இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 செப்டம்பர், 2020

தொல்தமிழக - அயலகத் தொடர்பு வினா வங்கி

    1. உலகில் உயிருடன் உள்ள மொழிகள் எத்தனை? 270
    2. ஹரப்பா, மொகஞ்சதோரா புதைபொருள்களில் இருக்கும்  எழுத்துக்கள்  தமிழ் எழுத்துக்களே - என்றவர்? ஹீராஸ் பாதிரியார்
    3. மொழி வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம் என்றவர்? ஹட்சன்
    4. கவிதை வாழ்க்கையின் ஆய்வு என்றவர்? மாத்யூ அர்னால்டு
    5. தமிழகத்தின் தென்பகுதியே மனிதத் தோற்றத்தின் முதலிடமாக இருக்க வேண்டும் - என்றவர்? வி.ஆர்ஂ. ஆர் தீக்சித்தார
    6. லெமூரியா கண்டமே மனித நாகரிகத்தின் தொட்டில் என்றவர்?                        ஸ்காட் எலியட் [இழந்த லெமூரியா நூல்]
    7. லெமூரியா கண்டத்தை வளப்படுத்திய ஆறுகள் யாவை?           பஃறுளி ஆறு, குமரி ஆறு
    8. குமரிக்கோடு கடல்கோளால் அழிந்ததாகக் கூறும் இலக்கியம்? சிலப்பதிகாரம்
    9. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் தமிழகம் வணிகத்தொடர்பு கொண்டிருந்தா நாடுகள் எவை? சிரியா, பாபிலோனியா, எகிப்து
    10. கி.மு ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து யானையைப் பரிசாகப் பெற்ற மன்னன் யார்? அசிரிய நாட்டு மன்னன்
    11. தமிழகத்திலிருந்து மிளகு பெற்று பொன்னும், மதுவும் கொடுத்தவர்கள்? யவனர்கள்
    12. தமிழகத்திலிருந்து நீலச்சாயம் பூசப்பட்ட துணிகள் என்னாடுகளுக்கு அனுப்பப்பட்டது? எகிப்து, பாரசீகம்
    13. பாண்டிச்சேரி அருகில் உள்ள அகழ்வாய்விடம் எது? அரிக்கமேடு
    14. ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடித்த யவனப்பொறிகள் தமிழகக் கோட்டைகளில் இருந்ததாகக் கூறியவர்? தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
    15. 30000 தங்க நாணயத்திற்கு ஈடான முத்துக்களை அணிந்திருந்த உரோமனாட்டு அரசி யார்? உலோலா
    16. கி.மு. 20இல் பாண்டிய வேந்தன் எந்த கிரேக்க மன்னன் அவைக்கு தூது அனுப்பினார்? அகஸ்டஸ்
    17. அகஸ்டஸின் பெயரால் கோவிலும், உரோமர்கள் படையும் இருந்த துறைமுக நகரம் எது? முசிறி
    18. தமிழக அரசர்களின் வாயில் காப்பாளர்களாக இருந்த  அயல் நாட்டினர்? யவனர்கள்
    19. தொன்தமிழகத்தில் யவனர்கள் உருவாக்கிய பொருள்கள்? புலித்தொடர் சங்கிலி, பாவை விளக்கு
    20. வடநாட்டு வாணிகத்தை விட தென்நாட்டு வணிகமே சிறந்தது என்ற வட நாட்டவர் யார்? சந்திரகுப்த மௌரியர் அமைச்சர் சாணக்கியர்
    21. தென் நாட்டு வணிகமே சிறப்பு என சாணக்கியர் குறிப்பிட்டு உள்ள நூல்? அர்த்தசாஸ்திரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...