இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

நன்னூல் - பாயிரம்

  1. நன்னூல் எழுத்ததிகாரத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 5
  2. எழுத்ததிகார இயல்கள் யாவை? எழுத்தியல்,  பதவியல்,  உயிரீற்றுப் புணரியல்,  மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் 
  3. நன்னூல் ஆசிரியர் யார்? பவணந்தி / பவணந்தி முனிவர்
  4. பவணந்தி முனிவர் தந்தைப் பெயர்? அனுமதி
  5. பவணந்தி முனிவரின் சமயம்? சமயம்
  6. பவணந்தி முனிவரின் ஊர்? சனகை, சனகாபுரம் (மைசூர்)
  7. நன்னூலைச் தெரிவித்தவர்? சீயகங்கன்
  8. நன்னூலுக்கு முதன் முதலில் உரை செய்தவர் யார்? மயிலை நாதர் 
  9. நன்னூலுக்கு விருத்தி உரை செய்தோர்? மயிலை நாதர்,  சங்கரநமச்சிவாயர்,  சிவஞான முனிவர் 
  10. நன்னூலுக்கு கண்டிகை உரை செய்தவர்? ஆறுமுக நாவலர் 
  11. நன்னூலின் காலம்? 12 ஆம் நூற் 
  12. நன்னூல் நூற்பா எண்ணிக்கை? 462
  13. பவணந்தியின் சிறப்புப் பெயர்? பல்கலைக் குரிசில் 
  14. நன்னூல் கடவுள் வாழ்த்து எந்தக் கடவுளுக்கு இயற்றப்பட்டது? அருகக் கடவுள்
  15. நன்னூல் கூறும் பாயிர வகைகள்?2 (பொதுப்பாயிரம்,  சிறப்புப் பாயிரம்)
  16. பாயிரத்திற்கான பெயர்கள் எத்தனை? 7
  17. பாயிரப் பெயர்கள்  யாவை? முகவுரை,  பதிகம்,  அணிந்துரை,  நூல்முகம்,  புறவுரை,  புனைந்துரை,  தந்துரை
  18. பாயிரத்தில் கூறப்படும் வரலாறு? நூல் வரலாறு,  ஆசிரியர் , நூல் கற்பித்தல்  , மாணாக்கர்  வரலாறு,  நூல் கற்றலின் வரலாறு 
  19. நூல் வகைகள்  எத்தனை? 3 (முதல் நூல்,  வழி நூல்,  சார்பு நூல் 
  20. சார்பு நூலின் வேறு பெயர்? புடை நூல்
  21. முதல் நூல் என்றால் என்ன? இறைவன் அல்லது இறை அருள பெற்ற சான்றோர் படைப்பது 
  22. வழி நூல் என்றால் என்ன? முதல் நூலை அடியொற்றி எழுதப்படுவது.
  23. சார்பு நூல் என்பது என்ன? முதல் நூல்,  வழி நூல் இரண்டையும் சார்ந்து,  இரண்டிலிருந்தும் பல வகையில்  முரண்பட்டு இருப்பது.
  24. நூல் பயன் யாவை? அறம்,  பொருள்,  இன்பம்,  வீடு 
  25. நன்னூல் பாயிரம் மதம் எனக் குறிப்பது? மதம் 
  26. மதங்கள் எத்தனை? 7
  27. பாயிரம் குறிப்பிடும் நூற்  குற்றங்கள் எத்தனை? 10
  28. நூலுக்கான அழகுகள் எத்தனை? 10
  29.   உத்திகள் எத்தனை? 32
  30. நூலின் உறுப்புகள் எத்தனை? 2
  31. நூலின் உறுப்புகள் யாவை? ஓத்து, படலம்
  32. ஓத்து என்பது யாது? ஒரே  இன மணியை அடுக்கி வைத்தது போல ஒரே பொருன்மை சார்ந்தவற்றை அடுக்கிச் சொல்வது.
  33. படலம் என்றால் யாது?                 ஒரே பொருண்மையாக அன்றி மாறுபட்ட செய்திகளைத் தொகுத்தளிப்பது.
  34. சூத்திரம் என்பது  யாது? சில்வகை எழுத்தால் பல்வகைப் பொருளை அடுக்கி இனிதாகத்  தருவது.
  35. சூத்திரத்திற்கு  நன்னூலார் தரும் உவமை யாது? கண்ணாடி
  36. சூத்திர நிலை எப்படி இருக்கவேண்டும்? ஆற்றொழுக்கு,  சிங்கத்தின் பார்வை,  தவளைப் பாய்ச்சல்,  இரை நோக்கிப் பாயும் பருந்து போல இருக்க வேண்டும். 
  37. சூத்திரம் எத்தனை வகைப்படும்? 6
  38. சூத்திர வகைகள் யாவை? பிண்டச் சூத்திரம்,  தொகைச் சூத்திரம்,  வகைச் சூத்திரம்,  குறிச் சூத்திரம்,  செய்கைச் சூத்திரம்,  புறனடைச்  சூத்திரம் 
  39. நூலுக்கான உரை எத்தனை வகையாக உரைக்கப்படும்? 14
  40. உரை வகைகள் யாவை? காண்டிகை உரை,  விருத்தி உரை
  41. காண்டிகை உரை உறுப்புகள் யாவை ? கருத்துரை,  பதவுரை,  சான்று, வினா விடையோடு  ஐந்தும்  காண்டிகை உரை உறுப்புகள் (இது ஐங்காண்டிகை எனப்படும். ஆறுமுக நாவலர் செய்த உரை)
  42. முக்காண்டிகை உரை என்றால் என்ன? கருத்துரை,  பதவுரை,  எடுத்துக்காட்டு மட்டும் அமைந்த உரை.  (மயிலை நாதர் செய்த உரை)
  43. காண்டிகை உரை என்பது யாது? சுருங்கச் சொல்வது. 
  44. விருத்தி உரை என்பது  யாது? மெய்ப்பொருளை விரித்துரைப்பது.
  45. நூலுக்கான பெயர்க்காரணம் யாது? சொல்  பஞ்சாக,  செய்யுள் இழையாக புலவன் நூற்கும் பெண்,  வாய் கையாக , அறிவு கதிராகக் கூடி உருவாக்கப்பட்டது.
  46. ஆசிரியர்  பொருள்? ஆசு- குற்றம்,  இரிதல்- நீக்குதல் (குற்றத்தை நீக்குபவர்)
  47. ஆசிரியனுக்கு அளிக்கப்படும் பிற பெயர்கள்? நுவல்வோன்,  சொல்லுவோன் 
  48. நல்லாசிரியருக்குக் கூறப்படும் உவமைகள் யாவை? நிலம்,  மலை,  நிறைகோல் (தராசு),  மலர்
  49. ஆசிரியர் ஆகாதவருக்குத் தரப்பட்டுள்ள உவமைகள்  யாவை? கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை,  முடத்தெங்கு 
  50. மாணாக்கர் (மாணவர்கள்) வகைகள்  எத்தனை? 3 தலை மாணாக்கர்,  இடை மாணாக்கர்,  கடை மாணாக்கர் 
  51. தலை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்? அன்னம்,  பசு(ஆ)
  52. இடை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்? மண், கிளி
  53. கடை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்?ஓட்டைக் குடம்,  ஆடு, எருமை,  பன்னாடை
  54.  ஆசிரியர் மாணவர் உறவு எதைப் போன்று இருக்க வேண்டும்? தீக்காய்வார் போல.
  55. நூலுக்குப் பெயரிடுதல் எத்தனை  வகைப்படும் ? 8 (படைப்பார் (ஆக்கியோன்) பெயர்,  நூல் வந்த வழி, நூல் படைக்கப்பட்ட இடம் (எல்லை), நூலின் பெயர், யாப்பு,  நூலின் பொருண்மை , கேட்போர், நூலால் விளையும் பயன்)
  56. நூலுக்கான பெயரிடலுக்குக் பிற காரணம்?  காலம்,  நூல் அரங்கேறிய இடம்(களம்), காரணம்,  முதல் நூல்,  பெரும்பாண்மையாகப் பேசப்பட்ட செய்செய்வித்தோன் (நூல் உருவாகப் பொருளுதவி செய்த புரவலன்),  நூலின் தன்மை,  நிமித்தம்,  இடுகுறி 
  57. ஆக்கியோன் பெயரால் பெயர் பெற்ற நூல் - தொல்காப்பியம் 
  58. அளவால் பெயர் பெற்ற நூல் - நாலடியார்,  அகநானூறு, திணை மொழி ஐம்பது 
  59. முதல் நூலால் பெயர் பெற்ற நூல்   -  பாரதம், இராமாயணம் 
  60. மிகுதிப் பொருளால் பெயர் பெற்ற நூல் - களவியல், இன்னா நாற்பது 
  61. பொருளால் பெயர் பெற்ற நூல்- நம்பி அப்பொருள்,  புறப்பொருள் வெண்பா மாலை
  62. செய்வித்தோன் பெயரால் பெயரிடப்பட்ட நூல் - வீரசோழியம் 
  63. நூலின் தன்மையால் பெயர் பெற்ற நூல்  - நற்றிணை,  நன்னூல் 
  64. இடத்தால் பெயர் பெற்ற நூல்- களவழி நாற்பது 
  65. காலத்தால் பெயர் பெற்ற நூல்- கார் நாற்பது  
  66. நூல் இயற்றியவரின் ஆசிரியர் பெயரால் பெயர் பெற்ற நூல்  - நேமிநாதம் 
  67. உவமையால் பெயர் பெற்ற நூல்  - திரிகடுகம் 
  68. பாடல் முதல் வரியால் பெயர் பெற்ற நூல்  - ஆத்திச்சூடி,  கொன்றை வேந்தன் 
  69. யாப்பால் பெயர் பெற்ற நூல்- திருக்குறள், புறப்பொருள் வெண்பா மாலை 
  70. வழி நூலின் வகைகள் எத்தனை? (தொகுத்தல்,  விரித்தல்,  தொகைவிரி,  மொழி பெயர்ப்பு)
  71. பாயிரம் இயற்றுதலுக்கு உரியோர்? படைப்பாளியின் ஆசிரியர்,  உடன் கற்றவர்,  மாணவர்,  உரையாசிரியர் 
  72. தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள் எத்தனை ?4
  73. பாயிரத்தின் சிறப்பிற்குச் சுட்டப்படும் உவமைகள் யாவை? (3) மாளிகைக்குச் சித்திரம் போல, மாநகரத்திற்குக் கோபுரம் போல,  நல்ல பெண் அணியும் நகைகள் போல நூலுக்குப் பாயிரம் 
  74. பாயிரத்தின் இன்றியமையாமையை உணர்த்தும் வரி? "ஆயிரம் முகத்தால் அகன்றது ஆயினும்  பாயிரம் இல்லது பனுவலன்றே "
  75. நன்னூல் கடவுள் வணக்கம் - "பூமலி யசோகின் புனை நிழல் அமர்ந்த நான் முகற் தொழுது நன்கியம்புவனெழுந்தே "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...