- செய்யுள் எத்தனை வகைப்படும்? 4 [முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை
- முத்தகம் என்பது யாது? தனியே ஒரே ஒரு பாடலாக மட்டும் நின்று, ஒரு பொருள் தந்து முடிவது
- குளகம் என்பது யாது? ஒன்றுக்கு மேற்பட்ட பல பாடல்களில் பொருள் தொடர்ந்து ஒரு வினைச்சொல் கொண்டு முடிவது.
- தொகைநிலை எத்தனை வகைப்படும்? 2 [ஒருவர் மட்டும் பாடியது, பலர் பாடியது]
- ஒருவர் பாடிய தொகைநிலைக்குச் சான்று - திருக்குறள்
- பலர் பாடிய தொகைநிலைக்குச் சான்று - நற்றிணை முதலான எட்டுத்தொகை நூல்கள்
- தொகை நூல்கள் எவற்றால் தொகுக்கப்படும்? பொருள், இடம், காலம், தொழில் என்னும் நான்கினாலும் பாட்டின் பெயர் அளவு இவற்றால் தொகுக்கப்படும்.
- பொருளால் தொகுக்கப்பட்டவை - அகநானூறு, புறநானூறு
- இடத்தால் தொகுக்கப்பட்டவை - களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி
- காலத்தால் தொகுக்கப்பட்டது - கார்நாற்பது
- தொழிலால் தொகுக்கப்பட்டது - ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, ஏரெழுபது
- பாட்டால் [பாவால்] தொகுக்கப்பட்டவை - பரிபாடல், கலித்தொகை
- அளவால் தொகுக்கப்பட்டவை - குறுந்தொகை, நாலடியார்
- தொடர்நிலை எத்தனை வகைப்படும்? 2 [ சொல்லால் தொடர்பவை, பொருளால் தொடர்பவை]
- பொருளால் தொடர்பவை - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்
- சொல்லால் தொடர்பவை - அந்தாதி, சதகம், கலம்பகம்
- பொருள் தொடர்நிலைச் செய்யுள் எத்தனை வகைப்படும்? 2 [பெருங்காப்பியம், காப்பியம்]
- பெருங்காப்பிய இயல்பு யாவை? வாழ்த்து, வணக்கம், வருபொருளோடு தொடங்கும், நாற்பொருள் பயக்கும், தன்னிகரில்லாத் தலைவனைக் கொண்டிருக்கும், வருணனைகள் இருக்கும், திருமணம், முடிசூட்டல் போன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும், அரசனின் செயல்பாடுகள் பேசப்பட வேண்டும், சருக்கம், இலம்பகம் முதலான உட்பகுப்புகளைக் கொண்டிருக்கும்.
- காப்பிய இலக்கணம் யாது? அறம் முதல் நான்கினும் குறைபாடு உடையது
- காப்பியம் எவ்வகை யாப்பால் வரும்? ஒரு பாவாலோ, பல பாவாலோ, உரையும் பாட்டும் கலந்தோ, பிற பாடை [மொழி]ச்சொற்கள் விரவியோ வரும்
- ஒரு பாவால் ஆனது - நளவெண்பா
- பலவகைப் பாவால் ஆனவை - சிலப்பதுகாரம்
- பாட்டும் உரையும் விரவியவை - சிலப்பதிகாரம், தகடூர் யாத்திரை
- சொற்தொடர் நிலை என்பது யாது? ஒரு செய்யுளின் இறுதி சொல்லோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்தச் செய்யுளின் முதலாக வருவது. [அந்தம் ஆதியாகத் தொடுப்பது.]
- அந்தம் ஆதியாகத் தொடுக்கும் சொல் தொடர் நிலைச் செய்யுள் எவ்வாறு அழைக்கப்படும்? அந்தாதி [ அபிராமி அந்தாதி, கந்தர் அந்தாதி
- செய்யுள் நெறி வடமொழியின் எந்தக் கோட்பாட்டின்பாற்பட்டது? இரீதிக் கோட்பாடு
- செய்யுள் நெறி எத்தனை வகைப்படும்? 2 [வைதருப்ப நெறி, கௌட நெறி]
- வைதருப்ப நெறிக்கு உயிரான குணங்கள் எத்தனை? 10
- கௌட நெறி என்பது யாது? வைதருப்ப நெறிக்கு உரிய 10 குணங்களோடு சேராது. அதற்கு மாறாக நடப்பது.
- செறிவெனப்படுவது யாது? நெகிழ்வான மெல்லிய ஓசையின்றிப் பாடுவது. வல்லின எழுத்து, இடையின எழுத்தோடு வருவது.
- தெளிவெனப்படுவது யாது? மிகத் தெளிவான பொருள் புலப்படக் கூறுவது. இது வடமொழியில் பிரசாதம் எனப்படும்.
- சமனிலை எனப்படுவது யாது? வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையின எழுத்து விரவி வருவது.
- இன்பம் எனப்படுவது யாது? சொல்லாலும் பொருளாலும் சுவைபட தொடுப்பது. வடமொழியில் மாதுரியம் எனப்படும்
- ஒழுகிசை என்பது யாது? வெறுக்கத்தல்ல இசை இல்லாதது ஒழுகிசை எனப்படும். வடமொழியில் சுகுமாரதை எனப்படும்.
- உதாரம் என்பது யாது? குறிப்பால் பொருள் உணர்த்துவது.
- உயித்தலின் பொருண்மை என்பது யாது? புலவர் சொல்ல விரும்பிய பொருளை விளக்கும் சொற்களைக் கொண்டது உய்த்தலில் பொருண்மை
- காந்தம் எனப்படுவது யாது? ஒருவரைப் புகழ உலக நடை கடவாமல் புகழ்விப்பது. காந்தம் - மனதை கவர்வது [மகிழ்விப்பது]
- வலியெனப்படுவது யாது? தொகைச்சொற்கள் மிகுதியாக வருவது. வட மொழியில் ஓசம் எனப்படும்.
- சமாதி எனப்படுவது யாது? சொல்ல வந்த பொருளுக்கான வினையை மாற்றி ஒப்புமையுடைய பொருளுக்கான வினையைக் கொண்டு முடிப்பது.
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 14 நவம்பர், 2020
அணி இலக்கணம் - 1 [பொதுவணி]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...