இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

நன்னூல் எழுத்ததிகாரம்- எழுத்தியல்

  1.  எழுத்ததிகாரத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 202
  2. நன்னாலார் எழுத்திலக்கணத்திற்கு அமைத்த பாகுபாடுகள் எத்தனை? 12 
  3. எழுத்திலக்கண பாகுபாடுகள் யாவை? எண், பெயர்,  முறை, பிறப்பு,  உருவம்,  மாத்திரை,  முதல், ஈறு,  இடைநிலை,  போலி, பதம்,  புணர்ச்சி 
  4. எழுத்து என்பது யாது? மொழியின் முதற் காரணமான அணுத்திரள் ஒலியால் உருவாவது
  5. எழுத்து வகைகள் யாவை? முதல், சார்பு
  6. முதல் எழுத்து எத்தனை வகைப்படும்  ?  உயிர்,  மெய்
  7. முதல் எழுத்துக்கள எத்தனை? 30
  8. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 10
  9. சார்பெழுத்துக்களின் வகைகள் யாவை? உயிர்மெய், ஆய்தம் [முற்றாய்தம்], உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
  10. சார்பெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை யாது? 369
  11. உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை - 216 [12X18 = 216
  12. முற்றாய்த எழுத்துக்களின் எண்ணிக்கை - 8
  13. உயிரளபெடை எழுத்துக்களின் எண்ணிக்கை - 21
  14. ஒற்றளபெடை எழுத்துக்களின் எண்ணிக்கை - 42
  15. குற்றியலிகர எழுத்துக்களின் எண்ணிக்கை - 37
  16. குற்றியலுகர எழுத்துக்களின் எண்ணிக்கை - 36
  17. ஐகாரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை -  3
  18. ஔகாரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 1
  19. மகரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 3
  20. ஆய்தக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 2
  21. பெயரிடுதலின் வகைகள் யாவை? இடுகுறிப்பெயர், காரணப்பெயர் [இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப் பெயர், காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் பெயர்]  
  22. உயிர் எழுத்தை நன்னூலார் எவ்வாறு கூறுகிறார்? ஆவி
  23.  சுட்டெழுத்துக்கள் யாவை? அ, இ, உ
  24. சுட்டு வகைகள் ? அகச்சுட்டு, புறச்சுட்டு [ நன்னூலார் குறிக்கவில்லை]
  25. முதலில் வரும் வினா எழுத்துக்கள் யாவை? எ, யா
  26. இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் யாவை? ஆ, ஓ
  27. முதலிலும், ஈற்றிலும் வரும் வினா எழுத்து யாது? ஏ
  28. வல்லின எழுத்துக்கள் யாவை? க, ச, ட, த, ப, ற
  29. மெல்லின எழுத்துக்கள் யாவை? ங, ஞ, ந, ண, ம, ன
  30. ஐயின் இன எழுத்து யாது? இ
  31. ஔ - யின் இன எழுத்து யாது? உ
  32. இன எழுத்து ஆவதற்கு உரிய காரணங்கள்? தானம், முயற்சி, அளவு, பொருள், வடிவு இவற்றில் ஒன்றோ பலவோ ஒத்து அமைவது.
  33. எழுத்து உருவாக காற்றுப் பொருந்தும் இடம்? உரம் [நெஞ்சு-நுரையீரல்], கண்டம் [கழுத்து], தலை, மூக்கு
  34. எழுத்து உருவாகத் தொழிற்படும் உறுப்புக்கள் யாவை? இதழ், நாக்கு, பல், மேல் அண்ணம்
  35. மிடற்றில் [கழுத்து, தொண்டை] உருவாகும் எழுத்துக்கள் யாவை?        உயிர், இடையின எழுத்துக்கள்
  36. மெல்லெழுத்துக்கள் எங்கு பிறக்கும்? மூக்கு
  37. வல்லெழுத்துக்கள் எங்கு பிறக்கும்? நெஞ்சு [உரம்]
  38. அங்காத்தலால் [வாயைத் திறத்தல்] பிறக்கும் எழுத்துக்கள் யாவை? அ,ஆ
  39.  மேல் அண்ணத்தின் பல்லை அடி நாக்கின் விளிம்பு பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? இ, ஈ, எ, ஏ, ஐ
