இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 செப்டம்பர், 2020

சிறுகதை வினாவங்கி 3

  1. சிறுகதையை மக்கள் அனைவரும் படிக்கும் இலக்கிய வகையாக மாற்றி அமைத்தவர் யார்? கல்கி
  2. கல்கியின் இயற்பெயர் என்ன? இரா. கிருஷ்ணமூர்த்தி
  3. கல்கியின் முதல் சிறுகதைத் தொகுப்பு யாது? சாரதையின் தந்திரம்
  4. சாரதையின் தந்திரம் வெளியான ஆண்டு எது? 1931
  5. கல்கியின் இரண்டாம் சிறுகதைத் தொகுதியின் பெயர் என்ன? கணையாழியின் கனவு
  6. கணையாழியின் கனவு தொகுப்பு  வெளியான ஆண்டு யாது? 1937
  7. கல்கி தொடக்க காலத்தில் பணியாற்றிய இதழ் யாது? ஆனந்த விகடன்
  8. கல்கி தொடங்கிய இதழ் யாது? கல்கி
  9.   கல்கி சிறுகதைகளின் குறையாகக் கூறப்பட்டது? சிறுகதைக்கான இலக்கணத்திற்குள் அல்லாதவை
  10. கல்கி சிறுகதையின் சிறப்பு யாது? நகைச்சுவை நடை, ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் கதைப் பாங்கு
  11. கல்கியின் சிறந்த கதைகள்? கேதாரியின் தாயார், திருடன் மகன் திருடன், அமர வாழ்வு, இழ்ந்த கோட்டை, ஒற்றை ரோஜா, கணையாழியின் கனவு, சாரதையின் தந்திரம், மயில் விழி மான், மயிலைக் காளை, மாடத் தேவன், வீணை பவானி
  12. சிறுகதையின் திருமூலர் யார்? மௌனி
  13. மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்றவர் யார்?  புதுமைப்பித்தன்
  14. மௌனியின் இயற்பெயர் யாது? எஸ். மணி
  15. மௌனியின் ஊர் எது? சிதம்பரம்
  16. மணிக்கொடி தொடங்கி கசடதபற வரை சிறுகதை எழுதியவர்? மௌனி
  17. மௌனியைச் சிறுகதை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்? பி.எஸ்.இராமையா
  18. மௌனி எழுதிய கதைகளின் எண்ணிக்கை? 24
  19. தத்துவ நுட்பமும் காதல் செறிவும் நிறைந்த மௌனியின் சிறுகதை எது? அழியாச்சுடர்
  20. மனஓட்டம் சார்ந்த மௌனியின் சிறுகதைகள் யாவை? குடும்பத்தேர்,    பிரபஞ்சகாலம், எங்கிருந்தோ வந்தான்
  21. மௌனியின் முதல் சிறுகதை வெளிவந்த ஆண்டு யாது? 1936   
  22. மௌனி சிறுகதைகளின் அடிப்படை யாவை? தத்துவ மரபு, வேதாந்த விசாரனை
  23. மௌனியின் சிறுகதை நடை? படிமம், குறியீடு நிறைந்த கவிதை நடை 
  24. மௌனி சிறுகதையில் மக்களுக்குச் சோர்வு தரும் பண்பு யாது?            நடை [படிமம், குறியீடு நிறைந்த கவிதை நடை]
  25. மௌனியின் புகழ் பெற்ற சிறுகதைகள்? அழியாச்சுடர், மனக்கோலம்
  26. மௌனியின் சிறுகதைத் தொகுதி யாது? அழியாச்சுடர்
  27. அழியாச்சுடர்   வெளியான ஆண்டு? 1959
  28. அழியாச்சுடரை வெளியிட்டவர் யார்? க.நா.சு
  29. மௌனியின் இரண்டாம் சிறுகதைத் தொகுதி வெளியான ஆண்டு? 1967[தருமு சிவராமன், க. நா. சு  முன்னுரையுடன்] 
  30. மௌனியின் மூன்றாம் சிறுகதைத் தொகுதி வெளிவந்த ஆண்டு? 1978[கிரியா பதிப்பக வெளியீடு
  31. தி.க.ரங்கநாதன் சிறுகதை ஆசிரியராக அறிமுகமான இதழ் ? சங்கு
  32. சங்கு இதழில் வெளியான தி.க. ரங்கநாதன் கதைகள்? பணக்காரி குஞ்சிதம், பவுன் செடி
  33. திக ரங்கநாதனின் சிறுகதைத் தொகுதி எது? சந்தனக்காவடி
  34. தி.ஜானகிராமன் பிறந்த மாவட்டம்? தஞ்சை
  35. தி.ஜா-வின் சிறுகதைத் தொகுப்புகள்? கொட்டுமேளம், சிகப்பு ரிஷா, அக்பர் சாஸ்திரி [அக்கினி சாஸ்திரி] பிடி கருணை
  36. மனித உணர்ச்சிகளை எழுத்தில் வடித்து வாசகனையும் உணர்ச்சி மயமாக்கும் சிறுகதை எழுத்தாளர் யார்? தி.ஜானகிராமன்
  37. படிப்போரைச் சிலிர்க்கச் செய்யும் தி.ஜா-வின் சிறுகதை? சிலிர்ப்பு
  38. தி.ஜாவின் சிறுகதையின் சிறப்பு? உணர்ச்சி வயப்படுத்துதல், அழகியல், உரையாடல், பெண்ணிய சிக்கல்
  39. குறிப்பிடத்தகுந்த தி.ஜா-வின் சிறுகதைகள்? சிலிர்ப்பு, கொட்டுமேளம், அக்பர் சாஸ்திரி, கோபுர விளக்கு
  40. பள்ளிச்சிறுவனின் மனநிலை பற்றிய தி.ஜவின் கதை? முள்முடி
  41. பாலியல் உளவியல் நுட்பம் சார்ந்த தி.ஜா-வின் கதை? வீடு
  42. விபச்சாரப் பெண்ணின் மனச்சிக்கலைப் பேசும் தி.ஜ.வின் கதை? கோபுர விளக்கு
  43. பெரிய மனிதர்களின் போலித்தனத்தைப் பேசும் தி.ஜாவின் சிறுகதை? கங்காஸ்நானம்
  44. கரிசல் வட்டார இலக்கிய முன்னோடி? கு. அழகிரி சாமி
  45. கு. அழகிரி சாமி எந்த ஊரைச் சேர்ந்தவர்? திருநெல்வேலி மாவட்டம், இடைச்செவல்
  46. கு. அழகிரிசாமி சிறுகதைகளின் சிறப்பு? எளிமை, வட்டாரவழக்கு, மனித இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டுவது.
  47.  குறிப்பிடத் தகுந்த கு. அழகிரி சாமியின் சிறுகதைகள்? சிரிக்கவில்லை, அன்பளிப்பு, கற்பக விருட்சம், தவப்பயன்
  48. கு. அழகிரிசாமி எந்த நாளிதழின் உதவி ஆசிரியராக விளங்கினார்.

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...