- தி. ஜானகிராமன் பிறந்த ஊர் எது? தஞ்சை
- தி. ஜா-வின் சிறுகதைத் தொகுப்புகள் யாவை? கொட்டு மேளம், சிகப்பு ரிஷா, அக்பர் சாஸ்திரி, பிடி கருணை
- மனித உணர்ச்சிகளை எழுத்தில் வடித்து வாசகனை உணர்ச்சி மயமாக்கும் சிறுகதை எழுத்தாளர் யார்? தி.ஜானகிராமன்
- படிப்போரைச் சிலிர்க்கச் செய்யும் தி. ஜாவின் சிறுகதை? சிலிர்ப்பு
- தி.ஜா சிறுகதையின் சிறப்பு? உணர்ச்சி, அழகியல், உரையாடல் நடை, பெண்ணியச் சிக்கல்
- குறிப்பிடத் தகுந்த தி.ஜா-வின் சிறுகதைகள் யாவை? சிலிர்ப்பு, கொட்டுமேளம், அக்பர் சாஸ்திரி [அக்கினி சாஸ்திரி], கோபுர விளக்கு
- பள்ளிச் சிறுவனின் மனநிலை பற்றிய தி.ஜா-வின் சிறுகதை? முள்முடி
- பாலியல் உளவியல் நுட்பம் சார்ந்த தி.ஜா-வின் கதை எது? வீடு
- பாலியல் தொழிலாளியின் மனச்சிக்கலைப் பேசும் தி.ஜா-வின் கதை? கோபுர விளக்கு
- பெரிய மனிதர்களின் போலித்தனத்தைப் பேசும் தி.ஜா-வின் சிறுகதை? கங்காஸ்நானம்
- கி.ராஜநாராயணனின் இயற்பெயர் யாது? ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர்
- கி.ரா. பிறந்த ஊர் எது? தூத்துக்குடி அருகில் இடைச்செவல்பட்டி
- கி. ரா-வின் பணி- பாண்டிச்சேரி பல்கலைக் கழக நாட்டுப்புறக் கலைகள் ஆவணக் காப்பக இயக்குனர் மற்றும் வருகை தரு பேராசிரியர்
- பாட்டி தன் பேரனுக்குக் கதை சொல்வது போன்ற பாங்கில் எழுதுபவர் யார்? கி.ரா
- கி.ரா-வின் முதல் கதை? கதவு
- எழுத்துலகிற்குள் நுழைந்த போது அவரது வயது? 40
- கி.ரா.-வின் முதல் சிறுகதைத் தொகுப்பு எது? கதவு
- கதவு வெளிவந்த ஆண்டு? 1965
- கி.ரா.வின் பால்ய வயதுத் தோழர் யார்? கு. அழகிரி சாமி
- வட்டார வழக்கின் முன்னோடி யார்? கி.ரா
- கி.ராவின் சிறுகதைத் தொகுப்புகள்? அப்பா பிள்ளை, கிடை சிறு நாவலும் 12 சிறுகதைகளும், கரிசல் கதைகள், கொத்தைப் பருத்தி, கி.ரா. கதைகள், கதவு, கண்ணிமை
- கி.ரா- பெற்ற விருதுகள்? சாகித்ய அகாதெமி, இலக்கியச் சிந்தனை
- கி.ரா-வின் தற்போதைய பொறுப்பு? சாகித்ய அகாதெமி தேர்வுக்குழு உறுப்பினர்
- கி.ரா. ஆசிரியராகப் பணியாற்றும் இதழ் எது? கதைச் சொல்லி
- குறும்படமான கி.ரா.வின் படைப்புக்கள்? விளைவு, கரண்ட்
- வானொலி நாடகமான கி.ரா.-வின் கதைகள்? முரண்பாடுகள், கிடை
- கி.ரா.-வின் கதைகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது? தெலுங்கு, ஆங்கிலம், இந்தி
- கி.ரா. வசன கர்த்தாவாக்கிய படம்? அருண்மொழி இயக்கும் பெரியார்
- மேலாண்மைப் பொன்னுசாமி பிறந்த ஊர் எது? விருதுநகர் மாவட்டம் மேலாண் மறை நாடு
- விருதுநகர் மாவட்ட மக்களின் 25 ஆண்டு கால மனோபாவத்தை ஆராய என் கதைகளை ஆய்வு செய்தாலே போதும் என்றவர் யார்? மேலாண்மைப் பொன்னுச்சாமி
- மேலாண்மைப் பொன்னுச்சாமி எது வரைக் கற்றவர்? 5 ஆம் வகுப்பு
- மேலாண்மைப் பொன்னுச்சாமி எழுத்தாளராக அறிமுகமான ஆண்டு- 1972
- மேலாண்மைப் பொன்னுச்சாமியை அறிமுகப்படுத்திய இதழ் - செம்மலர்
- மேலாண்மைப் பொன்னுச்சாமி எழுதிய சிறுகதை நூல்கள் - 16
- மேலாண்மைப் பொன்னுச்சாமி எழுதிய புதினங்களின் எண்ணிக்கை -5குறுநாவல், 6 நாவல்
- சாகித்ய அகாதெமி விருது பெற்ற மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைத் தொகுப்பு எது? மின்சாரப்பூ
- மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மின்சாரப்பூ சாகித்ய அகாதெமி வென்ற ஆண்டு எது? 2008
- மேலாண்மைப் பொன்னுச்சாமியின் எழுத்தில் உள்ள குறையாக முன்வைக்கப்படுவது யாது? மாற்றமற்ற ஒரே போக்கிலான கதை சொல்லல்
- அகிலனின் சிறுகதைத் தொகுப்புகள் எத்தனை? 14
- அகிலன் கதைகளின் தன்மை - காந்தியக்கதைகள்
- வல்லிக்கண்ணனின் சிறுகதைகள் எண்ணிக்கை - 500க்கும் மேல்
- வல்லிக்கண்ணனின் முதல் சிறுகதை யாது? சந்திரகாந்தக் கல்
- வல்லிக்கண்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் யாவை? நாட்டியக்காரி, வல்லிக்கண்ணன் கதைகள், ஆண் சிங்கம், வாழ விரும்பியவன்
- அகிலனின் இயற்பெயர் யாது? அகிலாண்டம்
- அகிலனின் சிறுகதைத் தொகுப்புகள் யாவை? மின்னுவதெல்லாம், வழி பிறந்தது, குழந்தைச் சிரித்தது, செங்கரும்பு, எரிமலை, ஒரு வேளைச் சோறு, சகோதரர் அன்றோ, சத்தி ஆவேசம், பசியும் ருசியும், வேலியும் பயிரும், விடுதலை
- முதன் முதலில் ஞானப்பீட விருது வென்ற தமிழ் படைப்பாளர்? அகிலன்
- அசோகமித்திரன் கதைகளின் மையம்? நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்
- அசோகமித்திரன் கதைகளின் சிறப்பு யாது? எளிமை, சொற்சிக்கனம், இயல்பான உரையாடல்
- அசோகமித்திரனின் சிறுகதைத் தொகுப்புகள் - உரிமை வேட்கை, உத்தர இராமாயனம், வாழ்விலே ஒருமுறை, இன்னும் சில நாட்கள், முறைப்பெண், காலமும் குழந்தைகளும், தந்தைக்காக
- அசோகமித்திரனின் எந்தச் சிறுகதை நூல் சாகித்ய அகாதெமி விருது வென்றது? அப்பாவின் சினேகிதர்
- அசோகமித்திரனின் இயற்பெயர் யாது? ஐ. தியாகராஜன்
- அசோகமித்திரன் எங்குப் பிறந்தார்? செக்கந்திரா பாத்தில் 1931
- அசோகமித்ரனின் தொடக்கம் முதல் இருபது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் யாது? கணையாழி
- தண்ணீருக்காக மாநகரங்களில் துயரப்படும் மக்களைப் பற்றிய அசோக மித்ரனின் கதை எது? குளித்து விடிவதற்குள்
- புலிவேசம் போடுவோர் பற்றிய அசோகமித்திரனின் சிறுகதை எது? புலிக்கலைஞன்
- ஜெகசிற்பியனின் இயற்பெயர் என்ன? ஜெர்வாஸ்
- ஜெகசிற்பியன் தமிழக அரசின் முதற் பரிசு பெற்ற கதை யாது ? ஒரு பாரத புத்திரன்
- ஒரு பாரத புத்திரனின் தமிழக அரசின் முதல் பரிசு வென்ற ஆண்டு? 1986
- ஜெயகாந்தனின் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமான ஆண்டு எது? 1954
- ஜெகாந்தனை சிறுகதை எழுத்தாளராக அறிமுகப்படுத்திய இதழ் எது? சரஸ்வதி
- ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்புகள் யாவை? ஒரு பிடி சோறு, இனிப்பும் கரிப்பும், உதயம், சுமைதாங்கி, தேவன் வருவாரா, மாலை மயக்கம், உண்மை சுடும், புதிய வார்ப்புகள், குரு பீடம், சக்கரம் நிற்பதில்லை, இறந்த காலம்
- கடை நிலை ஏழ்மையின் காட்சியைச் சித்தரிக்கும் ஜெயகாந்தனின் கதை எது? ஒரு பிடி சோறு
- ஜெயகாந்தனின் சிறந்த கதைகள் யாவை? பிரம்மோபதேசம், யாருக்காக அழுதான், ஒரு பிடி சோறு, அக்கினிப் பிரவேசம், இனிப்பும் கரிப்பும்.
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 2 அக்டோபர், 2020
சிறுகதை வினா வங்கி - 4
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...