  40. இதழ் குவிவால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? உ, ஊ, ஒ, ஓ, ஔ
  41. நாக்கின் அடிப்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? க், ங்
  42. நாக்கின் இடைப்பகுதி அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள்? ச், ஞ்
  43. நாக்கின் நுனி அண்ணத்தின் நுனி பொருந்தப் பிறப்பவை? ட், ண்
  44. அண்பல் [அண்ண அடிப்பகுதி] நா நுனி பொருந்தப் பிறப்பவை? த், ந்
  45. மீகீழ் [மேல், கீழ்] இதழுறப் பிறப்பவை யாவை? க், ம்
  46. யகரம் எவ்வாறு  பிறக்கும்? அடி நா அடி அண்ணம் பொருந்துதல்
  47.  அண்ணத்தை நுனி நா வருடப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ர், ழ்
  48. அண்ணப்பல் அடியில் நாக்கின் விளிம்பு பொருந்தப் பிறப்பது? ல்
  49. அண்ணத்தை நாக்கின் நுனி வருட பிறப்பது? ள்
  50. மேற்பல் கீழ் இதழைப் பொருந்தப் பிறப்பது? வ்
  51.  அண்ணத்தை நுனி நா பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ற்,ன்
  52.  சார்பெழுத்தாகிய ஆய்தம் பிறக்கும் இடம் எது? தலை
  53. ஆய்த எழுத்துப் எவ்வாறு பிறக்கும்? வாயை அங்காத்தல்
  54. ஆய்தம் தவிர்த்த ஒன்பது சார்பெழுத்துக்கள் எவ்வாறு பிறக்கும்? தம் முதல் எழுத்தைப் போலப் பிறக்கும்
  55. எழுத்துக்களை ஒலிப்பதில் நிகழும் வேறுபாடுகள் யாவை? எடுத்தல் [உயர்த்தல்], படுத்தல் [குறைத்தல்], நலித்தல் [இடைப்பட்டு ஒலித்தல்]
  56.  ஆய்த எழுத்து சொல்லில் எங்கு வரும்? உயிரெழுத்தின் பின்னும், க்,ச், ட், த், ப், ற் என்ற ஆறு வல்லெழுத்தின் முன்னும் வரும்
  57. முற்றாய்த வகைகள் எத்தனை? 8
  58. அளபெடையின் வகைகள் யாவை? உயிரளபெடை, ஒற்றளபெடை
  59. உயிர் எழுத்து எதற்காக அளபெடுக்கும்? செய்யுளில் இசையை நிறைவு செய்ய
  60. உயிரளபெடை எவ்வாறு எழுதப்படும்? நெட்டெழுத்தை அடுத்து அதன் இனமான குற்றெழுத்து எழுதப்படும்.
  61. சொல்லில் எங்கெங்கு உயிர் அளபெடுக்கும்? முதல், இடை, கடை
  62. அளபெடை வகைகள் எத்தனை? 4 
  63. அளபெடை வகைகள் யாவை? இன்னிசை அளபெடை, இசைநிறை அளபெடை, சொல்லிசை அளபெடை, இயல்பு அல்லது இயற்கை அளபெடை [இவை நன்னூலார் கூறும் வகைகள் அல்ல]
  64. உயிரளபெடைகளின் எண்ணிக்கை? 21[மொழி முதல், இடை, கடை என மூன்று இடங்களில் 7 நெட்டெழுத்துக்கள் 3X7 = 21]
  65. ஒற்று சொல்லில் எங்கு அளபெடுக்கும்? இடை, இறுதி
  66. ஒற்று எச்சூழலில் அளபெடுக்கும்? இசையை நிறைவு செய்ய
  67. அளபெடுக்கும் ஒற்றெழுத்துக்கள் யாவை? ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், 
  68. அளபெடுக்கும் ஒற்று அல்லா எழுத்து எது? ஂஅய்தம்
  69. ஒற்றளபெடையின் எண்ணிக்கை? 42 [மொழியின் இடை மற்றும் இறுதியில் பதினோரு எழுத்துக்கள் அளபெடுக்கும். தனிக்குறிலை அடுத்தோ, இரு குறிலை அடுத்தோ அளபெடுக்கும்: 2X 2X11= 44 இவற்றில் ஆய்தம் குறிலிணையை அடுத்து அளபெடுக்காது. அவை 2 கழிய 42]
  70. குற்றியலிகரம் என்பது யாது? குறுகி ஒலிக்கும் இகரம்
  71. தனிச்சொல்லில் எங்கு இகரம் குறுகி ஒலிக்கும்? மியா எனும் அசைச்சொல்
  72. புணர் மொழியில் எங்கு உகரம் குறுகி ஒலிக்கும்? குற்றியலுகரத்தை அடுத்து யகரம் வர அவை இணைந்து இகரமாக மாறி குறுகி ஒலிக்கும்
  73. குற்றியலிகர எண்ணிக்கை? 37
  74. குற்றியலுகரம் என்பது யாது? குறுகி ஒலிக்கும் உகரம்[சொல் இறுதியில் வல்லெழுத்தை ஊர்ந்து வரும் உகரம் குறுகி ஒலிக்கும்
