1. முன்னிலை [நேரடியாகக் கூறல்]
2. முன்னிலைப் புறமொழி [ மறைமுகமாகக் கூறல்]
2. தலைவி அறத்தொடு நிற்கையில் நிகழும் கிளவிகள் எத்தனை?
ஏழு
3. தலைவி யாரிடம் அறத்தொடு நிற்பாள்?
தோழியிடம்
4. தோழி யாரிடம் அறத்தொடு நிற்பாள்?
செவிலியிடம்
5. தோழி அறத்தொடு நிற்கும் இடங்கள்?
1. தலைவியிடம் நிகழும் வேறுபாட்டிற்குக் காரணம் கேட்டால்
2. வீரியத்தை விளக்கிய பொது காரணம் கேட்டல்
6. தோழி அறத்தொடு நிற்கையில் களவிற்குக் காரணமாக கூறுபவை யாவை?
பூ, புனல், களிறு
7. செவிலி யாரிடம் அறத்தொடு நிற்பாள்?
நற்றாய்
8. செவிலி நற்றாயிடம் எவ்வகையில் அறத்தொடு நிற்பாள்?
முன்னிலை மொழியொடு நிற்பாள்
9. செவிலி நற்றாயிடம் அறத்தொடு நிற்கக் காரணம்?
தலைமகளிடம் ஏற்படும் வேறுபாட்டல் செவிலியிடம் வினாவுதலால்.
10. அறத்தொடு நிலை தோன்றக் காரணங்கள்?
1. தலைமகன் வரும் வழியின் பாதுகாப்பின்மைக்கு அஞ்சுதல்
2. தலைவன் வரைவு மறுத்தல்
3. பிறர் வரைவு எதிர்ப்படல்
11. நற்றாய் யாரிடம் அறத்தொடு நிற்பாள்?
தலைவியின் தந்தை, சகோதரன்
12. தலைமகள் அறத்தொடு நிற்கும் இடங்கள்?
தலைவன் ஒருவழித்தனத்தல்,
வரைவு இடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல்,
செவிலி தலைமகனைக் குறியிடத்தில் காண்பது,
இற்செறித்தல்,
தலைவிக்கு வருத்தம் மிகுதல் போன்ற சூழலில் தோழி வினவிய வழியும்,
வினவா வழியும் தலைமகள் பாங்கிக்கு அறத்தொடு நிற்பாள்.
13. தோழி செவிலியிடம் எவ்வகையில் அறத்தொடு நிற்பாள்?
இருவகையில் [முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி]
14.செவிலி யாருக்கு கவலையின்று [விளக்கமாக] அறத்தொடு நிற்பாள்?
நற்றாய்
15. நற்றாய் எவ்வகையில் அறத்தொடு நிற்பாள்?
முன்னிலைப் புறமொழியால் [நேரடியாகக் கூறாமல் குறிப்பால்] உணர்த்துவாள்.
16. தலைமகளிடம் ஏற்படும் மாற்றத்தால் வினவப்படுவோர் யாவர்?
தோழி தலைவியை வினாவுவாள்
செவிலி தோழியை வினவுவாள்
செவிலியை நற்றாய் வினாவுவாள்
சில நேரங்களில் தோழியை நற்றாய் வினவுதலும் உண்டு.
17. உடன்போக்கில் அறத்தொடு நிற்போர் யாவர்?
தோழி. செவிலி, பயந்த தாய்