இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஏப்ரல், 2021

புதின இலக்கிய வினாவங்கி

  1. முதல் ஆங்கில நாவல் எந்த ஆண்டு வெளியானது? 1740
  2. இந்தியாவின் முதல் புதினம் எது? துர்க்கேஷ நந்தினி
  3. இந்தியாவில் முதல் புதினம் வெளியான ஆண்டு யாது? 1865
  4. மலையாள முதல் புதினம்வெளியான ஆண்டு யாது? 1887
  5. தமிழின் முதல் புதினம்  யாது? பிரதாப முதலியார் சரித்திரம்
  6. தமிழின் முதல் புதினம் வெளியான ஆண்டு யாது? 1879
  7. தமிழின் முதல் புதினத்தை எழுதியவர் யார்? மாயூரம் வேதநாயகம்
  8. கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர் யார்? பி.ஆர். ராஜம் ஐயர்
  9. கமலாம்பாள் சரித்திரம் வெளியான ஆண்டு? 1896
  10. கமலாம்பாள் சரித்திரம் எந்த இதழில் தொடராக வெளிவந்தது?  விவேக சிந்தாமணி
  11. தீனதயாளு புதினத்தின் ஆசிரியர் யார்? நடேச சாஸ்திரி
  12. முத்து மீனாட்சியின் ஆசிரியர் யார்? அ. மாதவையா
  13. தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் யாது? மோகனாங்கி
  14. தமிழின் முதல் வரலாற்றுப் புதினத்தின் ஆசிரியர் யார்? தி.த.சரவணமுத்துப் பிள்ளை
  15. நாவல் ராணி யார்? கோதைநாயகி அம்மாள்
  16. சுகுணசுந்தரியின் ஆசிரியர் யார்? மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  17. சுகுண சுந்தரி வெளியான ஆண்டு யாது? 1887
  18. மோகனாங்கி வெளியான ஆண்டு யாது?1895
  19. தமிழின் முதல் துப்பறியும் புதினத்தை எழுதியவர் யார்? எம்.எஸ்.நடேச சாஸ்திரி
  20. தானவன் எந்த ஆண்டு வெளியானது?1894
  21. கமலாக்ஷி சரித்திரத்தை இயற்றியவர் யார்? பொன்னுசாமி பிள்ளை
  22. தி.ம.பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய புதினங்கள் யாவை? கமலாக்ஷி, ஞானாம்பிகை, சிவஞானம், விஜயசுந்தரம், ஞானசம்பந்தம், ஞானப்பிரகாசம்
  23. மாதவையா எழுதிய புதினங்கள் யாவை? பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்துமீனாட்சி
  24. எஸ்.ஏ. இராமேஸ்வரி எழுதிய புதினம் யாது? 
  25. மங்கம்மாள் புதினத்தை எழுதியவர் யார்? 
  26. முதல் இரு வரலாற்றுப்புதினங்களும் யாருடைய வரலாற்றைப் பேசுகிறது? ராணி மங்கம்மாள்
  27. அயல் மாநிலக்கதைக்களத்தை மையமாகக் கொண்ட முதல் தமிழ் புதினம் யாது? அதை எழுதியவர் யார்?
  28. மொழிபெயர்ப்புப் புதினங்களை அதிகமாக மொழிபெயர்த்தவர்கள் யாவர்? ஆரணி குப்புசாமி, ஜே.ஆர். ரங்கராஜூ, வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
  29. மறைமலை அடிகள் எழுதிய தழுவல் நாவல் யாது? 
  30. மதிவானனை எழுதியவர் யார்?
  31. ந.பலராமையர் எழுதிய புதினம் யாது?
  32. மீனாட்சி சுந்தரம்மாள் எழுதிய புதினங்கள் யாவை?
  33. 26 ஆண்டுகளில் 29 முறைப் பதிப்பிக்கப்பட்ட ராஜாம்பாளை இயற்றியவர் யார்?
