1) மகரத்தை அடுத்து யகரம் வர நிகழ்வது ?
குற்றியலிகரம்
2) தனி சொல்லில் மட்டுமன்றி இரு சொற்கள் இணைகையில் உகரத்தை ஊர்ந்து ‘ய’ வர குற்றியலிகரம் ஆகும்.
3) தனி நெட்டெழுத்து, தொடர் மொழியை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்து வரும் உகரம் எவ்வாறு ஒலிக்கும் ?
குற்றியலுகரம்
4) தொடர் மொழியிலும் இடையில் வரும் உகரம் குறுகி ஒலிக்கும்
5) ஒருமொழி ஆய்தம் எவ்வாறு வரும்?
குறியின் பின்னும் உயிர் மெய்யின் பின்னும் வரும்
6) ஒருமொழி ஆய்தத்திற்குச் சான்று ?
அஃது
7) புணர் மொழி ஆய்தத்திற்குச் சான்று ?
அல் + திணை - அஃறிணை
8) மொழிக் குறிப்பு அல்லது குறிப்பு மொழி ஆய்தம் என்பது ?
ஒலிக் குறிப்பால் பொருள் தரும் மொழி
9) மொழிக் குறிப்பு ஆய்தம் எங்கு வரும் ?
நிறம், ஓசையைக் குறிக்கும் சூழலில்
10) நிறத்தால் வரும் குறிப்பு மொழி ஆய்தத்திற்குச் சான்று ?
கஃறென்னும் கல்லதர
11) ஓசையால் வரும் குறிப்பு மொழி ஆய்தத்திற்குச் சான்று ?
கஃறென்னும் தண்தோட்டுப் பெண்ணை
12) உயிரளபெடையில் நெட்டெழுத்து எவ்வாறு அமையும் ?
தன் இன எழுத்தோடு சேர்த்து எழுதப்படும்.
13) ஐ,ஔ அளபெடுக்கையில் இசை நிறைவிட்டவை யாவை ?
இ,உ (ஐ-இ, ஔ-உ)
14) ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் எழுத்துக்கள் யாவை ?
நெட்டெழுத்து ஏழு
15) ‘‘குற்றெழுத்தைந்தும் மொழி நிறைபிலயே’’ - ‘மொழி நிறைவு’ என்பது தனிமொழி [சொல்]
16) தனிமொழியாகும் குறில் எழுத்துக்கள் ?
(நொ - நொந்து போ, து-உண்ணுதல்)
17) மொழி வகைகளாகத் தொல்காப்பியர் குறிப்பது ?
3(ஓரெழுத்து ஒரு மொழி, ஈரெழுத்து ஒரு மொழி, தொடர் மொழி)
18) தனி மெய் எவ்வாறு ஒலிக்கப்படும் ?
அகரத்தோடு இணைத்து (க்-ககரம்)
19) ய,ர,ழ உடன் இணையும் எவை ஈரொற்றாகும்?
க,ச,த,ப,ங,ஞ,ந,ம
20) எவை ஈரொற்றாகா ?
தனிக்குறிலை அடுத்து வரும் ர,ழ ஈரொற்று ஆகாது (இரு குறிலை அடுத்து வரும்)
21) ன்,ம் எங்கு ஈரொற்றாகும் ?
போலும் - போன்ம் என்றாகும் போது
22) மகரம் எங்கு குறுகும் ஈரொற்றாக னகரத்தை அடுத்து வரும் ம குறுகும்
(போன்ம் என்பதில்)
23) அகரம் இகரம் சேர்ந்து வந்தால் எதனை ஒத்திசைக்கும்?
ஐ
24) அ,உ இணைய எத்தகு ஒலி பெற்றிசைக்கும் ?
ஔ
25) அகரத்தை அடுத்து யகர ஒற்று வர எவ்வாறு ஒலிக்கும் (அய்) ?
ஐ
26) குறுகி ஒலிக்கும் உயிர்கள் யாவை ?
ஐ, ஔ
27) மொழி முதலில் வரும் உயிர்கள் யாவை ?
12 உயிரும் மொழி முதலாகும்
28) எவை மொழி முதலாகா மெய் எழுத்துக்கள்? உயிர்மெய் அல்லன
29) எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதலாக வரும் மெய்கள் யாவை ?
க,த,ந,ப,ம
30) சகர மெய் எவற்றோடு இணைந்து மொழி முதலாகா ?
அ,ஐ,ஔ
31) வகர மெய் எவற்றோடு இணைந்து மொழி முதலாகா ?
உ,ஊ,ஒ,ஓ
32) நகர மெய் எவற்றுடன் இணைந்து மொழி முதலாகும் ?
ஆ,எ,ஒ
33) யகர மெய் எந்த உயிருடன் இணைந்து மொழி முதலாகும் ?
ஆ
34) எந்த மெல்லெழுத்தோடு இணையும் உகரம் குற்றியலுகரம் ஆகும் ?
நகரம் (ந்) [நுந்தை]
35) ஒரே சொல் குற்றியலுகரமாகவும் முற்றியலுகரமாகவும் வரும் போது நிகழ்வது யாது?
பொருள் மாறுபடும் கட்டு என்பது தனித்து வரும்போது முற்றியலுகரம். அது ஒரு பொருளை இணைத்துக் கட்டு என்னும் ஏவல் பொருளில் வரும். அதுவே ‘கட்டு உள்ளது’ என்னும் பொது குற்றியலுகரம். அது பொருள்கள் இணைத்துக் கட்டப்பட்ட கட்டு எனும் பொருளில் வரும்.
36) மொழி இறுதியில் வாரா உயிர் எழுத்து யாது ?
ஔ
37) மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துக்கள் எத்தனை ?
11
38) ஔ மொழி இறுதியில் வரும் இடம் யாது ?
க்,வ் உடன் இணைந்து (ஏவல்) பொருளில் வரும் பொழுது (கௌவு, வௌவு, கௌ, வௌ என ஏவல் பொருளில் வருகையில்.
39) எ எப்போது மொழி இறுதியில் வரும் ?
அளபெடையில் மட்டும் வரும்
40) ஒகரம் எதனோடு இணைந்து மொழி இறுதியில் வரும் ?
நகர மெய்யுடன்
41) ஞகரத்துடன் கூடிய எவ்வுயிர்கள் மொழி வாராது ?
ஒ, ஓ
42) சகரத்துடன் இணைந்த உகரம் மொழி இறுதியில் வரும் இடங்கள் யாவை ?
உசு, முசு (பசுவிற்கால சொல்)
43) பகரத்தோடு இணைந்த உகரம் மொழி இறுதியில் வரும் இடங்கள் ?
தபு
44) தன் வினை பிற வினை இரண்டு பொருளும் தரும் ஒரே சொல் எது ?
தபு (தன்னை அழி, பிறரை அழியச் செய்)
45) ஞகரம் எங்கு மொழி இறுதியாகும் ?
உரிஞ் (உரிஞ்சுதல்) என்ற
46) வகர ஒற்று எங்கு மொழி இறுதியாகும் ?
அவ், இவ், உவ் என்னும் சுட்டுக்கள், தெவ் (பகை)
47) மொழி, இறுதி மகரம் னகரமாவது எவ்வாறு சுட்டப்படும் ?
போலி
48) னகரம் மகரமாய் மாறா போலி சொற்கள் எத்தனை ?
9
49) மொழி இறுதியில் மகரம் னகரமாகும் சொற்கள் யாவை ?
அறன், மறன்
50) னகரம் மகரமாய் மாறாத சொற்கள் யாவை ?
பயின், அழன், குயின், செகின், விழின், புழன், வயான், கடான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக