- ஒப்பிலக்கியம் என்னும் பெயர் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? Comparative Literature
- comparative என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? சேக்ஸ்பியர் : ஹென்றி 4 என்ற நாடகத்தில் பயன்படுத்தினார்.
- Comparative Literature என்ற சொல்லாட்சியை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்? மாத்யூ அர்னால்டு
- தமிழில் ஒப்பிலக்கியத்திற்கு வித்திட்டவர்கள் யாவர்? ஜி.யு.போப், எஸ்.கிருஷ்ணசாமி, சித்தாந்தா
- ஒப்பியல் கொள்கைகள் சார்ந்த முதல் நூலை எழுதியவர் யார்? மொழியியல் அறிஞர் தேவநேய பாவாணர்
- தேவநேய பாவாணர் எழுதிய ஒப்பியல் நூல் யாது? ஒப்பியல் மொழிநூல்
- ஒப்பிலக்கிய அறிமுகம் எழுதியவர் யார்? தமிழண்ணல்
- ஒப்பியல் நோக்கு எழுதியவர் யார்? வ.சுப. மாணிக்கம்
- கிரேக்க வீரயுகப்பாடல்களுடன் சங்கப்பாடல்களை ஒப்பிட்டு சங்க காலத்தை வீரயுகம் என்றவர் யார்? க. கைலாசபதி
- ஒப்பியல் இலக்கியத்தின் ஆசிரியர் யார்? க. கைலாசபதி
- வை.சச்சிதானந்தம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? The impact of western thought on Bharathi, Whitman and Bharathi - A Comparative Study, ஒப்பிலக்கியம் ஊர் அறிமுகம், ஒப்பிலக்கியம் என்றால் என்ன?
- கா. செல்லப்பன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? Shakespear and Ilango as Tragedians, The Problem of Evil in king Lear and Silappathikaaram
- ஒப்பிலக்கியக் கழகத்தை உருவாக்கியவர் யார்? ஜி.ஜான் சாமுவேல்
- ஜி.ஜான் சாமுவேல் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? திராவிட மொழிகளின் ஒப்பாய்வு ஓர் அறிமுகம், ஷெல்லியும் பாரதியும் ஒரு புதிய பார்வை, ஒப்பிலக்கியத் திறனாய்வு, திறனாய்வு சிந்தனைகள், ஒப்பாய்வுக் களங்கள், Studies in Comparative lit., Studies in Tamil Poetry
- க. கைலாசபதி எழுதிய நூல்கள் யாவை? அடியும் முடியும், இரு மகாகவிகள்
- ஜி. வான்மீகிநாதன் எழுதிய நூல் யாது? மாணிக்கவாசகரும் ரூமியும்
- தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நூல்? ஷெல்லியும் பாரதியும், கங்கையும் காவிரியும்
- க. நா. சுப்பிரமணியம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சிறந்த பத்து இந்திய நாவல்கள்
- கதிர் மகாதேவன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் தொன்மம்
- கா. செல்லப்பன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள்? எங்கு காணினும் சக்தி, தமிழில் ஒப்பியல் கோட்பாடுகள், இலக்கியத்தில் பழம் புதுமையும் புதுப்பழமையும், விடுதலைச்சிட்டும் புரட்சிக் குயிலும்
- அ.அ. மணவாளன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இலக்கிய ஒப்பாய்வுக் காப்பியங்கள், இராமகாதையும் இராமாணங்களும்
- சி. கனகசபாபதி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதி- பாரதிதாசன் கவிதை மதிப்பீடு
- மா. காத்தையன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதிதாசன் வாணிதாசன் பாடல்கள் ஒப்பீடு
- பேரா.சி.மெய்கண்டான் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? புரட்சிக்கவியும் பில்ஹணீயமும் - ஓர் ஒப்பீடு
- சு. கோபிநாத் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? தமிழ்க் காப்பியங்களில் அவலச்சுவை
- டாக்டர் அகத்தியலிங்கம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே
- மு. அருணாச்சலம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கிழக்கு வெளுக்கிறது.
- ரீட்டா என். முத்து எழுதிய ஒப்பிலக்கிய நூல்? தேம்பாவணி - சீறாபுராணக் கதைகள் - ஓர் ஒப்பீடு
- பத்மா எழுதிய ஒப்பிலக்கிய நூல்? நாவுக்கரசு நம்மாழ்வார் - சமயநெறிகள் ஒப்பீடு
- பி. பரமேஸ்வரி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பராமாயணம், வில்லி பாரதத்தில் வரும் எதிர்நிலை நாயகர்கள் ஒப்பீடு
- சி. என். குமாரசாமி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? மாதவியும் கிளியோபாத்ராவும்
- சக்கர. இலக்குமிகாந்தன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இராபர்ட் பிராஸ்டும் கண்ணதாசனும்
- ச.வே.சுப்பிரமணியன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இந்திரஜித்தும் இலக்குவனும்
- தண்டபாணி தேசிகர் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? வள்ளுவரும் கம்பரும்
- ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஒப்பிலக்கிய நூல்? காளத்தி வேடனும் கங்கை வேடனும்
- நாமக்கல் கவிஞர் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பரும் வால்மீகியும்
- இராய. சொக்கலிங்கம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பனும் சிவனும்
- எம். சோலையன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதியும் மில்ட்டனும்
- சித்ரா எழுதிய ஒப்பிலக்கிய நூல்? வால்ட்விட்மனும் கண்ணதாசனும்
- இராம. குருநாதன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சங்கப்பாட்டும் ஜப்பான்யக் கவிதையும்
- க. ரத்னம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இவர்கள் பார்வையில் அகலிகை
- ப. மருதநாயகம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கிழக்கும் மேற்கும், புதுப்பார்வைகளில் புறநானூறு
- ச.கு. கணபதி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? வியாசரும் வில்லியும்
- பாலாம்பிகைதாசன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இந்திய இலக்கிய இழை
- பாலா எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதியும் கீட்சும்
- எ.சு. சதாசிவம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பெரியாரும் கவிஞரும் அண்ணாவும்
- இரா. அறவேந்தன் பதிப்பித்த ஒப்பிலக்கிய நூல்? உலகப்பார்வையில் தமிழ் இலக்கியம்
- ஜெயமோகன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கண்ணீரைப் பிந்தொடர்தல்
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 10 ஏப்ரல், 2021
ஒப்பிலக்கியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...