- முதல் ஆங்கில நாவல் எந்த ஆண்டு வெளியானது? 1740
- இந்தியாவின் முதல் புதினம் எது? துர்க்கேஷ நந்தினி
- இந்தியாவில் முதல் புதினம் வெளியான ஆண்டு யாது? 1865
- மலையாள முதல் புதினம்வெளியான ஆண்டு யாது? 1887
- தமிழின் முதல் புதினம் யாது? பிரதாப முதலியார் சரித்திரம்
- தமிழின் முதல் புதினம் வெளியான ஆண்டு யாது? 1879
- தமிழின் முதல் புதினத்தை எழுதியவர் யார்? மாயூரம் வேதநாயகம்
- கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர் யார்? பி.ஆர். ராஜம் ஐயர்
- கமலாம்பாள் சரித்திரம் வெளியான ஆண்டு? 1896
- கமலாம்பாள் சரித்திரம் எந்த இதழில் தொடராக வெளிவந்தது? விவேக சிந்தாமணி
- தீனதயாளு புதினத்தின் ஆசிரியர் யார்? நடேச சாஸ்திரி
- முத்து மீனாட்சியின் ஆசிரியர் யார்? அ. மாதவையா
- தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் யாது? மோகனாங்கி
- தமிழின் முதல் வரலாற்றுப் புதினத்தின் ஆசிரியர் யார்? தி.த.சரவணமுத்துப் பிள்ளை
- நாவல் ராணி யார்? கோதைநாயகி அம்மாள்
- சுகுணசுந்தரியின் ஆசிரியர் யார்? மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- சுகுண சுந்தரி வெளியான ஆண்டு யாது? 1887
- மோகனாங்கி வெளியான ஆண்டு யாது?1895
- தமிழின் முதல் துப்பறியும் புதினத்தை எழுதியவர் யார்? எம்.எஸ்.நடேச சாஸ்திரி
- தானவன் எந்த ஆண்டு வெளியானது?1894
- கமலாக்ஷி சரித்திரத்தை இயற்றியவர் யார்? பொன்னுசாமி பிள்ளை
- தி.ம.பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய புதினங்கள் யாவை? கமலாக்ஷி, ஞானாம்பிகை, சிவஞானம், விஜயசுந்தரம், ஞானசம்பந்தம், ஞானப்பிரகாசம்
- மாதவையா எழுதிய புதினங்கள் யாவை? பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்துமீனாட்சி
- எஸ்.ஏ. இராமேஸ்வரி எழுதிய புதினம் யாது?
- மங்கம்மாள் புதினத்தை எழுதியவர் யார்?
- முதல் இரு வரலாற்றுப்புதினங்களும் யாருடைய வரலாற்றைப் பேசுகிறது? ராணி மங்கம்மாள்
- அயல் மாநிலக்கதைக்களத்தை மையமாகக் கொண்ட முதல் தமிழ் புதினம் யாது? அதை எழுதியவர் யார்?
- மொழிபெயர்ப்புப் புதினங்களை அதிகமாக மொழிபெயர்த்தவர்கள் யாவர்? ஆரணி குப்புசாமி, ஜே.ஆர். ரங்கராஜூ, வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
- மறைமலை அடிகள் எழுதிய தழுவல் நாவல் யாது?
- மதிவானனை எழுதியவர் யார்?
- ந.பலராமையர் எழுதிய புதினம் யாது?
- மீனாட்சி சுந்தரம்மாள் எழுதிய புதினங்கள் யாவை?
- 26 ஆண்டுகளில் 29 முறைப் பதிப்பிக்கப்பட்ட ராஜாம்பாளை இயற்றியவர் யார்?
- புதுமைப்பித்தனின் எழுத்துலக வாரிசு யார்? ஜெயகாந்தன்
- ரிஷிமூலம் எழுதியவர் யார்? ஜெயகாந்தன்
- சிறுகதையாக எழுதப்பட்டுப் புதினமாக வளர்ந்த ஜெயக்காந்தனின் புதினம் யாது? சிலநேரங்களில் சில மனிதர்கள்
- வாழ்க்கை அழைக்கிறது யாருடைய புதினம்? ஜெயகாந்தனின் முதல் புதினம்
- தி. ஜானகி ராமனின் புதினங்கள் யாவை? அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள்
- திரைப்படமான தி.ஜாவின் புதினம் யாது? மோகமுள்
- இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள் யாவை? குறிஞ்சித்தேன், கரிப்புமணிகள், அலைவாய்கரையினிலே, சேற்றில் மனிதர்கள். கூட்டுக்குஞ்சுகள்
- இராஜம் கிருஷ்ணன் பிறந்த ஆண்டு யாது? 1925
- மலைவாழ் மக்களின் சிக்கலைப் பேசும் இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது?குறிஞ்சித்தேன்
- குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்த இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது?கூட்டுக்குஞ்சுகள்
- கடற்கரைச் சார்ந்த மக்களின் வாழ்வியல் குறித்துப் பேசும் இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது? அலைவாய் கரையினிலே, கரிப்புமணிகள்
- தோப்பில் முதமது மீரான் எங்கு பிறந்தார்? தேங்காய்ப்பட்டணம்
- தோப்பில் முதமது மீரானின் புதினங்கள் யாவை? ஒருகடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வுநாற்காலி
- தோப்பில் முதமது மீரான் எந்த புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது வென்றார்? சாய்வு நாற்காலி
- கல்கியின் இயற்பெயர் யாது? இரா. கிருஷ்ணமூர்த்தி
- கல்கியின் முதல் புதினம் யாது? விமலா
- கல்கியின் தொடக்ககால புனைப்பெயர் யாது? தேனீ
- கல்கியின் முதல் புதினம் எந்த இதழில் தொடராக வந்தது?
- கல்கியின் முன்னோடிகள் யாவர்?
- கல்கியின் புதினங்கள் யாவை?
- தமிழகத்தின் வால்டர் ஸ்காட் யார்? கல்கி
- கல்கி எந்தப் புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது வென்றார்? அலையோசை
- நிறைவு பெறாத கல்கியின் புதினம் யாது?
- அகிலனின் இயற்பெயர் யாது? அகிலாண்டம்
- அகிலனின் புதினங்கள் யாவை? பெண், வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர், புதுவெள்ளம், வாழ்வு எங்கே?, பால்மரக்காட்டினிலே, சித்திரப்பாவை, பாவைவிளக்கு, துணைவி, நெஞ்சின் அலைகள், சிநேகிதி, எரிமலை, சக்திவேல், நிலவினிலே, இன்பநினைவு
- அகிலனின் வரலாற்றுப் புதினங்கள் யாவை? வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர்
- சின்னச்சாம்பு யாருடைய படைப்பு? தேவன்
- கோதைத்தீவு யாருடைய புதினம்? தேவன்
- ஆரணி குப்புசாமியின் இரத்தினபுரி ரகசியம் எத்தனை பாகங்களைக் கொண்டது? 9
- முதல் முழு தேசிய இயக்க நாவல் எது? தேசபக்தன் கந்தன்
- முதல் முழு தேசிய இயக்க நாவலை எழுதியவர் யார்? கே.எஸ்.வேங்கடரமணி
- முழுமுதல் கிராமிய நாவல் எது? மண்ணாசை [சங்கரராமின் புதினம்]
- மண்மணம் வீசும் நாவல் முன்னோடி யார்? சங்கரராம்
- துப்பறியும் சாம்புவைப் படைத்தவர் யார்?
- தனிமனித வரலாற்று நாவல் : fiction biography வகைப் புதின முன்னோடி யார்? எம்.எஸ்.கல்யாண சுந்தரம்
- முதல் தனிமனித வரலாற்றுப் புதினம் யாது? இருபது வருஷங்கள்
- அண்ணாவின் புதினங்கள் யாவை?
- தில்லானாமோகனாம்பாளின் ஆசிரியர் யார்?
- மு.வரதராசனின் முதல் புதினம் யாது? செந்தாமரை
- மு.வ.வின் புதினங்கள் யாவை?செந்தாமரை, கள்ளோ காவியமோ, அந்த நாள், அல்லி, மலர்விழி, பாவை, கரித்துண்டு, வாடாமலர், அகல்விளக்கு, கயமை, பெற்றமனம், நெஞ்சில் ஒரு முள், மண்குடிசை
- விந்தனின் இயற்பெயர் யாது? கோவிந்தன்
- விந்தனின் புதினங்கள் யாவை? பாலும் பாவையும், சுயவரம், மனிதன் மாறவில்லை, பசிகோவிந்தம், மிஸ்டர் விக்கிரமாதித்தன், ஓ மனிதா
- பாட்டாளி புனைகதை ஆசிரிய முன்னோடி யார்?
