- எழுத்து, சொல் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள் யாவை?" நன்னூல், நேமிநாதம்
- நன்னூலின் காலம் யாது? கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு
- நன்னூலின் ஆசிரியர் யார்? பவணந்தி முனிவர்
- பவனந்தி முனிவரின் ஊர்? சியகங்கன் [மைசூரின் கோலார் பகுதி]
- நன்னூலில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 462
- நேமிநாதத்தின் காலம் யாது? 12 ஆம் நூற்றாண்டு
- நேமிநாத ஆசிரியர் யார்? குணவீர பண்டிதர்
- குணவீர பண்டிதரின் ஊர் எது? களந்தை [களத்தூர்]
- குணவீர பண்டிதர் இயற்றிய மற்றொரு நூல் யாது? வச்சணந்திமாலை எனப்படும் வெண்பாப்பாட்டியல்
- நேமிநாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சின்னூல்
- சின்னூல் எனப் பெயர் வரக் காரணம்? சுருக்கமாக இலக்கணம் கூறுவதால்
- நேமிநாதப் பிரிவுகள் யாவை? 10 [எழுத்து-1, சொல்-9 : பெரும்பாலானவை மரபு என்றே குறிக்கப்படுகின்றன]
- நேமிநாத செய்யுள்கள் என்னப் பாவால் அனவை? வெண்பா
- நேமிநாத ஆசிரியரின் சமயம்? சமணம்
- நேமிநாததில் உள்ள நூற்பாக்கள் எத்தனை? 99
- நேமிநாதம் என்ன பாவால் ஆக்கப்பட்டது? வெண்பா
- நேமி நாதம் எனப் பெயரிடப்பட்டதன் காரணம் யாது? குணவீர பண்டிதர் தன் ஆசிரியரான நேமி நாதர் பெயரால் எழுதி உள்ளார். இவர் 22-ஆவது தீர்த்தங்கரரும் ஆவார்
- சொல்லுக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூல்கள் யாவை? பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
- பிரயோக விவேகத்தின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
- பிரயோக விவேகத்தின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய தீட்சிதர்
- சுப்பிரமணிய தீட்சிதரின் ஊர்? ஆழ்வார் திருநகரி
- வடமொழியில் இருந்து தழுவி எழுதப்பட்ட நூல், வட மொழிக்கும் தமிழுக்குமான இலக்கண ஒற்றுமைகளை முன்னிறுத்திப் பேசுகின்றது.
- பிரயோக விவேகத்தில் உள்ள படலங்கள் எத்தனை? 4
- பிரயோக விளக்கச் செய்யுள்கள் என்னப்பாவால் ஆனவை? கட்டளைக் கலித்துறை
- பிரயோக விளக்கத்தில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 51 [கூடுதலாக 41 பாடல்களைக் கொண்டது என்றும் கூறுவர்]
- இலக்கணக்கொத்தின் காலம் யாது? 17ஆம் நூற்றாண்டு
- சுவாமிநாத தேசிகரின் ஊர்? திருவாவடுதுறை மடம்
- இலக்கணக் கொத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 3
- இலக்கண விளக்கத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 119
- வடமொழியின் உயர்வுக்காகத் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் யாது? இலக்கணக் கொத்து
- இலக்கணக் கொத்து தமிழின் எழுத்துக்களாக உரைப்பவை? 5 [எ, ஒ, ற. ழ. ன]-{ஏனைய பொது எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்களே எனக்கூறும் அவர் 'ஐந்தெழுத்தால் ஒரு பாஷை என்று அறையவே நாணுவர் அறிவுடையோர் என்றும் கூறியுள்ளார்}
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 19 அக்டோபர், 2020
தமிழ் இலக்கண நூல்கள் - எழுத்தும் சொல்லும்
தமிழில் இலக்கண நூல்கள்: அகத்தியமும், ஐந்திலக்கண நூலும்
- தமிழின் ஐந்திலக்கணங்கள் யாவை? எழுத்து, சொல், பொருள், அணி,யாப்பு
- ஐந்திலக்கணக் கூறுகளும் உள்ள முதல் இலக்கணம் யாது? தொல்காப்பியம்
- 'யாப்பதிகாரம் எனச் செய்யுளியலைப் பிறர் கூறுவர்' எனக் குறிப்பிடுபவர் யார்? பேராசிரியர்
- சேனாவரையர் உவமவியலை எவ்வாறு குறிக்கிறார்? அணியியல்
- முதல் ஐந்திலக்கண நூல் யாது? வீரசோழியம்
- தமிழின் ஐந்திலக்கண நூல்கள் யாவை? வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம்
- எழுத்தும் சொல்லும் மட்டும் பேசும் இலக்கண நூல்கள் யாவை? நன்னூல், நேமிநாதம்
- சொல்லிலக்கண நூல்கள் யாவை? பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
- அகப்பொருள் இலக்கண நூல்கள் யாவை? , இறையனார் களவியல், தமிழ் நெறி விளக்கம், நம்பியகப்பொருள், களவியற் காரிகை, மாறனகப்பொருள்
- புறப்பொருள் இலக்கணம் பேசும் இலக்கண நூல்கள் யாவை? தொல்காப்பியம், பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை
- யாப்பிலக்கணம் கூறும் நூல்கள் யாவை? யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, மாறன் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட் கோவை, பல்சந்தப் பரிமளம், திருவலங்கற்றிரட்டு
- அணியிலக்கண நூல்கள் யாவை? தண்டியலங்காரம், மாறனலங்காரம், சந்திர லோகம், குவலயானந்தம்
- தொல்காப்பியத்திற்கு மூத்த இலக்கண நூலாக அறியப்படும் இலக்கண நூல் யாது? அகத்தியம்
- அகத்தியம் பற்றிக் குறிப்பிடும் நூல் யாது? இறையனார் களவியல் உரை
- பரிபாடலில் உள்ள பொதியின் முனிவன் என்னும் தொடருக்கு பரிமேலழகர் கூறும் விளக்கம் யாது? 'அகத்தியன் என்று ஓர் நட்சத்திரம்'
- மதுரைக்காஞ்சியில் வரும் 'தொன்முது கடவுள் என்பது அகத்தியரைக் குறிக்கும் என உரை கண்டவர் யார்? நச்சினார்க்கினியர்
- அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் என்றுக் கூறும் நூல் எது? புறப்பொருள் வெண்பா மாலை
- அகத்தியரின் மாணவர்கள் உருவாக்கியதாகக் கூறப்படும் நூல் எது? பன்னிரு படலம்
- பன்னிரு படலத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் அகத்தியரின் மாணவர்கள் யாவர்? தொல்காப்பியன், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரனார், கழாரம்பர், அவிநயன், காக்கைப்பாடினி, நற்றத்தன், வாமனன்
- பன்னிரு படலத்தில் தொல்காப்பியர் உருவாக்கியதாக நம்பப்படும் பகுதி? வெட்சிப்படலம்
- பன்னிரு படலத்தில் வெட்சிப் படலத்தை தொல்காப்பியர் இயற்றவில்லை என நம்பியவர் யார்? இளம்பூரணர்
- பன்னிரு படலத்தின் வழி நூல் எது? புறப்பொருள் வெண்பா மாலை
- நல்லிசை நிறுத்த தொல்காப்பியன் எனக்கூறும் நூல்? பன்னிரு படல பாயிரச் செய்யுள்
- துன்னரும் சீர்த்தி தொல்காப்பியர் எனக் கூறும் நூல்? புறப்பொருள் வெண்பா மாலையின் சிறப்புப் பாயிரம்
- தொல்காப்பிய பாயிர ஆசிரியர் யார்? பனம்பாரனார்
- பனம்பாரனார் அகத்தியர் குறித்தோ, தொல்காப்பியரும் தாமும் அகத்தியர் என்றோ குறிப்பிடவில்லை.
- தொல்காப்பியரை அகத்தியருக்கு மாணவர் என ஏற்பவர்கள் குறித்து பேராச்சிரியர் கூறுவது? 'நான்கு வருணத் தொடுபட்ட சான்றோர்'
- தொல்காப்பியரை அகத்தியருக்கு மாணவர் அல்லர் என நம்புவோர் குறித்துப் பேராச்சிரியர் கூறுவது?'வேத வழக்கோடு மாறுகொள்வார்'
- தொல்காப்பியத்தின் முதனூல் என நம்பப்படும் நூல்? அகத்தியம்
- அகத்தியம் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறுவதாக நம்பப்படுகிறது.
- அகத்தியத்தின் நூற்பாக்கள் 12000 என நம்பப்படுகிறது.
- அகத்தியம் தொல்காப்பியத்தின் முதனூல் எனத் தொல்காப்பிய பாயிரம் குறிக்கவில்லை.