  34. புதுமைப்பித்தனின் எழுத்துலக வாரிசு யார்? ஜெயகாந்தன்
  35. ரிஷிமூலம் எழுதியவர் யார்? ஜெயகாந்தன்
  36. சிறுகதையாக எழுதப்பட்டுப் புதினமாக வளர்ந்த ஜெயக்காந்தனின் புதினம் யாது? சிலநேரங்களில் சில மனிதர்கள்
  37. வாழ்க்கை அழைக்கிறது யாருடைய புதினம்? ஜெயகாந்தனின் முதல் புதினம்
  38. தி. ஜானகி ராமனின் புதினங்கள் யாவை? அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள்
  39. திரைப்படமான தி.ஜாவின் புதினம் யாது? மோகமுள்
  40. இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள் யாவை? குறிஞ்சித்தேன், கரிப்புமணிகள், அலைவாய்கரையினிலே, சேற்றில் மனிதர்கள். கூட்டுக்குஞ்சுகள்
  41. இராஜம் கிருஷ்ணன் பிறந்த ஆண்டு யாது? 1925
  42. மலைவாழ் மக்களின் சிக்கலைப் பேசும் இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது?குறிஞ்சித்தேன்
  43. குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்த இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது?கூட்டுக்குஞ்சுகள்
  44. கடற்கரைச் சார்ந்த மக்களின் வாழ்வியல் குறித்துப் பேசும் இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது? அலைவாய் கரையினிலே, கரிப்புமணிகள்
  45. தோப்பில் முதமது மீரான் எங்கு பிறந்தார்? தேங்காய்ப்பட்டணம்
  46. தோப்பில் முதமது மீரானின் புதினங்கள் யாவை? ஒருகடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வுநாற்காலி
  47. தோப்பில் முதமது மீரான் எந்த புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது வென்றார்? சாய்வு நாற்காலி
  48. கல்கியின் இயற்பெயர் யாது? இரா. கிருஷ்ணமூர்த்தி
  49. கல்கியின் முதல் புதினம் யாது? விமலா
  50. கல்கியின் தொடக்ககால புனைப்பெயர் யாது? தேனீ
  51. கல்கியின் முதல் புதினம் எந்த இதழில் தொடராக வந்தது?
  52. கல்கியின் முன்னோடிகள் யாவர்?
  53. கல்கியின் புதினங்கள் யாவை?
  54. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் யார்? கல்கி
  55. கல்கி எந்தப் புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது வென்றார்? அலையோசை
  56. நிறைவு பெறாத கல்கியின் புதினம் யாது?
  57. அகிலனின் இயற்பெயர் யாது? அகிலாண்டம்
  58. அகிலனின் புதினங்கள் யாவை? பெண், வேங்கையின்  மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர், புதுவெள்ளம், வாழ்வு எங்கே?, பால்மரக்காட்டினிலே, சித்திரப்பாவை, பாவைவிளக்கு, துணைவி, நெஞ்சின் அலைகள், சிநேகிதி, எரிமலை, சக்திவேல், நிலவினிலே, இன்பநினைவு
  59. அகிலனின் வரலாற்றுப் புதினங்கள் யாவை?  வேங்கையின்  மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர்
  60. சின்னச்சாம்பு யாருடைய படைப்பு? தேவன்
  61. கோதைத்தீவு யாருடைய புதினம்? தேவன்
  62. ஆரணி குப்புசாமியின் இரத்தினபுரி ரகசியம் எத்தனை பாகங்களைக் கொண்டது? 9
  63. முதல் முழு தேசிய இயக்க நாவல் எது? தேசபக்தன் கந்தன்
  64. முதல் முழு தேசிய இயக்க நாவலை எழுதியவர் யார்? கே.எஸ்.வேங்கடரமணி
  65. முழுமுதல் கிராமிய நாவல் எது? மண்ணாசை [சங்கரராமின் புதினம்]
  66. மண்மணம் வீசும் நாவல் முன்னோடி யார்? சங்கரராம்
  67. துப்பறியும் சாம்புவைப் படைத்தவர் யார்? 
  68. தனிமனித வரலாற்று நாவல் : fiction biography  வகைப் புதின முன்னோடி யார்? எம்.எஸ்.கல்யாண சுந்தரம் 
  69. முதல் தனிமனித வரலாற்றுப் புதினம் யாது? இருபது வருஷங்கள்
  70. அண்ணாவின் புதினங்கள் யாவை? 
  71. தில்லானாமோகனாம்பாளின் ஆசிரியர் யார்? 
  72. மு.வரதராசனின் முதல் புதினம் யாது? செந்தாமரை
  73. மு.வ.வின் புதினங்கள் யாவை?செந்தாமரை, கள்ளோ காவியமோ, அந்த நாள், அல்லி, மலர்விழி, பாவை, கரித்துண்டு, வாடாமலர்,  அகல்விளக்கு, கயமை, பெற்றமனம், நெஞ்சில் ஒரு முள், மண்குடிசை
  74. விந்தனின் இயற்பெயர் யாது?  கோவிந்தன்
  75. விந்தனின் புதினங்கள் யாவை? பாலும் பாவையும், சுயவரம், மனிதன் மாறவில்லை, பசிகோவிந்தம், மிஸ்டர்  விக்கிரமாதித்தன், ஓ மனிதா
  76. பாட்டாளி புனைகதை ஆசிரிய முன்னோடி யார்?
