- 'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது.
- தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் நுணுக்கம்'
- தொல்காப்பியத்தில் திறனாய்வுக் கொள்கைகளாக இடம்பெறுபவை யாவை? நூலுக்குரிய 10 குற்றங்கள், 32 உத்திகள், செய்யுள் வழக்கு, செய்யுள் வழக்கு
- தமிழின் தொடக்க காலத்தின் திறனாய்வாளர்கள் யார்? உரையாசிரியர்கள்
- உரையாசிரியர்கள் உரையில் உள்ள திறனாய்வு முறைகள் யாவை? விதிமுறைத் திறனாய்வு, பாராட்டு முறைத் திறனாய்வு
- பழந்த்தமிழரின் திறனாய்வுக் கோட்பாடுகளை விளக்கும் கா. மீனாட்சிசுந்தரனார் நூல்? பழந்தமிழரின் சில திறனாய்வு நெறிகள் [ஐந்தாம் உலகத்தமிழ் மானாட்டு மலரில் எழுதப்பட்டுள்ள கட்டுரை]
- திறனாய்வுத்துறை எவ்வாறு வளர்ந்தது? மேனாட்டுத் தொடர்பால்
- திறனாய்வுத்துறையில் தமிழின் வழிகாட்டி நூல் எது? வ.வே.சு ஐயரின் கம்பராமாயண ரசனை [கம்ப ராமாயண எ ஸ்டடி] என்ற ஆங்கில நூல்
- திறனாய்வுத்துறையின் முன்னோடி யார்? மறைமலை அடிகள்
- மறைமலையடிகளின் சிறந்த ஆய்வுகள் யாவை? முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, சாகுந்தல நாடக ஆராய்ச்சி. பட்டினப்பாலை ஆராய்ச்சி
- மகாவித்வான் ர.ராகவ ஐயங்கார் இயற்றிய ஆராய்ச்சி நூல்கள் யாவை? பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, தித்தன், கோசர் குறித்த சிற்றாராய்ச்சி
- நெடுநல் வாடை ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்? கே. கோதண்டபாணி
- டி.கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய ஆய்வு நூல் எது? இதய ஒலி
- பேராசிரியர் ஆ.முத்துசிவன் எழுதிய திறனாய்வு நூல்கள் யாவை? கவிதை, அசோகவனம், அசலும் நகலும்
- அ.ச.ஞானசம்பந்தனின் திறனாய்வு நூல்கள் யாவை? இலக்கியக்கலை, இராவணன் மாட்சியும், வீழ்ச்சியும்
- மார்க்கபந்து சர்மாவின் மேனாட்டு ஆய்வு நோக்கில் அமைந்த நூல் எது? சிலப்பதிகார ரசனை
- டாக்டர் இராசமாணிக்கனார் எழுதிய ஆய்வு நூல்? பெரியபுராண ஆராய்ச்சி
- வெ. சு. சுப்பிரமணியாச்சாரியார் எழுதிய ஆய்வு நூல்? சிலப்பதிகார ஆராய்ச்சி
- மு.வ. எழுதிய ஆய்வு நூல்கள் யாவை? திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், ஓவச்செய்தி, மாதவி, கண்ணகி
- இலக்கியத் திறனாய்வின் சிறப்பினைக் காட்டும் மு.வ.வின் நூல்கள் யாவை? இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறன், இலக்கிய மரபு
- ரா.பி.சேதுப்பிள்ளையின் குறிப்பிடற்குரிய ஆய்வு நூல் எது? ஊரும் பேரும்
- முற்போக்கு சிந்தனையோடு வரலாற்று, மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்தவர் யார்? க. கைலாசபதி
- தலைசிறந்த இலங்கை இலக்கிய ஆராய்ச்சியாளர் யார்? க. கைலாசபதி
- இலக்கிய ஆய்விற்காக ஆராய்ச்சி என்ற இதழை நடத்தியவர் யார்? நா.வானமாமலை
- விஞ்ஞான சோசலிச விமர்சகர் யார்? நா.வானமாமலை
- நா. வானமாமலையின் ஆய்வுப் போக்கு எத்தகையது? தொல்பொருள், வரலாறு, மானிடவியல், சமூகவியல், அறிவியல் எனப்பன்முகத்தன்மை கொண்டது.
