- மதுரகவியாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்குருகூருக்கு அருகில் உள்ள திருக்கோளூர்
- மதுரகவியாழ்வார் எப்போது பிறந்தார்? ஈசுவர ஆண்டு சித்திரை நாள்
- நம்மாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் கருடத்தாழ்வார்
- மதுரகவியாழ்வார் - பெயர்க்காரணம் யாது? மதுரமான [இனிய] கவிகளைப் பாடுபவர்.
- நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார ஒளிப்பிழம்பு அழைத்துச் சென்ற நிகழ்வு நடைபெற்ற இடம் எது? அயோத்தி
- மதுரகவியாழ்வாரின் ஞானாசிரியர் யார்? நம்மாழ்வார்
- திருமாலின் தொண்டரை வணங்கிப் பாடியவர் யார்? நம்மாழ்வார்
- பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக நம்மாழ்வார் சேர்க்கப்படாமைக்கான காரணம் யாது? திருமாலைப் பாடாமல் திருமால் அடியாரைப் பாடியது.
- நம்மாழ்வார் மீது பாடிய 11 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? கண்ணி நுண் சிறுதாம்பு
- நம்மாழ்வாரின் பாடல்களை எழுதித் தொகுத்தவர் யார்? மதுரகவியாழ்வார்
- திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரை தன் கடவுளாக எவ்வளவு காலம் வழிபட்டார்? 50 ஆண்டுகள்
- சேர அரச மரபில் தோன்றியவர் யார்? குலசேகர ஆழ்வார் [திருமால் மீது கொண்ட பற்றால் அரசைத் துறந்தார்]
- குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது? திருவஞ்சைக்களம்
- குலசேகர ஆழ்வாரின் தந்தை யார்? திருடவரதன் என்னும் மன்னன்
- குலசேகராழ்வாரின் வேறு பெயர்கள் யாவை? கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன், பெருமாள்
- குலசேகர ஆழ்வார் தமிழில் பாடிய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? பெருமாள் திருமொழி
- குலசேகர ஆழ்வார் வடமொழியில் பாடிய நூல் பெயர் - முகுந்தமாலை
- பெருமாள் திருமொழி பாடப்பட்ட தளங்கள் யாவை? திருவரங்குஅம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு
- ஆலயப்படியாய்த் தன்னை எண்ணிப் பாடிய குலசேகர ஆழ்வாரின் பெயரால் குலசேகரப்படி என்று அழைக்கப்பெற்ற படியுடைய தலம் எது? திருவேங்கடம்
- குலசேகர ஆழ்வார் மங்களா சாசனம் செய்த தலங்கள் யாவை? திருவரங்கம், திருக்கண்ண புரம், தில்லை
- குலசேகர் ஆழ்வார் எந்த ஆலயத்தின் மூன்றாம் மதிலைக் கட்டினார்? திருவரங்கம்
- குலசேகர ஆழ்வார் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை எவ்வாறு அழைக்கிறார்? 'ஆடிப்பாடி தொண்டரடிப் பொடி ஆழ்வார்'
- குலசேகர ஆழ்வாரின் காலம் எது? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 2 டிசம்பர், 2020
வைணவ இலக்கியங்கள் - 2
வைணவ ஆழ்வார்கள் - 1
- பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார்.
- பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்
- பொய்கையாழ்வார் பிறந்த நாள் யாது? ஐப்பசி திங்கள் திருவோண நாள்
- பொய்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 6/8 ஆம் நூற்றாண்டு
- திருமாலின் சங்கின் பெயர் யாது? பாஞ்சசன்னியம்
- பாஞ்சசன்னியத்தின் அவதாரமாகத் தோன்றிய ஆழ்வார் யார்? பொய்கையாழ்வார்
- பொய்கையாழ்வார் பாடல்கள் முதல் திருவந்தாதி
- முதல் திருவந்தாதியின் பாடல் எண்ணிக்கை யாது? 100
- பொய்கையாழ்வாரும் களவழி நாற்பதைப் பாடிய பொய்கையாரும் ஒருவரே என்றவர் யார்? மு. இராகவையங்கார்
- பொய்கையாழ்வார் எந்தெந்தத் தலங்களில் உறையும் திருமாலின் பெருமைகளைப் பாடுகிறார்? திருவரங்கம், திருவிண்ணகரம், திருவேங்கடம், திருவெஃகா, திருக்கோவிலூர்
- இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பூதத்தாழ்வார்
- பூதத்தாழ்வார் பெயர்க் காரணம் யாது? திருமாலை கடல் வண்ணன் பூதம், மற்த்திரு மார்பன் அவன் பூதம் எனப் பாடியமையால் பூதத்தாழ்வார் எனப்பட்டார்
- பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்கடல் மல்லையூர் எனப்பட்ட மாமல்லபுரம்- குருக்கத்திப் பந்தரில் குருக்கத்தி மலரில் பிறந்தார்
- பூதத்தாழ்வார் பிறந்த நாள் எது? ஐப்பசித் திங்கள் அவிட்டநாளில் [பொய்கையாழ்வார் பிறந்த மறுநாள்1]
- பூதத்தாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் அம்சமாகத் தோன்றினார்
- பூதத்தாழ்வார் பாடிய தலங்கள் யாவை? திருவேங்கடம், திருவரங்கம், திருப்பாடகம், திருவத்தியூர், திருக்குடமூக்கு
- மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பேயாழ்வார்
- பேயாழ்வார் - பெயர்க்காரணம் யாது? திருமாலின் மீது கொண்ட பக்தியால் அழுது, சிரித்து, ஆடிப்பாடி பேய்பிடித்தவர் போல் பாடியதால் பேயாழ்வார் எனப்பட்டார்.
- பேயாழ்வார் எங்கு பிறந்தார்? மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.
- பேயாழ்வார் எப்போது பிறந்தார்? ஐப்பசி மாத சதய நாள் [பூதத்தாழ்வார்]
- திருமாளின் வாளின் பெயர் என்ன? நாந்தகம்
- நாந்தகத்தின் அம்சமாகப் பிறந்தவர் யார்? பேயாழ்வார்
- பேயாழ்வாரின் காலம் யாது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு
- திருமாலோடு சிவனையும் இணைத்துப் பாடிய ஆழ்வார் யார்? பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார் எங்கு பிறந்தார்? தொண்டை நாட்டின் பூவிருந்தவல்லி அருகில் உள்ள திருமழிசையில் பிறந்தார்
- திருமழிசை ஆழ்வார் எப்போது பிறந்தார்? தைமாதம் மக நட்சத்திரம்
- திருமாலின் சுதர்சனச்சக்கரத்தின் அம்சமாகத் தோன்றியவர் யார்? திருமழிசை ஆழ்வார்
- திருமழிசை ஆழ்வாரின் வேறுபெயர் யாது? பத்திசாரர்
- பிற சமயத்தவரை சாடிய, வீரவைணவர் என்று அழைக்கப்பட்டவர் யார்? திருமழிசை ஆழ்வர்
- திருமழிசை ஆழ்வாருக்கு தத்துவ உபதேசம் செய்தவர் யார்? பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வாரின் சீடன் யார்? கணிக்கண்ணன்
- திருமால் பாம்புப்பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டது யாருடன்? திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன்
- நம்மாழ்வார் எங்கு பிறந்தார்? பாண்டிய நாட்டில் உள்ள திருக்குருகூர்
- நம்மாழ்வாரின் பெற்றோர் யாவர்? காரியார், நங்கையார்
- நம்மாழ்வார் எப்போது பிறந்தார்? பிரமாதி ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்தார்
- ஆதிசேஷன் அவதாரமான புளியமரத்தடியில் அமர்ந்து 16 ஆண்டு தவம் செய்து இறை அருளால் பேசும் வரம் பெற்ற ஆழ்வார் யார்? நம்மாழ்வார்
- நம்மாழ்வார் சடகோபன் என்று அழைக்கப்படக் காரணம் யாது? சடம் என்ற வாய்வை அடக்கியதால்
- பிறசமயம் என்னும் யானைக்கு அங்குசமாகத் திகழ்ந்தமையால் நம்மாழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார்? பராங்குசர்
- நம்மாழ்வாரின் சிறப்புப்பெயர்கள் யாவை? சடகோபர், பராங்குசர், மாறன், திராவிடசிசு, வைணவத்து மாணிக்கவாசகர், வகுளாபரணர்
- ஆழ்வாரில் தலைமையானவர் யார்? நம்மாழ்வார் [ அவர் அவயவி, பிற ஆழ்வார் அவயவம்]
- நம்மாழ்வார் எழுதிய நூல்கள் யாவை? திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி
- நம்மாழ்வாரின் நான்கு நூல்களும் வைணவர்களால் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நான்கு வேதமாகப் போற்றப்படுகிறது.
- நம்மாழ்வார் நூல்களின் சிறப்புப் பெயர்கள் யாவை? திராவிட வேதம், செந்தமிழ் வேதம், ஆன்றதமிழ் மறைகள் ஆயிரம்
- தென்கலை வைணவர்கள் மந்திரமாகக் கருதுவது யாது? திருவாய் மொழி
- திருவாய் மொழிக்கு தத்வார்த்த விளக்க உரை எழுதியவர் யார்? பெரியவாச்சான் பிள்ளை
- பெரிய திருவந்தாதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது? 87 வெண்பா
- திருவிருத்த பாடல் எண்ணிக்கை - 100 கட்டளைக்கலித்துறை பா
- திருவாசிரிய பாடல் எண்ணிக்கை - 7 ஆசிரியப்பா
- நம்மாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...