இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 அக்டோபர், 2020

நன்னூல் - பதவியல்

1. பதம் என்பது யாது?

                      எழுத்து தனித்தோ, எழுத்துக்கள் தொடந்தோ வந்து பொருள் தந்தால் 

                        அது பதம் ஆகும். 

2. பதம் எத்தனை வகைப்படும்?

                         2 [பகுபதம், பகா பதம்]

3. பகுபதம் என்றால் என்ன? 

                            சொல்லைப் பகுத்தால் பொருள் தருவது.

4.பகா பதம் என்றால் என்ன?

                            சொல்லைப் பகுக்க இயலாதது.  பகுத்தால் பொருள் தராதது

5. ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

                             ஒரு எழுத்து தனித்து நின்று பொருள் தருவது ஓரெழுத்து ஒரு                                         மொழி ஆகும்.

6. பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை? 

                            42

7. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் உயிர் எழுத்துக்கள் யாவை?

                            6 - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

8. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் மகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                            6 - மா, மீ, மூ, மே, மை, மோ

9. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் தகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                            5 - தா, தீ, தூ, தே, தை

10. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் பகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                            5 - பா, பூ, பே, பை, போ

11. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் நகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                           5 - நா, நீ, நே, நை, நோ

12. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் ககர வரிசை எழுத்துக்கள் யாவை?

