- உவமையால் பெயர் பெற்ற நூல் - திரிகடுகம்
- பாடல் முதல் வரியால் பெயர் பெற்ற நூல் - ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்
- யாப்பால் பெயர் பெற்ற நூல்- திருக்குறள், புறப்பொருள் வெண்பா மாலை
- வழி நூலின் வகைகள் எத்தனை? (தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழி பெயர்ப்பு)
- பாயிரம் இயற்றுதலுக்கு உரியோர்? படைப்பாளியின் ஆசிரியர், உடன் கற்றவர், மாணவர், உரையாசிரியர்
- தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள் எத்தனை ?4
- பாயிரத்தின் சிறப்பிற்குச் சுட்டப்படும் உவமைகள் யாவை? (3) மாளிகைக்குச் சித்திரம் போல, மாநகரத்திற்குக் கோபுரம் போல, நல்ல பெண் அணியும் நகைகள் போல நூலுக்குப் பாயிரம்
- பாயிரத்தின் இன்றியமையாமையை உணர்த்தும் வரி? "ஆயிரம் முகத்தால் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவலன்றே "
- நன்னூல் கடவுள் வணக்கம் - "பூமலி யசோகின் புனை நிழல் அமர்ந்த நான் முகற் தொழுது நன்கியம்புவனெழுந்தே "
தொல்காப்பிய எழுத்ததிகாரம் - மொழி மரபு
1) மகரத்தை அடுத்து யகரம் வர நிகழ்வது ?
குற்றியலிகரம்
2) தனி சொல்லில் மட்டுமன்றி இரு சொற்கள் இணைகையில் உகரத்தை ஊர்ந்து ‘ய’ வர குற்றியலிகரம் ஆகும்.
3) தனி நெட்டெழுத்து, தொடர் மொழியை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்து வரும் உகரம் எவ்வாறு ஒலிக்கும் ?
குற்றியலுகரம்
4) தொடர் மொழியிலும் இடையில் வரும் உகரம் குறுகி ஒலிக்கும்
5) ஒருமொழி ஆய்தம் எவ்வாறு வரும்?
குறியின் பின்னும் உயிர் மெய்யின் பின்னும் வரும்
6) ஒருமொழி ஆய்தத்திற்குச் சான்று ?
அஃது
7) புணர் மொழி ஆய்தத்திற்குச் சான்று ?
அல் + திணை - அஃறிணை
8) மொழிக் குறிப்பு அல்லது குறிப்பு மொழி ஆய்தம் என்பது ?
ஒலிக் குறிப்பால் பொருள் தரும் மொழி
9) மொழிக் குறிப்பு ஆய்தம் எங்கு வரும் ?
நிறம், ஓசையைக் குறிக்கும் சூழலில்
10) நிறத்தால் வரும் குறிப்பு மொழி ஆய்தத்திற்குச் சான்று ?
கஃறென்னும் கல்லதர
11) ஓசையால் வரும் குறிப்பு மொழி ஆய்தத்திற்குச் சான்று ?
கஃறென்னும் தண்தோட்டுப் பெண்ணை
12) உயிரளபெடையில் நெட்டெழுத்து எவ்வாறு அமையும் ?
தன் இன எழுத்தோடு சேர்த்து எழுதப்படும்.
13) ஐ,ஔ அளபெடுக்கையில் இசை நிறைவிட்டவை யாவை ?
இ,உ (ஐ-இ, ஔ-உ)
14) ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் எழுத்துக்கள் யாவை ?
நெட்டெழுத்து ஏழு
15) ‘‘குற்றெழுத்தைந்தும் மொழி நிறைபிலயே’’ - ‘மொழி நிறைவு’ என்பது தனிமொழி [சொல்]
16) தனிமொழியாகும் குறில் எழுத்துக்கள் ?
(நொ - நொந்து போ, து-உண்ணுதல்)
17) மொழி வகைகளாகத் தொல்காப்பியர் குறிப்பது ?
3(ஓரெழுத்து ஒரு மொழி, ஈரெழுத்து ஒரு மொழி, தொடர் மொழி)
18) தனி மெய் எவ்வாறு ஒலிக்கப்படும் ?
அகரத்தோடு இணைத்து (க்-ககரம்)
19) ய,ர,ழ உடன் இணையும் எவை ஈரொற்றாகும்?
க,ச,த,ப,ங,ஞ,ந,ம
20) எவை ஈரொற்றாகா ?
தனிக்குறிலை அடுத்து வரும் ர,ழ ஈரொற்று ஆகாது (இரு குறிலை அடுத்து வரும்)
21) ன்,ம் எங்கு ஈரொற்றாகும் ?
போலும் - போன்ம் என்றாகும் போது
22) மகரம் எங்கு குறுகும் ஈரொற்றாக னகரத்தை அடுத்து வரும் ம குறுகும்
(போன்ம் என்பதில்)
23) அகரம் இகரம் சேர்ந்து வந்தால் எதனை ஒத்திசைக்கும்?
ஐ
24) அ,உ இணைய எத்தகு ஒலி பெற்றிசைக்கும் ?
ஔ
25) அகரத்தை அடுத்து யகர ஒற்று வர எவ்வாறு ஒலிக்கும் (அய்) ?
ஐ
26) குறுகி ஒலிக்கும் உயிர்கள் யாவை ?
ஐ, ஔ
27) மொழி முதலில் வரும் உயிர்கள் யாவை ?
12 உயிரும் மொழி முதலாகும்
28) எவை மொழி முதலாகா மெய் எழுத்துக்கள்? உயிர்மெய் அல்லன
29) எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதலாக வரும் மெய்கள் யாவை ?
க,த,ந,ப,ம
30) சகர மெய் எவற்றோடு இணைந்து மொழி முதலாகா ?
அ,ஐ,ஔ
31) வகர மெய் எவற்றோடு இணைந்து மொழி முதலாகா ?
உ,ஊ,ஒ,ஓ
32) நகர மெய் எவற்றுடன் இணைந்து மொழி முதலாகும் ?
ஆ,எ,ஒ
33) யகர மெய் எந்த உயிருடன் இணைந்து மொழி முதலாகும் ?
ஆ
34) எந்த மெல்லெழுத்தோடு இணையும் உகரம் குற்றியலுகரம் ஆகும் ?
நகரம் (ந்) [நுந்தை]
35) ஒரே சொல் குற்றியலுகரமாகவும் முற்றியலுகரமாகவும் வரும் போது நிகழ்வது யாது?
பொருள் மாறுபடும் கட்டு என்பது தனித்து வரும்போது முற்றியலுகரம். அது ஒரு பொருளை இணைத்துக் கட்டு என்னும் ஏவல் பொருளில் வரும். அதுவே ‘கட்டு உள்ளது’ என்னும் பொது குற்றியலுகரம். அது பொருள்கள் இணைத்துக் கட்டப்பட்ட கட்டு எனும் பொருளில் வரும்.
36) மொழி இறுதியில் வாரா உயிர் எழுத்து யாது ?
ஔ
37) மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துக்கள் எத்தனை ?
11
38) ஔ மொழி இறுதியில் வரும் இடம் யாது ?
க்,வ் உடன் இணைந்து (ஏவல்) பொருளில் வரும் பொழுது (கௌவு, வௌவு, கௌ, வௌ என ஏவல் பொருளில் வருகையில்.
39) எ எப்போது மொழி இறுதியில் வரும் ?
அளபெடையில் மட்டும் வரும்
40) ஒகரம் எதனோடு இணைந்து மொழி இறுதியில் வரும் ?
நகர மெய்யுடன்
41) ஞகரத்துடன் கூடிய எவ்வுயிர்கள் மொழி வாராது ?
