- அரசன் கோ என்று அழைக்கப்பட்டான்.
- இளவரசன் எவ்வாறு அழைக்கப்பட்டான்? இளங்கோ
- நிலையான புகழைப் பெற்ற மன்னன் அரசன் அழைக்கப்பட்டான்? மன்னன்
- உயர்ந்த நிலையை எட்டியவனை எவ்வாறு அழைத்தனர்? வேந்தன்
- பல வெற்றிகளைப் பெற்றுக் குறுநில மன்னர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவன் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கொற்றவன்
- பேரரசனுக்கு ஒப்பானவன் யார்? கொற்றவன்
- மன்னனின் ஆட்சியாண்டு அவ்வாறு கணக்கிடப்படுகிறது? மன்னன் முடிசூட்டிய நாளிலிருந்து
- மன்னனுக்குரிய சிறப்புச் சின்னங்கள் யாவை? முடி, கொடி, வெண் கொற்றக்குடை, முரசு
- சங்ககாலத்தில் எத்தகைய வாரிசுமுறை பின்பற்றப்பட்டது? தந்தை வழித் தாய முறை
- இளம்வயதில் அரசாட்சி பெற்ற மன்னர்கள் - கரிகாற் சோழன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்
- சங்ககால நிர்வாகத் தலைமையகம் எது? அரசவை
- அரசவையின் வேறு பெயர்கள் யாவை? இருக்கை, ஓலக்கம், வேந்தவை
- அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?ஆலோசகர்கள், காவிதிமாக்கள்
- அரசர்கள் கலந்தாலோசிக்க இருந்த குழுக்கள் யாவை? எண்பேராயம், ஐம்பேராயம்
- எண்பேராய உறுப்பினர்கள் யாவர்? காரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவோர்.
- ஐம்பேராயத்தில் இடம்பெற்றோர் யாவர்? அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர்
- அரசின் பெருங்கணக்கர் கரணத்தியலவர் எனப்பட்டனர்
- அரசின் பொருட்களைப் பாதுகாப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கனகச்சுற்றம்
- நாட்டைக்காவல் செய்யும் காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கடைக்காப்பாளர்
- குதிரைப்படையின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? இவுளிமறவோர்
- நாட்டின் முழு அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? மண்டலம்
- நாட்டின் உட்பிரிவு [பகுப்பு] எவ்வாறு அழைக்கப்பட்டது? கோட்டம்
- கோட்டங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன? கூற்றங்கள் [கோட்டமே கூற்றம் என்றும் கூறுவர்]
- கூற்று ஊராகப் பகுக்கப்பட்டது.
- ஊரில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அமைப்புக்கள் யாவை? மன்றம், பொதியில், அம்பலம், மாசானம்
- குடிமக்களின் தேவைகளை மன்னனிடம் எடுத்துச்செல்லும் அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? மாசானம்
- மாசானம் என்போர் யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி அல்லது பிரதிநிதிகளின் குழு
- ஊர்களில் அமைதிகாக்கும் நிறுவனங்கள் யாவை? பொதியில், மன்றம்
- வரி எவ்வாறு அழைக்கப்பட்டது? இறை
- மக்கள் மகசூலில் எத்தனை பங்கை வரியாக செலுத்தினர்? ஆறில் ஒரு மடங்கு
- மக்கள் வரி செலுத்தும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? வாரியம்
- பயன்பாட்டில் இருந்த போர் கருவிகள்? அம்பு, வில், வாள், வேல், குந்தகம், கோல், கைக்கோடாரி, எஃகம், முசலம்
- வீரர்கள் தன் உடலைக் காக்க எவற்றைப் பயன்படுத்தினர்? கடுவாத்தோலாம் செய்யப்பட்ட கட்டை, இரும்பு மெய்மறைகள்
- தடுப்புப்போருக்குப் பயன்பட்டவை எவை? கையில் வைத்திருக்கும் கேடயம், கவச உடை
- பயன்பாட்டில் இருந்த தேர் வகைகள் யாவை? தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித் தேர்
- காலாட்படை வகைகள் யாவை? வாள், வேல், வில் படை, தூசிப்படை, தார் படை, முன்னணிப்படை, கூழைப்படை
- படையின் இறுதியில் வரும் பாதுகாவற் படை எது? கூழைப்படை
- நிறைய தேர் வைத்திருந்த மன்னன் யார்? பல்தேர் இளஞ்சேட் சென்னி
- கடற்கொள்ளையர்களை முறியடித்த மன்னன்யார்? கடற்பிறக்கோட்டிய குட்டுவன்
- ஈழநாட்டின் மீது போரிட்டு வென்ற சோழ மன்னன் யார்? திருமாவளவன் [இரண்டாம் கரிகாற் சோழன்]
- சேர நாட்டின் தலைநகர் - வஞ்சி, கரூர்
- சேர நாட்டின் துறைமுகம் - தொண்டி
- சோழ நாட்டின் தலை நகரம் - உறையூர்
- சோழ நாட்டின் துறைமுகம் - பூம்புகார்
- சோழ நாட்டின் வடக்கிலும் வடமேற்கிலும் எந்நாடு இருந்ததாக புறப்பாடல் காட்டுகின்றது? ஈழன் ஆண்ட ஈழ நாடு
- சேர, பாண்டிய நாட்டின் எல்லையை வரையறுக்கும் நூல் எது? பெருந்தொகை
- சோழ நாட்டின் எல்லை எந்த நூலில் குறிக்கப்பட்டு உள்ளது? சோழ மண்டலச் சதகம்
- சேர நாட்டை ஆண்ட மரபினர் யாவர்? சேரலாதன் மரபினர், பொறையர் மரபினர்
- சேரலை ஆண்டவர்கள் சேரர்கள்.இதில் சேரல் என்பதன் பொருள்? மலை
- வஞ்சியைத் தலைமையகமாகக் கொண்டு ஆண்டவர்கள் எம்மரபினர்? பொறையர்கள்
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
தமிழ வரலாறும் பண்பாடும் வினா வங்கி - 1[சங்க காலம்]
திறனாய்வியல் வினா வங்கி - 2 [தமிழ்த் திறனாய்வு நூல்கள் சில]
- தொல்காப்பியக் கடலை எழுதியவர் - வ.சு.ப. மாணிக்கம்
- தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் - சோ. கந்தசாமி
- சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள் - ப. ஜீவானந்தம்
- சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம் - பி.எல்.சாமி
- சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் - பி.எல். சாமி
- சங்க இலக்கியத்தில் உவமை - ரா. சீனிவாசன்
- சங்க இலக்கியத்தில் கற்பனை - இரா. மாயாண்டி
- சங்க இலக்கியத்தில் நெய்தல் - முத்துக்கண்ணப்பர்
- சங்க இலக்கியத்தில் பாடாண் திணை - நா. செயராமன்
- சங்க இலக்கியத்தில் புறப்பொருள் - கு.வெ. பாலசுப்பிரமணியன்
- சங்க இலக்கியத்தில் சமூகவியல் - கு.வெ.பாலசுப்பிரமணியன்
- பழந்தமிழ் நூல்களில் உயிர் வகைகள் - செ. வேங்கடராம செட்டியார்
- தமிழர் வீரப் பண்பாடு - கதிர்மகாதேவன்
- சங்க கால ஔவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும் - பெ.சு.மணி
- ஔவையாரும் நக்கீரரு - மு. கோவிந்தசாமி
- பரிபாடல் திறன் - இரா. சாரங்கபாணி
- திருமுருகாற்றுப்படைத் திறன் - கு. கோதண்டபாணி பிள்ளை
- குறுந்தொகைத் திறனாய்வு - சோ. ந. கந்தசாமி
- திருவள்ளுவர் - சோமசுந்தர பாரதியார்
- திருக்குறள் - அழகும் அமைப்பும் - ச. தண்டபாணி தேசிகர்
- திருக்குறளும் சங்க இலக்கியமும் - மு.வை. அரவிந்தன்
- திருக்குறளும் இந்திய அறநூல்களும் - க. த. திருநாவுக்கரசு
- திருக்குறள் நீதி இலக்கியம் - க.த.திருநாவுக்கரசு
- வள்ளுவரும் சாக்ரடீசும் - பி. ஶ்ரீ
- குறட்செல்வம் - ஒரு திறனாய்வு - குன்றக்குடி அடிகளார்
- காப்பிய புனைதிறன் - ச.வே.சுப்பிரமணியம்
