சங்க இலக்கிய காலத்தில் முதன்மைத் தொழிலாக கால்நடை வளர்ப்பும், வேளாண்மையும் இருந்தன. எனினும் அதைத் தாண்டி பல்வேறு துணைமைத் தொழில்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மட்பாண்டத் தொழில். சங்க காலம் பெருங்கற்காலத்ததைச் சேர்ந்த காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. என்றாலும் அவற்றின் பயன்பாடு பரவலாக்கம் பெறவில்லை. அரசர்களும், வசதி படைத்தோரும் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக இந்த உலோகங்களும், உலோக கொள்கலன்களும் இருந்தன. சாமானியர்களின் பயன்பாட்டிற்கு மட்பாண்டங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாகவே பெருங்கற்காலத்தைச் சார்ந்த அகழ்வாய்வு பகுதிகளில் உடைந்த மட்பாண்டங்கள் பெருமளவில் கிடைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு பானை ஓடுகள் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களை மக்கள் அதிகமாக வாழ்ந்த நகரப்பகுதிகளாக அடையாளம் காண்கின்றனர் தொல்லியலாளர்கள். அண்மை காலத்தில் தமிழகத்தின் அதிமுக்கியப் பேசு பொருளாக இருந்த கீழடி அகழ்வாய்விலும் இதுபோன்ற நிலையைக் காண முடிகின்றது. சங்க இலக்கியங்கள் கடைச்சங்க காலத்ததைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. தற்போது இருக்கும் மதுரையும் கடைச்சங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. எனவே மதுரைக்கு மிக அருகில் வைகைக் கரையில் அமைந்துள்ள கீழடி பகுதியில் ஒரு நகரம் இருந்ததென்றால் அது மதுரையோடு தொடர்புடைய சம காலத்திய நகரமாகவோ அல்லது அதற்கு முந்தைய கால நகரமாகவோ இருத்தல் கூடும். சங்க காலத்தின் காலத்திலோ அல்லது அதற்கு முந்தைய காலத்திலோ செழித்திருந்த நகர நாகாpகமான கீழடி பகுதியில் இருக்கும் மட்பாண்டங்கள் குறித்தும், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் மட்பாண்ட பயன்பாடு குறித்தும் விhpவாக விவாதிக்கிறது இக்கட்டுரை.
சங்க காலத்தில் மட்பாண்டத் தொழில் பரவலாக்கம் பெற்று இருந்தது. மட்பாண்டங்களைச் செய்வோர் அதனைத் தனித்த தொழிலாகச் செய்துள்ளனர். எனவே அவர்களைக் கலம்செய்கோ, எனப் பெயாpட்டு அழைத்துள்ளனர். இதனை, “கலம் செய் கோவே! கலம் செய் கோவே!”(புறம்: 228) என்னும் புறநானூற்றுப் பாடல் வழி அறிய முடிகின்றது. மேலும் அவர்கள் வேட்கோ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், சிறுவயது முதலே இத்தொழிலை மேற்கொள்கின்றனர் எனவும்,
“வேட்கோ சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரு உத்திரன் போல” (புறம்: 32) புறப்பாடல் குறிக்கின்றது. இதை நோக்க மட்பாண்டத் தொழில் குடும்பத்தொழிலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் உணர்த்துகின்றது. மட்பாண்டங்கள் பெரும்பாலும் கொள்கலனாகவே காட்டப்படுகின்றன. பானை, நீர்க்கன்னல், இறந்தோரைப் புதைக்க பயன்படுத்திய தாழிகள் முதலியவை சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றன.
பானைகள் பானை, குழிசி, தசும்பு, மண்டை, உறி, கரகம் எனப்பல பெயர்களால் குறிக்கப்படுகின்றன.
“திண்கால் உறியண் பானை”(அகம்: 270) என்னும் பாடலடி பானை எனக் குறிக்கப்பட்டமையையும்,
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி” (பெரும்: 96) என்னும் பாடலடி குழிசி எனச் சுட்டப்பட்டமையையும்,
“தயிர் கொடு வந்த தசும்பு” (புறம்: 33) என்பது தசும்பு எனக் குறித்ததையும்,
“பாணர் பசுமீன் சொரிந்த மண்டை” (குறு: 169) என்னும் அடி மண்டை என அழைக்கப்பட்டதையும்,
“உறித் தாழ்ந்த கரகம்” (கலி: 9) என்னும் பாடல்வரி கரகம் என்றதையும் குறிக்கின்றன. இவ்வாறு வேறு வேறு பெயர்களால் அழைக்கப் பெற அவற்றின் வடிவம் அல்லது அளவு மாறுபாடு காரணமாக இருக்கலாம் எனினும் அவற்றை உறுதி செய்ய சங்கப் பாடல்களில் இடமில்லை.
கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வில் அதிகமான பானைகள் கடைத்துள்ளன. இவை பல்வேறு வடிவங்களில் (வாய்பகுதி நீண்டு, அகன்று, குறுகி) கிடைத்துள்ளன. அத்துடன் மிகச் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் பானைகள் கிடைத்துள்ளன. அவற்றில் மிகச் சிறிய பானைகளை நோக்குகையில் அவை விளையாடுவதற்காக வடிவமைக்கப்பட்டவையாகக் கருத இடமுண்டு. மேலும் கீழடியில் கிடைத்த பானைகளோடு அவற்றிற்குப் பொருத்தமான மூடிகளும் கிடைத்துள்ளன. ஆனால், சங்க இலக்கியத்தில் இந்த மூடிகள் பயன்படுத்தப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. கீழடியில் கிடைக்கும் பானைகள் கருப்பு, சிவப்பு, கருப்பு சிவப்பு கலந்த வண்ணங்களில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியத்தில் பானைகள் செந்நிறத்தில் இருந்தமை மட்டுமே சுட்டப்பட்டுள்ளது. மேலும், பானைகளில் ஓவியங்கள் வரையப்பட்டமையோடு பானைகளில் பெயர் எழுதும் பழக்கமும் சங்க காலத்தில் இருந்துள்ளது.
“வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த என்னும்
பல்பொதிக் கடைமுக வாயில்.” என்னும் நற்றிணை பாடலடி பானையில் பெயர் பொறித்தமையைக் காட்டுகின்றது. கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் கீறல்கள் எனப்படும் வரைகோட்டு ஓவியங்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோகன் காலத்திற்கு முந்தைய எழுத்து வடிவங்களாக உள்ளன. பானைகளின் வாய்ப்பகுதிக்குக் கீழே இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன இவற்றில் பல ஒடுகள் உடைந்திருப்பதால் முழமையான வார்த்தைகளை வாசிக்க முடியவில்லை. சில ஒடுகளில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் குவிரன், ஆதன் முதலான பெயர்ச்சொற்களும் அடக்கம். பானை ஓடகளைப் பயன்படுத்துவோர் சாமானியராகவே இருத்தல் வேண்டும். அப்படியானால் பானை ஓடுகளில் பெயர் பொறித்தோர் சாமானியரே. ஏனில் சாமானியரும் எழுத்தறிவு பெற்றவராக இருந்திருக்க வேண்டும். “கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல் hPதியான காலக்கணிப்புகள், தமிழ் பிராமியின் காலம் மேலும் பழமையானதாக கருதச் செய்கிறது. இவையெல்லாம், கி.மு. 6-ம் நூற்றாண்டில் இருந்த தமிழ்ச் சமுதாயம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கிறது. அதாவது 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்.” என்னும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையும் இதனைப் புலப்படுத்துகின்றது. இப்படி பானையில் பெயரிடப்பட்டமை மேற்கண்ட நற்றிணை பாடல் கருத்தை ஒத்தமைகின்றது.
கீறல்களை எழுத்திற்கு முந்தைய வரி வடிவங்கள் என்பாரும் உளர். பொதுவாக சிந்து சமவெளி நாகரிகத்தை தமிழோடு சில அறிஞர்கள் ஒப்பிடுவதுண்டு. ஆனால் அறிவியல்பூர்வமாக அதை நிரூபிக்க முடியாத நிலை இருந்ததது. கீழடி அகழ்வாய்வு அக்குறையைப் போக்கியுள்ளது. கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ள கீறல்கள் சிந்து சமவெளி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட கீறல்களோடு ஒத்தமைகின்றன. இத்தகு கீறல்கள் உள்ள ஆயிரம் பானை ஓடுகள் கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இக்கீறல்களைப் பானை ஓடுகளில் பொறித்திருப்பது என்பதும் கூட பெயர் பொறித்தலுக்கு இணையான தனது பானையை தனித்துக்காட்டுவதற்கான அடையாளமிடலாகவோ அழகுபடுத்துவதாகவோ இருந்திருக்கக் கூடும்.
மட்பாண்டங்கள் செய்த முறையினையும் சங்கப்பாடல்கள் வழியாக அறிய முடிகின்றது. மட்பாண்டங்கள் செய்ய ஈர மண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். ஈரமான பதப்படுத்திய மண்ணை சக்கரத்தில் இட்டு பானை செய்துள்ளனர்.
“வனை கலதிகிரியின் குழிசி சுழலும்
துணை செலல் தலைவாய் ஓவு இறந்து வாpக்கும்” (மலை:475) என்னும் பாடலடி இதனை உணர்த்துகின்றது. இவ்வாறு சக்கரத்தைச் சுழலவிட்டு கைகளால் செய்யப்பட்ட பானைகள் பின்னர் நெருப்பில் இட்டு சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பானை தனித்தனியாக சுடப்படாமல் மொத்தமாக சுடப்பட்டிருக்க வேண்டும். இப்படி பானைகளைச் சுடுவதால் ஏற்படும் புகை மலையையே மறைப்பதாக,
“இலங்குமலை புதைய வெண்மழை கவைஇ
கலம்சுடு புகையின் தோன்றும் நாட” ( அகம்: 308) என்னும் அகநானூற்றுப் பாடல்வாp உணர்த்துகின்றது. இவ்வாறு சுடப்படாத பானைகள் ஈரத்தைத் தாங்காதவையாக, பயனற்றவையாக இருந்தன. இந்த பயனற்ற கலத்தை பசுங்கலம் என்று குறிக்கப்பட்டமையை,
“பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
ஊள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி” (குறு: 29)
“ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு” (நற்: 308) முதலான பாடல் வரிகள் குறிக்கின்றன. சுடப்படாத பானைகள் பயனற்று கரையும் நிலையில் இருக்க, சுடப்பட்ட பயனுள்ள பானைகள் உணவுசார் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடுஊண் புழக்கல்” (பெரும்: 96)
“சோறு அடு குழிசி இளக
மான்தடி புழக்கிய புலவுநாறு குழிசி
நகைமுதிர் சாடி நறுவின் வாழ்த்தி” போன்ற பாடல் வாpகள் பானைகள் உணவு சமைக்க பயன்பட்டமையைப் புலப்படுத்துகின்றன. மேலும்,
“பாணர் பசுமீண் சொhpந்த மண்டை” என்னும் பாடலடி மீனைச் சேகாpக்க மண்பானையைப் பயன்படுத்தியதைக் காட்டுகின்றது. மேலும், மண்பானைகள் தயிரை வைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. “தயிர் கொடு வந்த தசும்பு” ((புறம்: 33) எனும் புறநானூற்றுப் படலடி இதனைப் புலப்படுத்துகின்றது.
“உறி தாழ்ந்த கரகம்” (பெரும்: 56)
“இமிழ் இசை மண்டை உறியொடு” (கலி: 106)
“திண்கால் உறியண் பானை” (அகம்: 270) போன்ற பாடல் பானைகளை வீட்டில் தொங்கவிட உறிகளைப் பயன்படுத்தியமையைக் காட்டுகின்றது.
பானைகள் மட்டுமல்லாது நேரத்தை அளவிடப் பயன்படும் குறுநீர்க்கன்னல்களும் மண்ணால் செய்யப்பட்டுள்ளன. இந்த குறுநீர்க்கன்னல்கள் என்பவை நீர் கடிகாரங்களாக நாழிகையைக் கணிக்க பயன்பட்டுள்ளன. அதாவது இது இரு பகுதிகளைக் கொண்ட குடுவையாகும். மேற்பகுதியில் நீர் ஊற்றினால் அதன் கீழே இருக்கும் துளை வழியாக நீர் கசியும். இவ்வாறு கசியும் நீரானது. கீழே இருக்கும் பகுதியில் சேகரம் ஆகும். அப்பகுதியில் ஒவ்வொரு நாழிகையையும் குறிக்க கோடுகள் இடப்பட்டிருக்கும். நீர் நிரம்பும் அளவைப் பொறுத்து எத்தனை நாழிகை என கணக்கிட்டு அறிந்துள்ளனர். இந்தக் குறுநீர்க்கன்னல்கள் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டமையைக் கீழ்வரும் பாடலடிகள் காட்டுகின்றன.