ஒ, ஓ
42) சகரத்துடன் இணைந்த உகரம் மொழி இறுதியில் வரும் இடங்கள் யாவை ?
உசு, முசு (பசுவிற்கால சொல்)
43) பகரத்தோடு இணைந்த உகரம் மொழி இறுதியில் வரும் இடங்கள் ?
தபு
44) தன் வினை பிற வினை இரண்டு பொருளும் தரும் ஒரே சொல் எது ?
தபு (தன்னை அழி, பிறரை அழியச் செய்)
45) ஞகரம் எங்கு மொழி இறுதியாகும் ?
உரிஞ் (உரிஞ்சுதல்) என்ற
46) வகர ஒற்று எங்கு மொழி இறுதியாகும் ?
அவ், இவ், உவ் என்னும் சுட்டுக்கள், தெவ் (பகை)
47) மொழி, இறுதி மகரம் னகரமாவது எவ்வாறு சுட்டப்படும் ?
போலி
48) னகரம் மகரமாய் மாறா போலி சொற்கள் எத்தனை ?
9
49) மொழி இறுதியில் மகரம் னகரமாகும் சொற்கள் யாவை ?
அறன், மறன்
50) னகரம் மகரமாய் மாறாத சொற்கள் யாவை ?
பயின், அழன், குயின், செகின், விழின், புழன், வயான், கடான்.
தொல்காப்பிய எழுத்ததிகாரம் - நூன் மரபு
1) தொல்காப்பியர் குறிப்பிடும் [முதல்] எழுத்துக்கள் எத்தனை ?
30
2) முதல் எழுத்தை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ?
‘ எழுத்து
3) சார்பெழுத்துக்கள் எத்தனை என தொல்காப்பியர் கூறுகிறார் ?
3
4) தொல்காப்பியர் மொத்த எழுத்துக்களாகக் குறிப்பவை ?
33
5) சார்பெழுத்துக்கள் யாவை ?
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்
6) ஆய்தத்தை எவ்வாறு குறிக்கிறார்?
முப்பாற்புள்ளி
7) சார்பெழுத்தை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார்?
எழுத்தோரன்ன (எழுத்தைப் போன்றது)
8) குறில் எழுத்தைத் தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ?
குற்றெழுத்து
9) குற்றெழுத்துக்கள் எத்தனை ?
5 (அ, இ, உ, எ, ஒ)
10) குற்றெழுத்தின் மாத்திரை எத்தனை ?
ஓரளபு [1 மாத்திரை]
11) தொல்காப்பியர் மாத்திரையை எவ்வாறு குறிக்கிறார் ?
அளபு
12) நெடில் எழுத்துக்களை எவ்வாறு அழைக்கின்றார் ?
நெட்டெழுத்து
13) நெட்டெழுத்துக்கள் எத்தனை ?
7 (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)
14) நெட்டெழுத்தின் மாத்திரை அளவு ?
ஈரளபு
15) 3 மாத்திரை கொண்ட ஓரெழுத்து இல்லை என தொல்காப்பியர் கூறுகிறார்.
16) இரண்டிற்கும் மேல் கூட்டி ஒலிக்க விரும்பினால் என்ன செய்யக் கூறுகிறார் தொல்காப்பியர் ?
கூடுதலாக கூட்டி எழுத வேண்டும்.
17) ஒரு மாத்திரை அளவு யாது ?
கண் இமை, நொடி
18) அ - ஔ வரை உள்ள 12 எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
உயிர்
19) மெய்யெழுத்துக்கள் எத்தனை ?
18
20) உயிர் மெய்யோடு இயைகையில் நிகழ்வது ?
உயிர் தன் இயல்பினின்று திரியாது
21) மெய்யெழுத்தின் அளவு யாது ?
அரை மாத்திரை
22) அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே ஏனை 3 என்பது யாது ?
