இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

தமிழ்க்கவிஞர்கள் வினா வங்கி 1

 1. மகாகவி பாரதியாரின் புனைப்பெயர்கள் யாவை? ஷெல்லிதாசன்,                                                                                     சக்திதாசன், காளிதாசன்
2. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?    சுப்புரத்தினம்
3. பாரதிதாசன் நடத்திய இதழ்? குயில்
4. வீரத்தாயின் ஆசிரியர் யார்?    பாரதிதாசன்
5. புரட்சிக்கவியை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
6. கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை பிறந்த ஊர் எது?
                         நாகர்கோவிலை அடுத்த தேரூர்
7. தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பதென்                  செவிப்பெருமை  என்றவர்? நாமக்கல் கவிஞர்
8. ஆசியஜோதியின் ஆசிரியர் யார்?    கவிமணி தேசிய விநாயகம் 
9. ஆசிய ஜோதியின் மூல நூல் எது?    லைட் ஆப் ஆசியா
10. லைட் ஆப் ஆசியாவை இயற்றியவர் யார்?    எட்வின் அர்னால்டு
11. உமர்கயாம் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்? தேசியவிநாயகம்
12. உமர்கயாம் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் ? பிட்ஜெரால்ட்
13. வரலாற்று ஆய்வுக்குத் துணைபுரியும் கவிமணியின் படைப்பு? 
                    காந்தளூர் சாலை
14. கவிமணி எந்த ஆங்கிலக் கவிதைகளைத் தழுவி  கவி  படைத்தார்?     
            டெனிசன் பிளேக்
15. நாமக்கல் கவிஞரின் பெயர்? இராமலிங்கம் பிள்ளை
16. காந்தியக் கவிஞர் யார்? நாமக்கல் கவிஞர்
17. 'திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது. காந்தி தூவிய விதை 
        நாமக்கல் கவிஞராகத் தோன்றியது'  என்றவர்?     இராசாசி   
18. திரைப்படமாக்கப்பட்ட  நாமக்கல்  கவிஞர் புதினம்? மலைக்கள்ளன்
19. மலைக்கள்ளன் எத்தனை மொழிகளில் படமாக்கப்பட்டது?  ஆறு
    [தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்]
20. இந்திய அரசின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் எது?
         மலைக்கள்ளன்
21. கம்பன் கவி நயம் பேசும் நாமக்கல் கவிஞரின் படைப்பு? இலக்கிய இன்பம்
22. நாமக்கல் கவிஞரின் வரலாற்று நூல் எது? என் கதை
23. 'தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து  நில்லடா' யாருடைய
    கவிதை? நாமக்கல் கவிஞர்
24. ந. பிச்சமூர்த்தியின் புனைப்பெயர் யாது?    ரேவதி
25. தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றுநர் யார்? ந. பிச்சமூர்த்தி
26. தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை யார்? ந. பிச்சமூர்த்தி
27. ந. பிச்சமூர்த்தியின் சிறந்தப் படைப்புக்கள்? காட்டு வாத்து, வழித்துணை
28. பாலபாரதி எனப்படுபவர் யார்?    ச. து. யோகியார்
29. காளி உபாசகர் எனப்படுபவர் ?        "
30.  மறைமலை அடிகளுக்கு வெங்கலச்சிலை எடுத்தவர்? கோவை இளஞ்சேரன்
31. புதுமைப்பித்தனை அடியொற்றி கவிஎழுதியவர்? தொ.மு.சி.ரகுனாதன்  
32. வாணிதாசனின் இயற்பெயர்? எதிராஜ் அரங்கசாமி
33. வாணிதாசனினி சிறப்புப் பெயர்கள்? புதுமைக் கவிஞர், பாவலரேறு,
        பாவலர் மணி, தமிழ் நாட்டுத்தாகூர்
34. தமிழக அரசு விருது பெற்ற வாணிதாசன் படைப்பு? பாட்டரங்கப் பாடல்கள்
35. வாணிதாசனின் படைப்புக்களின் எண்ணிக்கை?    14
36. வாணி தாசன் படைப்புக்கள் எந்தெந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்
    பட்டுள்ளது?    பிரெஞ்சு, உருசியா
37. சிரித்த நுணா யாருடைய படைப்பு?    வாணிதாசன்
38. விருத்தப்பா இலக்கணம் கூறும் வாணிதாசனின் இலக்கியம்?
        எழில் விருத்தம் 
39. பாம்பும் பிடாரனும் யாருடைய படைப்பு? அ. சீனிவாசராகவன்
40. சாகித்திய அகாடமி விருது வென்ற அ. சீனிவாசனின் படைப்பு?
        வெள்ளைப்பறவை
41. கொத்தமங்கலம் சுப்புவின் படைப்புக்கள் யாவை?
        கம்பராமாயணச் சிந்து, நாட்டுப்பாடல்கள்,  மஞ்சு விரட்டு
42. வாணிதாசனின் இயற்பெயர்? எத்திராஜ் அரங்கசாமி
43. வாணிதாசன் பாவேந்த விருது வென்ற ஆண்டு? 1979
44. கம்பதாசனின் இயற்பெயர் என்ன?     சி.சு.ராஜப்பா
45.  எஸ். டி. சுந்தரம் பெற்ற பட்டங்கள்? விடுதலைக்கவிஞர், கவிதாமணி
46. எஸ்.டி. சுந்தரம் பெற்ற விருது? கலைமாமணி
47. கவிஞர் தமிழ் ஒளியின் இயற்பெயர்?     விஜயரங்கம்
48. பாட்டாளிக் கவிஞராக அறியப்படுபவர் யார்?     பட்டுக்கோட்டை 
            கல்யாணச்  சுந்தரம்
49. மக்கள் கவிஞர் யார்? பட்டுக்கோட்டை கல்யாணச் சுந்தரம்
50. கவியோகி என அழைக்கப்படுபவர் யார்? சுத்தானந்த பாரதி

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...