சாமிநாதன் சொன்னவையெல்லாம் உபகாரத்தின் மனதில் இடி இறக்குபவையாக இருந்தன. அதிலும் இறுதியில் சொன்ன விஷயத்தை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு பொண்ணு எப்புடி இம்புட்டுத் தின்னக்கமா இருப்பா? ஆத்தே வேசமா இருக்காளே இந்தப்பாவி. எப்புடி அவளால இப்புடி யோசிக்க முடுஞ்சுச்சு. அவ மனுசப் பிறவி தானா இல்ல... இப்படி தனக்குள் புலம்பிக்கொண்டே நடந்தாள் உபகாரம். அந்த சீனி பற்றி நினைத்தாலே நெஞ்செல்லாம் பயமும், கோமட்டலும் கலந்த ஒரு உணர்வு தன் உடல் எங்கும் பரவுவதை உணர்ந்தாள். ஆம் சீனி அந்த சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அனைவரும் அஞ்சும் கொடூர அரக்கன். அந்தப் பகுதியில் உள்ள பெரிய பஞ்சாயத்து அனைத்திலும் அவன் மேல் பிறாது உண்டு. ஆனால் அவன் எந்தப் பஞ்சாயத்து கூட்டினாலும் போக மாட்டான். யாருக்கும் அஞ்ச மாட்டான். தொடக்கத்தில் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபட்டவன் பின் பெரிய கொள்ளைக்காரன். அதி காலையிலும், இரவிலும் வியாபாரத்துக்கு போகிறவர்கள் யாராய் இருந்தாலும் மடக்கிப் பிடித்து உள்ளது அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு விரட்டுவான். தர மறுத்ததால் அவ்வளவுதான் உயிரைக் குடித்தது விடுவான். எந்த பாவததிற்கும் அஞ்சாதவன்.
கொள்ளையடித்த பணத்தில் வட்டிக்கு வேறு விடுவான். வறுமையின் பிடியில் உள்ளோர், நெருக்கடியில் உள்ளோரைத் தேடி சென்று கடன் கொடுத்து திருப்பித் தர இயாலதவர்களை தான் அடிமையாக்கி அவர்கள் வீட்டில் உள்ள பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொள்வான். இதுவரை எட்டு பெண்களை திருமணம் செய்து உள்ளான். அத்தனை பெண்களும் தற்கொலை செய்து இறந்து விட்டதாக கூறுவாரகள். கடந்த மாதம் எட்டாவது மனைவியும் இறந்த செய்தியை பக்கத்து வீட்டு ராக்கி வந்து "ஆத்தா சேதி தெரியுமா? அந்த ஆனந்தூரு சீனிப்பய இருக்காங்களா. அதான் அந்தக் கொள்ளக்காரச் சண்டியன். அவன் எட்டாவது கட்டுன பொண்டும் நாண்டுக்குட்டு செத்துப் போச்சாம். எந்த்தா அவம் பொஞ்சாதிக மட்டும் இப்பிடி நாண்டுக்குட்டே பொராலுக எனக் கேட்கையில் , "அடி யாருடி இவ ஒரு கிருக்கச்சியாட்டம் கேள்வி கேட்டுகிட்டு, அவளுகளாவா சாகுறாளுக. இவனுக்குப் புது மாப்பிள்ளையாக பவுசி வந்துச்சுன்னா இருக்கவளத் தூக்கி தொங்க விட்டுருறான். பொம்பள உசுரு அப்புடி சல்லிசாப் போச்சு இவனுக்கு." என சொன்னதை நினைத்துக்கொண்டாள். அவ்வளவு மோசமானவன். 50 வயதாகும் அவன் இப்போதெல்லாம் கொள்ளை அடிப்பது இல்லை. வட்டிக்கு விடுவது மட்டும் செய்கிறான். கூடாத பழக்கமெல்லாம் வைத்து இப்போது வராத நோயெல்லாம் வந்து ஒரு சீக்க்காலியாக வாழ்கிறான். அப்படிப்பட்ட சீனிக்கு அருளைக் கட்டி வைக்க எப்படிதான் அவளுக்கு மனம் வந்தது? எனப் புலம்பிக்கொண்டு ஓர் வந்து சேர்ந்தாள் உபகாரம்.
எப்போதும் கோவிலுக்கு சென்று வந்ததும் தன்னை வந்து பார்க்கும் உபகாரம் இன்று தன்னைக் கண்டு கொள்ளாமல் குடிசைக்குள் நுழைவதை பார்த்துக்கொண்டு இருந்த அருளு வேகமாக ஓடி, "அப்பாயி என்ன என்னயப் பாத்தும் பாக்காத மாதிரிப் போற. நீ வழக்கமா மக்கானாளைக்குத்தான் வருவ இன்னைக்கென்ன அதுக்குள்ள வந்துட்டா? வண்டி கட்டிப் போனவுக கூட இன்னும் வரக்கானாம். நீ முந்தீட்டு வந்துட்டா. திருவிழா முடுஞ்சுடுச்சா? அட நான் பேசிட்டே இருக்கேன் நீ ஏன் மூச்சு விடமாட்டுற. வாய்க்குள்ள கொழுக்கட்டகானும் வச்சு இருக்கியா? அட பேசுத் தா." இப்படி அவளிடம் பேச முயன்ற அருளு, "போட்டது பொட்ட மெனிக்குக் கேட்க்கு. உனக்கு என்ன அங்க கத வேண்டியிருக்கு.? வாடி கழுத. மதினி குரல் கேட்டதும் மின்னலென ஓடி மறைந்தாள் அருளு. அவள் போனபின் அவள் நின்றிருந்த இடததையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் உபகாரம்.
"இந்தக் கிறுக்கோலிக் கழுத ஏன் இப்புடி பயந்து சாவுது அவளுக்கு? அவ என்ன அம்புட்டுப் பெரிய மனுசியா? சரி முன்னால தான் மாடாட்டம் உழச்சு, ஓடாட்டம் தேஞ்சுச்சு இப்பவாச்சும் சத்த நிம்மதியா ஒக்காரளாம்ல.இப்புடிக் கடந்து சீப்படுதே. இவதான் சத்த உடுறாளா? சரி இப்ப கூப்புடு கொறளுக்கு ஓட இந்த அருளுக் குட்டி இருக்கு. இன்னும் இன்னையோட ஏழு நாள்தான். அவ கண்ணாலங்கட்டி போய்ட்டாண்டா இவ என்ன பன்னுவா? எப்புடி வேலை வெட்டிப் பார்த்து மாடுகன்னு மேச்சு, இவ அசைய மாட்டாளே? அவ போன மக்கானாத்து தான் இருக்குடி உங்கத. " என சிந்தித்துக்கொண்டே மாட்டுக்குத் தண்ணிகாட்டிக்கொண்டிருந்த அருளை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் உபகாரம்.
-------- தொடரும் ----------------