இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 நவம்பர், 2020

மெய்ப்பாட்டியல்

  1. மெய்யின்கண் பட்டுத் தோன்றுவது மெய்ப்பாடு என்றவர்? பேராசிரியர்
  2. மெய்ப்பாட்டை நச்சினார்க்கினியர் எவ்வாறு கூறுவர்?         ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தவாறே மற்றோர்க்குப் புலப்படுத்தும் பொழுது, அது அப்படியே கண்முன்பு நிகழ்ந்து கொண்டிருப்பதைப் போலக் கேட்போர் உணருமாறு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல்.
  3. உள்ளத்து நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கு மெய்ப்பாடு என்றவர் யார்? சோமசுந்தர பாரதியார்.
  4. மெய்ப்பாடுகள் எங்கு தோன்றும் என்று தொல்காப்பியர் கூறுகிறார்?   பண்ணையின் கண்
  5. பண்ணை என்பதன் பொருள் யாது?   விளையாட்டு ஆயம் [இளம்பூரணர்], முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும் முதலானோர் நாடக மகளிரின் ஆடலும், பாடலும் கண்டும் கேட்டும் நுகரும் இன்ப விளையாட்டு [பேராசிரியர்]  
  6. பண்ணை தோன்றிய [நாடக மகளிரின் நிகழ்ச்சிகளில் தோன்றும்]  மெய்ப்பாடுகள் எத்தனை? 16 [32 மெய்ப்பாட்டு வகைகள் 16  ஆகும்.]
  7. மெய்ப்பாடு குறித்து பேராசிரியர் கூறுவது யாது?  உலக த்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவ்தோர் ஆற்றலால் வெளிப்படுதல்.
  8. மெய்ப்பாடு 'நாலிரண்டாகும் பாலுமா ருண்டே' என்றவர் யார்? தொல்காப்பியர்
  9. வடமொழியில் கூடுதலாக உள்ள மெய்ப்பாடு யாது? சாந்தம்
  10. தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகள் யாவை? நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை
  11. நகை தோன்ற காரணங்கள் யாவை? எள்ளல், இளமை, பேதமை,  மடம்
  12. அழுகைக்கு உரிய நிலைக்களன்கள் யாவை? இளிவு, இழவு [இழப்பு],  அசைவு [தன் நிலை கெட்டு வருந்துதல்], வறுமை
  13. இளிவரல்[இழிவு]  தோன்ற காரணங்கள் யாவை? மூப்பு, பிணி, வருத்தம், மென்மை
  14. மருட்கை தோன்ற நிலைக்களன்கள் யாவை? புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
  15. மருட்கை என்பது வியப்பு ஆகும்.
  16. அச்சம் தோன்ற நிலைக்களன்கள் யாவை? அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை [அரசர்]
  17. பெருமிதம் தோன்ற காரணங்கள் யாவை? கல்வி, தறுகண்[வீரம்], இசைமை[புகழ்], கொடை
  18. வெகுளி தோன்ற காரணங்கள் யாவை? உறுப்பறை [உறுப்பைச் சிதைத்தல்], குடிகோள் [தம் குடிக்குக் கேடு நினைத்தல், அலைத்தல் [கோலால் அடித்தல்], கொலை [அறிவு, புகழைச் சிதைத்தல்]ஆஆசச்ச்சாஆஆக்க்க்க்
  19. உவகை தோன்ற காரணங்கள் யாவை?  செல்வம், புலன் [புலனின்பம்], புணர்வு [காமப் புணர்ச்சி], விளையாட்டு  
  20. தலைவன், தலைவிக்குப் பொருத்தமாகாதன யாவை? நிம்பிரி [பொறாமை], கொடுமை, வியப்பு [தலைமகளை தெய்வம் என வியத்தல்], புறமொழி [புறங்கூறல்], வன்சொல் [கடுஞ்சொல்], பொச்சாப்பு [செய்ய வேண்டியவை மறத்தல்], மடிமை [சோம்பல்], குடிமை [குடியாள் இவள் தாழ்ந்தவள் என தம்மை உயர்வாகக் கருதுதல்], இன்புறல் [தம் இன்பத்தை மட்டும் முன்னிறுத்தல்], ஏழைமை [அறிவு வறுமை], மறப்பு [நினைவுப் பிழை], ஒப்புமை [பிறரோடு ஒப்பிட்டு அன்பு கூறல்]
  21. கண்ணினும், செவியினும் திண்ணிதின் உணர்வோர் யாவர்? அறிவுடையோர் [உணர்வுடை மாந்தர்] 
  22. யாரால் மெய்பாட்டின் பொருள் உணர இயலாது? அறிவுடையோர் இல்லாதோர்
  23. கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரப்படுவது யாது? மெய்ப்பாடு
  24. எண்வகை மெய்ப்பாடுகளை சுவை, பொறியுணர்வு, குறிப்பு, விறல் [வெளிப்படுத்தும் திறன்] என்னும் நான்கு வகைமையுடன் பொருத்தி விரித்துரைப்பவர் யார்? புலவர் குழந்தை
  25. மெய்ப்பாட்டியலை வடநூலார் எவ்வாறு கூறுவர்? இரசக்கோட்பாடு
  26. மெய்ப்பாட்டை அக மெய்ப்பாடு புற மெய்ப்பாடு எனப் பகுத்த இலக்கண ஆசிரியர் யார்? புத்தமித்திரர்
  27. அக மெய்ப்பாடுகளை வீரசோழியம் எவ்வாறு பகுக்கிறது? ஐந்து கணைகள்
  28. தொல்காப்பிய அக மெய்ப்பாடுகள் எவ்வாறு குறிக்கப்படுகிறது? அவத்தைகள் [கூறுகள்]
  29. தொல்காப்பிய அக மெய்ப்பாட்டைப் பகுக்கும் அவத்தைகள் எத்தனை? 6
  30. ஒவ்வொரு கூறிலும் காட்டப்படும் மெய்ப்பாடுகள் எத்தனை? 4
  31. ஆறு கூறுகளுக்குமான மெய்ப்பாடுகள் மொத்தம் எத்தனை? 24
  32. கூடுதலாகச் சுட்டப்படும் அக மெய்ப்பாடுகள் -20
  33. களவு முடியவும் திருமணம் நிகழவும் வேண்டும் காலத்து [அழிவில் கூட்டம்] நிகழும் மெய்ப்பாடுகள் யாவை? முட்டுவயிற் கழறல், முனிவு மெய்ந் நிறுத்தல், அச்சத்தில் அகறல், அவன்புணர்வு மறுத்தல், தூது முனிவு இன்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைமிகல், கட்டுரை இன்மை [8]
  34. கற்புக்காலத்து நிகழும் மெய்ப்பாடுகள் எத்தனை? 10

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...