- க. நா. சு என அழைக்கப்படும் இலக்கியத் திறனாய்வளர் யார்? க.நா.சுப்பிரமணியம்
- க.நா.சுப்பிரமணியம் ஆசிரியராக இருந்த இதழ்கள் யாவை? இலக்கிய வட்டம், சூறாவளி, சந்திரோதயம், ராமபாணம்
- க.நா.சுவின் இலக்கிய திறனாய்வின் அடிப்படை யாவை? அழகியல், வடிவியல் அணுகுமுறை
- துருவன் என்ற புனைப்பெயரில் இலக்கிய விமர்சனம் செய்தவர் யார்? தி.க.சிவசங்கரன்
- சி.சு. செல்லப்பாவின் திறனாய்வு முறை யாது? ரசனைமுறை, முருகியல் முறை
- சி.சு. செல்லப்பாவின் ஆய்வு நூல்கள் யாவை? தமிழில் இலக்கிய விமர்சனம், தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது
- இலக்கிய விமர்சனம் என்ற நூல் மூலம் தமிழுக்குப் புதுத்திறனாய்வு சிந்தனைகளைத் தந்தவர் யார்? தொ.மு.சி. ரகுநாதன்
- தொ.மு.சி. ரகுநாதனின் திறனாய்வு நூல்கள் யாவை? பாரதியு ஷெல்லியும், பாரதி காலமும் கருத்தும், இளங்கோவடிகள் யார்?
- சிங்களம், வடமொழி, ஆங்கிலம், இலத்தீன் மொழிகளில் பயிற்சி உடைய இலக்கியத் திறனாய்வாளர் யார்? சோ. சிவபாத சுந்தரம்
- சோ. சிவபாத சுந்தரத்தின் ஆய்வு நூல்கள் யாவை? குடியியல், மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், ஒலிபரப்புக்கலை, கௌதமபுத்தர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில்
- சாகித்ய அகாதெமி பரிசு வென்ற வல்லிக்கண்ணனின் நூல் எது? புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- வல்லிக்கண்ணனின் குறிப்பிடற்குரிய திறனாய்வு நூல்கள் யாவை? பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, காலத்தின் குரல், முத்துக்குளிப்பு, தமிழில் சிறுபத்திரிகைகள்
- தமிழவனின் ஆய்வு நூல்கள் ? இருபதில் கவிதை, அமைப்பியல் வாதம்
- க. முத்துசாமியின் ஆய்வு நூல்கள் யாவை? சிலம்பில் அவலம், உலோச்சனார் பாடல்கள்
- அமைப்பியல் அணுகுமுறையில் இலக்கியங்களைத் திறனாய்வு செய்வதில் வல்லவர் யார்? க. பூர்ணச்சந்திரன்
- க. பூர்ணச்சந்திரன் இயற்றிய ஆய்வு நூல்கள் யாவை? அமைப்புமையவாதமும் பின் அமைப்புமையவாதமும், செய்தித்தொடர்பியல் கொள்கைகள், பத்திரிகை தலையங்கம் கருத்துரை, கவிதை மொழித்தகர்ப்பும் அமைப்பும்
- நவீன இலக்கிய இரட்டையர்களாக விளங்கிய திறனாய்வாளர்கள் யாவர்? சிட்டி. பெ. கோ. சிவபாத சுந்தரம், சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
- சிட்டி சுந்தரராஜன் எந்த இதழ் பரம்பரையைச் சேர்ந்தவர்? மணிக்கொடி
- ஆங்கிலத்தில் எழுதிய சிட்டி சுந்தரராஜனைத் தமிழில் எழுதத் தூண்டியவர் யார்? வ.ரா.
- 1930இல் தோன்றிய சர்ச்சைக்குரிய இலக்கிய விவாதம் என்ன? பாரதி மகாகவியா?
- சிட்டி பெ.கோ. சுந்தர ராஜனின் ஆய்வு நூல் எது? கண்ணன் என் கவி
- கண்ணன் என் கவியை சிட்டி யாருடன் இணைந்து எழுதியவர்? கு.ப.ரா
- சிட்டி தி.ஜ-வுடன் இணைந்து எழுதிய ஆய்வு நூல் யாது? நடந்தாய் வாழி காவேரி'
- சிட்டி பெ.சு. மணியுடன் இணைந்து இயற்றிய நூல் எது? அதிசயப் பிறவி வ.ரா
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
திறனாய்வியல் வினா வங்கி-1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக