இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 செப்டம்பர், 2020

தமிழ்ச் சிறுகதைகள் - வினா வங்கி 1 [தொடக்ககாலம்]

  1. சிறுகதையின் பிறப்பிடம் எது? அமெரிக்கா
  2. உலக அளவில் சிறுகதையின் முன்னோடி யார்? ஆலன் எட்கர்போ
  3. சிறுகதை முன்னோடி ஆலன் எட்கர்போ சிறுகதைக்கான இலக்கணம் வகுத்த ஆண்டு? 1842
  4. ஆலன் எட்கர்போ சிறுகதையின் இலக்கணமாகக் கூறுவது? முதல் வாக்கியமே படிப்போரை ஈர்த்துவிட வேண்டும்
  5. சிறுகதையின் தொடக்கமும், முடிவும் குதிரைப் பந்தையம் போல இருக்க வேண்டும் என்றவர்? செட்ஜ்வி
  6. உலகளவில் முதல் சிறுகதையை எழுதியவர் யார்? வாசிங்டன் இர்விங்
  7. வாசிங்டன் இர்விங் எழுதிய முதல் சிறுகதை எது? ரிப்வேன் விம்பிள்
  8. வங்காள மொழியில் சிறுகதை முன்னோடிகள் யாவர்? பக்கிங்க் சந்திரர், ரவீந்திரநாத தாகூர்
  9. தமிழ்ச்சிறுகதைகளின் முன்னோடி எது? பரமார்த்த குரு கதை
  10. பரமார்த்த குரு கதையின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர் 
  11. சந்திரவண்ணம் பிள்ளையின் கதை நூல் எது? கதாசிந்தாமணி
  12. வீராச்சாமி செட்டியாரின் கதை நூல்? விநோதரசமஞ்சரி, விக்கிரமாதித்தியன் 
  13. தாண்டவராய முதலியாரின் கதை நூல்? பஞ்சதந்திரக் கதைகள்
  14. தமிழ்ப் புலவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த நூல் எது? விநோதரசமஞ்சரி
  15.   பாரதியார் யாருடைய சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தார்? தாகூர்
  16. கொல்கத்தாவில் எந்த இதழில் வெளியான தாகூரின் கதைகளைப் பாரதியார் மொழிபெயர்த்தார்? மார்டன் ரிவ்யூ
  17. பாரதியின் சிறுகதைகளைக் கட்டுக்கதை என்றவர்? கார்த்திகேசு சிவதம்பி
  18. பாரதி சிறுகதைக்கு ஆற்றிய சிறந்த சேவை எனக் கார்த்திகேசு சிவத்தம்பி எதைக் கூறுகிறார்? தாகூர் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தது.  
  19. பாரதியார் தம் கதைகளை எந்த இதழ்களில் வெளியிட்டார்? ஞானபாநு, கதாரத்னாகரம், சக்கரவர்த்தினி, இந்தியா, சுதேசமித்திரன்
  20. பாரதியார் அதிகமான சிறுகதைகளை வெளியிட்ட இதழ் எது? சுதேசமித்திரன் [16 கதைகள்]
  21. பாரதியார் தம் கதைகளை எதைக் கருதி எழுதுவதாகக் கூறுகிறார்? கற்பனை நயம்
  22.  பாரதியார் எந்தெந்தப் புனைப்பெயர்களில் கதை எழுதினார்? ஷெல்லிதாஸ், சாவித்திரி, காளிதாஸன், சக்திதாஸன்
  23. பாரதியாரின் வடிவச் செ     றிவு மிக்கக் கதைகள் யாவை?  காந்தாமணி, பண்டாரத்தின் கதை, மிளகாய்ச் சாமியார்
  24.  மாதவையா எழுதிய கதைகளின் தொகுப்பு? குசிகர் குட்டிக்கதைகள்
  25. குசிகர் குட்டிக்கதைகள் வெளிவந்த ஆண்டு? 1924
  26.   மாதவையா நடத்திய இதழ் யாது? பஞ்சாமிர்தம்
  27. மாதவையா  நிறைவு செய்யாமல் விட்ட கதை யாது? ஏட்டுச்சுரைக்காய்
  28.  வ.வே.சு-வின் சிறுகதைக் தொகுதி? மங்கையற்கரசியின் காதல்
  29. மங்கையற்கரசியின் காதலில் எத்தனை கதைகள் உள்ளன? 8
  30. மங்கையற்கரசியின் காதலில் ஆங்கில தாக்கம் உள்ள கதைகள்? 4
  31. வ.வே.சு ஐயரின் ஆங்கில தாக்கம் உள்ள கதைகள் யாவை? அழேன்ழக்கே, எதிரொலியாள், அனார்க்கலி, லைலா மஜ்னூன்
  32. தமிழின் முதல் சிறுகதை என ஏற்கப்படுவது? குளத்தங்கரை அரசமரம் 
  33. குளத்தங்கரை அரசமரம் வெளியான ஆண்டு யாது? 1913 - 17/ 19
  34. மங்கையற்கரசியின் காதல் வெளியான ஆண்டு எது? 1927    
  35. வ.வே.சு ஐயர் சிறுகதைக்கு அளித்த முன்னுரையை எப்படிக் கூறுகிறார்? சூசிகை. விஜயசூசிகை
  36. 'ஜாதீய சலனங்கள் எல்லாவற்றிற்கும் இலக்கியம் அளவுகோல்' என்றவர் யார்? வ.வே.சு. ஐயர்
  37. வ. வே. சு ஐயர் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் எது? தேசபக்தன்
  38. "கதைகள் ரஸம் பொருந்தியவையாயிருப்பதோடு பெருநோக்கம்  கொண்டவையாயிருத்தல் வேண்டும்" என்றவர் யார்? வ.வே.சு.ஐயர்
  39. சிறுகதையின் அகல வளர்ச்சிக்குக் காரணம் யார்? கல்கி
  40. சிறுகதையின் ஆழ வளர்ச்சிக்குக் காரணம்? மணிக்கொடி குழுவினர் 
  41. மணிக்கொடி தன் இதழ் வழி சிறுகதை வளர்த்த காலம்? கி.பி.1933-1955
  42. சிறுகதையை ஒரு இயக்கமாகக் கொண்டு வளர்த்த இதழ்? மணிக்கொடி
  43. மணிக்கொடி தொடங்கிய ஆண்டு எது? 1934
  44. மணிக்கொடியைத் தொடங்கியவர் யார்? கே. சீனிவாசன்
  45. மணிக்கொடி எழுத்தாளர்கள் யாவர்? பி. எஸ். ராமையா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியம், லாசாரா
  46. மணிக்கொடியின் பதிப்பாசிரியர் யார்? வ. ரா
  47. 1933 இல் தொடங்கிய ஓராண்டுக்குள் நின்றுவிட்ட,  சிறுகதைகளை வெளியிட்ட இதழ்? மணிக்கொடி
  48. மீண்டும் மணிக்கொடி இயங்கத் தொடங்கிய காலம் எது? 1937
  49. கதைகளின் வடிவிலும், கதைப் பொருளிலும் புதிய சோதனைகள் செய்வதற்க்குக் களமாக அமைந்த இதழ்? மணிக்கொடி
  50. சிறுசிறு நிகழ்ச்சிகளைக் கதையாக்கிய உ. வே.சு அவற்றிற்கு இட்ட பெயர்? கண்டதும் கேட்டதும்,  நல்லுரைக்கோவை
  51. ஒரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே சிறுகதை என்றவர் யார்? அட்சன்
  52. சிறுகதை என்பது பிரச்சனைகளை அலசிடும் படைப்பன்று, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் கொண்டதன்று. அது மனித சூழமைவு பற்றி உள்ளவாறு கூறுவதாகும் என்றவர் யார்? பிராங்க் ஓ கானர்

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...