- முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்? நப்பூதனார்
- முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது? 103
- முல்லைப்பாட்டு ஆசிரியரின் ஊர் எது? காவிரிப்பூம்பட்டினம்
- முல்லைப்பாட்டு பெயர்க்காரணம் என்ன? முல்லைத் திணையைப் பாடுவது
- முல்லைப்பாட்டின் வேறு பெயர்? முல்லை
- நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல் எது? முல்லைப்பாட்டு
- முல்லைப்பாட்டில் திருமாலின் எந்த அவதாரம் காட்டப்படும்? வாமனன்
- யானையைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்திய மொழியாக முல்லைப்பாட்டுக் கூறும் மொழி எது? வடமொழி
- தலைவன் உறங்கும் இடத்திற்குக் காவலாக பேச இயலாதவரை அமர்த்தியதைக் கூறும் நூல்? முல்லைப்பாட்டு
- பாசறையில் பெண்கள் பணி செய்தமையைக் கூறும் இலக்கியம்? முல்லைப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்? கபிலர்
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள அடிகள் எத்தனை? 261
- குறிஞ்சிப்பாட்டு எழுந்ததன் நோக்கம் என்ன? ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவிக்க.
- குறிஞ்சிப்பாட்டு எழுந்த நோக்கம் குறித்துக் கூறும் உரையாசிரியர் யார்? நச்சினார்க்கினியர்
- குறிஞ்சிப்பாட்டின் மற்றொரு பெயர் யாது? பெருங்குறிஞ்சி
- குறிஞ்சிப்பாட்டை பெருங்குறிஞ்சி என்பவர் யார்? நச்சினார்க்கினியர்
- குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர்கள் எத்தனை? 99
- குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களை எத்தனை அடிகளில் கூறுகிறது? 34
- 'கபிலர் இயற்கையை வர்ணிப்பதில் உலகிலேயே சிறந்தவர் ஆகின்றார்' எனக் கூறியவர் யார்? தனிநாயக அடிகள்
- குறிஞ்சிப்பாட்டிற்கு ஆய்வுரை செய்தோர் யாவர்? எஸ்.ஆர்.மார்க்க பந்து சர்மா, தமிழண்ணல்
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள புணர்ச்சி வகைகள்? களிறுதரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி
- கோவை இலக்கியம் தோன்ற வித்தாக அமைந்த நூல்? குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலையை இயற்றியவர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பட்டினப்பாலை எத்தனை அடிகளைக் கொண்டது? 301
- பட்டினப்பாலையில் ஆசிரியப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 138
- பட்டினப்பாலையில் வஞ்சிப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 163
- பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன? வஞ்சி நெடும்பாட்டு
- பட்டினப்பாலையை வஞ்சிப்பா எனக்குறிப்பவர் யார்? இளம்பூரணர்
- பட்டினப்பாலையில் சிறப்பிக்கப்படும் மன்னன் யார்? கரிகாற்சோழன்
- பட்டினப்பாலையில் அகப்பொருள் கூறும் அடிகள் எத்தனை? 6
- பழந்தமிழர் வணிக அறம், கடல் வாணிகம், துறைமுகச் செயல்பாடு குறித்துக்கூறும் நூல் எது? பட்டினப்பாலை
- பட்டினப்பாலைக்கு சிறந்த ஆய்வுரை எழுதியோர் யாவர்? மறைமலையடிகள், இராகவையங்கார [சாமி சிதம்பரனார் உரையுள்ளது]
- பட்டினப்பாலையைப் பாடியதற்காக உருத்திரங்கண்ணனுக்கு, கரிகாற் பெருவளத்தான் அளித்த பரிசு என்ன? பதினாறு நூறாயிரம் பொற்காசு
- மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் யார்? மாங்குடி மருதனார்
- மாங்குடி மருதன் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? மதுரைக்காஞ்சிப் புலவர், காஞ்சிப் புலவனார்
- மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்
- மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகள் எத்தனை? 782
- மதுரைக்காஞ்சியின் மையப்பொருள் என்ன? நிலையாமை
- மதுரைக்காஞ்சி சிறப்புப் பெயர் என்ன? காஞ்சிப்பாட்டு[காஞ்சித்திணை], கூடற்றமிழ்
- மதுரையின் வணிக செயல்பாடுகளைக் கூறுவது? மதுரைக்காஞ்சி
- மதுரைக்காஞ்சியில் நிலையாமை குறித்துப் பேசும் பாடலடிகள் எத்தனை? 428
- தொல்காப்பிய காஞ்சி விளக்கப்பட்டு எனக் குறிக்கப்படுவது எது? மதுரைக்காஞ்சி
- 'ஆறு கிடந்தன்ன அகன் நெடுந்தெரு' என மதுரை நகரத் தெரு குறித்துக் கூறும் நூல் எது? மதுரைக்காஞ்சி
- மதுரை அல்லங்காடியில் எழும் ஓசைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது? கடற் பறவைகளின் ஓசை
- நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
- நெடுநல் வாடையின் பாட்டுடைத் தலைவனாகக் குறிக்கப்படுபவர் யார்? பாண்டிய நெடுஞ்செழியன்[இது முடிந்த முடிவு அல்ல. இதனைப் புற நூல் என்போர் கருத்து. ஆனால் பலர் இதனை அக நூல் என்றே கூறுகின்றனர். அதனாலே இது அகப்புற நூல் எனப்படுகிறது]
- நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது? 188
- நெடுநல் வாடையை 'சிற்பப்பாட்டு' எனச்சிறப்பித்தவர்? தமிழண்ணல்
- 'நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம். நக்கீரர் கண்ட சுரங்கம். தமிழ்ச்சுரங்கம்' என நெடுநல் வாடையைப் போற்றியவர்? திரு.வி.க.
- நெடுநல்வாடைக்குக் கோதண்ட பாணி இயற்றிய உரையின் பெயர் யாது? புனையா ஓவியம்
- நெடுநல் வாடைக்கு உரை செய்தோர்? கோதண்டபாணி, செ. வெங்கடாச்சலச் செட்டியார்
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 19 செப்டம்பர், 2020
சங்க இலக்கிய வினா வங்கி 4: பத்துப்பாட்டு[ஆற்றுப்படை அல்லாதவை]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக