இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 அக்டோபர், 2020

தொகைநிலைத் தொடரும், தொகாநிலைத்தொடர்

 1.பிரிக்கப் பிரியாது தொக்கி வரும் உறவுப் பெயர்கள் யாவை?

        த, ந, நு, எ - இவற்றை முதலாகக் கொண்ட தமன், தமர், நமன், நமர், நுமன்,

        நுமர், எமன், எமர், தாய், தந்தை,  ஞாய் போன்ற சொற்கள் 

2. தொகை போல அடுக்கி வருவன யாவை?

        இசைநிறை [ஏஏ ஏஏ அம்பல் மொழிந்தனள்],

        அசைநிலை [அன்றன்றே]

        பொருளொடு புணர்தல் [பாம்பு பாம்பு]

3. தொகைமொழிகள் எத்தனை வகைப்படும்? ஆறு

4. தொகைமொழிகள் யாவை?

        வேற்றுமைத்தொகை, உவமத் தொகை, வினைத்தொகை,                                             பண்புத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை

5. வேற்றுமைத்தொகை என்றால் என்ன?

        வேற்றுமைத் தொடர்களில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது.                          உருபுகளோடு  கூடிய ஆறு வேற்றுமைகள்ம் தொக்கிவரும். 

        [நிலம் கடந்தான், பொற்குடம், கரும்பு வேலி, கருவூர்க்கோவில், முருகன்                     கோயில், மன்றப் பெண்ணை]

6. உவமத்தொகை என்றால் என்ன?

        உவமைத் தொடரில் உவம உருபு தொக்கி வருவது. [புலிகொற்றன்,                              மழைக்கை. பொன்மேனி]

7. வினைத்தொகை என்றால் என்ன? 

        வினைத்தொடரில் காலம் மறைந்து வருவது.

         [ஆடரங்கு, நாய்க்கடி, பாய்புனல்]

8. பண்புத்தொகை என்றால் என்ன?

        வண்ணம், வடிவம், அளவு, சுவை போன்றவையும் பிறவும் அதன் பண்பை             உணர்த்தி இத்தன்மை உடையது எனக்கூறுவது ஆகும். 

        [செவ்வானம், வட்டக்கல், நெடுங்கோல், இன்சொல்]

        இருபெயரொட்டாய்  வருவனவும் பண்புத்தொகையாகக் கொள்ளப்படும்.             [பனைமரம், மார்கழித்திங்கள்]

9. உம்மைத்தொகை என்றால் என்ன?

        உம் தொக்கி வருவது உம்மைத் தொகை எனப்படும். [காய்கறி, காய்கனி]

10. உம்மைத் தொகைப் பொருந்தி வரும் இடங்கள் யாவை?

        இரு பெயர்கள் : காய்கறி

        பல பொருள்கள்: அறம் பொருளின்பம்

        முகத்தல் அளவுகள்: தூணிப்பதக்கு

        எண்ணும் பெயரும்: பதினைவர்

        நிறுத்தலளவைப் பெயர்: தொடியரை

        எண் பெயர்: பதினைந்து

11. அன்மொழித்தொகை என்றால் என்ன? 

        பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத் தொகையை அடுத்து                 இறுதியில் பிற சொற்கள் தொக்கி வருவது. [குறுந்தொடிவந்தாள்]

12. தொகைச்சொற்களில் பொருள் சிறந்து வரும் இடங்கள் யாவை?

        முன்மொழியில், பின் மொழியல், அவ்விரு மொழிகளிலும், இரண்டிலும்

        அல்லாது வேறு மொழி. 

13. எல்லாத்தொகையும் ஒரு சொல் நடையினை உடையவை.

14. உம்மைத்தொகையில் உயர்திணைச் சொற்கள்  பலர்பால் முடிவு                                 உடையவை. [கபிலபரணன் - கவிலபரணர்]

 15. ஒருசொல் அடுக்கு எத்தனை வகைப்படும் [ இசைநிறை, அசைநிலை, 

        பொருளோடு புணர்த்தல்]. 

16. இசை நிறை எத்தனை அடுக்கு வரை அடுக்கி வரும்?

    இரண்டு முதல் நான்கு வரை. [ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்குமே]

17. விரைவு சொல் அடுக்குதற்கு உரிய வரம்பு யாது? 3 [தீ தீ தீ]

18. வினாவோடு வரும்போது அசைநிலையாக வரும் வினைச்சொற்கள்

         யாவை? கண்டீர்.கொண்டீர், சென்றீர், போயிற்று என்னும் நான்கு             

        வினைப்பொருளை உணர்த்தவில்லை எனின் அவை அசைநிலை


       







பெயரியல்

 1. எல்லா சொல்லும் ​​​​​​​​​​​​​​​​​​-​​​​​​------------------ குறித்தன. [பொருள்]

2. சொல்லின் இயல்புகள் யாவை? சொல் பொருளை அறியச் செய்யும், தன்னை         அறியச் செய்யும்.

3. சொல்லின் பொருண்மை நிலைகள் எத்தனை?

     2 [வெளிப்படை [தெரிநிலை], குறிப்பு] 

4. தொல்காப்பியர் குறிப்பிடும் சொல் வகைகள் யாவை? பெயர், வினை

5. பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் சொல் வகைகளாகத்

     தொல்காப்பியர் குறிப்பன யாவை? இடைச்சொல், உரிச்சொல்

6. பெயர் சொற்கள் எத்தனை வகைப்படும்? உயர்திணைப் பெயர், அஃறிணைப்     பெயர், இருதிணைக்கும் உரிய விரவுப் பெயர் [ பொதுப்பெயர்]

7. உயர்திணைப் பெயர்கள் யாவை?

    அவன், இவன், உவன், அவள், இவள், உவள்,  அவர், இவர், உவர், யான், 

    யாம்,  நாம், யாவன், யாவள், யாவர், ஆண்மகன், பெண்மகள், பெண்டாட்டி, 

    நம்பி, நங்கை, மகன், மகள்,   மாந்தர், மக்கள், ஆடூஉ, மகடூஉ, அவ்வாளன், 

    இவ்வாளன், உவ்வாளன், அம்மாட்டி, இம்மாட்டி, உம்மாட்டி, அவ்வாட்டி,

    இவ்வாட்டி, உவ்வாட்டி, பொன்னன்னாள், எல்லாரும், எல்லீரும், 

    பெண்மகன்

8. உயர்திணைப் பெயர் வகைகள்?

        நிலப்பெயர், குடிப்பெயர், குழுப்பெயர், வினைப்பெயர், உடைப்பெயர், 

        பண்புப்பெயர், பல்லோர் குறித்த முறை நிலைப் பெயர்,  பல்லோர் குறித்த 

       சினை நிலைப் பெயர்,   பல்லோர் குறித்த திணை நிலைப் பெயர்,  கூடி 

       விளையாடும் கூட்டப் பெயர், எண்ணியற் பெயர்.

9. நிலப்பெயர்கள்: மதுரையான், சோனாட்டான்

10. குடிப்பெயர்கள்: சேரன், சோழன், பாண்டியன்

11. குழுப்பெயர்கள்: அவையத்தார், மன்றத்தான், சங்கத்தான்

12. வினைப்பெயர்கள்: கொல்லன், தச்சன், 

13. உடைப்பெயர் [உடைமைப் பெயர்]: செல்வன், பொன்னன், வேலன்

14. பண்புப்பெயர்: கரியன், நல்லன், செய்யோன், செய்யோன்

15. முறைப்பெயர்: தந்தையர், தாயர், அன்னையர்

16. சினை [உறுப்பு]ப் பெயர்: பெருந்தோளர், குறுங்காலர், சிற்றிடையாள்

17. திணைப்பெயர்: வெட்சியார், வஞ்சியார், வேட்டுவர், ஆயர், குறிஞ்சியர்

18. ஆடுதற்கு உரிய குழுவின் பெயர்:   செவ்வணியர், வெள்ளணியர்

19. எண்ணியற் பெயர்: அறுவர், பதின்மர், ஆயிரத்தார், நூற்றுவர்

20. அஃறிணைப் பெயர்கள் யாவை?

      அது, இது, உது, அஃது, இஃது, உஃது, அவை, இவை, உவை, அவ், இவ், உவ், 

     யாது, யா, யாவை, பல்ல,  பல, சில, உள்ள, இல்ல, தொழிற்பெயர் 

    [வினைப்பெயர்], பண்புப் பெயர், எண்ணுப் பெயர், ஒப்புப்[உவமை] பெயர்

21. வினையாலணையும்  அஃறிணைப் பெயர்கள்: உழுதது, வந்தது, செல்வது

22. பண்புகொள் அஃறிணைப் பெயர்கள்: கரியது, நல்லது,

23. எண்ணிக்கை அஃறிணைப் பெயர்கள்: பொன்னனையது, வெள்ளியன்னது

24. விரவுப் பெயர்கள் எவ்வாறு பால் விளங்க வரும்? 

        வினைச் சொல்லோடு மட்டும் பால் காட்டும்.

         [சாத்தன் வந்தான், சாத்தி வந்தது]

25. நிகழ்காலத்தில் வரும் சொல்லில் ஒருமையில் பால் உணர்த்துவன யாவை?

        சாத்தி நூல் பயிலும், சாத்தன் குழல் ஊதும்

26. விரவுப் பெயர் வகைகள் யாவை? 

     இயற்பெயர், சினைப் பெயர், சினைமுதற் பெயர்,  முறைப்பெயர், தாம், 

    தான், எல்லாம், நீயிர், நீ

27. விரவுப் பெயரில் இயற்பெயர்கள் எத்தனை வகைப்படும்?

        4 [பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர், பன்மை இயற்பெயர், 

            ஒருமை இயற்பெயர்]

28. விரவுப்பெயரில் சினைப் பெயர்கள் எத்தனை வகைப்படும்?

        4 [பெண்மை சினைப்பெயர், ஆண்மைசினைப்பெயர், பன்மை 

            சினைப்பெயர், ஒருமை சினைப் பெயர்]

29. சினை முதற்பெயர் எத்தனை வகைப்படும்?

        4 [பெண்மை சுட்டிய  சினை முதற்பெயர், ஆண்மை சுட்டிய சினை 

            முதற்பெயர், பன்மை சுட்டிய சினைமுதற்பெயர், ஒருமை சுட்டிய 

             சினை முதற்பெயர்]

30. முறைப் பெயர்கள் எத்தனை வகைப்படும்?

        2 [பெண்மை  முறைப்பெயர், ஆண்மை முறைப்பெயர்]

31. பெண்மை பற்றி வரும் விரவுப் பெயர்கள் நான்கும் உயர்திணை பெண்பால்

        ஒருமை, அஃறிணை பெண்பால் ஒருமைக்கு உரியன.

        [சான்று:

        சாத்தி வந்தாள், சாத்தி வந்தது - இயற்பெயர்

        முடக்காலி வந்தாள். முடக்காலி வந்தது - சினைப் பெயர்

        கொடும்புற மருதி வந்தாள், கொடும்புற மருதி வந்தது - சினை முதற்பெயர்

        தாய் வந்தாள், தாய் வந்தது - முறைப்பெயர்.] 

32. ஆண்மை பற்றி வரும் விரவுப் பெயர்கள் நான்கும் உயர்திணை ஆண்பால் 

        ஒருமை, அஃறிணை பெண்பால் ஒருமைக்கு உரியன.

         [சான்று:

        சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது - இயற்பெயர்

        முடக்காலன் வந்தான். முடக்காலன் வந்தது - சினைப் பெயர்

        கொடும்புற மருதன் வந்தான், கொடும்புற மருதன் வந்தது - சினை 

        முதற்பெயர்

          தந்தை வந்தான், தந்தை வந்தது - முறைப்பெயர்.] 

33. பன்மை சுட்டிய பெயர்கள் அஃறிணை ஒருமை, அஃறிணை பன்மை, 

        உயர்திணை  பன்மை மூன்றுக்கும் ஒத்தமையும். 

34. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்  ஒன்றற்கும், ஒருவருக்கும் ஒத்ததே.

35. தாம் என் கிளவி ​​​​​------------------ உரித்தே [பன்மைக்கு]

    [அவர்கள் தாம் வந்தனர், அவைதாம் வந்தன]

36. தான் என் கிளவி ----------------- உரித்தே [ஒருமைக்கு]

[அவன் தான் வந்தான், அவள் தான் வந்தாள், அது தன் வந்தது]

37. எல்லீர் என்பது உயர் திணைக்கானது.

38. எல்லாம் என்பது அஃறிணைக்கானது. எனினும் சில வேளை 

        உயர்திணைக்கும்  பொருந்தும்.

         [காடெல்லாம் பூத்தது, ஊரெல்லாம் மகிழ்ந்தது]

39. எல்லாம் உயர்திணையில் எங்கு வரும்? பன்மையில் மட்டும் வரும்

40. பால் தெரிபிலா உடன் மொழிப்பொருள யாவை?

    நீ, நீயிர் [விரவுப் பெயர்களான இவை எல்லாப் பாலுக்கும் பொதுவானவை. 

    இரு திணைக்கும் பொருந்துவன. எனவே பால் தெரிபிலா உடன்மொழிப் 

    பொருள எனப்பட்டன.]  

41. நீ என்பது ஒருமைக்கு உரியது.

42. நீயிர் என்பது பன்மைக்கு உரியது.

43. ஒருவர் என்பது எப்பாலுக்கு உரியது? ஆண், பெண் எனும் இரு பால்

44. ஒருவர் என்பது எவ்வினை முடிவைப் பெறும்? 

        ஒருவர் என்பது ஒருமைக்கு உரியது என்றாலும் பன்மை வினை 

        முடிவையே பெறும். [ஒருவர் வந்தார் - அர் என்ற பன்மை வினை முடிவைப்

        பெற்றுள்ளது.]

45. பெண்பாலுக்கு உரியதாக பால் திரிந்து வழங்கும் சொல் யாது?

        பெண்மகன்

46. பெண்மகன் எத்தகு வினை முடிவைப் பெறும்? 

        பெண்பால் [பெண்மகன் வந்தாள்] 

47. ஈற்றயல் ஓகாரமாக மாறும் சொற்கள் யாவை?

            ஆகார ஈற்றயல் சொற்கள்.

        ஆன், ஆள், ஆர் மூன்றிலும் உள்ள ஈற்றயல் ஆகாரம் ஏகாரம் ஆகும்.

         [வில்லான் - வில்லோன், செய்யாள் - செய்யோள், நல்லார் - நல்லோர்]

48. இறைச்சிப் பொருளில் வரும் இயற்பெயர் கிளவி கருப்பொருளில் உள்ள

        உயிரினங்களுக்குப் பொருந்துவதால் உயர்திணையைக் குறிக்க மாட்டா. 

        கருப்பொருளில் ஒன்றான மக்கட் பெயர்  [விடலை, மீளி, காளை     

        போன்ற] மட்டும் உயர்திணைக்கு உரியன.

       





            









    

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...