- இளங்கோவின் இலக்கிய உத்திகள் - "
- சிலப்பதிகார ஆராய்ச்சி - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
- மணிமேகலை அராய்ச்சி - "
- சீவகசிந்தாமணி ஆராய்ச்சி - "
- பெரியபுராண ஆராய்ச்சி - மா. இராசமாணிக்கனார்
- தமிழ்க்காப்பியங்களில் அவல வீரர்கள் - தா. ஏ. ஞானமூர்த்தி
- காப்பியத்திறன் - சோம. இளவரசு
- சிலம்பு வழிச் சிந்தனை - ம. ரா. போ. குருசாமி
- கம்பர் கவிநயம் - அ. கு. ஆதித்தர்
- கவி உலகில் கம்பன் - ச. து. சு. யோகி
- தசரதன் குறையும் கைகேயி நிறையும் - சோமசுந்தர பாரதியார்
- கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி - மு. ராகவ ஐயங்கார்
- சிற்றிலக்கியத் திறனாய்வு - ந. வீ. ஜெயரமன்
- ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை - அ. சீனிவாசராகவன்
திறனாய்வியல் வினா வங்கி-1
- 'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது.
- தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் நுணுக்கம்'
- தொல்காப்பியத்தில் திறனாய்வுக் கொள்கைகளாக இடம்பெறுபவை யாவை? நூலுக்குரிய 10 குற்றங்கள், 32 உத்திகள், செய்யுள் வழக்கு, செய்யுள் வழக்கு
- தமிழின் தொடக்க காலத்தின் திறனாய்வாளர்கள் யார்? உரையாசிரியர்கள்
- உரையாசிரியர்கள் உரையில் உள்ள திறனாய்வு முறைகள் யாவை? விதிமுறைத் திறனாய்வு, பாராட்டு முறைத் திறனாய்வு
- பழந்த்தமிழரின் திறனாய்வுக் கோட்பாடுகளை விளக்கும் கா. மீனாட்சிசுந்தரனார் நூல்? பழந்தமிழரின் சில திறனாய்வு நெறிகள் [ஐந்தாம் உலகத்தமிழ் மானாட்டு மலரில் எழுதப்பட்டுள்ள கட்டுரை]
- திறனாய்வுத்துறை எவ்வாறு வளர்ந்தது? மேனாட்டுத் தொடர்பால்
- திறனாய்வுத்துறையில் தமிழின் வழிகாட்டி நூல் எது? வ.வே.சு ஐயரின் கம்பராமாயண ரசனை [கம்ப ராமாயண எ ஸ்டடி] என்ற ஆங்கில நூல்
- திறனாய்வுத்துறையின் முன்னோடி யார்? மறைமலை அடிகள்
- மறைமலையடிகளின் சிறந்த ஆய்வுகள் யாவை? முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, சாகுந்தல நாடக ஆராய்ச்சி. பட்டினப்பாலை ஆராய்ச்சி
- மகாவித்வான் ர.ராகவ ஐயங்கார் இயற்றிய ஆராய்ச்சி நூல்கள் யாவை? பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, தித்தன், கோசர் குறித்த சிற்றாராய்ச்சி
- நெடுநல் வாடை ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்? கே. கோதண்டபாணி
- டி.கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய ஆய்வு நூல் எது? இதய ஒலி
- பேராசிரியர் ஆ.முத்துசிவன் எழுதிய திறனாய்வு நூல்கள் யாவை? கவிதை, அசோகவனம், அசலும் நகலும்
- அ.ச.ஞானசம்பந்தனின் திறனாய்வு நூல்கள் யாவை? இலக்கியக்கலை, இராவணன் மாட்சியும், வீழ்ச்சியும்
- மார்க்கபந்து சர்மாவின் மேனாட்டு ஆய்வு நோக்கில் அமைந்த நூல் எது? சிலப்பதிகார ரசனை
- டாக்டர் இராசமாணிக்கனார் எழுதிய ஆய்வு நூல்? பெரியபுராண ஆராய்ச்சி
- வெ. சு. சுப்பிரமணியாச்சாரியார் எழுதிய ஆய்வு நூல்? சிலப்பதிகார ஆராய்ச்சி
- மு.வ. எழுதிய ஆய்வு நூல்கள் யாவை? திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், ஓவச்செய்தி, மாதவி, கண்ணகி
- இலக்கியத் திறனாய்வின் சிறப்பினைக் காட்டும் மு.வ.வின் நூல்கள் யாவை? இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறன், இலக்கிய மரபு
- ரா.பி.சேதுப்பிள்ளையின் குறிப்பிடற்குரிய ஆய்வு நூல் எது? ஊரும் பேரும்
- முற்போக்கு சிந்தனையோடு வரலாற்று, மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்தவர் யார்? க. கைலாசபதி
- தலைசிறந்த இலங்கை இலக்கிய ஆராய்ச்சியாளர் யார்? க. கைலாசபதி
- இலக்கிய ஆய்விற்காக ஆராய்ச்சி என்ற இதழை நடத்தியவர் யார்? நா.வானமாமலை
- விஞ்ஞான சோசலிச விமர்சகர் யார்? நா.வானமாமலை
- நா. வானமாமலையின் ஆய்வுப் போக்கு எத்தகையது? தொல்பொருள், வரலாறு, மானிடவியல், சமூகவியல், அறிவியல் எனப்பன்முகத்தன்மை கொண்டது.
- க. நா. சு என அழைக்கப்படும் இலக்கியத் திறனாய்வளர் யார்? க.நா.சுப்பிரமணியம்
- க.நா.சுப்பிரமணியம் ஆசிரியராக இருந்த இதழ்கள் யாவை? இலக்கிய வட்டம், சூறாவளி, சந்திரோதயம், ராமபாணம்
- க.நா.சுவின் இலக்கிய திறனாய்வின் அடிப்படை யாவை? அழகியல், வடிவியல் அணுகுமுறை
- துருவன் என்ற புனைப்பெயரில் இலக்கிய விமர்சனம் செய்தவர் யார்? தி.க.சிவசங்கரன்
- சி.சு. செல்லப்பாவின் திறனாய்வு முறை யாது? ரசனைமுறை, முருகியல் முறை
- சி.சு. செல்லப்பாவின் ஆய்வு நூல்கள் யாவை? தமிழில் இலக்கிய விமர்சனம், தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது
- இலக்கிய விமர்சனம் என்ற நூல் மூலம் தமிழுக்குப் புதுத்திறனாய்வு சிந்தனைகளைத் தந்தவர் யார்? தொ.மு.சி. ரகுநாதன்
- தொ.மு.சி. ரகுநாதனின் திறனாய்வு நூல்கள் யாவை? பாரதியு ஷெல்லியும், பாரதி காலமும் கருத்தும், இளங்கோவடிகள் யார்?
- சிங்களம், வடமொழி, ஆங்கிலம், இலத்தீன் மொழிகளில் பயிற்சி உடைய இலக்கியத் திறனாய்வாளர் யார்? சோ. சிவபாத சுந்தரம்
- சோ. சிவபாத சுந்தரத்தின் ஆய்வு நூல்கள் யாவை? குடியியல், மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், ஒலிபரப்புக்கலை, கௌதமபுத்தர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில்
- சாகித்ய அகாதெமி பரிசு வென்ற வல்லிக்கண்ணனின் நூல் எது? புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- வல்லிக்கண்ணனின் குறிப்பிடற்குரிய திறனாய்வு நூல்கள் யாவை? பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, காலத்தின் குரல், முத்துக்குளிப்பு, தமிழில் சிறுபத்திரிகைகள்
- தமிழவனின் ஆய்வு நூல்கள் ? இருபதில் கவிதை, அமைப்பியல் வாதம்
- க. முத்துசாமியின் ஆய்வு நூல்கள் யாவை? சிலம்பில் அவலம், உலோச்சனார் பாடல்கள்
- அமைப்பியல் அணுகுமுறையில் இலக்கியங்களைத் திறனாய்வு செய்வதில் வல்லவர் யார்? க. பூர்ணச்சந்திரன்
- க. பூர்ணச்சந்திரன் இயற்றிய ஆய்வு நூல்கள் யாவை? அமைப்புமையவாதமும் பின் அமைப்புமையவாதமும், செய்தித்தொடர்பியல் கொள்கைகள், பத்திரிகை தலையங்கம் கருத்துரை, கவிதை மொழித்தகர்ப்பும் அமைப்பும்
- நவீன இலக்கிய இரட்டையர்களாக விளங்கிய திறனாய்வாளர்கள் யாவர்? சிட்டி. பெ. கோ. சிவபாத சுந்தரம், சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
- சிட்டி சுந்தரராஜன் எந்த இதழ் பரம்பரையைச் சேர்ந்தவர்? மணிக்கொடி
- ஆங்கிலத்தில் எழுதிய சிட்டி சுந்தரராஜனைத் தமிழில் எழுதத் தூண்டியவர் யார்? வ.ரா.
