இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 அக்டோபர், 2020

இடைச்சொல்

 1. இடைச்சொல்லின் இயல்பு யாது? 

            பெயரோடும், வினையோடும் இணைந்து இயங்கும் [நடைபெற்றியலும்] 

            இயல்புடையது. தமக்கென இயல்பற்றது [தமக்கியல்பிலது].

2. இடைச்சொல் சொல்லில் எங்கு வரும்?

            சொல்லின் இடையில், முன்னில், பின்னால் வரும்.

3. மன் உணர்த்தும் பொருள்:

            கழிவு, ஆக்கம், ஒழியிசை [3]

4. தில் உணர்த்தும் பொருள்:

        விழைவு, காலம், ஒழியிசை [3]         

5. கொன் உணர்த்தும் பொருள்:

        அச்சம், பயன் இன்மை, காலம், பெருமை [5]

6. உம் உணர்த்தும் பொருள்:

        எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் [8]

7. ஓ உணர்த்தும் பொருள்:

        பிரினிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு [6]

8. ஏ உணர்த்தும் பொருள்:

        தேற்றம் [தெளிவு], வினா, பிரிநிலை, எண், ஈற்றசை [5]

9. என உணர்த்தும் பொருள்:

        வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் [6]

10. என்று உணர்த்தும் பொருள்:

        வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் [6]

11. தில் உணர்த்தும் பொருள்:

        விழைவு [தன்மைப் பொருளில் மட்டும் வரும்], காலம், ஒழியிசை

12. அளபெடுத்தல் ஓசையுடைய ஏ பொருள்:

        சிறப்பு

13. அளபெடுத்தல் ஓசையுடைய ஓ பொருள்:

        மிகுதி

14. மற்று இடைச்சொல் உணர்த்தும் பொருள்:

        வினைமாற்று, அசைநிலை

15. எற்று உணர்த்தும் பொருள்:

         கழிந்ததை உணர்த்தும்

16. மற்றையது உணர்த்தும் பொருள்:

        முன் குறித்தது ஒழிய  அதன் இனமான மற்றொன்றைக் குறிப்பது.

17. மன்ற உணர்த்தும் பொருள்:

        தெளிவு [உறுதி]

18. தஞ்சம் உணர்த்தும் பொருள்:

        எளிது [எளிமை]

19. அந்தில் உணர்த்தும் பொருள்:

        அங்கு என்னும் பொருளிலும், அசைநிலையாகவும் வரும்

20. கொல் உணர்த்தும் பொருள்:

        ஐயப்பொருள்

21. எல் உணர்த்தும் பொருள்:

        விளக்கம்

22. ஆர் உணர்த்தும் பொருள்:

        பலர்பால் இறுதிநிலை [விகுதி], அசைநிலை

23. ஏ, குறை உணர்த்தும் பொருள்:

        இசைநிறை, அசைநிலை

24. மா உணர்த்தும் பொருள்:

        வியங்கோளில்  அசையாக வரும்.

25. முன்னிலை அசைச்சொற்கள் யாவை?

        மியா, இக, மோ, மதி, இகும்,  இசின் [இகும், இசின் முன்னிலையில்                             மடுமின்றி ஏனைய தன்மை, படர்க்கை இடச்சொற்களிலும் வரும்]

26. அம்ம பொருள்:    படர்க்கையோரைத் தன்முகமாக்கித் தான் சொல்வதைக் 

        கேட்கச் செய்வது. 

27. ஆங்கு உணர்த்தும் பொருள்:    உரையாடலில் உரையசை

28. போலி உணர்த்தும் பொருள்: ஒப்புமை இன்றி வரும் போலும் உரையசை

29. அசைநிலைச் சொற்கள் : யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது [7]

28. பிரிவில் அசைநிலைகள் : ஆக, ஆகல், என்பது, அளபெடை ஔ

29. ஏ, ஓ எங்குக் குறிப்புப் பொருள் தரும்: ஏ - நன்று, அன்று உடன் இணைந்து,             ஓ - அந்து, அன் உடன் இணைந்து குறிப்புப் பொருள் உணர்த்தும்.

30. எச்ச உம்மைக்கு உரிய சொல் உம் இல்லாமல் எழுதப்படுவது செஞ்சொல் ஆகும். [மாவும், பலாவும், வாழையும் என்றின்றி மா, பலா, வாழை என வருவது செஞ்சொல் கிளவி ஆகும்.

