இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 அக்டோபர், 2020

தமிழ் இலக்கண நூல்கள் - எழுத்தும் சொல்லும்

  1.  எழுத்து, சொல் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள் யாவை?" நன்னூல், நேமிநாதம்
  2. நன்னூலின் காலம் யாது? கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு
  3. நன்னூலின் ஆசிரியர் யார்? பவணந்தி முனிவர்
  4. பவனந்தி முனிவரின் ஊர்? சியகங்கன் [மைசூரின் கோலார் பகுதி]
  5. நன்னூலில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 462
  6. நேமிநாதத்தின் காலம் யாது? 12 ஆம் நூற்றாண்டு
  7. நேமிநாத ஆசிரியர் யார்? குணவீர பண்டிதர்
  8. குணவீர பண்டிதரின் ஊர் எது? களந்தை [களத்தூர்]
  9. குணவீர பண்டிதர் இயற்றிய மற்றொரு நூல் யாது? வச்சணந்திமாலை எனப்படும் வெண்பாப்பாட்டியல்
  10. நேமிநாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சின்னூல்
  11. சின்னூல் எனப் பெயர் வரக் காரணம்? சுருக்கமாக இலக்கணம் கூறுவதால் 
  12. நேமிநாதப் பிரிவுகள் யாவை? 10 [எழுத்து-1, சொல்-9 : பெரும்பாலானவை மரபு என்றே குறிக்கப்படுகின்றன]
  13. நேமிநாத செய்யுள்கள் என்னப் பாவால் அனவை? வெண்பா
  14. நேமிநாத ஆசிரியரின் சமயம்? சமணம்
  15. நேமிநாததில் உள்ள நூற்பாக்கள் எத்தனை? 99
  16. நேமிநாதம் என்ன பாவால் ஆக்கப்பட்டது? வெண்பா
  17. நேமி நாதம் எனப் பெயரிடப்பட்டதன் காரணம் யாது? குணவீர பண்டிதர் தன் ஆசிரியரான நேமி நாதர் பெயரால் எழுதி உள்ளார். இவர் 22-ஆவது தீர்த்தங்கரரும் ஆவார்
  18. சொல்லுக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூல்கள் யாவை? பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
  19. பிரயோக விவேகத்தின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  20. பிரயோக விவேகத்தின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய தீட்சிதர்
  21. சுப்பிரமணிய தீட்சிதரின் ஊர்? ஆழ்வார் திருநகரி
  22. வடமொழியில் இருந்து தழுவி எழுதப்பட்ட நூல், வட மொழிக்கும் தமிழுக்குமான இலக்கண ஒற்றுமைகளை முன்னிறுத்திப் பேசுகின்றது.
  23. பிரயோக விவேகத்தில் உள்ள படலங்கள் எத்தனை? 4
  24. பிரயோக விளக்கச் செய்யுள்கள் என்னப்பாவால் ஆனவை? கட்டளைக் கலித்துறை
  25. பிரயோக விளக்கத்தில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 51 [கூடுதலாக 41 பாடல்களைக் கொண்டது என்றும் கூறுவர்]
  26. இலக்கணக்கொத்தின் காலம் யாது? 17ஆம் நூற்றாண்டு
  27. சுவாமிநாத தேசிகரின் ஊர்? திருவாவடுதுறை மடம்
  28. இலக்கணக் கொத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 3
  29. இலக்கண விளக்கத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 119
  30. வடமொழியின் உயர்வுக்காகத் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் யாது? இலக்கணக் கொத்து
  31. இலக்கணக் கொத்து தமிழின் எழுத்துக்களாக உரைப்பவை? 5 [எ, ஒ, ற. ழ. ன]-{ஏனைய பொது எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்களே எனக்கூறும் அவர் 'ஐந்தெழுத்தால் ஒரு பாஷை என்று அறையவே நாணுவர் அறிவுடையோர் என்றும் கூறியுள்ளார்} 

தமிழில் இலக்கண நூல்கள்: அகத்தியமும், ஐந்திலக்கண நூலும்

  1. தமிழின் ஐந்திலக்கணங்கள் யாவை? எழுத்து, சொல், பொருள், அணி,யாப்பு
  2. ஐந்திலக்கணக் கூறுகளும் உள்ள முதல் இலக்கணம் யாது? தொல்காப்பியம்
  3. 'யாப்பதிகாரம் எனச் செய்யுளியலைப் பிறர் கூறுவர்' எனக் குறிப்பிடுபவர் யார்? பேராசிரியர்