சார்பெழுத்துக்கள் (குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்)
23) தொல்காப்பியம் கூறும் சார்பெழுத்தின் அளவு யாது ?
½ மாத்திரை
24) அரை அளவை விடக் குறைந்த அளவுடைய எழுத்து எது ?
மகர மெய்
25) மகர மெய் எச்சூழலில் அளவு குறைந்து ஒலிக்கும் ?
செய்யுளில் ஓசை குறைந்து வரும் ஒலி நெருக்கடியில்.
26) தொல்காப்பியர் இசையிடன் அருகும் எனக் குறிப்பது ?
ஓசை கருதி வரும் இச்சூழல் [ஓசை குறைந்து வருகையில் நிறைவிக்க]
27) மகரம் குறுகுகையில் - அது எவ்வாறு எழுதப்படும் என தொல்காப்பியா; கூறுகிறார் உட்பெறு புள்ளி உருவாகும்’’
(மகரத்திற்குள் ஒரு மெய் எழுதப்படும் - பழைய கால மரபு)
28) மெய்யெழுத்தின் இயற்கை எனத் தொல்காப்பியர் கூறுவது ?
புள்ளியொடு நிலையில் (புள்ளி பெற்று வருதல்)
29) தொல்காப்பியம் குறிப்பிடும் புள்ளி பெற்று வரும் மெய் அல்லாத எழுத்துக்கள் யாவை ?
எ, ஒ (பழங்கால வழக்கு)
30) உயிர் மெய்யின் ஒலிப்பு எவ்வாறு அமையும் ?
மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னும் வரும்
31) வல்லெழுத்து என்பது - கசடதபற (6)
32) மெல்லெழுத்து என்பது - ஙஞணநமன (6)
33) இடையெழுத்து என்பது - யரலவழள (6)
34) மெய்மயக்கம் எத்தனை வகைப்படும் ?
2 (உடனிலை மெய் மயக்கம், வேற்று நிலை மெய்மயக்கம்)
35) உடனிலை மெய் மயக்கம் என்பது ?
ஒரே மெய் அடுத்தடுத்து வருவது (கண்ணம்)
36) உடனிலை மெய் மயக்க வேறு பெயர் ?
ஓரொற்று உடனிலை
37) நிலை மெய்மயக்கம் என்பது ?
இரு வேறு மெய் இணைந்து வருவது (சான்று)
38) ட, ற, ல, ள எவற்றுடன் மயங்குபவை ?
க, ச, ப
39) ல, ள உடன் மயங்குபவை யாவை ?
ய,வ
40) மெல்லெழுத்துக்களோடு மயங்கும் எழுத்துக்கள் யாவை ?
அவற்றோடு ஒத்த இன எழுத்துக்களாம் வல்லெழுத்துக்கள்
41) ண, ன முன் மயங்கும் எழுத்துக்கள் ?
க,ச,ஞ,ப,ம,ய,வ (7)
42) ஞ,ந,ம,வ உடன் இணையும் மெய் ?
ய்
43) மகர மெய்யோடு மயங்கும் எழுத்து யாது ?
வ்
44) ய,ர,ழ உடன் இணையும் எழுத்துக்கள் யாவை? மொழி முதலாகும் எழுத்துக்கள், ங்
45) தம்முடன் தாம் இணையா எழுத்துக்கள் யாவை ?
ர, ழ
46) சுட்டெழுத்துக்கள் எத்தனை ?
3 (அ, இ, உ)
47) வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள் எத்தனை ?
3 (ஆ, ஏ, ஓ)
48) அளபெடையைத் தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ?
அளபறிந்து உயிர்த்தல், ஒற்றிசை நீடல்
49) உயிரும் ஒற்றும் எதன் பொருட்டு அளபெடுக்கும் ?
இசையின் பொருட்டு
50) இசையுடன் சிவனிய நரம்பின் மறைய எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது ?
இசைக்கலை நூல்கள்
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...