31. உம், என என்னும் எண்ணிடக் சொற்கள் இறுதியில் தொகைச்சொல் பெற்றோ, பெறாமலோ வரலாம்.

32. எண்ணிக்கையைக் குறிக்கும் ஏகார இடைச்சொல் இறுதியில் மட்டும் வந்தாலும் ஏற்க உரியதே. [நிலமே, பொழுதே -வ்எனவும் வரலாம்.  அவ்வாறின்றி நிலம், பொழுதே எனவும் வாரலாம்]

33. எனா, என்றா எவ்வாறு வரும்?

    எனவும் - எனா, என்று - என்றா ஆகும். இவை தொகுத்துச் சொல்லும் எண்ணிக்கையின் இறுதியில் மட்டுமே வரும்.

34. எண்ணிக்கை இறுதியில் தொகை பெற்றும், பெறாமலும் வருவதற்கு உரிய இடைச்சொற்கள் யாவை? எனா, என்றா, செவ்வெண், ஏ [அறம் பொருள் இன்பம் - என்றும் வரலாம், அறம் , பொருள், இன்பம் மூன்றும் எனத் தொகுத்தும் வரலாம்.

35. உம் சில இடங்களில் தொக்கி வரும். சில இடங்களில் உந்து ஆகும்.

36. எண்ணிக்கையை அடுக்கிச்சொல்லும் தொடரில் என்று, என, ஒடு  சில இடங்களில் எல்லாப்பொருளோடும் வாராம்ல் தொக்கி வருவதுண்டு. [அன்பொடு, அருளொடு, அறனொடு எனவும்  வரலாம். அன்பு, அருள், அறனொடு எனவும் வரலாம்]

        












