எண் | இடைச்சொல் | வருமிடம் |
1 | ஏ - ஏகாரம் | பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை |
2. | ஓ - ஓகாரம் | ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிநிலை |
3. | என, என்று | வினை, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு |
4. | உம் | எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று,என், தெரிநிலை, ஆக்கம் |
5. | தில் | விழைவு,காலம், ஒழியசை |
6. | மன் | அசைநிலை, ஒழியிசை, ஆக்கம், கழிவு, மிகுதி |
7. | மற்று | வினை, வினை மாற்று, அசைநிலை, பிறிது என்னும் பொருள் |
8. | கொல் | ஐயம், அசைநிலை |
9. | ஓடு, தெய்ய | இசைநிறை |
10. | அந்தில், ஆங்கு | அசைநிலை, இடப்பொருள் |
11. | அம்ம | உரையசை, ஏவல் |
12. | மா | வியங்கோள் அசை |
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 6 ஜூலை, 2020
இடைச்சொற்களும் வரும் இடங்களும்
வழு வழுவமைதி வினா வங்கி
1. வழு எத்தனை வகைப்படும் ? 7
2. உமுடிவைப் பெறும் யர்திணைப் பெயரைச் சார்ந்து வரும் அஃறிணைப் பெயர்கள் எத்தனை வகைப்படும் ? 6
3. உயர்தினைப் பெயர்ச் சார்ந்து வரும் அஃறிணை பெயர் எத்தகு முடிவைப் பெறும் ? உயர்திணை
4. திணை மயங்கக் காரணங்கள் யாவை ?
5. பால் வழுவமைத்திக்கான காரணிகள் எத்தனை ? 5 {உவப்பு ,உயர்வு ,சிறப்பு ,சினம் ,எள்ளல் }
6. தன்மை முன்னிலையில் ஒருமைப் பன்மை விரவி வருமா ? ஆம். விரவி வருவது வழுவமைதி
7. காலங்கள் எத்தனை ? 3 {இறப்பு,எதிர்,நிகழ் }
8. முக்காலத்திற்கும் உரியவை எக்கால முடிவைப் பெறும் ? நிகழ்கால
9. கால வழுவமதிக்கான காரணங்கள் எத்தனை? 4 {விரைவு,மிகுதி,தெளிவு,இயல்பு}
10. சினையும் முதலும் விரவுதல் எங்கு வழுவாகும்? வினா,விடை
11. வினா மற்றும் விடையில் முதலும் சினையும் விரவுதல்? வழு
12. திணை,பால் மயக்கமுள்ள இடத்தில் எவ்வாறு வினா எழுப்புதல் வேண்டும்? சிறப்புச் சொல்லாய்
13. தான் அறிந்ததை பிறர் அறிந்துள்ளனரா என அறியக் கேட்கும் வினா? அறிவினா
14. தாம் அறியாததை அறிந்து கொள்ளுதல் பொருட்டு கேட்கும் வினா?அறியா வினா
15. மனதில் ஐயம் தோன்றுகையில் எழும் வினா ? ஐயவினா
16. ஒரு பொருளைப் பெறுவதன் பொருட்டு எழுப்பும் வினா ? கொளல்;வினா
17. ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு எழுப்பும் வினா ? கொடைவினை
18. பிறரை இதைச் செய்ய என ஏவுதல் பொருட்டு எழுப்பும் வினா ?ஏவல்வினா
19. வினா வகைகள் எத்தனை ? 6
20. விடை வகைகள் எத்தனை ? 8
21. ஒன்றைச் சுட்டிக்காட்டி அளிக்கும் விடை ? சுட்டுவிடை
22. மறைமுகமாக தரப்படும் விடை ? மறைவிடை
23. நேரடியாக தரப்படும் விடை ? நேர்விடை
24. ஏவுதல் பொருட்டு கூறப்படும் விடை ? ஏவல்விடை
25. ஒரு வினாவிற்கு வினாவையே விடையாய் அளித்தல் ? வினாவெதிர்விடை
26. வினாவிற்கு நேரெடியாக விடை கூறாமல் தனக்கு நிகழ்த்ததைக் கூறி விடையை உணர்த்துவது? உற்றது உரைத்தல் விடை
27. உறுவது உரைத்தல் விடை ? கேட்கப்படும் கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் இது நிகழ்ந்தால் தனக்கு இன்னது நேரும் என மறைமுகமாக விடை காண்பது
28. ஒரு வினாவிற்கு வினா கேட்போரை ஏவுதல் பொருட்டு விடையளிப்பது ? ஏவல்விடை
29. செவ்வன் இறை என்றால் என்ன? நேரடியாக விடையளிப்பது
30. செவ்வன் விடைகள் எத்தனை? 3
31. செவ்வன் விடைகள் யாவை ? {சுட்டு,மறை,நேர்விடை}
32. விடை என்பதைக் குறிக்கும் மற்றறொரு சொல் ? இறை
33. மரபு என்பது யாது ? ஒரு சொல்லை எப்படிச் சொல்ல வேண்டும் என உயர்ந்தேதோர் கூறினாரோ அதை அப்படியே சொல்வது
34. ஒரு பெயரில் பல பொருளைக் குறிக்கையில் அதனை முறையாக அடையாளப்படுத்த உதவுபவை? அடைமொழி
சில நிரல்கள்
1.வழு வகையின் நிரல்
திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு
2. தினை வழுவமைதிக்கான காரணம்
சிறப்பு, மிகுதி, இழிவு
3. பால் வழுவமைதிக்கான காரணம்
உவப்பு, உயர்வு, சிறப்பு, சேறல் [சினம்], இழிவு [எள்ளல்]
4. கால வகைகள்
இறப்பு, எதிர்வு , நிகழ்வு
5. கால வழுவமைதிக்கான காரணங்கள்
விரைவு, மிகுதி, தெளிவு, இயல்பு
6. வினா வகைகள்
அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா
7. விடை வகைகள்
சுட்டுவிடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை. வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல், உறுவது கூறல்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...