இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 செப்டம்பர், 2020

சங்க இலக்கிய வினாடி வினா - 3: பத்துப்பாட்டு [ஆற்றுப்படை]

  1. ஆற்றுப்படை இலக்கணம் கூறும் நூல் ? தொல்காப்பியம் [பு.திணையியல்]
  2. அற்றுப்படுத்துவோர் யார் யார்? கூத்தர், பாணர், பொருநர், விறலி
  3. ஆற்றுப்படையில் மிக நீண்ட நூல் எது? மலைபடுகடாம் [ 583]
  4. ஆற்றுப்படையில் சிறிய நூல் எது? பொருநராற்றுப்படை [248]
  5. ஆற்றுப்படையின் [பத்துப்பாட்டின்] கடவுள் வாழ்த்து? முருகாற்றுப்படை
  6. திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
  7. திருமுருகாற்றுப்படையின் அடிகள் எத்தனை? 317
  8. திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்? முருகு, புலவராற்றுப்படை
  9. அற்றுப்படுத்தப்படும் தலைவனின் பெயரால் அமைந்த நூல் எது? திருமுருகாற்றுப்படை
  10. பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள பத்துப்பாட்டு நூல் எது? திருமுருகாற்றுப்படை
  11. திருமுருகாற்றுப்படையின் தலைவன் யார்? முருகன்
  12. திருமுருகாற்றுப்படை உருவானது குறித்த செவிவழி செய்தி யாது? நக்கீரரைப் புடைத்துத் திண்ண கற்கிமுகி பூதம் சிறைவைக்க அதனிடமிருந்து காக்க முருகனிடம் வேண்டுவது.
  13. ஒருவரைப்போல வேடமிட்டுப் பாடும் கலைஞர் யார்? பொருநர்
  14. பொருநர்கள் எத்தனை வகைப்படுவர்? 2[ஏர்க்களம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர்]
  15. பரணி பாடும் கலைஞர் யார்? பொருநர்
  16. பொருநராற்றுப்படையில் குறிக்கப்படும் புலவர்கள் எவற்றைப் பாடுவர்? போர்க்களம் பாடும் பொருநர்
  17. பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? கரிகாற்பெருவளத்தான்
  18. பொருநராற்றுப்படையின் ஆசிரியர் யார்? முடத்தாமக்கண்ணியார்
  19. பொருநராற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 248
  20. ஆசிரியப்பாவோடு வஞ்சியடிகளும் விரவப்பெற்ற ஆற்றுப்படை நூல் எது? பொருநராற்றுப்படை
  21. பொருநராற்ருப்படையில் எந்தப் போரின் வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? வெண்ணிப் போர்
  22. தாய்வயிற்றில் இருக்கும்போதே அரசு ஏறிய மன்னன் யார்? கரிகால் பெருவளத்தான்
  23. பொருநராற்றுப்படையில் பெண்ணின் பாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள உவமை யாது? ஓடிக்கலைத்த நாயின் நாக்கு
  24. சிறுபாணாற்றுப்படையின்  பாட்டுடைத் தலைவன் யார்? ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
  25. சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் யார்?  நல்லூர் நத்தத்தனார்
  26. சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 269
  27. பண் பாடுவோ எவ்வாறு அழைக்கப்படுவர்? பாணர்
  28. பாணார் எத்தனை வகைப்படுவர்? 3 [இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்]
  29. யாழ்ப்பாணர் எத்தனை வகைப்படுவர்? 2[பேரியாழ்ப் பாணர், சிறிய யாழ்ப்பாணர்]
  30. சிறுபாணாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படும் பாணர்? சிறுபாண்ர்
  31. கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம் பாடும் ஆற்றுப்படை எது? சிறுபாணாற்றுப்படை
  32. சிறுபாணாற்றுப்படையில் இடம்பெரும் ஊர்கள்? வஞ்சி, உறையூர், மதுரை, ஆமூர், வேலூர், மாவிலங்கை
  33. இமயமலையில் வில் பொறித்த குட்டுவன் வரலாறு கூறும் நூல் எது?  சிறுபாணாற்றுப்படை
  34. "தமிழ்னிலை பெற்ற தாங்கரும் மரபின்                                                                       மகிழ்நனை மறுகின் மதுரை" - என மதுரையைப் போற்றும் நூல்? சிறுபாணாற்றுப்படை
  35. பெரும்பாணற்றுப்படையின் ஆசிரியர் யார்?  கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  36. பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் யார்? இளந்திரையன்
  37. பெரும்பாணற்றுப்படை எத்தனை அடிகள் கொண்டது? 500
  38. ஐந்நில மக்களின் இயல்பு, விருந்தோம்பல் பேசும் நூல்? பெரும்பாணாறு
  39. கலங்கரை விளக்கம் குறித்து பேசும் ஆற்றுபடை நூல் யாது? பெரும்பாணாற்றுப்படை [ நீர்ப்பாயல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது]
  40. பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படும் ஊர்? காஞ்சி
  41. மலைபடுகடாமின் ஆசிரியர் யார்? பெருங்குன்றூர் கௌசிகனார்
  42. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்? நன்னன்
  43. மலைபடுகடாமின் பாடல் அடிகள் எத்தனை? 583
  44. மலைபடுகடாமில் ஆற்றுப்படுத்தப் படும் கலைஞர்? கூத்தர்
  45. மலைபடுகடாமின் வேறு பெயர்? கூத்தராற்றுப்படை
  46. மலைபடுகடாம் என பெயர் வரக்காரணம்? மலையில் எழும் ஓசைகளைப் பாடுவதால்
  47. மலைபடுகடாமில் மலையும், அருவியும் எதனால் உவமிக்கப்படுகிறது? மலை - யானை, அருவி - யானையின் மதநீர்
  48. கடாம் என்பதன் பொருள் என்ன? ஓசை
  49. மலைபடுகடாமில் எத்தனை வகையான ஓசைச் சுட்டப்படுகிறது? 20
  50. இசை மருத்துவம் பற்றிக் கூறும் ஆற்றுப்படை நூல் எது? மலைபடுகடாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...