- சிறுகதையை மக்கள் அனைவரும் படிக்கும் இலக்கிய வகையாக மாற்றி அமைத்தவர் யார்? கல்கி
- கல்கியின் இயற்பெயர் என்ன? இரா. கிருஷ்ணமூர்த்தி
- கல்கியின் முதல் சிறுகதைத் தொகுப்பு யாது? சாரதையின் தந்திரம்
- சாரதையின் தந்திரம் வெளியான ஆண்டு எது? 1931
- கல்கியின் இரண்டாம் சிறுகதைத் தொகுதியின் பெயர் என்ன? கணையாழியின் கனவு
- கணையாழியின் கனவு தொகுப்பு வெளியான ஆண்டு யாது? 1937
- கல்கி தொடக்க காலத்தில் பணியாற்றிய இதழ் யாது? ஆனந்த விகடன்
- கல்கி தொடங்கிய இதழ் யாது? கல்கி
- கல்கி சிறுகதைகளின் குறையாகக் கூறப்பட்டது? சிறுகதைக்கான இலக்கணத்திற்குள் அல்லாதவை
- கல்கி சிறுகதையின் சிறப்பு யாது? நகைச்சுவை நடை, ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் கதைப் பாங்கு
- கல்கியின் சிறந்த கதைகள்? கேதாரியின் தாயார், திருடன் மகன் திருடன், அமர வாழ்வு, இழ்ந்த கோட்டை, ஒற்றை ரோஜா, கணையாழியின் கனவு, சாரதையின் தந்திரம், மயில் விழி மான், மயிலைக் காளை, மாடத் தேவன், வீணை பவானி
- சிறுகதையின் திருமூலர் யார்? மௌனி
- மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்றவர் யார்? புதுமைப்பித்தன்
- மௌனியின் இயற்பெயர் யாது? எஸ். மணி
- மௌனியின் ஊர் எது? சிதம்பரம்
- மணிக்கொடி தொடங்கி கசடதபற வரை சிறுகதை எழுதியவர்? மௌனி
- மௌனியைச் சிறுகதை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்? பி.எஸ்.இராமையா
- மௌனி எழுதிய கதைகளின் எண்ணிக்கை? 24
- தத்துவ நுட்பமும் காதல் செறிவும் நிறைந்த மௌனியின் சிறுகதை எது? அழியாச்சுடர்
- மனஓட்டம் சார்ந்த மௌனியின் சிறுகதைகள் யாவை? குடும்பத்தேர், பிரபஞ்சகாலம், எங்கிருந்தோ வந்தான்
- மௌனியின் முதல் சிறுகதை வெளிவந்த ஆண்டு யாது? 1936
- மௌனி சிறுகதைகளின் அடிப்படை யாவை? தத்துவ மரபு, வேதாந்த விசாரனை
- மௌனியின் சிறுகதை நடை? படிமம், குறியீடு நிறைந்த கவிதை நடை
- மௌனி சிறுகதையில் மக்களுக்குச் சோர்வு தரும் பண்பு யாது? நடை [படிமம், குறியீடு நிறைந்த கவிதை நடை]
- மௌனியின் புகழ் பெற்ற சிறுகதைகள்? அழியாச்சுடர், மனக்கோலம்
- மௌனியின் சிறுகதைத் தொகுதி யாது? அழியாச்சுடர்
- அழியாச்சுடர் வெளியான ஆண்டு? 1959
- அழியாச்சுடரை வெளியிட்டவர் யார்? க.நா.சு
- மௌனியின் இரண்டாம் சிறுகதைத் தொகுதி வெளியான ஆண்டு? 1967[தருமு சிவராமன், க. நா. சு முன்னுரையுடன்]
- மௌனியின் மூன்றாம் சிறுகதைத் தொகுதி வெளிவந்த ஆண்டு? 1978[கிரியா பதிப்பக வெளியீடு
- தி.க.ரங்கநாதன் சிறுகதை ஆசிரியராக அறிமுகமான இதழ் ? சங்கு
- சங்கு இதழில் வெளியான தி.க. ரங்கநாதன் கதைகள்? பணக்காரி குஞ்சிதம், பவுன் செடி
- திக ரங்கநாதனின் சிறுகதைத் தொகுதி எது? சந்தனக்காவடி
- தி.ஜானகிராமன் பிறந்த மாவட்டம்? தஞ்சை
- தி.ஜா-வின் சிறுகதைத் தொகுப்புகள்? கொட்டுமேளம், சிகப்பு ரிஷா, அக்பர் சாஸ்திரி [அக்கினி சாஸ்திரி] பிடி கருணை
- மனித உணர்ச்சிகளை எழுத்தில் வடித்து வாசகனையும் உணர்ச்சி மயமாக்கும் சிறுகதை எழுத்தாளர் யார்? தி.ஜானகிராமன்
- படிப்போரைச் சிலிர்க்கச் செய்யும் தி.ஜா-வின் சிறுகதை? சிலிர்ப்பு
- தி.ஜாவின் சிறுகதையின் சிறப்பு? உணர்ச்சி வயப்படுத்துதல், அழகியல், உரையாடல், பெண்ணிய சிக்கல்
- குறிப்பிடத்தகுந்த தி.ஜா-வின் சிறுகதைகள்? சிலிர்ப்பு, கொட்டுமேளம், அக்பர் சாஸ்திரி, கோபுர விளக்கு
- பள்ளிச்சிறுவனின் மனநிலை பற்றிய தி.ஜவின் கதை? முள்முடி
- பாலியல் உளவியல் நுட்பம் சார்ந்த தி.ஜா-வின் கதை? வீடு
- விபச்சாரப் பெண்ணின் மனச்சிக்கலைப் பேசும் தி.ஜ.வின் கதை? கோபுர விளக்கு
- பெரிய மனிதர்களின் போலித்தனத்தைப் பேசும் தி.ஜாவின் சிறுகதை? கங்காஸ்நானம்
- கரிசல் வட்டார இலக்கிய முன்னோடி? கு. அழகிரி சாமி
- கு. அழகிரி சாமி எந்த ஊரைச் சேர்ந்தவர்? திருநெல்வேலி மாவட்டம், இடைச்செவல்
- கு. அழகிரிசாமி சிறுகதைகளின் சிறப்பு? எளிமை, வட்டாரவழக்கு, மனித இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டுவது.
- குறிப்பிடத் தகுந்த கு. அழகிரி சாமியின் சிறுகதைகள்? சிரிக்கவில்லை, அன்பளிப்பு, கற்பக விருட்சம், தவப்பயன்
- கு. அழகிரிசாமி எந்த நாளிதழின் உதவி ஆசிரியராக விளங்கினார்.
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 30 செப்டம்பர், 2020
சிறுகதை வினாவங்கி 3
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...