- ஐந்து இலக்கண நூல்கள் யாவை? வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம், முத்து வீரியம்
- ஐந்திலக்கணக் கூறுகள் உள்ள முதல் இலக்கண நூல் யாது? தொல்காப்பியம்.
- ஐந்திலக்கணத்தையும் முழுமையாகப் பேசும் நூல்? வீரசோழியம்
- வீரசோழியத்தின் காலம் யாது? கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. [11ஆம் நூற்றாண்டு எனக்கொள்வாரும் உளர்.
- வீரசோழியத்தின் ஆசிரியர் யார்? புத்தமித்திரர்
- புத்தமித்திரரின் ஊர் எது? பொன்பற்றி
- 'பொன்பற்றி மன் புத்தமித்திரரே எனக் குறிப்பது? வீரசோழியத்தின் பாயிரம்
- வீரசோழியம் யாரது பெயரால் இயற்றப்பட்டது? வீர ராசேந்திரச்சோழன்
- வீரசோழியம் உருவாக்க துணை செய்த மன்னன் [பொருளுதவி அளித்த] மன்னன் யார்? வீர ராசேந்திரச்சோழன்
- வீர ராஜேந்திரன் பெயரால் இயற்றப்பட்டது எனக் குறிக்கும் பகுதி யாது? வீரசோழிய பாயிரம். [தேமேவிய தொங்கல் தேர்வீர சோழன் திருப்பெயரால்/ பூமேலுரைப்பன் வடனூல் மரபும் புகன்று கொண்டு]
- வீரசோழியத்தின் அதிகாரங்கள் எத்தனை? 5
- வீரசோழியத்தில் உள்ள படலங்கள் எத்தனை? 9
- வீர சோழியத்தில் இடம் பெற்ற நூற்பா எண்ணிக்கை? 183
- கடவுள் வாழ்த்து, பாயிரம் உட்படச் செய்யுள்கள் எண்ணிக்கை?186
- வீரசோழியம் எந்தப் பாவால் ஆனது? கட்டளைக் கலித்துறை
- வீரசோழியத்தின் வேறு பெயர்? வீரசோழியக் காரிகை
- வீர சோழியத்தில் காரிகை யாப்பிலான செய்யுட்களின் எண்ணிக்கை? 181
- காரிகை என அழைக்கப்படக் காரணாம் யாது? மகடூஉ முன்னிலையாக [பெண்ணுக்கு இலக்கணம் உரைப்பதாக]எழுதுதல்
- புத்தமித்திரரின் சமயம் எது? பௌத்தம்
- இலக்கண விளக்கத்தின் ஆசிரியர் யார்? வைத்திய நாத தேசிகர்
- வைத்திய நாத தேசிகரின் மாணவர் யார்? படிக்காசுப் புலவர்
- வைத்திய நாத தேசிகர் எழுதிய நூல்கள் யாவை? மயிலம் பிள்ளை, பாசவதைப் பரணி, திருவாரூர்ப் பன்மணி மாலை, நல்லூர்ப் புராணம், திருவாட் போக்கிப் புராணம், கமலாலய அம்மைப் பிள்ளைத்தமிழ், மெய்ஞான விளக்கம்
- இலக்கண விளக்கத்தின் காலம்? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
- இலக்கண விளக்க அதிகாரங்கள்? 3
- இலக்கண விளக்கத்தில் உள்ள இயல்கள்? 15
- இலக்கண விளக்க நூற்பாக்கள்? 941
- இலக்கண விளக்கத்தை மறுத்துரைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட நூல் எது? இலக்கண விளக்கச் சூறாவளி
- 'இலக்கண விளக்கச் சூறாவளி ஒரு அநியாயக் கண்டனம்' என்றவர் யார்? சி.வை.தாமோதரம் பிள்ளை
- குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்கள்? இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம்
- தொன்னூல் விளக்கத்தின் காலம்? கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
- தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர்? வீரமாமுனிவர்
- தொன்னூல் விளக்கத்திற்கு உரை எழுதியவர் யார்? வீரமாமுனிவர்
- தொன்னூல் விளக்கத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 370
- தொன்னூல் பொன்னூலாக விளங்குகிறது என்பவர் யார்? Dr.சேதுப்பிள்ளை
- சுவாமிநாதத்தின் காலம்? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
- சுவாமிநாதத்தின் ஆசிரியர் யார்? சுவாமி கவிராயர்
- சுவாமிநாதத்தின் உட்பிரிவுகள் [இயல்கள்] எவ்வாறு குறிக்கப்பட்டு உள்ளன? மரபு
- சுவாமிநாதத்தில் எத்தனை மரபுகள் உள்ளன? 15