உரியியல்

  1. உரிச்சொல் எவற்றின் அடிப்படையில் தோன்றும்?                                                     இசை, குறிப்பு, பண்பு
  2. உரிச்சொல் எவற்றிற்கு உரியதாய் அமையும்?                                                     பெயர், வினை
  3. உரிச்சொல் எவ்வாறு பொருள் வழங்கும்?                                                      ஒருசொல் பலபொருட்கு உரியவை, பலசொல் ஒருபொருட்கு உரியவை
  4. உரிசொல் வகைகள் யாவை?                                                                            வெளிப்படு சொல், வெளிப்பட வராத சொல்
  5. தொல்காப்பிய உரியியல் பேசும் உரிச்சொல் வகை யாது?                          வெளிப்பட வராத உரி சொல் 
  6. மிகுதிப் பொருளுடைய உரிச்சொற்கள் யாவை?                                                          உறு, தவ, நனி
  7. உரு என்னென்னப் பொருளில் வரும்?                                                                                     உட்கு, அச்சம்
  8. புரை என்னப் பொருள் உடைய உரிச்சொல்?                                                                    உயர்வு
  9. நிறப்பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                                 குரு, கெழு 
  10. இன்னாமை உரிச்சொற் எப்பொருளில் வரும் ?                                                செல்லல், இன்னல்
  11. வளம் உணர்த்தும் உரிச்சொல் யாது?                                                                     மல்லல்
  12. ஏ உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாவை?                                                           பெற்று, பெருக்கம்
  13. உகப்பு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்கள் யாவை?               உயர்வு, மேன்மேல் உயர்தல்
  14. உவப்பு என்னும் உணர்த்தும் பொருட்கள் யாவை?                                           உவகை, மகிழ்ச்சி
  15. பயப்பு உணர்த்து  பொருள் யாவை?                                                                          பயம், பயன்
  16. பசப்பு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                             நிறம் [பசலை நிறம், பிரிவால் ஏற்படும் ஒளி குறைந்தத் தோற்றம்]
  17. இயைபு உணர்த்தும் பொருள் யாது?                                                                   புணர்ச்சி [கூடுதல், ஒருங்கிணைத்தல்]
  18. இசைப்பு உணர்த்தும் பொருள் யாது?                                                        இசைத்தல் [யாழ் இசைத்தல்]
  19. சுழற்சிப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                                 அலமரல், தெருமரல்
  20. இளமைப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                          மழ, குழ
  21. சீர்த்தி உணர்த்தும் உரிச்சொற்கள் யாவை?                                              மிகுபுகழ்
  22. சிறத்தல் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                   கூர்ப்பு [கூர்], கழிவு [கழி] 
  23. விரைவுப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                        கதழ்வு, துனைவு
  24. நடுக்கப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                                 அதிர்வு, விதிர்ப்பு
  25. நேர்பு [நேர்மை, நேரான]பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?      [வார்] வார்தல், [போகு] போகல், [ஒழுங்கு] ஒழுகல்
  26. தீர்தல், தீர்த்தல் எனும் உரிச்சொற்கள் உணர்த்தும் பொருட்கள் யாவை?  விடுதல், நீங்குதல், நீக்குதல், பிரிதல்
  27. மகிழ்ச்சியான விளையாட்டைக் குறிக்கும் உரிச்சொற்கள் யாவை?  கெடவரல், பண்ணை
  28. பெருமை மற்றும் பெரிது என்னும் பொருளை உணர்த்தும் உரிச்சொற்கள் யாவை? தட, கய, நளி
  29. தட என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாவை?                        கோட்டம், வளைவு
  30. கய உணர்த்தும் பொருள் யாது?                                                                        மென்மை
  31. நளி உணர்த்து பொருள் யாது?                                                                                 செறிவு
  32. பழுது உணர்த்தும் பொருள் யாது?                                                                       பயமின்று [பயனில்லை]
  33.  சாயல் உணர்த்தும் பொருள் யாது?                                                                       மென்மை
  34. முழுது என்னும் உரிச்சொல் குறிக்கும் பொருள்?                                           எஞ்சாமை [முழுமை]
  35. வம்பு என்னும் உரிச்சொல் குறிக்கும் பொருள்?                                           நிலையின்மை
  36. மாதர் எனும் உரிச்சொலின் பொருள் என்ன?                                                    காதல்
  37. விருப்பத்தைக் குறிக்கும் உரிப்பொருள் யாது?                                                 நம்பு, மேவு
  38. உள்ளதன் நுணுக்கம் என்பதைக் குறிக்கு உரிச்சொல் யாது?                ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்
  39. தனிமையை உணர்த்தும் உரிப்பொருள் யாது?                                                    புலம்பு
  40. நிறைவுப்  பொருளில் உள்ள உரிப்பொருள் யாது?                                       துவன்று
  41. முதிர்வுப் பொருளில் உள்ள உரிப்பொருள் யாது?                                          முரஞ்சல்
  42. வெம்மை என்னும் உரிப்பொருள் விளக்கும் பொருள் யாது?                         வேண்டல், விரும்புதல்
  43. பொற்பு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                    பொலிவு, அழகு
  44. வறிது என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                  சிறிது
  45. ஏற்றம் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                         நினைவு, துணிவு
  46. பெட்புப் பொருளுக்கான உரிச்சொல் யாது?                                                  பிணை, பேண் [பெட்பு என்பது பாதுகாத்தல், விரும்புதல், புறந்தருதல்]
  47. பணை என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                            பிழை, பெரிது
  48. படர் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                       நினைத்தல் [உள்ளல்], செல்லுதல்
  49. பையுள், சிறுமை எனும் உரிச்சொல்லின் பொருள் யாது?                           நோய், துன்பம்
  50. எய்யாமை உரிச்சொல்லின் பொருள் யாது?                                                      அறியாமை
  51. நன்று உணர்த்தும் பொருள்?                                                                                        நன்று
  52. தா என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                                 வலிமை, வருத்தம்
  53. தெவு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                                   கொள்ளுதல்
  54. தெவ்வு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                          பகைமை [தெவ்வர் - பகைவர்]
  55.  செறிவுப் பொருள் உணர்த்தும் உரிப்பொருள் யாது?                                      விறப்ப், உறப்பு, வெறிப்பு
  56. விறப்பு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                           அச்சம் [வெரூஉ]
  57. அரவம் [ஆரவாரம், பேரோசை] பொருளிலான உரிச்சொற்கள் யாவை?      கம்பலை, சும்மை, கலி, அழுங்கல்
  58. அழுங்கல் உணர்த்தும் பொருள் யாது?                                                                 அரவம், இரக்கம், கேடு             
  59. மயக்கம் பொருளில் வரும்  உரிச்சொல் யாது?                                                கழுமு
  60. செழுமை எனும் உரிப்பொருள் உணர்த்தும் பொருள் யாது ?                     வளம், கொழுப்பு
  61. விழுமம் உரிப்பொருள் உணர்த்து பொருள்?                                                     சீர்மை, சிறப்பு, இடும்பை
  62. கருவி உரிப்பொருளின் பொருள் யாது?                                                                    தொகுதி
  63. கமம் உரிப்பொருளின் பொருள் யாது?                                                             நிறைவு
  64. அரி என்னும் உரிப்பொருளின் பொருள் யாது?                                             ஐம்மை, நொய்ம்மை, மென்மை
  65. கவவு என்னும் உரிப்பொருள் உணர்த்தும் பொருட்கள் யாவை?                   அகத்திடுதல், தழுவுதல்
  66. இசைத்தல்  பொருளிலான உரிப்பொருள் யாது?                                                           துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல்
  67. கழிந்த பொருளைக் குறிக்கும் உரிப்பொருள் யாது?                                   இரங்கல்
  68. வறுமை என்னும் பொருள் உணர்த்தும் உரிச்சொல் யாது?                      இலம்பாடு, ஒற்கம்
  69. பரத்தல் [பரப்புதல்] பொருளிலான உரிச்சொல் யாது?                                   ஞெமிர்தல், பாய்தல்
  70. கவர்வு உரிச்சொல்லின் பொருள் யாது?                                                            விருப்பு
  71. சேர் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                                    திரட்சி
  72. அகலப் பொருளில் வரும் உரிச்சொல் யாது?                                                   வியல் 
  73. அச்சப்பொருளில் வரும் உரிச்சொல் யாது?                                                         பேம், நாம், உரும்
  74. வய என்னு உரிச்சொல்லின் பொருள் யாது?                                                   வலிமை
  75.  ஒளி என்னும் பொருளிலான உரிச்சொல் யாது?                                                  வாள்  
  76. அறிவின் திரிபை உணர்த்தும் உரிச்சொல் யாது?                                             துயவு
  77. உயா என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்?                                         உயங்கல்  [வருந்துதல், துயரப்படுதல்]
  78. சூழ்ச்சி [சூழுதல்]ப் பொருளிலான உரிச்சொல் யாது?                                                           உசா           
  79. வேட்கைப் பெருக்கப் பொருளிலான உரிச்சொல் யாது?                                  வயா
  80. வெகுளி என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                          கறுப்பு, சிவப்பு
  81. நிறவேறுபாட்டை உணர்த்தும் உரிச்சொல் யாது?                                             கறுப்பு, சிவப்பு
  82. நுண்மை [நுணுக்கமான அறிவு] என்னும் பொருளின் உரிச்சொல் யாவை?    நொசிவு, நுழைவு, நுணங்கு
  83.  குழந்தை ஈணுவதைக் குறிக்கும் உரிச்சொல் யாது?                                      புனிறு
  84. நனவு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                                களன், அகலம்
  85. மதவு, மத என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                            மதன், வலிமை
  86. மத என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                  மிகுதி, வனப்பு
  87. யாணர் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                புது வரவு
  88. அமர்தல் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                     மேவல் [விருப்பம்]
  89. யாண் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                கவின் [அழகு]
  90. வாழ்த்தல், வழிபடுதல் பொருளிலான உரிச்சொல் யாது?                                பரவுதல், பழிச்சுதல்
  91. கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                                 வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், தெய்வத்தின் முன் சத்தியம் செய்தல் [முன் தேற்று]
  92. கடி என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                   ஐயம், கரிப்பு
  93. ஐ என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                    வியப்பு 
  94. முனைவு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                       முனிதல் [சினத்தல், வெறுத்தல்]
  95. வை என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                 கூர்மை
  96. எறுள் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                             வலிமை
  97. உரிச்சொல்லுக்கு எவ்வாறு பொருளுணர வேண்டும்?                                 அதற்கு முன்னும் பின்னும் உள்ள சொற்களோடு தொடர்புப்படுத்திப் பொருளறிய வேண்டும் .                                                                                                         
  98. ஒரு உரிச்சொல்லின் பொருளுக்குப் பொருள் தேடினால் அது வரம்பின்றிப் போகும். [பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே]
  99. உரிப்பொருளுக்கான பொருளை அறிவது உணர்வோரின் உணர்ச்சி, அறிவு, சார்ந்தது [உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே]
  100. உரிச்சொல்லில் எழுத்துப் பிரிந்து வராது                                                              [எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல்பன்றே]









  1.  

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...