- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை? 5
- பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்கள் எத்தனை? 6
- பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள் எத்தனை? 3
- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை அல்லாத புற நூல் எது? மதுரைக்காஞ்சி
- பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்த நூல் எது? நெடுநல்வாடை
- பத்துப்பாட்டு நூல்கள் எப்பாவால் ஆனவை? ஆசிரியப்பா
- பத்துப்பாட்டைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? எட்டு
- பத்துப்பாட்டில் இரு பாடல்களைப் பாடிய புலவர்கள் யாவர்? நக்கீரர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- நக்கீரர் பாடிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
- கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பத்துப்பாட்டு நூல்கள் எவை? பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
- ஆற்றுப்படை நூல்களை நிரல்படுத்துக. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம்
- பத்துப்பாட்டிற்கு முழுமையாக உரை செய்தவர்? நச்சினார்க்கினியர்
- மறைமலை அடிகள் ஆராய்ச்சி உரை எழுதிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு
- பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே" - யார் கூற்று? மனோன்மணீயம் சுந்தரனார்
- "சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்" என பத்துப்பாட்டு குறித்துக் கூறியவர் யார்? நச்சினார்க்கினியர்
- ஊரால் பெயர் பெற்ற பத்துப்பாடு நூல்கள் எவை? மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
- பத்துப்பாட்டில் பாட்டு எனப் பெயரிடப்பட்ட நூல்கள் எத்தனை? 2 [முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு]
- பத்துப்பாட்டு முதலும், முதலுமாக இருப்பவை? ஆற்றுப்படை
- பத்துப்பாட்டில் மிக நீண்ட பாடல் எது? மதுரைக்காஞ்சி [782 அடிகள்]
- பத்துப்பாட்டில் சிறிய பாடல் எது? முல்லைப்பாட்டு [103 அடிகள்]
- வஞ்சிப்பா விரவிய பத்துப்பாட்டு நூல்கள் யாவை? பொருநராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 19 செப்டம்பர், 2020
சங்க இலக்கிய வினா வங்கி -2: பத்துப்பாட்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக