இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

தொல்காப்பிய எழுத்ததிகாரம் - நூன் மரபு

 1) தொல்காப்பியர் குறிப்பிடும் [முதல்] எழுத்துக்கள் எத்தனை ? 

                                30

2) முதல் எழுத்தை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ?

                                எழுத்து 

3) சார்பெழுத்துக்கள் எத்தனை என தொல்காப்பியர் கூறுகிறார் ? 

                                    3

4) தொல்காப்பியர் மொத்த எழுத்துக்களாகக் குறிப்பவை ? 

                                33

5) சார்பெழுத்துக்கள் யாவை ? 

                        குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்

6) ஆய்தத்தை எவ்வாறு குறிக்கிறார்? 

                        முப்பாற்புள்ளி

7) சார்பெழுத்தை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார்?

                    எழுத்தோரன்ன (எழுத்தைப் போன்றது)

8) குறில் எழுத்தைத் தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ? 

                        குற்றெழுத்து

9) குற்றெழுத்துக்கள் எத்தனை ? 

                    5 (அ, இ, உ, எ, ஒ)

10) குற்றெழுத்தின் மாத்திரை எத்தனை ? 

                    ஓரளபு [1 மாத்திரை]

11) தொல்காப்பியர் மாத்திரையை எவ்வாறு குறிக்கிறார் ? 

                                அளபு

12) நெடில் எழுத்துக்களை எவ்வாறு அழைக்கின்றார் ? 

                        நெட்டெழுத்து

13) நெட்டெழுத்துக்கள் எத்தனை ? 

                    7 (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)

14) நெட்டெழுத்தின் மாத்திரை அளவு ? 

                ஈரளபு

15) 3 மாத்திரை கொண்ட ஓரெழுத்து இல்லை என தொல்காப்பியர் கூறுகிறார்.

16) இரண்டிற்கும் மேல் கூட்டி ஒலிக்க விரும்பினால் என்ன செய்யக் கூறுகிறார் தொல்காப்பியர் ? 

                                       கூடுதலாக கூட்டி எழுத வேண்டும். 

17) ஒரு மாத்திரை அளவு யாது ? 

                                    கண் இமை, நொடி

18) அ - ஔ வரை உள்ள 12 எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும் ? 

                                    உயிர்

19) மெய்யெழுத்துக்கள் எத்தனை ? 

                                     18

20) உயிர் மெய்யோடு இயைகையில் நிகழ்வது ? 

                                   உயிர் தன் இயல்பினின்று திரியாது

21) மெய்யெழுத்தின் அளவு யாது ? 

                                அரை மாத்திரை

22) அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே ஏனை 3 என்பது யாது ?

                            சார்பெழுத்துக்கள் (குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்) 

23) தொல்காப்பியம் கூறும் சார்பெழுத்தின் அளவு யாது ? 

                            ½ மாத்திரை

24) அரை அளவை விடக் குறைந்த அளவுடைய எழுத்து எது ? 

                            மகர மெய்

25) மகர  மெய் எச்சூழலில் அளவு குறைந்து ஒலிக்கும் ? 

                    செய்யுளில் ஓசை குறைந்து வரும் ஒலி நெருக்கடியில்.

26) தொல்காப்பியர் இசையிடன் அருகும் எனக் குறிப்பது ?  

                  ஓசை கருதி வரும் இச்சூழல் [ஓசை குறைந்து வருகையில் நிறைவிக்க]

27) மகரம் குறுகுகையில் - அது எவ்வாறு எழுதப்படும் என தொல்காப்பியா; கூறுகிறார் உட்பெறு புள்ளி உருவாகும்’’ 

                (மகரத்திற்குள் ஒரு மெய் எழுதப்படும் - பழைய கால மரபு)

28) மெய்யெழுத்தின் இயற்கை எனத் தொல்காப்பியர் கூறுவது ? 

                புள்ளியொடு நிலையில் (புள்ளி பெற்று வருதல்)

29) தொல்காப்பியம் குறிப்பிடும் புள்ளி பெற்று வரும் மெய் அல்லாத எழுத்துக்கள் யாவை ?

                        எ, ஒ (பழங்கால வழக்கு)

30) உயிர் மெய்யின் ஒலிப்பு எவ்வாறு அமையும் ? 

                            மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னும் வரும்

31) வல்லெழுத்து என்பது - கசடதபற (6)

32) மெல்லெழுத்து என்பது - ஙஞணநமன (6)

33) இடையெழுத்து என்பது - யரலவழள (6)

34) மெய்மயக்கம் எத்தனை வகைப்படும் ? 

                    2 (உடனிலை மெய் மயக்கம், வேற்று நிலை மெய்மயக்கம்)

35) உடனிலை  மெய் மயக்கம் என்பது ? 

                    ஒரே மெய் அடுத்தடுத்து வருவது (கண்ணம்)

36) உடனிலை மெய் மயக்க வேறு பெயர் ? 

                    ஓரொற்று உடனிலை

37) நிலை மெய்மயக்கம் என்பது ? 

                    இரு வேறு மெய்  இணைந்து வருவது (சான்று)

38) ட, ற, ல, ள எவற்றுடன் மயங்குபவை ? 

                                க, ச, ப

39) ல, ள உடன் மயங்குபவை யாவை ? 

                                ய,வ

40) மெல்லெழுத்துக்களோடு மயங்கும் எழுத்துக்கள் யாவை ?

                    அவற்றோடு ஒத்த இன எழுத்துக்களாம் வல்லெழுத்துக்கள்


41) ண, ன முன் மயங்கும் எழுத்துக்கள் ? 

                                            க,ச,ஞ,ப,ம,ய,வ (7)

42) ஞ,ந,ம,வ உடன் இணையும் மெய் ? 

                                                ய்

43) மகர மெய்யோடு மயங்கும் எழுத்து யாது ?

                                        வ்

44) ய,ர,ழ உடன் இணையும் எழுத்துக்கள் யாவை? மொழி முதலாகும்                                                                 எழுத்துக்கள், ங்

45) தம்முடன் தாம் இணையா எழுத்துக்கள் யாவை ? 

                ர, ழ

46) சுட்டெழுத்துக்கள் எத்தனை ? 

                3 (அ, இ, உ)

47) வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள் எத்தனை ? 

                3 (ஆ, ஏ, ஓ)

48) அளபெடையைத் தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ? 

                    அளபறிந்து உயிர்த்தல், ஒற்றிசை  நீடல்

49) உயிரும் ஒற்றும் எதன் பொருட்டு அளபெடுக்கும் ? 

                    இசையின் பொருட்டு

50) இசையுடன் சிவனிய நரம்பின் மறைய எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது ? 

                        இசைக்கலை நூல்கள்


2 கருத்துகள்:

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...