இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 செப்டம்பர், 2020

தொல்காப்பிய மரபியல் வினா வங்கி

  1. இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9]
  2. ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல், களிறு, சேவு, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி,கடுவன்]
  3. பெண் பெயர்கள் எத்தனை? 13[பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி
  4. பறவையின் இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பிள்ளை
  5. தவழ்பவற்றுக்கு உரிய இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பிள்ளை
  6. குட்டி என அழைக்கப்படுபவை எவை? கீரி [மூங்கை],வெருகு, எலி, அணில்,  நாய், பன்றி, புலி, முயல், நரி, குரங்கு
  7. பறள் எனப்படுபவை யாவை? கீரி, வெருகு, எலி, அணில்,  நாய், பன்றி, புலி, முயல், நரி
  8. குருளை எனப்படுபவை யாவை? நாய், பன்றி, புலி, முயல், நரி
  9. பிள்ளை என்று அழைக்கப்படுபவை யாவை?  பன்றி, புலி, முயல், நரி
  10. மறி எனப்படுபவை யாவை? ஆடு, குதிரை, மான், உழை, புல்வாய்
  11. குரங்கின் இளமைப் பெயர்கள் யாவை? மகவு, பிள்ளை, பறள், பார்ப்பு
  12. கன்று என அழைக்கப்படுபவை யாவை? யானை, குதிரை, கழுதை, கடமை[கடமா], மான், எருமை, மரைமா, கவரி, கரடி [கராகம்], ஒட்டகம்
  13. குழவி என அழைக்கப்படுபவை? யானை, ஆ, எருமை, கடமா, மரைமா, குரங்கு, முசு, ஊகம்
  14. உயர்திணைக்கு [மனிதர்] உரிய இளமைப் பெயர் யாது? பிள்ளை, குழவி
  15. புல், மரத்திற்கு உரிய இளமைப் பெயர் யாது? பிள்ளை, குழவி, கன்று, போத்து  
  16. ஓரறிவு உயிருக்கு உரிய உணர்வு எது? தொடுதல்
  17. ஈரறிவு உயிடுக்கு உரிய உணர்வு எது?  தொடுதல், சுவைத்தல்
  18. மூவறிவு உயிருக்கு உரிய உணர்வு - தொடுதல், சுவைத்தல், முகர்தல்
  19. நான்கறிவு உயிருக்கு உரிய உணர்வு - தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல்
  20. ஐந்தறிவு உயிருக்கு உரிய உணர்வு - தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல்,  கேட்டல்
  21. ஆறறிவு உயிருக்கு உரிய உணர்வு - தொடுதல், சுவைத்த, முகர்தல், பார்த்தல், கேட்டல், பகுத்தறிதல் 
  22. தொல்காப்பியர் பகுத்தறிவை எவ்வாறு கூறுகிறார்? மனன் [மனம்]
  23. ஓரறிவு உடையவை யாவை ? புல், மரம்
  24. ஈரறிவு உடையவை யாவை? நந்து, முரள்
  25. நந்து என்பது யாது? சங்கு, நத்தை, அலகு, நொள்ளை [நத்தை வகை]
  26. முரள் என்பது யாது? சிப்பி[இப்பி], கிளிஞ்சல், ஏரல் [இப்பி வகை]
  27. மூவறிவு உடையவை யாவை? கரையான் [சிதல்], எறும்பு
  28. நாலறிவு உடையவை யாவை? நண்டு, தும்பி [வண்டு]
  29. ஐந்தறிவு உடையவை யாவை?  விலங்கு, பறவை [தவழ்பவை]
  30. ஆறறிவு உடையவை யாவை? மக்கள், தேவர். அசுரர் இயக்கர், 
  31. ஆறறிவு உடையவை விலங்குகள் யாவை?  யானை, கிளி, குரங்கு
  32. களிறு எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? யானை, பன்றி
  33. ஒருத்தல்  எந்த விலங்கின் ஆண்பாற் பெயர்? புல்வாய், புலி, உழை,மரை, மரைமா, கரடி, யானை, பன்றி, எருமை 
  34. ஏறு எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பசு, சுறா
  35. போத்து எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? பசு, எருமை, புலி, மரை, புல்வாய், முதலை, மயில், வல்லூறு[எழால்]
  36. இரலை எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? கலை, புல்வாய்
  37. கலை எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? உழை, குரங்கு [முசு]
  38. ஆட்டைக் குறிக்கும் ஆண்பாற் பெயர்கள் யாவை?மோத்தை, தகர், உதள், அப்பர்
  39. சேவல் எவற்றிற்கான ஆண்பாற் பெயர்? மயில் தவிர்த்த பிற பறவைகள்
  40. ஆண்பால் அனைத்திற்கும் உரிய பெயர் எது? ஏற்றை
  41.  பிடி என்பது எந்த விலங்கிற்கு உரிய பெயர்? யானை
  42. பெட்டை எந்தெந்த விலங்குகளின் பெண்பாற் பெயர்? ஒட்டகம், குதிரை, களிறு, மரைமா, பறவைகள் 
  43. அளகெனப்படுவது எவ்வுயிர்களின் பெண்பாற் பெயர்? கோழி, கூகை
  44.  பிணை எவற்றின் பெண்பாற் பெயர்? புல்வாய், நவ்வி, உழை, கவரி, சொல்வாய்
  45. பிணவு, பிணவல் எவற்றின் பெண்பாற் பெயர்? பன்றி, புல்வாய், நாய்
  46. ஆ எவற்றின் பெண்பாற் பெயர்? பசு, எருமை, மரை
  47. மனிதர்களுக்கான பெண்பாற் பெயர் யாவை? பெண், பிணவு
  48. நாகு எவற்றின் பெண்பாற் பெயர்? எருமை, மரை, பசு, நத்தை
  49. ஆட்டின் பெண்பாற் பெயர்கள் யாவை? மூடு, கடமை
  50. பாட்டி எவற்றின் பெண்பாற் பெயர்? பன்றி, நாய்,நரி
  51. மந்தி எவற்றின் பெண்பாற் பெயர்? குரங்கு, முசுவு, ஊகம்

தொல்தமிழக விருதுகள்

  1. மாராயம் என்பது என்ன?  போரில் சிறந்த வீரனுக்குத் தரப்படும் பட்டம் 
  2. மாராயம் குறித்து பேசும் தொன்னூல் எது? தொகாப்பிய வஞ்சித் திணையில் மாராயம் பெற்ற நெடுமொழி என்ற துறையில்  குறிக்கப்பட்டுள்ளது
  3. எட்டி என்பது என்ன? எட்டி என்பது  நாட்டின் சிறந்த வணிகனுக்கு வழங்கப்படும் விருது ஆகும். வீரன் கண்ணுக்கு எட்டும் வரை உள்ள நிலம் இறையிலி நிலமாக வழங்கப்படும். அடையாளமாக எட்டிப்பூவும் வழங்கப்படும். இது குறித்து இளம்பூரணர் விவரிக்கிறார்.
  4. காவிதி என்பது என்ன? காவிதி என்பது நாட்டைப் பஞ்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் காக்கும் சிறந்த உழவனுக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும்.
  5. காவிதி பட்டம் பெற்ற சங்கப்புலவர்கள் யாவர்?  ஆவூர் காவிதிகள் சாதேவனார், இளம்புல்லூர் காவிதி, கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார்
  6. இறையிலி என்றால் என்ன? இறை என்பது வரியைக் குறிக்கும். வரி இல்லாத நிலம் இறையிலி நிலம் ஆகும்.
  7. தலைக்கோல் என்றால் என்ன? ஆடற்கலையில் சிறந்தவருக்கு சிறந்தவருக்குத் தரப்படும் விருது ஆகும்.
  8. தலைக்கோள் எதனால் ஆனது? தோற்ற மன்னனின் வெண்கொற்றக் குடை எடுத்து அதில் விலை உயர்ந்த சம்பூதநம் என்ற பொன் தகடு, விலை உயர்ந்த நவமணி கலந்து தயாரிக்கப்படும் கோல் ஆகும்.   

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...