- 1930இல் தோன்றிய சர்ச்சைக்குரிய இலக்கிய விவாதம் என்ன? பாரதி மகாகவியா?
- சிட்டி பெ.கோ. சுந்தர ராஜனின் ஆய்வு நூல் எது? கண்ணன் என் கவி
- கண்ணன் என் கவியை சிட்டி யாருடன் இணைந்து எழுதியவர்? கு.ப.ரா
- சிட்டி தி.ஜ-வுடன் இணைந்து எழுதிய ஆய்வு நூல் யாது? நடந்தாய் வாழி காவேரி'
- சிட்டி பெ.சு. மணியுடன் இணைந்து இயற்றிய நூல் எது? அதிசயப் பிறவி வ.ரா
இலக்கிய இசங்கள் வினா வங்கி 2
- காந்தியை புறநிலை கருத்து முதல்வாதியாக குறிப்பிடுபவர் யார்? ந. பிச்சமூர்த்தி
- புதுக்கவிதைகளில் காந்தியத்தின் தாக்கம் எவ்வாறு உள்ளது? ஏற்பும், எதிர்விளைவும்
- "அத்தனைக்கும் மேலல்லோ அகிம்சை கதைபேசி
- வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்" என்றவர்? புதுமைப்பித்தன்
- இந்திய வரலாற்றுப் பதிவுகள் கொண்ட மு.மேத்தாவின் படைப்பு எது? தேச்ப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி
- காந்தியக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்? பாரதி, நாமக்கல் கவிஞர், அரங்க சீனிவாசன், இராய. சொக்கலிங்கம், சிந்துப் பாவலர், கவிமணி
- மு.வ.வின் நாவல் இலக்கியக் கொள்கை காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற அறிஞர்? ந. பிச்சமுத்து
- காந்தியத்தாக்கம் உள்ள நாவல்கள் யாவை? கல்கியின் அலையோசை, அகிலனின் எங்கே போகிறோம், புதுவெள்ளம், நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் இராகங்கள்
- பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைவது எது? காந்தியத்தின் வெற்றிடம்
- பகுத்தறிவு வாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பெரியாரியம், சீர்திருத்தவாதம்
- பகுத்தறிவு இயக்கத்தின் கவிதைப் போர்வாள் எது? பாரதிதாசன் கவிதைகள்
- பகுத்தறிவுவாதம் வளர்ச்சி அடைய துணை நின்ற இதழ்கள் யாவை? காஞ்சி, ஹோம்லேண்ட்
- பகுத்தறிவு இயக்கத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்தவை யாவை? பெரியாரின் குடியரசு இதழ், கட்டுரைகள், நூல்கள்
- மனித மனத்தை ஆராயும் உளவியல் போக்கு யாது? பிராய்டிசம்
- பிராய்டிசத்தைத் தொடங்கி வைத்தவர் யார்? சிக்மன் ப்ராய்ட்
- பிராடு படைப்பை எவ்வாறு குறிப்பிடுகிறார்? பகல் கனவு, நனவிலி மனத்தின் வெளிப்பாடு
- தமிழில் பிராய்டிய போக்கில் அமைந்த படைப்புக்கள் யாவை? சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம், நகுலனின் நாய்கள், நினைவுப்பாதை, திஜ. வின் மோகமுள், உயிர்த்தேன், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி, உயிர்த்தேன், ஜெயகாந்தனின் ரிஶி மூலம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், இலக்கணம் மீறிய கவிதை, ஒவ்வொரு கூரைக்கும் கீழே, இந்திரா பார்த்த சாரதியின் குருதிப்புனல், ஆதவனின் காகித மனிதர்கள், எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ, தஞ்சைப் பிரகாசின் மீனின் சிறகுகள்
- பிரெஞ்சு நாட்டுத் தத்துவ அறிஞர் ஜான்பால் ஸார்த்தரால் உருவாக்கப்பட்ட இயக்கம் எது? இருத்தலியல்
- நவீனத்துவத்தின் இறுதியான இசம் எது? இருத்தலியல்
- இருத்தலியலின் அடிப்படை என்ன? மனித வாழ்வின் சாராம்சத்தைக் கேள்வி கேட்பது, அதற்கு அர்த்த்மே இல்லை என்பதும்
- நான் என்னும் நினைப்பி உலகம், வெளி இரண்டிற்கும்தரையாக இருக்கிறது என்றவர் யார்? ஸார்த்தர்
- இருத்தலியலை முன்னெடுப்பதில் முக்கியமான படைப்பாளர்கள் யாவர்? ஆல்பர் காம்யு, சாமுவேல் பெக்கெட்
- இந்தியாவில் இருத்தலியலைக் கையாண்ட படைப்பு - பாதல் சார்த்தரின் நாடகங்கள்
- தமிழில் இருத்தியலியலைச் சார்ந்து எழுந்த இந்திரா பார்த்த சாரதியின் புதினங்கள் யாவை? திரைகளுக்கு அப்பால், வெந்து தணிந்த காடுகள், நிலமென்னும் நல்லாள், பயணம், மாயமான் வேட்டை
- இருத்தலியலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நாடகங்கள்? இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப், போர்வை போர்த்திய உடல்கள், மழை
- இருத்தலியல்வாதத்திற்குச் சான்றாக அமையும் பிற படைப்புகள்? சாரு நிவேதாவின் 'எக்ஸிடெஷியலிஸமும் பேன்சி பனியனும், தமிழவனின் ஏற்கன்வே சொல்லப்பட்ட மனிதர்கள், ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ
- அமைப்பியலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை? அமைப்பியம், அமைப்பு மையவாதம்
- அமைப்பியலை உருவாக்கியவர் யார்? மொழியியல் அறிஞரான பெர்டினாண்ட் சசூர்
- இலக்கியப் பிரதியை உடைத்து மொழியியல் அடிப்படையில் அனுகும் முறையினை செய்யும் இசம் எது? அமைப்பியல்
- அமைப்பியலில் இருந்து பிறந்த இசம் யாது? பின் அமைப்பியல்
- பின் நவீனம் என்ற வார்த்தையை முதன்முதலில் கையாண்டவர் யார்? சோப்மன் என்ற ஓவியர்
- பின் நவீனத்திற்கு அடித்தளம் அமைத்தது எது? டெரிதாவின் நிர்-நிர்மானம்
- ஒரு பிரதியில் இருக்கும் அர்த்தங்கள் பன்மைத்தன்மை வாய்ந்தவை என்பது யாருடைய முடிவு? டெரிடா [தெரிதா]
- ஒரு படைப்பிற்குள் ஆசிரியனின் உள்நோக்கங்கள், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை கண்டறிவது யாது? நிர்-நிர்மானம் கோட்பாடு
- குறிப்பிடத்தகுந்த பின்-நவீனத்துவ வாதிகள்? டெரிடா, மிஷல், ஃபூக்கோ, தாமஸ் பிஞ்சன், கட்டாரி, லாக் லெக்கான்
- மேஜிக்கல் ரியலிசம் தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மாய எதார்த்தவாதம்
- குறிப்பிடத்தகுந்த பின் - நவீனத்துவவாதிகள் யாவர்? ஜார்ஜ் லூயி போர்ஹே, காப்ரியேல் கார்ஸியா, குந்தர் கிராஸ், ஜான்ஃபெனல்ஸ்
- தமிழில் குறிப்பிடற்குரிய பின்-நவீனத்துவப் படைப்புகள் யாவை? எஸ்.ராமகிருஷ்ண்னின் படைப்புகள், சு. வெங்கடேசனின் காவல் கோட்டம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம், கொற்றவை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...