இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 நவம்பர், 2020

அகத்திணையியல்

 


1.     அகத்திணைகள் எத்தனை?

        கைக்கிளை முதல் பெருந்திணை வரையுள்ள 7 திணைகள்

2.     அன்பின் ஐந்திணைகள் யாவை?

        முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்

3.    பாலையைத் தொல்காப்ப்யர் எவ்வாறு குறிக்கிறார்? 

        நடுவுநிலை திணை

4.     அகப்பொருளில் முப்பொருட்பாகுபாடு யாவை?

        முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்

5.    முதற்பொருள் என்பது யாது?

        நிலமும், பொழுதுமாகிய இரண்டும்

6.    படுதிரை வையம் பாத்தியப்பண்பு யாது?

        ஏழு திணைகளில் நடுவில் உள்ள அன்பின் ஐந்திணையின் நடு 

        திணையான  பாலை ஒழிந்த நான்கும். [கடலால் சூழப்பட்ட உலகம் 

        நான்காகப் பகுக்கப்பட்டு உள்ளது.

7.     பாலை என்பது யாது?

        முல்லையும் குறிஞ்சியும்  தன் வறட்சியால் துண்புற்று, தன் இயல்பு கெட்டு 

        உருவாகும் வறண்ட நிலப்பரப்பு

9) நிலங்களின் வகைப்பாடு - தொல்காப்பியர் [5], நம்பியகப்பொருள் [10]

வரை - குறிஞ்சி [மைவரை உலகன் எனத் தொல்காப்பியர் குறிக்கிறார்]

புறவு (காடு) - முல்லை [காடுறை உலகம் - தொல்காப்பியம்]

        சுரம் - பாலை    

பழமை(வயல்) - மருதம்    [தீம்புணல் உலகம் - தொல்காப்பியம் ]

திரை (கடல்) - நெய்தல்    [பெருமணல் உலகம்  -  தொல்காப்பியம்]

9.    கடவுள்

       முல்லை     -    மாயோன் [திருமால்]

        குறிஞ்சி    -    சேயோன் [வேலன்]   

        பாலை    -    கொற்றவை [தொல்காப்பியர் குறிக்கவில்லை

        மருதம்    -    வேந்தன் [இந்திரன்]

        நெய்தல்    -    வருணன்

10) கால வகைப்பாடு (2)

பெரும்பொழுது

சிறுபொழுது

11) பெரும்பொழுது - 6

1) கார் - ஆவணி, புரட்டாசி 

2) கூதிர் - ஐப்பசி, கார்த்திகை

3) முன்பனி - மார்கழி, தை

4) பின்பனி - மாசி, பங்குனி

5) இளவேனில் - சித்திரை, வைகாசி

6) முதுவேனில் - ஆனி, ஆடி

12) சிறு பொழுது

காலை - 6 -10 மணி

        நண்பகல் - 10 - 2 மணி

        எற்பாடு - 2 - 6 ம்ணி

        மாலை - 6 - 10 மணி

யாமம் - 10 - 2 மணி

வைகறை - 2 - 6 மணி

13. பெரும்பொழுது

        முல்லை    -    கார்

        குறிஞ்சி    -    கூதிர், பின்பனி

        பாலை       -    இளவேனில், முதுவேனில், பின்பனி

        மருதம்      -    கூறப்படவில்லை    [எனவே எல்லாப்பொழுதும்]

        நெய்தல்   -    கூறப்படவில்லை [எனவே எல்லாப்பொழுதும்]

14. சிறுபொழுது

       முல்லை    -     மாலை

        குறிஞ்சி    -    யாமம்

        பாலை       -    நண்பகல்

        மருதம்      -    வைகறை, விடியல்

        நெய்தல்   -   எற்பாடு  

15.    கருப்பொருள்

        நிலம் காலம் - கருப்பொருள்

16. உரிப்பொருள் - உரி என்பது ஒழுக்கம் 

        புணர்தல் - குறிஞ்சி

        பிரிதல்  - பாலை

        இருத்தல் - குறிஞ்சி

        ஊடல் - மருதம்

        இரங்கல்  -  நெய்தல்


17. கைகோள் வகை - 2

       களவு, கற்பு

18. இருவகைக் கற்பிற்குரிய மகளிர் - 3

    காதல் பரத்தை  -  களவொழுக்கம் - காமக்கிழத்தி 

    பெருங்குலக்கிழத்தி -   திருமணம்

19.  பிரிவு வகைகள்

        கற்பிப்பிரிவு 

        பரத்தை பிரிவு

        ஓதற் பிரிவு

         காவற் பிரிவு

        தூதுப்பிர்வு

பொருள்வயிற் பிரிவு

20.ஊடல் தணிக்கும் வாயில்கள் - 15

 காமக்கிழத்தி

        கொளைவல் பாணன

        காதல் புதல்வன்

        பாடினி

        விருந்து

        கூத்தர்

         ஆற்றாமை

         இளையர் 

        கண்டோர் 

         பாங்கர்

        பாகன் 

        பாங்கி 

        செவிலி 

         அறிவர்


21. பிரிவிற்கு உரியோர்

    ஓதற்பிரிவு -  அரசர், அந்தணர் [ 3 ஆண்டு] 

    காவற்பிரிவு - 2 ஆண்டு

    [ அறப்புறங்காவல் - நால்வருக்கு உரித்து

    நாடுகாவல் - மன்னன்]

தூது

தூதிப்பிரிவு - 2 - 1 ஆண்டு

    [வேதமாந்தர், வேந்தர்]

துணைவயிற்பிரிவு  - ஓராண்டு [வேந்தர், வணிகர், வேளாளர்]

அனைவருக்கும் உரிய பிரிவு

1) பரத்தையிற் பிரிவு

2) பொருள் வயிற்பிரிவு - 1 ஆண்டு


22. ஆறு வகை தொழில்களுள் மேம்பட்டவை யாவை ?

ஓதல், நாடு காவல், தூது போதல்

23. இழிந்தோர் தலைமக்களுக்கு உரிய பிரிவு ?

1) பரத்தையிற் பிரிவு 2) துணையிற்பிரிவு 3) பொருள் வயிற்பிரிவு

24. குறிப்பறிதல் - தலைவி தன் மீது கொண்ட வேட்கையைத் தலைவன் குறிப்பினால் அறிதலே

25. களவிற்கு உரிய கிளவித் தொகை - (17)

1) இயற்கைப் புணர்ச்சி

2) வன்புறை

3) தெளிவு

4) பிரிவில் மகிழ்ச்சி

5) இடந்தலைப்பாடு

6) பிரிவு கலங்கல்

7) பாங்காற்கூட்டம்

8) பாங்கிமதியும்பாடு

9) பாங்கிற்கூட்டம்

10) பாங்காமை பகற்குறி

11) பகற்குறி இடையீடு

12) இரவுக்குறி

13) இரவுக்குறி இடையீடு


26.     பிரிவுழிக் கலங்கலின் விரி - 5

        மாயமோ

        வாயில் பெற்று உய்தல்

        பண்பு பாராட்டல்

        பயந்தோh; பழிச்சல்

        கண்டமை பெறாது கலங்கு நோதலும்

27. இடந்தலைப்பாடு

இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைப் புணர்ந்த தலைவன் அடுத்த                     நாளும் அவ்விடத்தில் தலைவியைக் கூடுவது இந்தலைபாடு.

28. இடந்தலைப்;பாட்டின் வகை - 3

தெய்வம் தெளிதல்

கூடல்

விருத்தல்

29. இடந்தலைப்பாட்டின் விரி - 5

தந்த தெய்வம் தரும் எனச் சேறல் - தெளிவு

முந்துறக் காண்டல்

முயற்கல் கூடல்

புகழ்தலும்

ஆயத்து உய்த்தல் விடுத்தல்

30.    பாங்காற்கூட்டம்

3-ம் நாள் பாங்கனின் உதவியால் தலைவன் தலைவியை கூடுதல்                                 பாங்கற்கூட்டம்

31.    பாங்கற் கூட்டத்தின் வகைகள் - 7

சார்தல் 

கேட்டல்

சாற்றல்

எதிர்மறை

நேர்தல்

கூடல்

பாங்கிற்கூட்டல்


32. பாங்காற்கூட்டத்தின் விரி (24)

தலைவன் பாங்கனை சார்தல்

பாங்கன் தலைவனை உற்றது வினாதல்

தலைவன் உற்றது உரைத்தல்

கற்றறி பாங்கன் கிழறல்

        கிழவோன் சுழற்று எதிர்மறுத்தல்

        கிழவோர் பழித்தல்

        கிழவோன் வேட்டை தாங்கற்கு அருமை கற்றல்

        பாங்கன் தன்மனத்து அழுங்கல்

        தலைவனோடு அழுங்கல்

        எவ்விடத்து எவ்வியற்று என்றல்

        இவ்விடத்து இவ்வியற்று என்றல்

        இறைவனைத் தேற்றல்

        குறிவழிச் செவிலு

        இறைவியைக் கண்டல்

        இகழ்ந்ததற்கு இரங்கல்

        தலைவனை வியத்தல்

        தலைவியை வியத்தல்

        தலைவன் தனக்குத் தலைவிநிலை கூறல்

        தலைவன் சேறல்

        தலைவியைக் காண்டல்

        கலவியின் மகிழ்தல்

        புகழ்தல்

        தலைவியைப் பாங்கியொடு வருக எனப் பகர்தல்

     பாங்கிற்கூட்டல்

33. பாங்கி மதி உடன்பாடு

தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்ததைத் தோழி தன்னுடைய அறிவால் 

        ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் ஆகும்.

34. பாங்கி மதி உடன்பாட்டின் வகை :

        முன்னுறு உணர்தல்

        குறையுரை உணர்தல்

        இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்

35. மீட்சியின் வகை - (4)

 தெளித்தல்

          மகிழ்ச்சி

வினாதல்

        செப்பல்

36. மீட்சியின் விரி - (6)

        வரைதல்:  உடன்போக்கு சென்ற தலைமகன் மீண்டு வந்து வரைதலை 

        மேற்கொள்ளும் நிலையே வரைதலாகும்.

37.  வரைதற்குhpய கிளவி (3)

         உடன் போய் வரைந்து மீடற்கு

அவள் மனை வரைதல்

தன் மனை வரைதல் 

38. தன்மனை வரைதல்

உடன்போய் வரைந்து கொள்ளாமல் மீண்ட தலைவன் தலைவியைத் தன்             மனைவியின் கண்ணே வரைந்து கொள்ளுதல் - வகை (3)

 வினாதல்

 செப்பல்

 மேவல்

    39. தன் மனை வரைதல் விரி (5)

     40. உடன்போக்கு இடையிடு

தலைவன் தலைவியை சுற்றத்தாரிடம் விடுத்து தான் மட்டும் தனியே 

        செல்லுவது

வகை (4)

விரி(6)

41.    வரைதல்

 தலைவியை தலைவனுக்கு திருமணம் செய்து வைத்தல்

வரைதலின் விரி (2)


Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...