  77. கூட்டுறவை மையமாகக் கொண்ட முதல் புதினம் யாது? உழைக்கும் கரங்கள்
  78. சாண்டில்யன் எழுதிய முதல் வரலாற்றுப் புதினம் யாது? ஜீவபூமி
  79. சத்யாகிரகம் பற்றிய முதல் தமிழ் நாவல் யாது? பலாத்காரம் [சாண்டியன்]
  80. பொய்த்தேவின் ஆசிரியர் யார்? க.நா. சுப்ரமணியம்
  81. கோ.வி. மணிசேகரனின் நூறாவது புதினம் யாது? ஒரு தீபம் ஐந்து திரிகள்
  82. இந்திரா பார்த்தசாரதியின் முதல் புதினம் யாது? காலவெள்ளம்
  83. இந்திரா பார்த்தசாரதியின் புதினங்கள் யாவை?காலவெள்ளம், தந்திரபூமி, சுதந்திர பூமி, குருதிப்புணல்
  84. இந்திரா பார்த்தசாரதியின் சாகித்ய அகாதெமி விருது வென்ற புதினம் யாது? குருதிப்புணல்
  85. சுந்தர ராமசாமியின் புதினங்கள் யாவை?ஜே.ஜே. சிலக்குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை
  86. அசோகமித்திரனின் புதினங்கள் யாவை?கரைந்த நிழல்கள், தண்ணீர், 18ஆவது அட்சக்கோடு, ஆகாயத்தாமரை, இன்று
  87. திரைப்படத் துறை குறித்த அசோகமித்திரனின் புதினம் யாது? கரைந்த நிழல்கள்
  88. புனலும் மணலும் யாருடைய படைப்பு? அ. மாதவன்
  89. ஜெயகாந்தனின் முதல் புதினம் யாது? வாழ்க்கை அழைக்கிறது
  90. ஜெயகாந்தனின் புதினங்கள் யாவை? வாழ்க்கை அழைக்கிறது, பாரிஸுக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சினிமாவுக்குப் போன சித்தாளு,  ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  91. தாகம் யாருடைய புதினம்? கு. சின்னப்பபாரதி
  92. சாகித்ய அகாதெமி விருது வென்ற டி. செல்வராஜின் புதினம் யாது? தோல்
  93. டி. செல்வராஜின் புதினங்கள் யாவை? மலரும் சருகும்,  தேநீர், தோல்
  94. சேரி மக்கள் பற்றிய முதல் புதினம் யாது? மலரும் சருகும்
  95. நீலபத்மநாபனின் புதினங்கள் யாவை? பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், உறவுகள், மின்னுலகம், இலையுதிர் காலம்
  96. கீறல்கள் யாருடைய புதினம்? ஐசக் அருமைநாதன்
  97. சாயாவனம் யாரால் இயற்றப்பட்டது? சா. கந்தசாமி
  98. காகித மலர்கள் யாருடைய புதினம்?ஆதவன்
  99. பாலகுமரனின் புதினங்கள் யாவை? விழிமயக்கம், தென்னம்பாளை, ஆனந்தவயல், இரும்புக்குதிரைகள், கரையோர முதலைகள், கொம்புத்தேன்,  மெர்க்குரிப்பூக்கள், நிலாக்கால மேகம், தாயுமானவர்
  100. தலைகீழ் விகிதங்கள் யாருடைய முதல் புதினம்? நாஞ்சில்நாடன்
  101. புத்தம் வீடு யாருடைய படைப்பு? ஹெப்சிபா ஜேசுதாசன்
  102. தமிழில் வரலாற்றுப் புதினத்தின் தந்தை யார்? கல்கி
  103. சூடாமணியின் புதினங்கள் யாவை? புன்னகைப்பூங்கொத்து, நீயே என் உலகம், தீயினில் தூசு, தந்தை வடிவம், மானிட அம்சம், கண்ணம்மா
  104. யுனெஸ்கோ உலக இலக்கியப்படைப்புக்காக ஏற்ற முதல் நூல் எது?  ஆகாசவீடுகள்
  105. வாசந்தியின் புதினங்கள் யாவை? ஆகாசவீடுகள், மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள், நான் புத்தன் இல்லை,  நிஜங்கள், அந்தி நேரத்து உதயங்கள், மூங்கில் பூக்கள் 
  106. கீதமடி நீ எனக்கு யாருடைய புதினம்? இந்துமதி
  107. நெசவாளர்கள் பற்றிய தொ.மு.சி. ரகுநாதனின் புதினம் எது? பஞ்சும் பசியும்
  108. தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குறித்த டி.செல்வராஜின் புதினம் எது? தேனீர்
  109. கம்யூனிசம் பேசும் ஐசக் அருமைராஜனின் புதினம் யாது? கீறல்கள்
  110. சௌராட்டிரர்கள் பற்றிய எம்.வி.வெங்கட்ராமனின் புதினம் யாது? வேள்வித்தீ
  111. நனவோடை உத்தியிலான சி.சு.செல்லப்பாவின் புதினம் யாது? ஜீவனாம்சம்
  112. நடப்பியல் உத்தியைக்கையாண்ட முதல் புதினம் யாது? கமலாம்பாள் சரித்திரம்
  113. விடுதலை உணர்வைப் பேசும் முதல் தமிழ்ப் புதினம் யாது?  காந்திமதி [பனையப்பச்செட்டியார்]
  114. கடித வடிவிலான முதல் புதினம் யாது? கோகிலாம்பாள் கடிதங்கள்
  115. முதல் பெண் புதின ஆசிரியர் யார்? கிருபா சத்தியநாதன் 

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...