- கூட்டுறவை மையமாகக் கொண்ட முதல் புதினம் யாது? உழைக்கும் கரங்கள்
- சாண்டில்யன் எழுதிய முதல் வரலாற்றுப் புதினம் யாது? ஜீவபூமி
- சத்யாகிரகம் பற்றிய முதல் தமிழ் நாவல் யாது? பலாத்காரம் [சாண்டியன்]
- பொய்த்தேவின் ஆசிரியர் யார்? க.நா. சுப்ரமணியம்
- கோ.வி. மணிசேகரனின் நூறாவது புதினம் யாது? ஒரு தீபம் ஐந்து திரிகள்
- இந்திரா பார்த்தசாரதியின் முதல் புதினம் யாது? காலவெள்ளம்
- இந்திரா பார்த்தசாரதியின் புதினங்கள் யாவை?காலவெள்ளம், தந்திரபூமி, சுதந்திர பூமி, குருதிப்புணல்
- இந்திரா பார்த்தசாரதியின் சாகித்ய அகாதெமி விருது வென்ற புதினம் யாது? குருதிப்புணல்
- சுந்தர ராமசாமியின் புதினங்கள் யாவை?ஜே.ஜே. சிலக்குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை
- அசோகமித்திரனின் புதினங்கள் யாவை?கரைந்த நிழல்கள், தண்ணீர், 18ஆவது அட்சக்கோடு, ஆகாயத்தாமரை, இன்று
- திரைப்படத் துறை குறித்த அசோகமித்திரனின் புதினம் யாது? கரைந்த நிழல்கள்
- புனலும் மணலும் யாருடைய படைப்பு? அ. மாதவன்
- ஜெயகாந்தனின் முதல் புதினம் யாது? வாழ்க்கை அழைக்கிறது
- ஜெயகாந்தனின் புதினங்கள் யாவை? வாழ்க்கை அழைக்கிறது, பாரிஸுக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சினிமாவுக்குப் போன சித்தாளு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
- தாகம் யாருடைய புதினம்? கு. சின்னப்பபாரதி
- சாகித்ய அகாதெமி விருது வென்ற டி. செல்வராஜின் புதினம் யாது? தோல்
- டி. செல்வராஜின் புதினங்கள் யாவை? மலரும் சருகும், தேநீர், தோல்
- சேரி மக்கள் பற்றிய முதல் புதினம் யாது? மலரும் சருகும்
- நீலபத்மநாபனின் புதினங்கள் யாவை? பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், உறவுகள், மின்னுலகம், இலையுதிர் காலம்
- கீறல்கள் யாருடைய புதினம்? ஐசக் அருமைநாதன்
- சாயாவனம் யாரால் இயற்றப்பட்டது? சா. கந்தசாமி
- காகித மலர்கள் யாருடைய புதினம்?ஆதவன்
- பாலகுமரனின் புதினங்கள் யாவை? விழிமயக்கம், தென்னம்பாளை, ஆனந்தவயல், இரும்புக்குதிரைகள், கரையோர முதலைகள், கொம்புத்தேன், மெர்க்குரிப்பூக்கள், நிலாக்கால மேகம், தாயுமானவர்
- தலைகீழ் விகிதங்கள் யாருடைய முதல் புதினம்? நாஞ்சில்நாடன்
- புத்தம் வீடு யாருடைய படைப்பு? ஹெப்சிபா ஜேசுதாசன்
- தமிழில் வரலாற்றுப் புதினத்தின் தந்தை யார்? கல்கி
- சூடாமணியின் புதினங்கள் யாவை? புன்னகைப்பூங்கொத்து, நீயே என் உலகம், தீயினில் தூசு, தந்தை வடிவம், மானிட அம்சம், கண்ணம்மா
- யுனெஸ்கோ உலக இலக்கியப்படைப்புக்காக ஏற்ற முதல் நூல் எது? ஆகாசவீடுகள்
- வாசந்தியின் புதினங்கள் யாவை? ஆகாசவீடுகள், மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள், நான் புத்தன் இல்லை, நிஜங்கள், அந்தி நேரத்து உதயங்கள், மூங்கில் பூக்கள்
- கீதமடி நீ எனக்கு யாருடைய புதினம்? இந்துமதி
- நெசவாளர்கள் பற்றிய தொ.மு.சி. ரகுநாதனின் புதினம் எது? பஞ்சும் பசியும்
- தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குறித்த டி.செல்வராஜின் புதினம் எது? தேனீர்
- கம்யூனிசம் பேசும் ஐசக் அருமைராஜனின் புதினம் யாது? கீறல்கள்
- சௌராட்டிரர்கள் பற்றிய எம்.வி.வெங்கட்ராமனின் புதினம் யாது? வேள்வித்தீ
- நனவோடை உத்தியிலான சி.சு.செல்லப்பாவின் புதினம் யாது? ஜீவனாம்சம்
- நடப்பியல் உத்தியைக்கையாண்ட முதல் புதினம் யாது? கமலாம்பாள் சரித்திரம்
- விடுதலை உணர்வைப் பேசும் முதல் தமிழ்ப் புதினம் யாது? காந்திமதி [பனையப்பச்செட்டியார்]
- கடித வடிவிலான முதல் புதினம் யாது? கோகிலாம்பாள் கடிதங்கள்
- முதல் பெண் புதின ஆசிரியர் யார்? கிருபா சத்தியநாதன்
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 17 ஏப்ரல், 2021
புதின இலக்கிய வினாவங்கி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...