- சுவாமிநாத்தத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை யாது? 210
- முத்துவீரியத்தின் காலம் யாது? கி.பி. 19ஆம் நூற்றாண்டு
- முத்து வீரியம் அச்சான ஆண்டு? 1889
- முத்துவீரிய ஆசிரியர் யார்? முத்துவீரிய உபாத்தியாயர் [ முத்து வீர உபாத்தியாயர், முத்துவீருப் புலவர்]
- முத்து வீரியத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 15
- முத்து வீரிய நூற்பாக்களின் எண்ணிக்கை? 1288
- முத்து வீரியத்தின் உரை ஆசிரியர்? திருபாற்கடல்நாதன் கவிராயர்
- எழுத்து, சொல் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள் யாவை?" நன்னூல், நேமிநாதம்
- நன்னூலின் காலம் யாது? கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு
- நன்னூலின் ஆசிரியர் யார்? பவணந்தி முனிவர்
- பவனந்தி முனிவரின் ஊர்? சியகங்கன் [மைசூரின் கோலார் பகுதி]
- நன்னூலில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 462
- நேமிநாதத்தின் காலம் யாது? 12 ஆம் நூற்றாண்டு
- நேமிநாத ஆசிரியர் யார்? குணவீர பண்டிதர்
- குணவீர பண்டிதரின் ஊர் எது? களந்தை [களத்தூர்]
- நேமிநாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சின்னூல்
- சின்னூல் எனப் பெயர் வரக் காரணம்? சுருக்கமாக இலக்கணம் கூறுவதால்
- நேமிநாதப் பிரிவுகள் யாவை? 10 [எழுத்து-1, சொல்-9 : பெரும்பாலானவை மரபு என்றே குறிக்கப்படுகின்றன]
- நேமிநாத செய்யுள்கள் என்னப் பாவால் அனவை? வெண்பா
- நேமிநாத ஆசிரியரின் சமயம்? சமணம்
- நேமிநாததில் உள்ள நூற்பாக்கள் எத்தனை? 99
- நேமிநாதம் என்ன பாவால் ஆக்கப்பட்டது? வெண்பா
- நேமி நாதம் எனப் பெயரிடப்பட்டதன் காரணம் யாது? குணவீர பண்டிதர் தன் ஆசிரியரான நேமி நாதர் பெயரால் எழுதி உள்ளார். இவர் 22-ஆவது தீர்த்தங்கரரும் ஆவார்
- சொல்லுக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூல்கள் யாவை? பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
- பிரயோக விவேகத்தின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
- பிரயோக விவேகத்தின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய தீட்சிதர்
- சுப்பிரமணிய தீட்சிதரின் ஊர்? ஆழ்வார் திருநகரி
- வடமொழியில் இருந்து தழுவி எழுதப்பட்ட நூல், வட மொழிக்கும் தமிழுக்குமான இலக்கண ஒற்றுமைகளை முன்னிறுத்திப் பேசுகின்றது.
- பிரயோக விவேகத்தில் உள்ள படலங்கள் எத்தனை? 4
- பிரயோக விளக்கச் செய்யுள்கள் என்னப்பாவால் ஆனவை? கட்டளைக் கலித்துறை
- பிரயோக விளக்கத்தில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 51 [கூடுதலாக 41 பாடல்களைக் கொண்டது என்றும் கூறுவர்]
- இலக்கணக்கொத்தின் காலம் யாது? 17ஆம் நூற்றாண்டு
- சுவாமிநாத தேசிகரின் ஊர்? திருவாவடுதுறை மடம்
- இலக்கணக் கொத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 3
- இலக்கணக் கொத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 119
- வடமொழியின் உயர்வுக்காகத் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் யாது? இலக்கணக் கொத்து
- இலக்கணக் கொத்து தமிழின் எழுத்துக்களாக உரைப்பவை? 5 [எ, ஒ, ற. ழ. ன]-{ஏனைய பொது எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்களே எனக்கூறும் அவர் 'ஐந்தெழுத்தால் ஒரு பாஷை என்று அறையவே நாணுவர் அறிவுடையோர் என்றும் கூறியுள்ளார்}
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...