1) தொல்காப்பியர் குறிப்பிடும் [முதல்] எழுத்துக்கள் எத்தனை ?
30
2) முதல் எழுத்தை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ?
‘ எழுத்து
3) சார்பெழுத்துக்கள் எத்தனை என தொல்காப்பியர் கூறுகிறார் ?
3
4) தொல்காப்பியர் மொத்த எழுத்துக்களாகக் குறிப்பவை ?
33
5) சார்பெழுத்துக்கள் யாவை ?
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்
6) ஆய்தத்தை எவ்வாறு குறிக்கிறார்?
முப்பாற்புள்ளி
7) சார்பெழுத்தை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார்?
எழுத்தோரன்ன (எழுத்தைப் போன்றது)
8) குறில் எழுத்தைத் தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ?
குற்றெழுத்து
9) குற்றெழுத்துக்கள் எத்தனை ?
5 (அ, இ, உ, எ, ஒ)
10) குற்றெழுத்தின் மாத்திரை எத்தனை ?
ஓரளபு [1 மாத்திரை]
11) தொல்காப்பியர் மாத்திரையை எவ்வாறு குறிக்கிறார் ?
அளபு
12) நெடில் எழுத்துக்களை எவ்வாறு அழைக்கின்றார் ?
நெட்டெழுத்து
13) நெட்டெழுத்துக்கள் எத்தனை ?
7 (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)
14) நெட்டெழுத்தின் மாத்திரை அளவு ?
ஈரளபு
15) 3 மாத்திரை கொண்ட ஓரெழுத்து இல்லை என தொல்காப்பியர் கூறுகிறார்.
16) இரண்டிற்கும் மேல் கூட்டி ஒலிக்க விரும்பினால் என்ன செய்யக் கூறுகிறார் தொல்காப்பியர் ?
கூடுதலாக கூட்டி எழுத வேண்டும்.
17) ஒரு மாத்திரை அளவு யாது ?
கண் இமை, நொடி
18) அ - ஔ வரை உள்ள 12 எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
உயிர்
19) மெய்யெழுத்துக்கள் எத்தனை ?
18
20) உயிர் மெய்யோடு இயைகையில் நிகழ்வது ?
உயிர் தன் இயல்பினின்று திரியாது
21) மெய்யெழுத்தின் அளவு யாது ?
அரை மாத்திரை
22) அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே ஏனை 3 என்பது யாது ?
சார்பெழுத்துக்கள் (குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்)
23) தொல்காப்பியம் கூறும் சார்பெழுத்தின் அளவு யாது ?
½ மாத்திரை
24) அரை அளவை விடக் குறைந்த அளவுடைய எழுத்து எது ?
மகர மெய்
25) மகர மெய் எச்சூழலில் அளவு குறைந்து ஒலிக்கும் ?
செய்யுளில் ஓசை குறைந்து வரும் ஒலி நெருக்கடியில்.
26) தொல்காப்பியர் இசையிடன் அருகும் எனக் குறிப்பது ?
ஓசை கருதி வரும் இச்சூழல் [ஓசை குறைந்து வருகையில் நிறைவிக்க]
27) மகரம் குறுகுகையில் - அது எவ்வாறு எழுதப்படும் என தொல்காப்பியா; கூறுகிறார் உட்பெறு புள்ளி உருவாகும்’’
(மகரத்திற்குள் ஒரு மெய் எழுதப்படும் - பழைய கால மரபு)
28) மெய்யெழுத்தின் இயற்கை எனத் தொல்காப்பியர் கூறுவது ?
புள்ளியொடு நிலையில் (புள்ளி பெற்று வருதல்)
29) தொல்காப்பியம் குறிப்பிடும் புள்ளி பெற்று வரும் மெய் அல்லாத எழுத்துக்கள் யாவை ?
எ, ஒ (பழங்கால வழக்கு)
30) உயிர் மெய்யின் ஒலிப்பு எவ்வாறு அமையும் ?
மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னும் வரும்
31) வல்லெழுத்து என்பது - கசடதபற (6)
32) மெல்லெழுத்து என்பது - ஙஞணநமன (6)
33) இடையெழுத்து என்பது - யரலவழள (6)
34) மெய்மயக்கம் எத்தனை வகைப்படும் ?
2 (உடனிலை மெய் மயக்கம், வேற்று நிலை மெய்மயக்கம்)
35) உடனிலை மெய் மயக்கம் என்பது ?
ஒரே மெய் அடுத்தடுத்து வருவது (கண்ணம்)
36) உடனிலை மெய் மயக்க வேறு பெயர் ?
ஓரொற்று உடனிலை
37) நிலை மெய்மயக்கம் என்பது ?
இரு வேறு மெய் இணைந்து வருவது (சான்று)
38) ட, ற, ல, ள எவற்றுடன் மயங்குபவை ?
க, ச, ப
39) ல, ள உடன் மயங்குபவை யாவை ?
ய,வ
40) மெல்லெழுத்துக்களோடு மயங்கும் எழுத்துக்கள் யாவை ?
அவற்றோடு ஒத்த இன எழுத்துக்களாம் வல்லெழுத்துக்கள்
41) ண, ன முன் மயங்கும் எழுத்துக்கள் ?
க,ச,ஞ,ப,ம,ய,வ (7)
42) ஞ,ந,ம,வ உடன் இணையும் மெய் ?
ய்
43) மகர மெய்யோடு மயங்கும் எழுத்து யாது ?
வ்
44) ய,ர,ழ உடன் இணையும் எழுத்துக்கள் யாவை? மொழி முதலாகும் எழுத்துக்கள், ங்
45) தம்முடன் தாம் இணையா எழுத்துக்கள் யாவை ?
ர, ழ
46) சுட்டெழுத்துக்கள் எத்தனை ?
3 (அ, இ, உ)
47) வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள் எத்தனை ?
3 (ஆ, ஏ, ஓ)
48) அளபெடையைத் தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் ?
அளபறிந்து உயிர்த்தல், ஒற்றிசை நீடல்
49) உயிரும் ஒற்றும் எதன் பொருட்டு அளபெடுக்கும் ?
இசையின் பொருட்டு
50) இசையுடன் சிவனிய நரம்பின் மறைய எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது ?
இசைக்கலை நூல்கள்
45 வது வினா ர ழ வராதா அம்மா
பதிலளிநீக்குTnq ma
பதிலளிநீக்கு