இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 அக்டோபர், 2020

எச்சவியல்

  1. செய்யுள் ஈட்டச்சொற்கள் எத்தனை?                                                                                  4 [இயற் சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல்] 
  2. இயற்சொல் என்பது யாது?                                                                                    செந்தமிழ் நிலத்தில் பேசப்படும் வழக்கில் இருந்து வழாமல் இருப்பது.
  3. திரிசொல் எத்தனை வகைப்படும்?                                                                                         ஒரு பொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல்
  4. திசைச்சொல் என்றால் என்ன?                                                                                           செந்தமிழ் பேசும் பன்னிரு வகை நிலப்பிரிவுகளிலிருந்து வந்து வழங்கும் சொற்கள்.
  5. வட சொல் என்றால்  என்ன?                                                                                  வடநிலத்தில் இருந்து வந்து, தமிழ் நிலத்தில் வழங்கும் சொற்கள் வட சொற்கள்
  6. செய்யுள் விகாரம் எத்தனை வகைப்படும்?                                                                      4 [வலித்தல், மெலித்தல், விரித்தல், தொகுத்தல்]
  7. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?                                                              தொல்காப்பியம் 4, நன்னூல் - 8, நேமிநாதம் - 9 [நன்னூல் கூறும் 8 - ஆற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, பூட்டு வில் [விற்பூண்], தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு, அடிமறிமாற்று] 
  8. நிரல்னிறை பொருள்கோளின் வகைகள் யாவை?                        நேர்நிரல்நிறை, எதிர்நிரல்நிறை
  9. தொகைவகைகள் யாவை?                                                                                            ஆறு [வேற்றுமைத் தொகை, உவமத்தொகை, வினைத்தொகை,            பண்புத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை]
  10. வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல
  11. உவமத்தொகையே உவம இயல.
  12. வினையின் தொகுதி காலத்து இயலும்
  13. பண்புகள் எத்தனை வகைப்படும்? வண்ணம், வடிவம், அளவு, சுவை
  14. உம்மைப் பொருந்தி வரும் இடங்கள் யாவை?                                                      இரு பெயர்கள், பல பெயர்கள், முகத்தல் அளவுப் பெயர்கள், எண்ணுப் பெயர், நிறுத்தலளவைப் பெயர்கள், எண்ணுப்பெயர்கள் எண்ணும்  ஆறு வகை இடங்கள் உம் பொருந்தி வரும் இடங்கள்
  15. எச்ச சொற்கள் எத்தனை வகைப்படும்?                                                               பத்து வகைப்படும் [பிரிநிலை எச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசை எச்சம், எதிர்மறை எச்சம், உம்மை எச்சம், என என்னும் எச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம்]
  16. இரத்தல் பொருளில் வரும் சொற்கள் யாவை?                                                            ஈ, தா, கொடு [ஈ-இழிந்தோன் கூறுதற்கு உரிய கூற்று, தா-ஒத்தவர் கூற்றுக்கு உரியது, கொடு- உயர்ந்தோருக்கு உரியது]
  17. இலக்கணம் வரையறுக்கப்படாத சொற்கள் யாவை?                                     பெயர் நிலைக் கிளவி, திசைநிலைக் கிளவி, தொன்னெறி மொழி, மெய்நிலை மயக்கம், மந்திரப்பொருள்
  18. கடிசொல் இல்லைக் காலத்துப் படினே
  19. இடைசொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே











வியாழன், 29 அக்டோபர், 2020

இடைச்சொல்

 1. இடைச்சொல்லின் இயல்பு யாது? 

            பெயரோடும், வினையோடும் இணைந்து இயங்கும் [நடைபெற்றியலும்] 

            இயல்புடையது. தமக்கென இயல்பற்றது [தமக்கியல்பிலது].

2. இடைச்சொல் சொல்லில் எங்கு வரும்?

            சொல்லின் இடையில், முன்னில், பின்னால் வரும்.

3. மன் உணர்த்தும் பொருள்:

            கழிவு, ஆக்கம், ஒழியிசை [3]

4. தில் உணர்த்தும் பொருள்:

        விழைவு, காலம், ஒழியிசை [3]         

5. கொன் உணர்த்தும் பொருள்:

        அச்சம், பயன் இன்மை, காலம், பெருமை [5]

6. உம் உணர்த்தும் பொருள்:

        எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் [8]

7. ஓ உணர்த்தும் பொருள்:

        பிரினிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு [6]

8. ஏ உணர்த்தும் பொருள்:

        தேற்றம் [தெளிவு], வினா, பிரிநிலை, எண், ஈற்றசை [5]

9. என உணர்த்தும் பொருள்:

        வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் [6]

10. என்று உணர்த்தும் பொருள்:

        வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் [6]

11. தில் உணர்த்தும் பொருள்:

        விழைவு [தன்மைப் பொருளில் மட்டும் வரும்], காலம், ஒழியிசை

12. அளபெடுத்தல் ஓசையுடைய ஏ பொருள்:

        சிறப்பு

13. அளபெடுத்தல் ஓசையுடைய ஓ பொருள்:

        மிகுதி

14. மற்று இடைச்சொல் உணர்த்தும் பொருள்:

        வினைமாற்று, அசைநிலை

15. எற்று உணர்த்தும் பொருள்:

         கழிந்ததை உணர்த்தும்

16. மற்றையது உணர்த்தும் பொருள்:

        முன் குறித்தது ஒழிய  அதன் இனமான மற்றொன்றைக் குறிப்பது.

17. மன்ற உணர்த்தும் பொருள்:

        தெளிவு [உறுதி]

18. தஞ்சம் உணர்த்தும் பொருள்:

        எளிது [எளிமை]

19. அந்தில் உணர்த்தும் பொருள்:

        அங்கு என்னும் பொருளிலும், அசைநிலையாகவும் வரும்

20. கொல் உணர்த்தும் பொருள்:

        ஐயப்பொருள்

21. எல் உணர்த்தும் பொருள்:

        விளக்கம்

22. ஆர் உணர்த்தும் பொருள்:

        பலர்பால் இறுதிநிலை [விகுதி], அசைநிலை

23. ஏ, குறை உணர்த்தும் பொருள்:

        இசைநிறை, அசைநிலை

24. மா உணர்த்தும் பொருள்:

        வியங்கோளில்  அசையாக வரும்.

25. முன்னிலை அசைச்சொற்கள் யாவை?

        மியா, இக, மோ, மதி, இகும்,  இசின் [இகும், இசின் முன்னிலையில்                             மடுமின்றி ஏனைய தன்மை, படர்க்கை இடச்சொற்களிலும் வரும்]

26. அம்ம பொருள்:    படர்க்கையோரைத் தன்முகமாக்கித் தான் சொல்வதைக் 

        கேட்கச் செய்வது. 

27. ஆங்கு உணர்த்தும் பொருள்:    உரையாடலில் உரையசை

28. போலி உணர்த்தும் பொருள்: ஒப்புமை இன்றி வரும் போலும் உரையசை

29. அசைநிலைச் சொற்கள் : யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது [7]

28. பிரிவில் அசைநிலைகள் : ஆக, ஆகல், என்பது, அளபெடை ஔ

29. ஏ, ஓ எங்குக் குறிப்புப் பொருள் தரும்: ஏ - நன்று, அன்று உடன் இணைந்து,             ஓ - அந்து, அன் உடன் இணைந்து குறிப்புப் பொருள் உணர்த்தும்.

30. எச்ச உம்மைக்கு உரிய சொல் உம் இல்லாமல் எழுதப்படுவது செஞ்சொல் ஆகும். [மாவும், பலாவும், வாழையும் என்றின்றி மா, பலா, வாழை என வருவது செஞ்சொல் கிளவி ஆகும்.

31. உம், என என்னும் எண்ணிடக் சொற்கள் இறுதியில் தொகைச்சொல் பெற்றோ, பெறாமலோ வரலாம்.

32. எண்ணிக்கையைக் குறிக்கும் ஏகார இடைச்சொல் இறுதியில் மட்டும் வந்தாலும் ஏற்க உரியதே. [நிலமே, பொழுதே -வ்எனவும் வரலாம்.  அவ்வாறின்றி நிலம், பொழுதே எனவும் வாரலாம்]

33. எனா, என்றா எவ்வாறு வரும்?

    எனவும் - எனா, என்று - என்றா ஆகும். இவை தொகுத்துச் சொல்லும் எண்ணிக்கையின் இறுதியில் மட்டுமே வரும்.

34. எண்ணிக்கை இறுதியில் தொகை பெற்றும், பெறாமலும் வருவதற்கு உரிய இடைச்சொற்கள் யாவை? எனா, என்றா, செவ்வெண், ஏ [அறம் பொருள் இன்பம் - என்றும் வரலாம், அறம் , பொருள், இன்பம் மூன்றும் எனத் தொகுத்தும் வரலாம்.

35. உம் சில இடங்களில் தொக்கி வரும். சில இடங்களில் உந்து ஆகும்.

36. எண்ணிக்கையை அடுக்கிச்சொல்லும் தொடரில் என்று, என, ஒடு  சில இடங்களில் எல்லாப்பொருளோடும் வாராம்ல் தொக்கி வருவதுண்டு. [அன்பொடு, அருளொடு, அறனொடு எனவும்  வரலாம். அன்பு, அருள், அறனொடு எனவும் வரலாம்]

        












உரியியல்

  1. உரிச்சொல் எவற்றின் அடிப்படையில் தோன்றும்?                                                     இசை, குறிப்பு, பண்பு
  2. உரிச்சொல் எவற்றிற்கு உரியதாய் அமையும்?                                                     பெயர், வினை
  3. உரிச்சொல் எவ்வாறு பொருள் வழங்கும்?                                                      ஒருசொல் பலபொருட்கு உரியவை, பலசொல் ஒருபொருட்கு உரியவை
  4. உரிசொல் வகைகள் யாவை?                                                                            வெளிப்படு சொல், வெளிப்பட வராத சொல்
  5. தொல்காப்பிய உரியியல் பேசும் உரிச்சொல் வகை யாது?                          வெளிப்பட வராத உரி சொல் 
  6. மிகுதிப் பொருளுடைய உரிச்சொற்கள் யாவை?                                                          உறு, தவ, நனி
  7. உரு என்னென்னப் பொருளில் வரும்?                                                                                     உட்கு, அச்சம்
  8. புரை என்னப் பொருள் உடைய உரிச்சொல்?                                                                    உயர்வு
  9. நிறப்பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                                 குரு, கெழு 
  10. இன்னாமை உரிச்சொற் எப்பொருளில் வரும் ?                                                செல்லல், இன்னல்
  11. வளம் உணர்த்தும் உரிச்சொல் யாது?                                                                     மல்லல்
  12. ஏ உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாவை?                                                           பெற்று, பெருக்கம்
  13. உகப்பு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்கள் யாவை?               உயர்வு, மேன்மேல் உயர்தல்
  14. உவப்பு என்னும் உணர்த்தும் பொருட்கள் யாவை?                                           உவகை, மகிழ்ச்சி
  15. பயப்பு உணர்த்து  பொருள் யாவை?                                                                          பயம், பயன்
  16. பசப்பு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                             நிறம் [பசலை நிறம், பிரிவால் ஏற்படும் ஒளி குறைந்தத் தோற்றம்]
  17. இயைபு உணர்த்தும் பொருள் யாது?                                                                   புணர்ச்சி [கூடுதல், ஒருங்கிணைத்தல்]
  18. இசைப்பு உணர்த்தும் பொருள் யாது?                                                        இசைத்தல் [யாழ் இசைத்தல்]
  19. சுழற்சிப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                                 அலமரல், தெருமரல்
  20. இளமைப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                          மழ, குழ
  21. சீர்த்தி உணர்த்தும் உரிச்சொற்கள் யாவை?                                              மிகுபுகழ்
  22. சிறத்தல் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                   கூர்ப்பு [கூர்], கழிவு [கழி] 
  23. விரைவுப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                        கதழ்வு, துனைவு
  24. நடுக்கப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?                                                 அதிர்வு, விதிர்ப்பு
  25. நேர்பு [நேர்மை, நேரான]பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை?      [வார்] வார்தல், [போகு] போகல், [ஒழுங்கு] ஒழுகல்
  26. தீர்தல், தீர்த்தல் எனும் உரிச்சொற்கள் உணர்த்தும் பொருட்கள் யாவை?  விடுதல், நீங்குதல், நீக்குதல், பிரிதல்
  27. மகிழ்ச்சியான விளையாட்டைக் குறிக்கும் உரிச்சொற்கள் யாவை?  கெடவரல், பண்ணை
  28. பெருமை மற்றும் பெரிது என்னும் பொருளை உணர்த்தும் உரிச்சொற்கள் யாவை? தட, கய, நளி
  29. தட என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாவை?                        கோட்டம், வளைவு
  30. கய உணர்த்தும் பொருள் யாது?                                                                        மென்மை
  31. நளி உணர்த்து பொருள் யாது?                                                                                 செறிவு
  32. பழுது உணர்த்தும் பொருள் யாது?                                                                       பயமின்று [பயனில்லை]
  33.  சாயல் உணர்த்தும் பொருள் யாது?                                                                       மென்மை
  34. முழுது என்னும் உரிச்சொல் குறிக்கும் பொருள்?                                           எஞ்சாமை [முழுமை]
  35. வம்பு என்னும் உரிச்சொல் குறிக்கும் பொருள்?                                           நிலையின்மை
  36. மாதர் எனும் உரிச்சொலின் பொருள் என்ன?                                                    காதல்
  37. விருப்பத்தைக் குறிக்கும் உரிப்பொருள் யாது?                                                 நம்பு, மேவு
  38. உள்ளதன் நுணுக்கம் என்பதைக் குறிக்கு உரிச்சொல் யாது?                ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்
  39. தனிமையை உணர்த்தும் உரிப்பொருள் யாது?                                                    புலம்பு
  40. நிறைவுப்  பொருளில் உள்ள உரிப்பொருள் யாது?                                       துவன்று
  41. முதிர்வுப் பொருளில் உள்ள உரிப்பொருள் யாது?                                          முரஞ்சல்
  42. வெம்மை என்னும் உரிப்பொருள் விளக்கும் பொருள் யாது?                         வேண்டல், விரும்புதல்
  43. பொற்பு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                    பொலிவு, அழகு
  44. வறிது என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                  சிறிது
  45. ஏற்றம் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                         நினைவு, துணிவு
  46. பெட்புப் பொருளுக்கான உரிச்சொல் யாது?                                                  பிணை, பேண் [பெட்பு என்பது பாதுகாத்தல், விரும்புதல், புறந்தருதல்]
  47. பணை என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                            பிழை, பெரிது
  48. படர் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                       நினைத்தல் [உள்ளல்], செல்லுதல்
  49. பையுள், சிறுமை எனும் உரிச்சொல்லின் பொருள் யாது?                           நோய், துன்பம்
  50. எய்யாமை உரிச்சொல்லின் பொருள் யாது?                                                      அறியாமை
  51. நன்று உணர்த்தும் பொருள்?                                                                                        நன்று
  52. தா என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                                 வலிமை, வருத்தம்
  53. தெவு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                                   கொள்ளுதல்
  54. தெவ்வு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                          பகைமை [தெவ்வர் - பகைவர்]
  55.  செறிவுப் பொருள் உணர்த்தும் உரிப்பொருள் யாது?                                      விறப்ப், உறப்பு, வெறிப்பு
  56. விறப்பு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                           அச்சம் [வெரூஉ]
  57. அரவம் [ஆரவாரம், பேரோசை] பொருளிலான உரிச்சொற்கள் யாவை?      கம்பலை, சும்மை, கலி, அழுங்கல்
  58. அழுங்கல் உணர்த்தும் பொருள் யாது?                                                                 அரவம், இரக்கம், கேடு             
  59. மயக்கம் பொருளில் வரும்  உரிச்சொல் யாது?                                                கழுமு
  60. செழுமை எனும் உரிப்பொருள் உணர்த்தும் பொருள் யாது ?                     வளம், கொழுப்பு
  61. விழுமம் உரிப்பொருள் உணர்த்து பொருள்?                                                     சீர்மை, சிறப்பு, இடும்பை
  62. கருவி உரிப்பொருளின் பொருள் யாது?                                                                    தொகுதி
  63. கமம் உரிப்பொருளின் பொருள் யாது?                                                             நிறைவு
  64. அரி என்னும் உரிப்பொருளின் பொருள் யாது?                                             ஐம்மை, நொய்ம்மை, மென்மை
  65. கவவு என்னும் உரிப்பொருள் உணர்த்தும் பொருட்கள் யாவை?                   அகத்திடுதல், தழுவுதல்
  66. இசைத்தல்  பொருளிலான உரிப்பொருள் யாது?                                                           துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல்
  67. கழிந்த பொருளைக் குறிக்கும் உரிப்பொருள் யாது?                                   இரங்கல்
  68. வறுமை என்னும் பொருள் உணர்த்தும் உரிச்சொல் யாது?                      இலம்பாடு, ஒற்கம்
  69. பரத்தல் [பரப்புதல்] பொருளிலான உரிச்சொல் யாது?                                   ஞெமிர்தல், பாய்தல்
  70. கவர்வு உரிச்சொல்லின் பொருள் யாது?                                                            விருப்பு
  71. சேர் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                                    திரட்சி
  72. அகலப் பொருளில் வரும் உரிச்சொல் யாது?                                                   வியல் 
  73. அச்சப்பொருளில் வரும் உரிச்சொல் யாது?                                                         பேம், நாம், உரும்
  74. வய என்னு உரிச்சொல்லின் பொருள் யாது?                                                   வலிமை
  75.  ஒளி என்னும் பொருளிலான உரிச்சொல் யாது?                                                  வாள்  
  76. அறிவின் திரிபை உணர்த்தும் உரிச்சொல் யாது?                                             துயவு
  77. உயா என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்?                                         உயங்கல்  [வருந்துதல், துயரப்படுதல்]
  78. சூழ்ச்சி [சூழுதல்]ப் பொருளிலான உரிச்சொல் யாது?                                                           உசா           
  79. வேட்கைப் பெருக்கப் பொருளிலான உரிச்சொல் யாது?                                  வயா
  80. வெகுளி என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                          கறுப்பு, சிவப்பு
  81. நிறவேறுபாட்டை உணர்த்தும் உரிச்சொல் யாது?                                             கறுப்பு, சிவப்பு
  82. நுண்மை [நுணுக்கமான அறிவு] என்னும் பொருளின் உரிச்சொல் யாவை?    நொசிவு, நுழைவு, நுணங்கு
  83.  குழந்தை ஈணுவதைக் குறிக்கும் உரிச்சொல் யாது?                                      புனிறு
  84. நனவு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                                களன், அகலம்
  85. மதவு, மத என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                            மதன், வலிமை
  86. மத என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                  மிகுதி, வனப்பு
  87. யாணர் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                புது வரவு
  88. அமர்தல் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                     மேவல் [விருப்பம்]
  89. யாண் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                கவின் [அழகு]
  90. வாழ்த்தல், வழிபடுதல் பொருளிலான உரிச்சொல் யாது?                                பரவுதல், பழிச்சுதல்
  91. கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது?                                 வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், தெய்வத்தின் முன் சத்தியம் செய்தல் [முன் தேற்று]
  92. கடி என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                   ஐயம், கரிப்பு
  93. ஐ என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                    வியப்பு 
  94. முனைவு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                       முனிதல் [சினத்தல், வெறுத்தல்]
  95. வை என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                                 கூர்மை
  96. எறுள் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது?                                             வலிமை
  97. உரிச்சொல்லுக்கு எவ்வாறு பொருளுணர வேண்டும்?                                 அதற்கு முன்னும் பின்னும் உள்ள சொற்களோடு தொடர்புப்படுத்திப் பொருளறிய வேண்டும் .                                                                                                         
  98. ஒரு உரிச்சொல்லின் பொருளுக்குப் பொருள் தேடினால் அது வரம்பின்றிப் போகும். [பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே]
  99. உரிப்பொருளுக்கான பொருளை அறிவது உணர்வோரின் உணர்ச்சி, அறிவு, சார்ந்தது [உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே]
  100. உரிச்சொல்லில் எழுத்துப் பிரிந்து வராது                                                              [எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல்பன்றே]









  1.  

புதன், 28 அக்டோபர், 2020

வினையியல்

 1. வினையெனப்படுவது எவ்வாறு வரும்?

    வேற்றுமை ஏற்காது, காலம் காட்டும்.

2. காலம் எத்தனை வகைப்படும்? 3

3. முக்காலங்கள் யாவை? இறப்பு, நிகழ்வு, எதிர்வு

4. வினைச்சொற்கள் எப்படி காலம் காட்டும்? 

    வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காலம் காட்டும்.

5. சொற்கள் பொருளுணர்த்தும் விதத்தில் எத்தனை வகைப்படும்?

    2 [தெரிநிலை, குறிப்பு]

6. தெரிநிலை  வினையைத் தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

     வினை

7. குறிப்பு வினையைத் தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பார்?

    குறிப்பு

8. தெரிநிலை  வினையாவது யாது?

     கர்த்தா, கருவி, நிலம், செயல்,  காலம், செய்பொருள் ஆறும் வெளிப்படக்

    காட்டுவது. [சென்றான், உழுதான், உண்டான்]

9. குறிப்பு வினையாவது யாது?

    வினைமுதலாகிய கர்த்தாவை மட்டும் வெளிப்படையாகக் காட்டுவது.

    [குழையினன்,பொன்னினன்]

10. வினைச்சொல் - 'அம்மூவுருபினத் தோன்றலாறே' - மூவுரு யாவை?

    உயர்திணைக்கு உரியவை, அஃறிணைக்கு உரியவை, பொதுவானவை [வினைச்சொல் வகைகளாகத் தொல்காப்பியர் குறிப்பவை]

11. தன்மைப் பன்மைக்கான வினைமுற்று விகுதிகள்

    அம் - உண்டனம்

    ஆம் -உண்டாம்

    எம் -உண்டனெம்

    ஏம் - உண்டேம்

    கும் -உண்கும்

    டும் - உண்டும்

    தும் - வருதும்

    றும் - சேறும்

12. தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் 

    கு - உண்கு

    டு - உண்டு

    து - வருது

    று - சேறு

    என் - காண்பென்

    ஏன் - காண்பேன்

    அல் - காண்பல்

  13. உயர்திணை படர்க்கை ஒருமை  வினைமுற்று விகுதிகள்

    அன் - வந்தனன்

    ஆன் - வந்தான்

    அள் - வந்தனள்

    ஆள்- வந்தாள்

14. உயர்திணை படர்க்கை பன்மை வினைமுற்று விகுதிகள்

    அர் - வந்தனர்

    ஆர் - வந்தார்

             - வருப

    மார்  - கொண்மார்

15. உயர்திணை வினைமுற்று விகுதிகள் [ஈறுகள்] எத்தனை?

    23

16. யார் என்னும் வினாச்சொல் எப்பாலுக்கு உரியது?  

    உயர்திணையின் முப்பாற்கும் உரியது

17. செய்யுளில் திரியும் தன்மை ஈறுகள் யாவை?

    ஆகார ஈற்றயல் சொற்களாம் ஆன், ஆள். ஆர் - உள்ள ஆ - ஓ ஆகும்.

    [வந்தான் - வந்தோன், வந்தாள் - வந்தோள், வந்தார் - வந்தோர்]

18.  செய்யுளில் திரியும் முன்னிலை ஈறு யாது?

    ஆய் -  இல் உள்ள ஈற்றயலாம் ஆ - ஓ என்றாகும். [வந்தாய் - வந்தோய்]

வினைமுற்று விகுதிகள் 


படர்க்கை - ஆண்பால்             -       அன், ஆன் 

படர்க்கை - பெண்பால்             -       அள் , ஆள் 

படர்க்கை - பலர் பால்                     -       அர் , ஆர் , ப, மார் 

படர்க்கை - ஒன்றன்பால்              -      கு, டு , து, று  

படர்க்கை - பலவின்பால்         -       அ, ஆ  [ஆ- எதிர்மறை ]

ஒருமை - தன்மை.                             -    கு, டு , து, று , அ ல், அன் 

பன்மை - தன்மை                             -    அம், ஆம்,  எம், ஏம், உம்,   கு, டு , து, று 

ஒருமை - முன்னிலை                       - ஐ, ஆய், இ, ஈ, ஏ

பன்மை - முன்னிலை                       -     இர், ஈ 

வியங்கோள்                                            - க, ய, ர 

19. அஃறிணை படர்க்கை பலவின் பால் வினை முற்று விகுதிகள் யாவை?

    அ    -    பறந்தன

    ஆ     -    வாரா [எதிர்மறை]

    வ    -    வருவ, செல்வ

20. படர்க்கை ஒன்றன்பால் வினை முற்று விகுதிகள் யாவை?

    து    -    வந்தது, சென்றது

    று    -    வந்தன்று

    டு    -    குறுந்தாட்டு [குட்டையான கால் உடையது]

21. அஃறிணை குறிப்பு வினைகள் யாவை?

        இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, பண்பை உணர்த்தும் சொல்,         உள என்னும் சொல், பண்பை அடுத்த சினையை அடையாகக்   கொண்ட             முதற்பொருள், ஒப்புமை குறித்து வரும் சொல், அன்னது,  அனையது,                        போன்றது,  அன்ன, போல்வன ஆகிய 10 வினைகள் அஃறிணை  குறிப்பு                 வினைகள்.

21. விரவுதிணை வினைகள் யாவை?

    முன்னிலை, வியங்கோள், வினையெஞ்சுக் கிளவி [வினையெச்சம்], 

    இன்மையைக் குறிக்கும் இல்லை எனும் குறிப்பி வினை முற்று, வேறு எனும் 

    வேறுபாட்டை உணர்த்தும் குறிப்பு வினை முற்று, செய்மன வாய்ப்பாட்டு 

    வினைச்சொல், செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினை முற்று, பெயரெச்சம், 

    செய்த என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சச் சொல் - எட்டும் இருதிணைக்கும் 

    விரவும் வினைகள்

22. ஒருமைக்கும் ஒருவருக்கும் ஒப்பத்தோன்றும் சொற்கள் யாவை?

    இ, ஐ, ஆய் ஆகியவற்றை ஈறாகக் கொண்ட முன்னிலை வினைகள். 

    [வருதி. போதி, நின்றனை, கண்டனை, வந்தாய், செல்வாய்]

23. பலர்பால், பலவின் பாலுக்கு ஒத்த முன்னிலைப் பன்மை வினைகள்?

        இர், ஈர், மின் [உண்பிர், கண்டிர்,  சென்றீர், வருவீர், நின்மின், செல்மின்

24. செய்யும் என்னும் வினைமுற்று எவற்றோடு பொருந்தி வரும்?

        படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின் பால்                  

        போன்றவற்றோடு பொருந்தி வரும். பிறவற்றோடு பொருந்தா.

        [அவன் பார்க்கும், அவள் சிரிக்கும், குயில் கூவும், மாடுகள் மேயும்]

25. வினையெச்ச வாய்ப்பாடு 

        செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர்,  செய்யிய, செயின், செய
        செயற்கு
 
26. பெயரெச்ச வாய்ப்பாடு:
           இறந்த காலம்                    -                    செய்த 

            நிகழ்காலம்                        -                     செய்கின்ற 

            எதிர்காலம்                                                 செய்யும் 

27. வினைமுற்று வகைகள்:    

        1, தெரினிலை வினைமுற்று
        2. குறிப்பு வினைமுற்று
        3. தன்மை வினைமுற்று
        4. முன்னிலை வினைமுற்று
        5. படர்க்கை வினைமுற்று
        6. ஏவல் வினைமுற்று
        7. வியங்கோள் வினைமுற்று
        8. ஐம்பால் வினைமுற்று
        9. உளப்பாட்டு தன்மைப்பன்மை வினைமுற்று
        10. உளப்பாட்டு முன்னிலைப் பன்மை வினைமுற்று

28. ஏவல் வினைமுற்றுக்கான வினைப் பகாபதங்கள் எத்தனை? 23

        [நட, வா, மடி, சீ, விடு, கூ, ஏ, வை, நொ, பொருந், திரு, தின், தேய், பார், செல்,         வாழ், கேள், அஃகு]
29. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை? க, இய, இயர்

30. வியங்கோள் வினைமுற்றுக்கான பொருண்மைகள் யாவை?

        வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்

31. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றுகள் யாவை? 

        அம், ஆம், கும், டும், ஓம்

32. உளப்பாட்டு முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்கள் யாவை?

        இர், ஈர், மின்

33. முற்றெச்சம் என்பது என்ன?

    வினைமுற்று எச்சப் பொருளில் வந்து வினை கொண்டு முடிவது.

