இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 செப்டம்பர், 2020

சங்க இலக்கிய வினா வங்கி 4: பத்துப்பாட்டு[ஆற்றுப்படை அல்லாதவை]

  1. முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்? நப்பூதனார்
  2. முல்லைப்பாட்டு  எத்தனை அடிகளைக் கொண்டது? 103
  3. முல்லைப்பாட்டு ஆசிரியரின் ஊர் எது? காவிரிப்பூம்பட்டினம்
  4. முல்லைப்பாட்டு பெயர்க்காரணம் என்ன? முல்லைத் திணையைப் பாடுவது
  5. முல்லைப்பாட்டின் வேறு பெயர்? முல்லை
  6. நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல் எது? முல்லைப்பாட்டு
  7. முல்லைப்பாட்டில் திருமாலின் எந்த அவதாரம் காட்டப்படும்? வாமனன்
  8. யானையைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்திய மொழியாக முல்லைப்பாட்டுக் கூறும் மொழி எது? வடமொழி
  9. தலைவன் உறங்கும் இடத்திற்குக் காவலாக பேச இயலாதவரை அமர்த்தியதைக் கூறும் நூல்? முல்லைப்பாட்டு
  10. பாசறையில் பெண்கள் பணி செய்தமையைக் கூறும் இலக்கியம்? முல்லைப்பாட்டு
  11. குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்? கபிலர்
  12. குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள அடிகள் எத்தனை? 261
  13. குறிஞ்சிப்பாட்டு எழுந்ததன் நோக்கம் என்ன? ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவிக்க.
  14. குறிஞ்சிப்பாட்டு எழுந்த நோக்கம் குறித்துக் கூறும் உரையாசிரியர் யார்? நச்சினார்க்கினியர்
  15. குறிஞ்சிப்பாட்டின் மற்றொரு பெயர் யாது? பெருங்குறிஞ்சி
  16. குறிஞ்சிப்பாட்டை பெருங்குறிஞ்சி என்பவர் யார்? நச்சினார்க்கினியர்
  17. குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர்கள் எத்தனை? 99
  18. குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களை எத்தனை அடிகளில் கூறுகிறது? 34
  19. 'கபிலர் இயற்கையை வர்ணிப்பதில் உலகிலேயே சிறந்தவர் ஆகின்றார்' எனக் கூறியவர் யார்? தனிநாயக அடிகள்
  20. குறிஞ்சிப்பாட்டிற்கு ஆய்வுரை செய்தோர் யாவர்?                 எஸ்.ஆர்.மார்க்க பந்து சர்மா,  தமிழண்ணல்
  21. குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள புணர்ச்சி வகைகள்? களிறுதரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி
  22. கோவை இலக்கியம் தோன்ற வித்தாக அமைந்த நூல்? குறிஞ்சிப்பாட்டு
  23. பட்டினப்பாலையை இயற்றியவர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  24. பட்டினப்பாலை எத்தனை அடிகளைக் கொண்டது? 301
  25. பட்டினப்பாலையில் ஆசிரியப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 138
  26. பட்டினப்பாலையில் வஞ்சிப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 163
  27. பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன? வஞ்சி நெடும்பாட்டு
  28. பட்டினப்பாலையை வஞ்சிப்பா எனக்குறிப்பவர் யார்? இளம்பூரணர்
  29. பட்டினப்பாலையில் சிறப்பிக்கப்படும் மன்னன் யார்? கரிகாற்சோழன்
  30. பட்டினப்பாலையில் அகப்பொருள் கூறும் அடிகள் எத்தனை? 6
  31. பழந்தமிழர் வணிக அறம், கடல் வாணிகம், துறைமுகச் செயல்பாடு குறித்துக்கூறும் நூல் எது? பட்டினப்பாலை
  32. பட்டினப்பாலைக்கு சிறந்த ஆய்வுரை எழுதியோர் யாவர்? மறைமலையடிகள், இராகவையங்கார [சாமி சிதம்பரனார் உரையுள்ளது]
  33. பட்டினப்பாலையைப் பாடியதற்காக உருத்திரங்கண்ணனுக்கு, கரிகாற் பெருவளத்தான் அளித்த பரிசு என்ன? பதினாறு நூறாயிரம் பொற்காசு
  34. மதுரைக்காஞ்சியின்  ஆசிரியர் யார்? மாங்குடி மருதனார்
  35. மாங்குடி மருதன் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? மதுரைக்காஞ்சிப் புலவர், காஞ்சிப் புலவனார்
  36.  மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்
  37. மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகள் எத்தனை? 782
  38. மதுரைக்காஞ்சியின் மையப்பொருள் என்ன? நிலையாமை
  39. மதுரைக்காஞ்சி சிறப்புப் பெயர் என்ன? காஞ்சிப்பாட்டு[காஞ்சித்திணை], கூடற்றமிழ்
  40. மதுரையின் வணிக செயல்பாடுகளைக் கூறுவது? மதுரைக்காஞ்சி
  41. மதுரைக்காஞ்சியில் நிலையாமை குறித்துப் பேசும் பாடலடிகள் எத்தனை? 428
  42. தொல்காப்பிய காஞ்சி விளக்கப்பட்டு எனக் குறிக்கப்படுவது எது? மதுரைக்காஞ்சி
  43. 'ஆறு கிடந்தன்ன அகன் நெடுந்தெரு' என மதுரை நகரத் தெரு குறித்துக் கூறும் நூல் எது? மதுரைக்காஞ்சி
  44. மதுரை அல்லங்காடியில் எழும் ஓசைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது? கடற் பறவைகளின் ஓசை
  45. நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
  46. நெடுநல் வாடையின் பாட்டுடைத் தலைவனாகக் குறிக்கப்படுபவர் யார்? பாண்டிய நெடுஞ்செழியன்[இது முடிந்த முடிவு அல்ல. இதனைப் புற நூல் என்போர் கருத்து. ஆனால் பலர் இதனை அக நூல் என்றே கூறுகின்றனர். அதனாலே இது அகப்புற நூல் எனப்படுகிறது]
  47. நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது? 188
  48. நெடுநல் வாடையை 'சிற்பப்பாட்டு' எனச்சிறப்பித்தவர்? தமிழண்ணல்
  49. 'நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம். நக்கீரர் கண்ட சுரங்கம். தமிழ்ச்சுரங்கம்' என நெடுநல் வாடையைப் போற்றியவர்? திரு.வி.க.
  50. நெடுநல்வாடைக்குக் கோதண்ட பாணி இயற்றிய உரையின் பெயர் யாது? புனையா ஓவியம் 
  51. நெடுநல் வாடைக்கு உரை செய்தோர்? கோதண்டபாணி, செ. வெங்கடாச்சலச் செட்டியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...