இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 செப்டம்பர், 2020

சங்க இலக்கிய வினா வங்கி -2: பத்துப்பாட்டு

  1.  பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை? 5
  2. பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்கள் எத்தனை? 6
  3. பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள் எத்தனை? 3
  4. பத்துப்பாட்டில் ஆற்றுப்படை அல்லாத புற நூல் எது? மதுரைக்காஞ்சி
  5. பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்த நூல் எது? நெடுநல்வாடை
  6. பத்துப்பாட்டு நூல்கள் எப்பாவால் ஆனவை? ஆசிரியப்பா
  7. பத்துப்பாட்டைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? எட்டு
  8. பத்துப்பாட்டில் இரு பாடல்களைப் பாடிய புலவர்கள் யாவர்?  நக்கீரர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
  9. நக்கீரர் பாடிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
  10. கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பத்துப்பாட்டு நூல்கள் எவை? பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
  11. ஆற்றுப்படை நூல்களை நிரல்படுத்துக. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம்
  12. பத்துப்பாட்டிற்கு முழுமையாக உரை செய்தவர்? நச்சினார்க்கினியர்
  13. மறைமலை அடிகள் ஆராய்ச்சி உரை எழுதிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு
  14. பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ                                                          எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே"                          - யார் கூற்று?  மனோன்மணீயம் சுந்தரனார்
  15. "சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்" என பத்துப்பாட்டு குறித்துக் கூறியவர் யார்? நச்சினார்க்கினியர்
  16. ஊரால் பெயர் பெற்ற பத்துப்பாடு நூல்கள் எவை? மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
  17. பத்துப்பாட்டில் பாட்டு எனப் பெயரிடப்பட்ட நூல்கள் எத்தனை? 2 [முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு]
  18. பத்துப்பாட்டு முதலும், முதலுமாக இருப்பவை? ஆற்றுப்படை
  19. பத்துப்பாட்டில் மிக நீண்ட பாடல் எது?  மதுரைக்காஞ்சி [782 அடிகள்]
  20. பத்துப்பாட்டில் சிறிய பாடல் எது? முல்லைப்பாட்டு [103 அடிகள்]
  21. வஞ்சிப்பா விரவிய பத்துப்பாட்டு நூல்கள் யாவை? பொருநராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...