“குறுநீர்க் கன்னல் எண்ணுந ரல்லது
கதிர் மருங்கறியாது அஞ்சுவரப் பாஅய்” என்னும் பாடலடி இதனை உணர்த்துகின்றது. இவை தவிர்த்து இறந்தோரைப் புதைக்கும் தாழிகளும் மண்ணால் வனையப்பட்டடுள்ளன. அளவில் பொpயனவான இவையும் சக்கரத்தின் உதவியோடே செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இறந்தவரின் உடலை இட்டு, அதனோடு சிறு கலன்களில் தானியங்களையும் இட்டு மண்ணில் புதைத்துள்ளனர். ஆவற்றை விளங்குகளிடமிருந்து காக்க தலைகீழாகப் புதைத்துள்ளனர்.
கீழடியில் அகழ்வாய்விற்கு உட்படுத்தப்பட்ட இடம் குடியிருப்புப் பகுதியாக இருப்பதால் இங்க ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்டிருக்க வாய்ப்பிள்ளை. ஆனால் பல வடிவங்களில், பல்வேறு அளவுகளில், மாறுபட்ட வாய்ப்பகுதிகளைக் கொண்ட பானைகள் மிகுதியாக கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களின் எழுத்தறிவைப் பறைசாற்றும்படி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்ததோடு பண்டைத் தமிழரின் கலைத் திறனை வெளிப்படுத்தும் பறவை, விலங்கு, மனித உருவங்களில் செய்யப்பட்ட மண் பொம்மைகளும் கிடைத்துள்ளன. மேலும், சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் மாட்டுவண்டியும் கிடைத்துள்ளது. இதன் சக்கரம் மண்ணால் செய்யப்பட்டதாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமன்றி வளர்ச்சியடைந்த நகர நாகாpகமாக வைகைக் கரை நாகரிகம் இருந்ததைப் பறைசாற்றும் வண்ணம் உறை கிணறுகளும், நீர் வடிகால்களும் உள்ளன. அவையும் மண்ணால் செய்யப்பட்டவையாகவே உள்ளன.
கீழடியில் இதுவரை நடத்;தப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி அந்நாகாpகத்தின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டாக குறிக்கப்படுகின்றது. எனினும் இது சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையா? ஆல்லது அதற்கும் முற்பட்டவையா என்பதைக் கணிக்க இயலவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுவது போன்று சாமானியாpன் புழங்கு பொருளாக பலவகைப் பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சங்கப் பாடல் குறிப்பது போல தங்கள் பானைகளில் பெயர் எழுதி பயன்படுத்தியுள்ளனர். சுங்க இலக்கியத்தில் காட்டப்படும் குறநீர் கன்னல் போன்ற நேர அளவீட்டுக் கருவி கீழடியில் கிடைத்ததாகத் தொpயவில்லை. எனினும் சங்க இலக்கியத்தில் காணப்படுவதைவிட பண்டைத்தமிழர் மிக ஆழ்ந்த அறிவு கொண்ட நாகாpகச் சமூகமாக இருந்தமையை அங்குக் கிடைக்கும் மண்ணால் ஆன உறை கிணறு, நீர்வடிகால்கள் காட்டுகின்றன. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பயன்பாடு பரவலாக்கப்படாத காலமாக சங்க காலமும் கீழடி நாகாpக காலமும் இருந்திருக்க வேண்டும். ஆங்காங்கே இரும்பு குறித்த பதிவுகள் இருந்தாலும் இரண்டிலுமே மட்பாண்டங்களே சாமானியர் பயன்பாட்டில் பெரும் இடம் பிடிக்கின்றன.