                           4 - கா, கூ, கை, கோ

13. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் வகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                           4 - வா, வீ, வை, வௌ
14. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் சகர வரிசை எழுத்துக்கள் யாவை?
                           4 - சா, சீ, சே, சோ
15. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் யகர வரிசை எழுத்துக்கள் யாவை?
                            1 - யா
16. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் குறில் எழுத்துக்கள் யாவை?
                            2 - நொ, து
17. தொடர் மொழி என்பது யாது?
                             ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள்                                   தருவது தொடர் மொழி
18. பகாபதம் எத்தனை எழுத்துக்கள் கொண்டிருக்கும்?
                            இரண்டு முதல் ஏழு எழுத்துக்கள் 
19. பகுபதம் எத்தனை எழுத்துக்கள் கொண்டிருக்கும்?
                            இரண்டு முதல் ஒன்பது எழுத்துக்கள் கொண்டிருக்கும்
20.  பகாபதமாக வரும் சொற்கள் யாவை? 
                            பகுக்கப் பொருள் தராத இடுகுறியாக வரும் பெயர், வினை,                                         இடை, உரி சொற்கள்.
21. பகுபதமாகும் வினை சொற்கள் எத்தகையவை?
                            பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறின்                                    அடிப்படையாகக் கொண்ட பெயர் சொற்களும்,  தெரிநிலை                                         பெயர் சொற்களும்,  குறிப்பாகக் காலம் காட்டும் வினைச்                                            சொற்கள் [குறிப்பு வினை]
22. பகுபத உறுப்புக்கள் யாவை?
                            பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம், 
23. தத்தம் பகாப்பதங்கள் எவை? 
                            பகுதி
24. பண்புப் பகுபதஙளாக வருபவை யாவை? 
                              செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை,                                                     மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை மற்றும்                                         இவற்றுக்கு எதிரானவை.
25. பண்புப் பெயர்கள் புணரும்போது ஆடையும் விகாரங்கள் யாவை?
              ஈறு போதல் - மை கெடுதல். செம்மை + தமிழில் மை கெடுதல்
              இடையில் நின்ற உகரம் இகரமாகத் திரிதல்.[கருமை + அன் - கரியன்]
             ஆதி நீடல் - செம்மை + அடி - சேவடி ஆதல்
             முதலில் நின்ற அகரம் ஐகாரமாதல்[பசுமை + தளி = பைந்தளிர்]
               தன் நடுவிற் மெய் இரட்டித்தல்
                மெய் திரிதல் - செம்மை + ஆம்பல் - சேதாம்பல்
                இனம் மிகல் - கருமை + கடல் - கருங்கடல்
26. வினைபகுதிகள் எத்தனை? 
                                   24 [ 23 + செய் என்னும் வாய்ப்பாடு]
27. வினைப்பகுதியாகும்  சொற்கள் யாவை?
                   நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,  நொ, போ, வௌ, உரிஞ், உண்,                                பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கோள், அஃகு [23]
28. செய் என்னும் ஏவல் வாய்ப்பாடு எந்த வகை வினை ஆகும்? தன்வினை
29. பிற வினை சொற்கள் எவ்வாறு வரும்? செய் வாய்ப்பாட்டுடன் வி அல்லது 
         பி பெற்று வரும் [செய்வி, நடப்பி]
30. ஈரேவல் சொற்கள் எவ்வாறு எழுதப்படும்?
          இரு வி அல்லது பி சேர்த்து [ வா- வருவி - வருவிப்பி, நட - நடப்பிவித்தான்-                                                     நடப்பிவித்தான்]
31. பகு பத உறுப்பில் முதலில் வருவது யாது? பகுதி
32. பகுபத உறுப்பில் இறுதியில் வருவது யாது? விகுதி
33. வினைமுற்று விகுதிகள் எத்தனை? 37 [இவைபோன்ற பிறவும் எனவும் தரப்பட்டுள்ளது]
34. வினை முற்று விகுதிகள் யாவை? 
                        அன், ஆன்,  அள், ஆள், அர், ஆர், பம்மார், அ, ஆ, கு, டு, து, று, ஏன்,                                 என்,  அல், அள், அன், அம், ஆம், ஏம், ஓம், கும், டும், தும், நும், ஐ, ஆய்,                          இ,  மின், இர், ஈர், ஈயர், க, ய, உம் [37]
35. இடை நிலை என்பது யாது? 
                        பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது.
36. இலக்கியம் கண்டதற்கு இயம்பப்படுவது எது?
                                 இலக்கணம்
37. இடைநிலை பெறும் பெயர் யாது? 
                                                வினையாலனையும் பெயரல்லா பெயர் [கலைஞன் =                                 கலை + ஞ்+ அன் - ஞ்- இடைநிலை]
38. காலம் காட்டும் இடை நிலைகள் எத்தனை வகைப்படும்?     3
39. இறந்த காலஇடை நிலைகள் யாவை?        
                                 த், ட், ற், இன்
40. நிகழ் கால இடை நிலைகள் யாவை?
                         ஆநின்று, கின்று, கிறு
41. எதிர்கால இடைநிலைகள் யாவை? 
                            ப்,வ்
42. இடைநிலை மட்டுமே காலம் காட்டுமா? 
                        இல்லை. விகுதியும் காலம் காட்டும்
43. நிகழ் காலம் காட்டும் விகுதிகள் யாவை?   
                        செய்யும் வாய்ப்பாடு
44. இறந்த காலம் மற்றும் எதிர் காலம் காட்டும் விகுதிகள் யாவை?
                        ற, று, ம், து, தும், டு, டும், ப
45. எதிர்காலம் காட்டும் விகுதிகள் யாவை? 
                        கு, கும், மின்,  ஏவல், வியங்கோள், இ, மார்
46.  மூன்று காலத்தையும் காட்டும் விகுதிகள்? 
                        ஆகார ஈறு
47. வடமொழி உயிர் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?  
                           அச்சு
48. வட மொழி உயிர் [அச்சு] எழுத்துக்கள் எத்தனை?
                         16
49. வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவான உயிர் எழுத்துக்கள் எத்தனை? 
                        10
50. தமிழுக்கும் வடமொழிக்கும்  பொதுவாக அல்லாத உயிர் எழுத்துக்கள்                     யாவை?                     எ,ஓ
51. வடமொழியில் மெய் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
                         அல்
52. தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக உள்ள மெய் எழுத்துக்கள்                                     எத்தனை?                         15
53. தமிழ் வடமொழிக்குப் பொதுவான வல்லெழுத்துக்கள் யாவை?
                            க், ச், ட், த், ப்
54. தமிழ் வடமொழிக்குப் பொதுவான மெல்லெழுத்துக்கள் யாவை?
                            ங், ஞ், ண், ந்,  ம்
55.தமிழ் வடமொழிக்குப் பொதுவான இடையின எழுத்துக்கள் யாவை?
                            ய். ர். ய். வ். ள்
56. வடமொழியில் இல்லா தமிழுக்கான சிறப்பு மெய் எழுத்துக்கள் யாவை? 
                            ழ், ற், ன்
57. ரகரத்தை முதலாகக் கொண்ட வட சொல் தமிழில்  எவ்வாறு எழுதப்படும்?
                            அ, இ, உசேர்த்து [அரங்கம், இராமன், உரோமம்]
58. லகரத்தை முதலாகக் கொண்ட வட சொல் தமிழில்  எவ்வாறு எழுதப்படும்?
                            இ, உ சேர்த்து [ இலாபம், உலோகம்]
59. யகரத்தை முதலாகக் கொண்ட வட சொல் தமிழில்  எவ்வாறு எழுதப்படும்?
                            இ [இயமன், இயக்கன் [யக்ஷன்]]
60. ய,ர,ல இணைந்து வரும் வட சொற்கள் தமிழில் எவ்வாறு  எழுதப்படும்?
                            இகரம் சேர்த்து எழுதப்படும் [காவியம் - காவியம், வக்ரம் -                         வக்கிரம், சுக்லம் - சுக்கிலம்]
61. இணைந்து வரும் ம, வ தமிழில் எவ்வாறு எழுதப்படும்? 
                            உகரம் சேர்த்து எழுதப்படும் [பத்மம் - பதுமம், பக்வம் - பக்குவம்]
62. தமிழுக்கு மட்டுமான சிறப்பான சார்பெழுத்துக்கள் யாவை? 
                            உயிர் மெய் அல்லாத எட்டு சார்பெழுத்தும் வட மொழியில்                                             இல்லாத தமிழுக்கான  சார்பெழுத்துக்கள்
63. தமிழுக்கான மொத்த சிறப்பெழுத்துக்கள் எழுத்துக்கள் எத்தனை? 
                                13
64. தற்சமம் என்பது யாது? 
                                தமிழுக்கும் வட மொழிக்கும் உள்ள பொதுவான                                                                    எழுத்துக்களால் எழுதப்படும் வடசொற்கள்
65. தற்பவம் என்பது யாது?
                                வடமொழி சிறப்பெழுத்துக்களால் தமிழில் எழுதப்படும்                                                     வடசொற்கள் [ ஹரி, லக்ஷ்மி, ஜாடை]




































































































































      

                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...