  4. சேனாவரையர் உவமவியலை எவ்வாறு குறிக்கிறார்? அணியியல்
  5. முதல் ஐந்திலக்கண நூல் யாது? வீரசோழியம்
  6. தமிழின் ஐந்திலக்கண நூல்கள் யாவை? வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம்
  7. எழுத்தும் சொல்லும் மட்டும் பேசும் இலக்கண நூல்கள் யாவை? நன்னூல், நேமிநாதம்
  8. சொல்லிலக்கண நூல்கள் யாவை? பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
  9. அகப்பொருள் இலக்கண நூல்கள் யாவை? , இறையனார் களவியல், தமிழ் நெறி விளக்கம்,  நம்பியகப்பொருள், களவியற் காரிகை, மாறனகப்பொருள்
  10. புறப்பொருள் இலக்கணம் பேசும் இலக்கண நூல்கள் யாவை?   தொல்காப்பியம், பன்னிரு படலம்,  புறப்பொருள் வெண்பா மாலை
  11. யாப்பிலக்கணம் கூறும் நூல்கள் யாவை? யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை,  மாறன் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட் கோவை, பல்சந்தப் பரிமளம், திருவலங்கற்றிரட்டு
  12. அணியிலக்கண நூல்கள் யாவை? தண்டியலங்காரம், மாறனலங்காரம், சந்திர லோகம், குவலயானந்தம்
  13. தொல்காப்பியத்திற்கு மூத்த இலக்கண நூலாக அறியப்படும் இலக்கண நூல் யாது? அகத்தியம்
  14. அகத்தியம் பற்றிக் குறிப்பிடும் நூல் யாது? இறையனார் களவியல் உரை
  15. பரிபாடலில் உள்ள பொதியின் முனிவன் என்னும் தொடருக்கு பரிமேலழகர் கூறும் விளக்கம் யாது? 'அகத்தியன் என்று ஓர் நட்சத்திரம்'
  16. மதுரைக்காஞ்சியில் வரும் 'தொன்முது கடவுள் என்பது அகத்தியரைக் குறிக்கும் என உரை கண்டவர் யார்? நச்சினார்க்கினியர்
  17.  அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் என்றுக் கூறும் நூல் எது? புறப்பொருள் வெண்பா மாலை
  18. அகத்தியரின் மாணவர்கள் உருவாக்கியதாகக் கூறப்படும் நூல் எது? பன்னிரு படலம்
  19. பன்னிரு படலத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் அகத்தியரின் மாணவர்கள் யாவர்? தொல்காப்பியன், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரனார், கழாரம்பர், அவிநயன், காக்கைப்பாடினி, நற்றத்தன், வாமனன்
  20. பன்னிரு படலத்தில் தொல்காப்பியர் உருவாக்கியதாக நம்பப்படும் பகுதி? வெட்சிப்படலம்
  21. பன்னிரு படலத்தில் வெட்சிப் படலத்தை தொல்காப்பியர் இயற்றவில்லை என நம்பியவர் யார்? இளம்பூரணர்
  22. பன்னிரு படலத்தின் வழி நூல் எது? புறப்பொருள் வெண்பா மாலை
  23. நல்லிசை நிறுத்த தொல்காப்பியன் எனக்கூறும் நூல்? பன்னிரு படல  பாயிரச் செய்யுள்
  24. துன்னரும் சீர்த்தி தொல்காப்பியர் எனக் கூறும் நூல்? புறப்பொருள் வெண்பா மாலையின் சிறப்புப் பாயிரம்
  25. தொல்காப்பிய பாயிர ஆசிரியர் யார்? பனம்பாரனார்
  26. பனம்பாரனார் அகத்தியர் குறித்தோ, தொல்காப்பியரும் தாமும் அகத்தியர் என்றோ குறிப்பிடவில்லை.
  27. தொல்காப்பியரை அகத்தியருக்கு மாணவர் என ஏற்பவர்கள் குறித்து பேராச்சிரியர் கூறுவது? 'நான்கு வருணத் தொடுபட்ட சான்றோர்'
  28. தொல்காப்பியரை அகத்தியருக்கு மாணவர் அல்லர் என நம்புவோர்  குறித்துப் பேராச்சிரியர் கூறுவது?'வேத வழக்கோடு மாறுகொள்வார்'
  29. தொல்காப்பியத்தின் முதனூல் என நம்பப்படும் நூல்? அகத்தியம்
  30. அகத்தியம் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறுவதாக நம்பப்படுகிறது.
  31. அகத்தியத்தின் நூற்பாக்கள் 12000 என நம்பப்படுகிறது.
  32. அகத்தியம் தொல்காப்பியத்தின் முதனூல் எனத் தொல்காப்பிய பாயிரம் குறிக்கவில்லை.
  33. ஐந்து இலக்கண நூல்கள் யாவை? வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம், முத்து வீரியம்
  34. ஐந்திலக்கணக் கூறுகள் உள்ள முதல் இலக்கண நூல் யாது? தொல்காப்பியம்.
  35. ஐந்திலக்கணத்தையும் முழுமையாகப் பேசும் நூல்? வீரசோழியம்
  36. வீரசோழியத்தின் காலம் யாது? கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. [11ஆம் நூற்றாண்டு எனக்கொள்வாரும் உளர்.
  37. வீரசோழியத்தின் ஆசிரியர் யார்? புத்தமித்திரர்
  38. புத்தமித்திரரின் ஊர் எது? பொன்பற்றி
  39. 'பொன்பற்றி மன் புத்தமித்திரரே எனக் குறிப்பது? வீரசோழியத்தின் பாயிரம்
  40. வீரசோழியம் யாரது பெயரால் இயற்றப்பட்டது? வீர ராசேந்திரச்சோழன்
  41. வீரசோழியம் உருவாக்க துணை செய்த மன்னன் [பொருளுதவி அளித்த] மன்னன் யார்? வீர ராசேந்திரச்சோழன் 
  42. வீர ராஜேந்திரன் பெயரால் இயற்றப்பட்டது எனக் குறிக்கும் பகுதி யாது? வீரசோழிய பாயிரம். [தேமேவிய தொங்கல் தேர்வீர சோழன் திருப்பெயரால்/ பூமேலுரைப்பன் வடனூல் மரபும் புகன்று கொண்டு]
  43. வீரசோழியத்தின் அதிகாரங்கள் எத்தனை? 5
  44. வீரசோழியத்தில் உள்ள படலங்கள் எத்தனை? 9
  45. வீர சோழியத்தில் இடம் பெற்ற நூற்பா எண்ணிக்கை? 183
  46. கடவுள் வாழ்த்து, பாயிரம் உட்படச் செய்யுள்கள் எண்ணிக்கை?186
  47. வீரசோழியம் எந்தப் பாவால் ஆனது? கட்டளைக் கலித்துறை
  48. வீரசோழியத்தின் வேறு பெயர்?  வீரசோழியக் காரிகை
  49. வீர சோழியத்தில் காரிகை யாப்பிலான செய்யுட்களின் எண்ணிக்கை? 181
  50. காரிகை என அழைக்கப்படக் காரணாம் யாது?  மகடூஉ முன்னிலையாக [பெண்ணுக்கு இலக்கணம் உரைப்பதாக]எழுதுதல்
  51. புத்தமித்திரரின் சமயம் எது? பௌத்தம்
  52. இலக்கண விளக்கத்தின் ஆசிரியர் யார்? வைத்திய நாத தேசிகர்
  53. வைத்திய நாத தேசிகரின் மாணவர் யார்? படிக்காசுப் புலவர்
  54. வைத்திய நாத தேசிகர் எழுதிய நூல்கள் யாவை? மயிலம் பிள்ளை, பாசவதைப் பரணி, திருவாரூர்ப் பன்மணி மாலை, நல்லூர்ப் புராணம், திருவாட் போக்கிப் புராணம், கமலாலய அம்மைப் பிள்ளைத்தமிழ், மெய்ஞான விளக்கம்
  55. இலக்கண விளக்கத்தின் காலம்? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  56. இலக்கண விளக்க அதிகாரங்கள்? 3
  57. இலக்கண விளக்கத்தில் உள்ள இயல்கள்? 15
  58. இலக்கண விளக்க நூற்பாக்கள்? 941
  59. இலக்கண விளக்கத்தை மறுத்துரைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட நூல் எது? இலக்கண விளக்கச் சூறாவளி
  60. 'இலக்கண விளக்கச் சூறாவளி ஒரு அநியாயக் கண்டனம்' என்றவர் யார்? சி.வை.தாமோதரம் பிள்ளை
  61. குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்கள்? இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம்
  62. தொன்னூல் விளக்கத்தின் காலம்? கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
  63. தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர்? வீரமாமுனிவர்
  64. தொன்னூல் விளக்கத்திற்கு உரை எழுதியவர் யார்? வீரமாமுனிவர்
  65. தொன்னூல் விளக்கத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 370
  66. தொன்னூல் பொன்னூலாக விளங்குகிறது என்பவர் யார்? Dr.சேதுப்பிள்ளை
  67. சுவாமிநாதத்தின் காலம்? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  68. சுவாமிநாதத்தின் ஆசிரியர் யார்? சுவாமி கவிராயர்
  69. சுவாமிநாதத்தின் உட்பிரிவுகள் [இயல்கள்] எவ்வாறு குறிக்கப்பட்டு உள்ளன? மரபு
  70. சுவாமிநாதத்தில் எத்தனை மரபுகள் உள்ளன? 15
