- தமிழ் பக்தியின் மொழி என்றவர்? தனிநாயக அடிகள்
- தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்ற மொழியறிஞர்? மாக்ஸ்முல்லர்
- ஆற்றல் மிக்கதாகவும், சொல்ல வந்த பல கருத்துக்களை சில சொற்களால் புலப்படுத்துவதாகவும் தமிழ் போல் வேறு எம்மொழியும் இல்லை என்றவர் யார்? பெர்சிவல் பாதிரியார்
- வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய உலக இலக்கிய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாக கூறியவர்? டேவிஸ் [Rhys Davis]
- இந்திய மொழிகள் எவ்வாறு பகுக்கப்படுகின்றது? திராவிட இனம், ஆரிய மொழி இனம்
- திராவிட மொழி இனத்தில் உள்ள திருந்திய மொழிகள் எத்தனை? 6 [தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குடகு, துளு]
- திருந்தா வடதிராவிட மொழிகள் யாவை? பிராகுய், கூர்க், மால்ரோ
- திருந்தா மத்திய திராவிட மொழிகள் யாவை? கோலமி- நாய்கி, பார்ஜி, கொண்டி, கோண்டு, குய்-கூவி
- திருந்தா தென் திராவிட மொழிகள் யாவை? துளு, கூர்க், துதம், கோதம்
- வட, தென், மத்திய திராவிட மொழிகளைப் பகுத்துக் கூறியவர்? பரோ
- வட இந்திய மொழிகள் பெரும்பாலானவை எந்த இனத்தைச் சேர்ந்தவை? ஆரியத் திராவிட இனம்
- திராவிட மொழி இனத்தின் தாய் மொழி எது? தமிழ்
- கால்டுவெல் குறிப்பிடும் திராவிட மொழிகள் எத்தனை? 12
- அண்மைக்காலத்தில் குறிக்கப்படும் திராவிட மொழிகளின் எண்ணிக்கை? 20
- தமிழும் வடமொழியும் கலந்து வடநாட்டவர் பேசிய மொழி எது? வடகு
- தமிழும் வடுகும் கலந்து பிறந்த மொழி என்ன? கன்னடம்
- தமிழும் வடுகும் கலந்து கன்னடம் பிறந்ததாகக் குறிக்கும் இலக்கியம் எது? கலிங்கத்துப்பரணி
- "மழலைத் திருமொழியிற் சில வடுகும் சில தமிழும் குழறித் தருநாடியார் குறுகிக் கடைதிறமின் - எனும் கலிங்கத்துப்பரணி வரி எம்மொழி குறித்து பேசுகிறது? கன்னடம்
- கன்னடத் தொடர்பாலும், கிரந்த எழுத்துக்களின் செல்வாக்காலும் தமிழில் இருந்து பிரிந்த மொழி எது? மலையாளம்
- ரிக் வேதத்தில் அயித்ரே பிரமாணத்தில் குறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திராவிட இனம் எது? ஆந்திரர்
- கி.மு.வில் இயற்றப்பட்ட உரோம நாடகத்தில் இருப்பதாகக் கூறப்படும் சொற்கள் எம்மொழிச் சொற்கள்? கன்னடம்
- இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் எனக் குறிக்கும் நூல்? பிங்கல நிகண்டு
- தமிழ் வையை தண்ணம் புனல் என்னும் பரிபாடல் வரியில் தமிழ் என்னும் சொல் குறிக்கும் பொருள்? இனிமை
- தமிழ் என்பதன் பொருள்கள் யாவை ? இனிமை, நீர்மை, அழகு, மென்மை
- வால்மீகி தமிழை எவ்வாறு குறிக்கிறார்? மதுரமான மொழி
- இனிமைத் தமிழ்மொழி எமது - எனக் குறிப்பவர் யார்? பாவேந்தர்
- தமிழுக்கு அமுதென்று பேர் - எனப் பாடியவர் யார்? பாவேந்தர்
- வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி - எனத் தமிழைச் சிறப்பித்தவர் யார்? மகாகவி பாரதியார்
- "குமரி மாந்தன் முதல் மாந்தன். அவன் பேசிய மொழியே முதன்மொழி. அதுவே நந்தம் தாய் மொழியாம் தமிழ்"- என்றவர் யார்? பாவாணர்
- செம்மொழிக்குரியதாகச் சொல்லப்படும் பண்புகள் எத்தனை? 16
- பிற மொழி தேவையின்றி சொல்வளம், கருத்துவளம், இலக்கணக் கட்டுப்பாடுகள் நிறைந்த மொழி எவ்வாறு அழைக்கப்படும்? தனிமொழி
- தனிமொழிகள் யாவை? தமிழ், இலத்தீன், கிரீக், ஹீப்ரு, சமஸ்கிருதம், சீனம்
- தமிழில் உள்ள செம்மொழி நூல்கள் எத்தனை? 41 [பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியம், தொல்காப்பியம், இறையனார் களவியல்]
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 19 செப்டம்பர், 2020
தமிழின் தொன்மைச்சிறப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக