இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 அக்டோபர், 2020

வினையியல்

 1. வினையெனப்படுவது எவ்வாறு வரும்?

    வேற்றுமை ஏற்காது, காலம் காட்டும்.

2. காலம் எத்தனை வகைப்படும்? 3

3. முக்காலங்கள் யாவை? இறப்பு, நிகழ்வு, எதிர்வு

4. வினைச்சொற்கள் எப்படி காலம் காட்டும்? 

    வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காலம் காட்டும்.

5. சொற்கள் பொருளுணர்த்தும் விதத்தில் எத்தனை வகைப்படும்?

    2 [தெரிநிலை, குறிப்பு]

6. தெரிநிலை  வினையைத் தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

     வினை

7. குறிப்பு வினையைத் தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பார்?

    குறிப்பு

8. தெரிநிலை  வினையாவது யாது?

     கர்த்தா, கருவி, நிலம், செயல்,  காலம், செய்பொருள் ஆறும் வெளிப்படக்

    காட்டுவது. [சென்றான், உழுதான், உண்டான்]

9. குறிப்பு வினையாவது யாது?

    வினைமுதலாகிய கர்த்தாவை மட்டும் வெளிப்படையாகக் காட்டுவது.

    [குழையினன்,பொன்னினன்]

10. வினைச்சொல் - 'அம்மூவுருபினத் தோன்றலாறே' - மூவுரு யாவை?

    உயர்திணைக்கு உரியவை, அஃறிணைக்கு உரியவை, பொதுவானவை [வினைச்சொல் வகைகளாகத் தொல்காப்பியர் குறிப்பவை]

11. தன்மைப் பன்மைக்கான வினைமுற்று விகுதிகள்

    அம் - உண்டனம்

    ஆம் -உண்டாம்

    எம் -உண்டனெம்

    ஏம் - உண்டேம்

    கும் -உண்கும்

    டும் - உண்டும்

    தும் - வருதும்

    றும் - சேறும்

12. தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் 

    கு - உண்கு

    டு - உண்டு

    து - வருது

    று - சேறு

    என் - காண்பென்

    ஏன் - காண்பேன்

    அல் - காண்பல்

  13. உயர்திணை படர்க்கை ஒருமை  வினைமுற்று விகுதிகள்

    அன் - வந்தனன்

    ஆன் - வந்தான்

    அள் - வந்தனள்

    ஆள்- வந்தாள்

14. உயர்திணை படர்க்கை பன்மை வினைமுற்று விகுதிகள்

    அர் - வந்தனர்

    ஆர் - வந்தார்

             - வருப

    மார்  - கொண்மார்

15. உயர்திணை வினைமுற்று விகுதிகள் [ஈறுகள்] எத்தனை?

    23

16. யார் என்னும் வினாச்சொல் எப்பாலுக்கு உரியது?  

    உயர்திணையின் முப்பாற்கும் உரியது

17. செய்யுளில் திரியும் தன்மை ஈறுகள் யாவை?

    ஆகார ஈற்றயல் சொற்களாம் ஆன், ஆள். ஆர் - உள்ள ஆ - ஓ ஆகும்.

    [வந்தான் - வந்தோன், வந்தாள் - வந்தோள், வந்தார் - வந்தோர்]

18.  செய்யுளில் திரியும் முன்னிலை ஈறு யாது?

    ஆய் -  இல் உள்ள ஈற்றயலாம் ஆ - ஓ என்றாகும். [வந்தாய் - வந்தோய்]

வினைமுற்று விகுதிகள் 


படர்க்கை - ஆண்பால்             -       அன், ஆன் 

படர்க்கை - பெண்பால்             -       அள் , ஆள் 

படர்க்கை - பலர் பால்                     -       அர் , ஆர் , ப, மார் 

படர்க்கை - ஒன்றன்பால்              -      கு, டு , து, று  

படர்க்கை - பலவின்பால்         -       அ, ஆ  [ஆ- எதிர்மறை ]

ஒருமை - தன்மை.                             -    கு, டு , து, று , அ ல், அன் 

பன்மை - தன்மை                             -    அம், ஆம்,  எம், ஏம், உம்,   கு, டு , து, று 

ஒருமை - முன்னிலை                       - ஐ, ஆய், இ, ஈ, ஏ

பன்மை - முன்னிலை                       -     இர், ஈ 

வியங்கோள்                                            - க, ய, ர 

19. அஃறிணை படர்க்கை பலவின் பால் வினை முற்று விகுதிகள் யாவை?

    அ    -    பறந்தன

    ஆ     -    வாரா [எதிர்மறை]

    வ    -    வருவ, செல்வ

20. படர்க்கை ஒன்றன்பால் வினை முற்று விகுதிகள் யாவை?

    து    -    வந்தது, சென்றது

    று    -    வந்தன்று

    டு    -    குறுந்தாட்டு [குட்டையான கால் உடையது]

21. அஃறிணை குறிப்பு வினைகள் யாவை?

        இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, பண்பை உணர்த்தும் சொல்,         உள என்னும் சொல், பண்பை அடுத்த சினையை அடையாகக்   கொண்ட             முதற்பொருள், ஒப்புமை குறித்து வரும் சொல், அன்னது,  அனையது,                        போன்றது,  அன்ன, போல்வன ஆகிய 10 வினைகள் அஃறிணை  குறிப்பு                 வினைகள்.

21. விரவுதிணை வினைகள் யாவை?

    முன்னிலை, வியங்கோள், வினையெஞ்சுக் கிளவி [வினையெச்சம்], 

    இன்மையைக் குறிக்கும் இல்லை எனும் குறிப்பி வினை முற்று, வேறு எனும் 

    வேறுபாட்டை உணர்த்தும் குறிப்பு வினை முற்று, செய்மன வாய்ப்பாட்டு 

    வினைச்சொல், செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினை முற்று, பெயரெச்சம், 

    செய்த என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சச் சொல் - எட்டும் இருதிணைக்கும் 

    விரவும் வினைகள்

22. ஒருமைக்கும் ஒருவருக்கும் ஒப்பத்தோன்றும் சொற்கள் யாவை?

    இ, ஐ, ஆய் ஆகியவற்றை ஈறாகக் கொண்ட முன்னிலை வினைகள். 

    [வருதி. போதி, நின்றனை, கண்டனை, வந்தாய், செல்வாய்]

23. பலர்பால், பலவின் பாலுக்கு ஒத்த முன்னிலைப் பன்மை வினைகள்?

        இர், ஈர், மின் [உண்பிர், கண்டிர்,  சென்றீர், வருவீர், நின்மின், செல்மின்

24. செய்யும் என்னும் வினைமுற்று எவற்றோடு பொருந்தி வரும்?

        படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின் பால்                  

        போன்றவற்றோடு பொருந்தி வரும். பிறவற்றோடு பொருந்தா.

        [அவன் பார்க்கும், அவள் சிரிக்கும், குயில் கூவும், மாடுகள் மேயும்]

25. வினையெச்ச வாய்ப்பாடு 

        செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர்,  செய்யிய, செயின், செய
        செயற்கு
 
26. பெயரெச்ச வாய்ப்பாடு:
           இறந்த காலம்                    -                    செய்த 

            நிகழ்காலம்                        -                     செய்கின்ற 

            எதிர்காலம்                                                 செய்யும் 

27. வினைமுற்று வகைகள்:    

        1, தெரினிலை வினைமுற்று
        2. குறிப்பு வினைமுற்று
        3. தன்மை வினைமுற்று
        4. முன்னிலை வினைமுற்று
        5. படர்க்கை வினைமுற்று
        6. ஏவல் வினைமுற்று
        7. வியங்கோள் வினைமுற்று
        8. ஐம்பால் வினைமுற்று
        9. உளப்பாட்டு தன்மைப்பன்மை வினைமுற்று
        10. உளப்பாட்டு முன்னிலைப் பன்மை வினைமுற்று

28. ஏவல் வினைமுற்றுக்கான வினைப் பகாபதங்கள் எத்தனை? 23

        [நட, வா, மடி, சீ, விடு, கூ, ஏ, வை, நொ, பொருந், திரு, தின், தேய், பார், செல்,         வாழ், கேள், அஃகு]
29. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை? க, இய, இயர்

30. வியங்கோள் வினைமுற்றுக்கான பொருண்மைகள் யாவை?

        வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்

31. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றுகள் யாவை? 

        அம், ஆம், கும், டும், ஓம்

32. உளப்பாட்டு முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்கள் யாவை?

        இர், ஈர், மின்

33. முற்றெச்சம் என்பது என்ன?

    வினைமுற்று எச்சப் பொருளில் வந்து வினை கொண்டு முடிவது.

    [கலைஞர்கள் ஆடினர் பாடினர் -  ஆடிப்பாடினர் என்பதில் உள்ள ஆடி என்னும் எச்சம் ஆடினர் என முற்றாக வந்து தொக்கி வினைக் கொண்டு முடிவது]


    

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...