  71. சுவாமிநாத்தத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை யாது? 210
  72. முத்துவீரியத்தின் காலம் யாது? கி.பி. 19ஆம் நூற்றாண்டு
  73. முத்து வீரியம் அச்சான ஆண்டு? 1889
  74. முத்துவீரிய ஆசிரியர் யார்? முத்துவீரிய உபாத்தியாயர் [ முத்து வீர உபாத்தியாயர், முத்துவீருப் புலவர்]
  75. முத்து வீரியத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 15
  76. முத்து வீரிய நூற்பாக்களின் எண்ணிக்கை? 1288
  77. முத்து வீரியத்தின் உரை ஆசிரியர்? திருபாற்கடல்நாதன் கவிராயர்
  78.  எழுத்து, சொல் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள் யாவை?" நன்னூல், நேமிநாதம்
  79. நன்னூலின் காலம் யாது? கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு
  80. நன்னூலின் ஆசிரியர் யார்? பவணந்தி முனிவர்
  81. பவனந்தி முனிவரின் ஊர்? சியகங்கன் [மைசூரின் கோலார் பகுதி]
  82. நன்னூலில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 462
  83. நேமிநாதத்தின் காலம் யாது? 12 ஆம் நூற்றாண்டு
  84. நேமிநாத ஆசிரியர் யார்? குணவீர பண்டிதர்
  85. குணவீர பண்டிதரின் ஊர் எது? களந்தை [களத்தூர்]
  86. நேமிநாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சின்னூல்
  87. சின்னூல் எனப் பெயர் வரக் காரணம்? சுருக்கமாக இலக்கணம் கூறுவதால் 
  88. நேமிநாதப் பிரிவுகள் யாவை? 10 [எழுத்து-1, சொல்-9 : பெரும்பாலானவை மரபு என்றே குறிக்கப்படுகின்றன]
  89. நேமிநாத செய்யுள்கள் என்னப் பாவால் அனவை? வெண்பா
  90. நேமிநாத ஆசிரியரின் சமயம்? சமணம்
  91. நேமிநாததில் உள்ள நூற்பாக்கள் எத்தனை? 99
  92. நேமிநாதம் என்ன பாவால் ஆக்கப்பட்டது? வெண்பா
  93. நேமி நாதம் எனப் பெயரிடப்பட்டதன் காரணம் யாது? குணவீர பண்டிதர் தன் ஆசிரியரான நேமி நாதர் பெயரால் எழுதி உள்ளார். இவர் 22-ஆவது தீர்த்தங்கரரும் ஆவார்
  94. சொல்லுக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூல்கள் யாவை? பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
  95. பிரயோக விவேகத்தின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  96. பிரயோக விவேகத்தின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய தீட்சிதர்
  97. சுப்பிரமணிய தீட்சிதரின் ஊர்? ஆழ்வார் திருநகரி
  98. வடமொழியில் இருந்து தழுவி எழுதப்பட்ட நூல், வட மொழிக்கும் தமிழுக்குமான இலக்கண ஒற்றுமைகளை முன்னிறுத்திப் பேசுகின்றது.
  99. பிரயோக விவேகத்தில் உள்ள படலங்கள் எத்தனை? 4
  100. பிரயோக விளக்கச் செய்யுள்கள் என்னப்பாவால் ஆனவை? கட்டளைக் கலித்துறை
  101. பிரயோக விளக்கத்தில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 51 [கூடுதலாக 41 பாடல்களைக் கொண்டது என்றும் கூறுவர்]
  102. இலக்கணக்கொத்தின் காலம் யாது? 17ஆம் நூற்றாண்டு
  103. சுவாமிநாத தேசிகரின் ஊர்? திருவாவடுதுறை மடம்
  104. இலக்கணக் கொத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 3
  105. இலக்கணக் கொத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 119
  106. வடமொழியின் உயர்வுக்காகத் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் யாது? இலக்கணக் கொத்து
  107. இலக்கணக் கொத்து தமிழின் எழுத்துக்களாக உரைப்பவை? 5 [எ, ஒ, ற. ழ. ன]-{ஏனைய பொது எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்களே எனக்கூறும் அவர் 'ஐந்தெழுத்தால் ஒரு பாஷை என்று அறையவே நாணுவர் அறிவுடையோர் என்றும் கூறியுள்ளார்} 














Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...