  75. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? 6
  76. நெடில் தொடர் குற்றியலுகரம் என்பது யாது? தனி நெடிலை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [மாடு, ஆடு]
  77. ஆய்தத்தொடர் குற்றியலுகரம் என்பது யாது? தனிக்குறிலோடு இணைந்து வரும் ஆய்தத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [அஃது]
  78. உயிர்த்தொடர்  குற்றியலுகரம் என்பது என்ன? உயிரைத் தொடர்ந்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [முரசு]
  79. வன்தொடர்க் குற்றியலுகரம் என்பது யாது? வல்லெழுத்தைத் தொடர்ந்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [எட்டு, பற்று]
  80. மென்தொடர் குற்றியலுகரம் என்பது யாது? மெல்லெழுத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [சங்கு, நண்டு]
  81. இடைத்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன? இடையெழுத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [சார்பு, மார்பு]
  82. குற்றியலுகர எழுத்துக்களின் எண்ணிக்கை? 36 [6 வல்லெழுத்து, 6 வகை 6X6 = 36]
  83. குறுகி ஒலிக்கும் சார்பெழுத்துக்கள் எத்தனை? 6
  84. குறுக்கம் எனக் குறிக்கப்படும் சார்பெழுத்துக்கள் எத்தனை? 4
  85. ஐகாரக்குறுக்கம் என்பது யாது? ஐகாரம் தன் 2 மாத்திரையில் இருந்துக் குறுகி ஒலிப்பது.
  86. ஐகாரம் குறுகும் இடங்கள் யாவை? சொல்லின் முதல், இடை, கடை
  87. ஐகாரக்குறுக்க வகைகள் யாவை? 3
  88. ஐகாரம், ஔகாரம் குறுகா இடங்கள் யாவை? தன்னைக் குறிக்கும் இடத்திலும், அளபெடையிலும் குறுகாது.
  89. ஔகாரம் சொல்லின் எவ்விடத்தில் குறுகி ஒலிக்கும்? முதலில்
  90. ஔகாரக்குறுக்கம் எத்தனை வகைப்படும்? 1
  91. மகரக்குறுக்கம் என்பது யாது? மகரம் தன் அரை மாத்திரையில் இருந்துக் குறுகி ஒலிப்பது
  92. மகரம் எப்போது குறுகி ஒலிக்கும்? னகர, ணகரத்தை அடுத்து வருகையில் குறுகும்.
  93. மகரக்குறுக்க எத்தனை வகைப்படும்? 3
  94. ஆய்தம் எப்போது குறுகி ஒலிக்கும்? லகர, ளகரத்தை இறுதியாகக் கொண்ட சொற்கள் நிலை மொழியாகிப் புணர்கையில் ல், ள், ஆய்தமாகத் திரியும். அந்த ஆய்தம் கால் மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும்.
  95. ஆய்தக்குறுக்கம் எத்தனை வகைப்படும்? 2
  96. புள்ளி பெறும் மெய் அல்லாத எழுத்துக்கள் யாவை? எ, ஒ[குறில்]
  97. மாத்திரை என்பது யாது? ஒலி அளவைக் குறிப்பது
  98. உயிரளபெடையின் மாத்திரை யாது? 3
  99. இரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் யாவை? நெடில்
  100. ஒரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் யாவை? குறில், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், ஒற்றளபெடை
  101. அரை மாத்திரை பெறுபவை யாவை? மெய் எழுத்துக்கள், குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றாய்தம்
  102. கால் மாத்திரை அளவு பெறுபவை யாவை? மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம்
  103. மாத்திரை அளவு யாது? இமைத்தல், நொடித்தல்
  104. எழுத்துக்கள் மாத்திரை அளவிறந்து ஒலிக்கும் இடங்கள் யாவை? இசை, விளி [அழைத்தல்], பண்டமாற்று [பொருட்களை விற்பனை செய்கையில்]
  105. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் யாவை? 12 உயிர்,  க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங உயிர் மெய்யாக
  106. வகரம் எப்போது மொழி முதலில் வராது? உ, ஊ, ஒ, ஓ
  107. ய எவற்றோடு இணைந்து மொழி முதலில் வரும்? அ, ஆ, உ, ஊ, ஒ, ஔ
  108. ஞகரம் எவற்றோடு இணைந்து மொழி முதலில் வரும்? அ, ஆ, எ
  109. மொழி இறுதியில் வரும் எழுத்துக்கள் யாவை? 12 உயிர் தனித்தோ மெய்யோடு கூடி உயிர் மெய்யாகவோ வரும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய், குற்றியலுகரம் [24]
  110. அளபெடையில் மட்டும் மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துக்கள் யாவை? அ, இ, உ, எ, ஒ
  111. எகரம் உயிராக மட்டுமே மொழி இறுதியில் வரும்,
  112. க், வ்- உடன் இணைந்து மட்டும் மொழி இறுதியில் வரும் எழுத்து எது? ஔ
  113. மெய்யெழுத்துக்கள் இணைந்து வருவது யாது? மெய் மயக்கம்
  114. மெய் மயக்கம்  எத்தணை வகைப்படும்? 2 [உடனிலை, வேற்று நிலை]
  115. உடனிலை மெய் மயக்கம் ஆகும் எழுத்துக்கள் யாவை? ர், ழ் தவிர்த்த 16 எழுத்துக்களும் தம்முடன் தாம் மயங்கும்
  116. வேற்றுநிலை மெய் மயக்கமாகா எழுத்துக்கள் யாவை? க், ச், த்,  ப் 
  117. ங் - க் - மயங்கும்
  118. வ் - ய் - மயங்கும்
  119. ஞ் - ச், ய் - மயங்கும்
  120. ந் - த், ய் - மயங்கும்
  121. ட், ற் - க், ச், ப் - மயங்கும்
  122. ண், ன் - க், ச், ஞ், ப், ம், ய், வ் - மயங்கும்
  123. ய்,ற்,ழ் - க், த், ந், ப், ம், ச், ஞ், ய், வ், ங் - மயங்கும்
  124. ல், ள் - க், ச், ப், வ், ய் - மயங்கும்
  125. ஈரொற்று நிலை என்றால் என்ன? தனி மெய்யுடன் தனி மெய் மயங்குவது [மெய் + மெய் + மெய்]
  126. ய்,ர்,ழ் - க், ச், த், ப், ங், ஞ், ந், ம் மயங்கும் [வேய்க்குறை, வேர்ச்சிறை]
  127. போலி என்பது யாது? போல இருப்பது போலி ஆகும்
  128. போலி எத்தனை வகைப்படும்? 3 [நன்னூல் கூற்று அல்ல]
  129. போலி வகைகள் யாவை? முதல், இடை, கடை
  130. மகரம் போலியாகும் போது எந்த எழுத்தாகத் திரியும்? ன்
  131. ம் - ன் ஆகத்திரியும் இடம் யாது? சொல்லின் இறுதியில்
  132. எத்தகு சொற்களில் மகர ஈறு ன் ஆகத் திரியும்? அஃறிணைப் பெயர்களில்
  133. நன்னூல் குறிக்காத போலிகள் சில : குற்றியலுகரம் சில நேரம் அர் பெற்று முடியும்  [சுரும்பு -சுரும்பர் ஆகும்] லகர ஈறு ரகர ஈறாக மாறும் [பந்தல் - பந்தர்] மொழி முதலிலும் போலி வரும் [பசல் - பைசல், மயல் - மையல்]
  134. மொழிக்கு இடையில் எங்கு போலி வரும்? ஐ, ய அடுத்து வரும் நகரம் ஞகரம் ஆகும் [மைந்நின்ற - மைஞ்ஞின்ற, செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற]
  135. அகரத்தோடு இகரம் அல்லது யகரம் சேரும் போது எப்படி ஒலிக்கும்? ஐ
  136. அகரத்தோடு உகரம், வகரம் சேரும் போது எப்படி ஒலிக்கும்? ஔ
  137. எழுத்துச் சாரியை என்பது யாது? எழுத்துக்களை உச்சரிக்க எழுத்தோடு சேர்த்து சொல்லும் சொல் சாரியை
  138. மெய்யெழுத்துக்களின் சாரியை யாது? கரம் [க் - ககரம்]
  139. நெட்டெழுத்தின் சாரியை யாது? காரம் [ஆ- ஆகாரம்]
  140. காரமும், கான் -உம்  பெறும் உயிர் எழுத்துக்கள் யாவை? ஐ, ஔ
  141. உயிர்க் குறிலுக்கான சாரியைகள் யாவை? கரம், கான்
  142. உயிர் மெய் பெறும் சாரியைகள் யாவை? கரம், காரம்,  கான்
  143. எழுத்துக்கள் இணைந்து சொல்லாக மாறினாலும் எழுத்து தன் இயல்பில் இருந்து மாறாது.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...