இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 நவம்பர், 2020

அணி இலக்கணம் - 1 [பொதுவணி]

  1. செய்யுள் எத்தனை வகைப்படும்?  4 [முத்தகம், குளகம்,  தொகைநிலை, தொடர்நிலை
  2. முத்தகம் என்பது யாது? தனியே ஒரே ஒரு பாடலாக மட்டும் நின்று, ஒரு பொருள் தந்து முடிவது
  3.  குளகம் என்பது யாது? ஒன்றுக்கு மேற்பட்ட பல பாடல்களில் பொருள் தொடர்ந்து ஒரு வினைச்சொல் கொண்டு முடிவது.
  4. தொகைநிலை எத்தனை வகைப்படும்? 2 [ஒருவர் மட்டும் பாடியது, பலர் பாடியது]
  5. ஒருவர் பாடிய தொகைநிலைக்குச் சான்று - திருக்குறள்
  6. பலர் பாடிய தொகைநிலைக்குச் சான்று - நற்றிணை முதலான எட்டுத்தொகை நூல்கள்
  7. தொகை நூல்கள் எவற்றால் தொகுக்கப்படும்? பொருள், இடம், காலம், தொழில் என்னும் நான்கினாலும் பாட்டின் பெயர் அளவு இவற்றால் தொகுக்கப்படும்.
  8. பொருளால் தொகுக்கப்பட்டவை - அகநானூறு, புறநானூறு
  9. இடத்தால் தொகுக்கப்பட்டவை - களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி
  10. காலத்தால் தொகுக்கப்பட்டது - கார்நாற்பது
  11. தொழிலால் தொகுக்கப்பட்டது - ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, ஏரெழுபது
  12. பாட்டால் [பாவால்] தொகுக்கப்பட்டவை - பரிபாடல், கலித்தொகை
  13. அளவால் தொகுக்கப்பட்டவை - குறுந்தொகை, நாலடியார்
  14. தொடர்நிலை எத்தனை வகைப்படும்? 2 [ சொல்லால் தொடர்பவை, பொருளால் தொடர்பவை]
  15. பொருளால் தொடர்பவை - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,  கம்பராமாயணம்
  16. சொல்லால் தொடர்பவை - அந்தாதி, சதகம், கலம்பகம்
  17. பொருள் தொடர்நிலைச் செய்யுள் எத்தனை வகைப்படும்? 2 [பெருங்காப்பியம், காப்பியம்]
  18. பெருங்காப்பிய இயல்பு யாவை? வாழ்த்து, வணக்கம், வருபொருளோடு தொடங்கும், நாற்பொருள் பயக்கும், தன்னிகரில்லாத் தலைவனைக் கொண்டிருக்கும், வருணனைகள் இருக்கும், திருமணம், முடிசூட்டல் போன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும், அரசனின் செயல்பாடுகள் பேசப்பட வேண்டும், சருக்கம், இலம்பகம் முதலான உட்பகுப்புகளைக் கொண்டிருக்கும்.
  19. காப்பிய இலக்கணம் யாது? அறம் முதல் நான்கினும் குறைபாடு உடையது
  20. காப்பியம் எவ்வகை யாப்பால் வரும்? ஒரு பாவாலோ, பல பாவாலோ, உரையும் பாட்டும் கலந்தோ, பிற பாடை [மொழி]ச்சொற்கள் விரவியோ வரும்
  21. ஒரு பாவால் ஆனது - நளவெண்பா
  22. பலவகைப் பாவால் ஆனவை - சிலப்பதுகாரம்
  23. பாட்டும் உரையும்  விரவியவை - சிலப்பதிகாரம், தகடூர் யாத்திரை
  24. சொற்தொடர் நிலை என்பது யாது? ஒரு செய்யுளின் இறுதி சொல்லோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்தச் செய்யுளின் முதலாக வருவது. [அந்தம் ஆதியாகத் தொடுப்பது.]
  25. அந்தம் ஆதியாகத் தொடுக்கும் சொல் தொடர் நிலைச் செய்யுள் எவ்வாறு அழைக்கப்படும்? அந்தாதி [ அபிராமி அந்தாதி, கந்தர் அந்தாதி
  26. செய்யுள் நெறி வடமொழியின் எந்தக் கோட்பாட்டின்பாற்பட்டது?           இரீதிக் கோட்பாடு
  27. செய்யுள் நெறி எத்தனை வகைப்படும்? 2 [வைதருப்ப நெறி, கௌட நெறி]
  28. வைதருப்ப நெறிக்கு உயிரான குணங்கள் எத்தனை? 10 
  29. கௌட நெறி என்பது யாது? வைதருப்ப நெறிக்கு உரிய 10 குணங்களோடு சேராது. அதற்கு மாறாக நடப்பது.
  30. செறிவெனப்படுவது யாது? நெகிழ்வான மெல்லிய ஓசையின்றிப் பாடுவது. வல்லின எழுத்து, இடையின எழுத்தோடு வருவது.
  31. தெளிவெனப்படுவது யாது? மிகத் தெளிவான பொருள் புலப்படக் கூறுவது. இது வடமொழியில் பிரசாதம் எனப்படும்.
  32. சமனிலை எனப்படுவது யாது? வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையின எழுத்து விரவி வருவது. 
  33. இன்பம் எனப்படுவது யாது? சொல்லாலும் பொருளாலும் சுவைபட தொடுப்பது. வடமொழியில் மாதுரியம் எனப்படும்
  34. ஒழுகிசை என்பது யாது? வெறுக்கத்தல்ல இசை இல்லாதது ஒழுகிசை எனப்படும். வடமொழியில் சுகுமாரதை எனப்படும்.
  35. உதாரம் என்பது யாது? குறிப்பால் பொருள் உணர்த்துவது.
  36. உயித்தலின் பொருண்மை என்பது யாது? புலவர் சொல்ல விரும்பிய பொருளை விளக்கும் சொற்களைக் கொண்டது  உய்த்தலில் பொருண்மை
  37. காந்தம் எனப்படுவது யாது? ஒருவரைப் புகழ உலக நடை கடவாமல் புகழ்விப்பது. காந்தம் - மனதை கவர்வது [மகிழ்விப்பது]
  38. வலியெனப்படுவது யாது? தொகைச்சொற்கள் மிகுதியாக வருவது. வட மொழியில் ஓசம் எனப்படும்.
  39. சமாதி எனப்படுவது யாது? சொல்ல வந்த பொருளுக்கான வினையை மாற்றி ஒப்புமையுடைய பொருளுக்கான வினையைக் கொண்டு முடிப்பது.















Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...