    [கலைஞர்கள் ஆடினர் பாடினர் -  ஆடிப்பாடினர் என்பதில் உள்ள ஆடி என்னும் எச்சம் ஆடினர் என முற்றாக வந்து தொக்கி வினைக் கொண்டு முடிவது]


    

செவ்வாய், 27 அக்டோபர், 2020

தொகைநிலைத் தொடரும், தொகாநிலைத்தொடர்

 1.பிரிக்கப் பிரியாது தொக்கி வரும் உறவுப் பெயர்கள் யாவை?

        த, ந, நு, எ - இவற்றை முதலாகக் கொண்ட தமன், தமர், நமன், நமர், நுமன்,

        நுமர், எமன், எமர், தாய், தந்தை,  ஞாய் போன்ற சொற்கள் 

2. தொகை போல அடுக்கி வருவன யாவை?

        இசைநிறை [ஏஏ ஏஏ அம்பல் மொழிந்தனள்],

        அசைநிலை [அன்றன்றே]

        பொருளொடு புணர்தல் [பாம்பு பாம்பு]

3. தொகைமொழிகள் எத்தனை வகைப்படும்? ஆறு

4. தொகைமொழிகள் யாவை?

        வேற்றுமைத்தொகை, உவமத் தொகை, வினைத்தொகை,                                             பண்புத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை

5. வேற்றுமைத்தொகை என்றால் என்ன?

        வேற்றுமைத் தொடர்களில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது.                          உருபுகளோடு  கூடிய ஆறு வேற்றுமைகள்ம் தொக்கிவரும். 

        [நிலம் கடந்தான், பொற்குடம், கரும்பு வேலி, கருவூர்க்கோவில், முருகன்                     கோயில், மன்றப் பெண்ணை]

6. உவமத்தொகை என்றால் என்ன?

        உவமைத் தொடரில் உவம உருபு தொக்கி வருவது. [புலிகொற்றன்,                              மழைக்கை. பொன்மேனி]

7. வினைத்தொகை என்றால் என்ன? 

        வினைத்தொடரில் காலம் மறைந்து வருவது.

         [ஆடரங்கு, நாய்க்கடி, பாய்புனல்]

8. பண்புத்தொகை என்றால் என்ன?

        வண்ணம், வடிவம், அளவு, சுவை போன்றவையும் பிறவும் அதன் பண்பை             உணர்த்தி இத்தன்மை உடையது எனக்கூறுவது ஆகும். 

        [செவ்வானம், வட்டக்கல், நெடுங்கோல், இன்சொல்]

        இருபெயரொட்டாய்  வருவனவும் பண்புத்தொகையாகக் கொள்ளப்படும்.             [பனைமரம், மார்கழித்திங்கள்]

9. உம்மைத்தொகை என்றால் என்ன?

        உம் தொக்கி வருவது உம்மைத் தொகை எனப்படும். [காய்கறி, காய்கனி]

10. உம்மைத் தொகைப் பொருந்தி வரும் இடங்கள் யாவை?

        இரு பெயர்கள் : காய்கறி

        பல பொருள்கள்: அறம் பொருளின்பம்

        முகத்தல் அளவுகள்: தூணிப்பதக்கு

        எண்ணும் பெயரும்: பதினைவர்

        நிறுத்தலளவைப் பெயர்: தொடியரை

        எண் பெயர்: பதினைந்து

11. அன்மொழித்தொகை என்றால் என்ன? 

        பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத் தொகையை அடுத்து                 இறுதியில் பிற சொற்கள் தொக்கி வருவது. [குறுந்தொடிவந்தாள்]

12. தொகைச்சொற்களில் பொருள் சிறந்து வரும் இடங்கள் யாவை?

        முன்மொழியில், பின் மொழியல், அவ்விரு மொழிகளிலும், இரண்டிலும்

        அல்லாது வேறு மொழி. 

13. எல்லாத்தொகையும் ஒரு சொல் நடையினை உடையவை.

14. உம்மைத்தொகையில் உயர்திணைச் சொற்கள்  பலர்பால் முடிவு                                 உடையவை. [கபிலபரணன் - கவிலபரணர்]

 15. ஒருசொல் அடுக்கு எத்தனை வகைப்படும் [ இசைநிறை, அசைநிலை, 

        பொருளோடு புணர்த்தல்]. 

16. இசை நிறை எத்தனை அடுக்கு வரை அடுக்கி வரும்?

    இரண்டு முதல் நான்கு வரை. [ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்குமே]

17. விரைவு சொல் அடுக்குதற்கு உரிய வரம்பு யாது? 3 [தீ தீ தீ]

18. வினாவோடு வரும்போது அசைநிலையாக வரும் வினைச்சொற்கள்

         யாவை? கண்டீர்.கொண்டீர், சென்றீர், போயிற்று என்னும் நான்கு             

        வினைப்பொருளை உணர்த்தவில்லை எனின் அவை அசைநிலை


       







பெயரியல்

 1. எல்லா சொல்லும் ​​​​​​​​​​​​​​​​​​-​​​​​​------------------ குறித்தன. [பொருள்]

2. சொல்லின் இயல்புகள் யாவை? சொல் பொருளை அறியச் செய்யும், தன்னை         அறியச் செய்யும்.

3. சொல்லின் பொருண்மை நிலைகள் எத்தனை?

     2 [வெளிப்படை [தெரிநிலை], குறிப்பு] 

4. தொல்காப்பியர் குறிப்பிடும் சொல் வகைகள் யாவை? பெயர், வினை

5. பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் சொல் வகைகளாகத்

     தொல்காப்பியர் குறிப்பன யாவை? இடைச்சொல், உரிச்சொல்

6. பெயர் சொற்கள் எத்தனை வகைப்படும்? உயர்திணைப் பெயர், அஃறிணைப்     பெயர், இருதிணைக்கும் உரிய விரவுப் பெயர் [ பொதுப்பெயர்]

7. உயர்திணைப் பெயர்கள் யாவை?

    அவன், இவன், உவன், அவள், இவள், உவள்,  அவர், இவர், உவர், யான், 

    யாம்,  நாம், யாவன், யாவள், யாவர், ஆண்மகன், பெண்மகள், பெண்டாட்டி, 

    நம்பி, நங்கை, மகன், மகள்,   மாந்தர், மக்கள், ஆடூஉ, மகடூஉ, அவ்வாளன், 

    இவ்வாளன், உவ்வாளன், அம்மாட்டி, இம்மாட்டி, உம்மாட்டி, அவ்வாட்டி,

    இவ்வாட்டி, உவ்வாட்டி, பொன்னன்னாள், எல்லாரும், எல்லீரும், 

    பெண்மகன்

8. உயர்திணைப் பெயர் வகைகள்?

        நிலப்பெயர், குடிப்பெயர், குழுப்பெயர், வினைப்பெயர், உடைப்பெயர், 

        பண்புப்பெயர், பல்லோர் குறித்த முறை நிலைப் பெயர்,  பல்லோர் குறித்த 

       சினை நிலைப் பெயர்,   பல்லோர் குறித்த திணை நிலைப் பெயர்,  கூடி 

       விளையாடும் கூட்டப் பெயர், எண்ணியற் பெயர்.

9. நிலப்பெயர்கள்: மதுரையான், சோனாட்டான்

10. குடிப்பெயர்கள்: சேரன், சோழன், பாண்டியன்

11. குழுப்பெயர்கள்: அவையத்தார், மன்றத்தான், சங்கத்தான்

12. வினைப்பெயர்கள்: கொல்லன், தச்சன், 

13. உடைப்பெயர் [உடைமைப் பெயர்]: செல்வன், பொன்னன், வேலன்

14. பண்புப்பெயர்: கரியன், நல்லன், செய்யோன், செய்யோன்

15. முறைப்பெயர்: தந்தையர், தாயர், அன்னையர்

16. சினை [உறுப்பு]ப் பெயர்: பெருந்தோளர், குறுங்காலர், சிற்றிடையாள்

17. திணைப்பெயர்: வெட்சியார், வஞ்சியார், வேட்டுவர், ஆயர், குறிஞ்சியர்

18. ஆடுதற்கு உரிய குழுவின் பெயர்:   செவ்வணியர், வெள்ளணியர்

19. எண்ணியற் பெயர்: அறுவர், பதின்மர், ஆயிரத்தார், நூற்றுவர்

20. அஃறிணைப் பெயர்கள் யாவை?

      அது, இது, உது, அஃது, இஃது, உஃது, அவை, இவை, உவை, அவ், இவ், உவ், 

     யாது, யா, யாவை, பல்ல,  பல, சில, உள்ள, இல்ல, தொழிற்பெயர் 

    [வினைப்பெயர்], பண்புப் பெயர், எண்ணுப் பெயர், ஒப்புப்[உவமை] பெயர்

21. வினையாலணையும்  அஃறிணைப் பெயர்கள்: உழுதது, வந்தது, செல்வது

22. பண்புகொள் அஃறிணைப் பெயர்கள்: கரியது, நல்லது,

23. எண்ணிக்கை அஃறிணைப் பெயர்கள்: பொன்னனையது, வெள்ளியன்னது

24. விரவுப் பெயர்கள் எவ்வாறு பால் விளங்க வரும்? 

        வினைச் சொல்லோடு மட்டும் பால் காட்டும்.

         [சாத்தன் வந்தான், சாத்தி வந்தது]

25. நிகழ்காலத்தில் வரும் சொல்லில் ஒருமையில் பால் உணர்த்துவன யாவை?

        சாத்தி நூல் பயிலும், சாத்தன் குழல் ஊதும்

26. விரவுப் பெயர் வகைகள் யாவை? 

     இயற்பெயர், சினைப் பெயர், சினைமுதற் பெயர்,  முறைப்பெயர், தாம், 

    தான், எல்லாம், நீயிர், நீ

27. விரவுப் பெயரில் இயற்பெயர்கள் எத்தனை வகைப்படும்?

        4 [பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர், பன்மை இயற்பெயர், 

            ஒருமை இயற்பெயர்]

28. விரவுப்பெயரில் சினைப் பெயர்கள் எத்தனை வகைப்படும்?

        4 [பெண்மை சினைப்பெயர், ஆண்மைசினைப்பெயர், பன்மை 

            சினைப்பெயர், ஒருமை சினைப் பெயர்]

29. சினை முதற்பெயர் எத்தனை வகைப்படும்?

        4 [பெண்மை சுட்டிய  சினை முதற்பெயர், ஆண்மை சுட்டிய சினை 

            முதற்பெயர், பன்மை சுட்டிய சினைமுதற்பெயர், ஒருமை சுட்டிய 

             சினை முதற்பெயர்]

30. முறைப் பெயர்கள் எத்தனை வகைப்படும்?

        2 [பெண்மை  முறைப்பெயர், ஆண்மை முறைப்பெயர்]

31. பெண்மை பற்றி வரும் விரவுப் பெயர்கள் நான்கும் உயர்திணை பெண்பால்

        ஒருமை, அஃறிணை பெண்பால் ஒருமைக்கு உரியன.

        [சான்று:

        சாத்தி வந்தாள், சாத்தி வந்தது - இயற்பெயர்

        முடக்காலி வந்தாள். முடக்காலி வந்தது - சினைப் பெயர்

        கொடும்புற மருதி வந்தாள், கொடும்புற மருதி வந்தது - சினை முதற்பெயர்

        தாய் வந்தாள், தாய் வந்தது - முறைப்பெயர்.] 

32. ஆண்மை பற்றி வரும் விரவுப் பெயர்கள் நான்கும் உயர்திணை ஆண்பால் 

        ஒருமை, அஃறிணை பெண்பால் ஒருமைக்கு உரியன.

         [சான்று:

        சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது - இயற்பெயர்

        முடக்காலன் வந்தான். முடக்காலன் வந்தது - சினைப் பெயர்

        கொடும்புற மருதன் வந்தான், கொடும்புற மருதன் வந்தது - சினை 

        முதற்பெயர்

          தந்தை வந்தான், தந்தை வந்தது - முறைப்பெயர்.] 

33. பன்மை சுட்டிய பெயர்கள் அஃறிணை ஒருமை, அஃறிணை பன்மை, 

        உயர்திணை  பன்மை மூன்றுக்கும் ஒத்தமையும். 

34. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்  ஒன்றற்கும், ஒருவருக்கும் ஒத்ததே.

35. தாம் என் கிளவி ​​​​​------------------ உரித்தே [பன்மைக்கு]

    [அவர்கள் தாம் வந்தனர், அவைதாம் வந்தன]

36. தான் என் கிளவி ----------------- உரித்தே [ஒருமைக்கு]

[அவன் தான் வந்தான், அவள் தான் வந்தாள், அது தன் வந்தது]

37. எல்லீர் என்பது உயர் திணைக்கானது.

38. எல்லாம் என்பது அஃறிணைக்கானது. எனினும் சில வேளை 

        உயர்திணைக்கும்  பொருந்தும்.

         [காடெல்லாம் பூத்தது, ஊரெல்லாம் மகிழ்ந்தது]

39. எல்லாம் உயர்திணையில் எங்கு வரும்? பன்மையில் மட்டும் வரும்

40. பால் தெரிபிலா உடன் மொழிப்பொருள யாவை?

    நீ, நீயிர் [விரவுப் பெயர்களான இவை எல்லாப் பாலுக்கும் பொதுவானவை. 

    இரு திணைக்கும் பொருந்துவன. எனவே பால் தெரிபிலா உடன்மொழிப் 

    பொருள எனப்பட்டன.]  

41. நீ என்பது ஒருமைக்கு உரியது.

42. நீயிர் என்பது பன்மைக்கு உரியது.

43. ஒருவர் என்பது எப்பாலுக்கு உரியது? ஆண், பெண் எனும் இரு பால்

44. ஒருவர் என்பது எவ்வினை முடிவைப் பெறும்? 

        ஒருவர் என்பது ஒருமைக்கு உரியது என்றாலும் பன்மை வினை 

        முடிவையே பெறும். [ஒருவர் வந்தார் - அர் என்ற பன்மை வினை முடிவைப்

        பெற்றுள்ளது.]

45. பெண்பாலுக்கு உரியதாக பால் திரிந்து வழங்கும் சொல் யாது?

        பெண்மகன்

46. பெண்மகன் எத்தகு வினை முடிவைப் பெறும்? 

        பெண்பால் [பெண்மகன் வந்தாள்] 

47. ஈற்றயல் ஓகாரமாக மாறும் சொற்கள் யாவை?

            ஆகார ஈற்றயல் சொற்கள்.

        ஆன், ஆள், ஆர் மூன்றிலும் உள்ள ஈற்றயல் ஆகாரம் ஏகாரம் ஆகும்.

         [வில்லான் - வில்லோன், செய்யாள் - செய்யோள், நல்லார் - நல்லோர்]

48. இறைச்சிப் பொருளில் வரும் இயற்பெயர் கிளவி கருப்பொருளில் உள்ள

        உயிரினங்களுக்குப் பொருந்துவதால் உயர்திணையைக் குறிக்க மாட்டா. 

        கருப்பொருளில் ஒன்றான மக்கட் பெயர்  [விடலை, மீளி, காளை     

        போன்ற] மட்டும் உயர்திணைக்கு உரியன.

       





            









    

திங்கள், 26 அக்டோபர், 2020

விளி மரபு

தொல்காப்பியம்

 1. விளி வேற்றுமை எவ்வாறு வரும்?

   தம்மை ஏற்கும் பெயரோடு வரும் 

2. விளியேற்கும் உயிர் ஈறுகள் யாவை?

    இ, உ, ஐ, ஓ

3. விளியேற்கும் மெய் ஈறுகள் யாவை?

    ன, ர, ல, ள

4. இ விளி ஏற்க எவ்வாறு திரியும்?

     இ - ஈ ஆகும் ( நம்பி- நம்பீ)

5. ஐ விளி ஏற்க எவ்வாறு திரியும்?

     ஐ - ஆய் ஆகும் ( மங்கை - மங்காய் )

6. உ, ஓ விளி ஏற்க எவ்வாறு திரியும்? 

     ஏ ஏற்கும்.

 (திரு - திருவே, இளங்கோ - இளங்கோவே) 

7.  உயிர் ஈறுகள் அகப்பையில் எவ்வாறு   விளி   ஏற்கும்?

     இயல்பாக  விளியேற்கும்.  ஆனால்    கூடுதல் மாத்திரைகளோடு விளி ஏற்கும்.         தோழீஇ - தோழீஇஇ, தோழீஇஇஇ

8. முறைப் பெயர்களில் ஐ  எவ்வாறு                          விளியேற்கும்?

     ஆய் ஆகாமல்  ஆ ஆகும். 

      அன்னை  - அன்னா

9. அண்மை விளிப்பெயர்கள்  எவ்வாறு                   விளியேற்கும்? 

     இயல்பாக விளியேற்கும்.

10. னகர ஈறுகள் எவ்வாறு விளியேற்கும்?

     1. அன் - ஆ ஆகும். (முருகன்- முருகா)

      2. ஆன் ஈற்றுப் பெயர் இயல்பாகும்.

          ( கோமான்)

      3. அண்மை விளியில் ஈறு(ன) கெடும்.

          (நண்பன் - நண்ப)

       4. தொழிற் பெயர் ( வினையாலனையும்    பெயர்) ஆன்- ஆய் ஆகும்.

           ( ஆண்டான்- ஆண்டாய்)

       5. முறைப் பெயர் ஏகாரம் பெறும்.

         ( மகன்- மகனே)

      6. பண்புப் பெயர் ஆன் ஆய் ஆகும்.

         ( கரியான்- கரியாய்)

11. விளி ஏற்கா னகர ஈற்று சொற்கள் யாவை?

       தான், தான், அவன், இவன்,  உவன் 

12. ரகர ஈறு எவ்வாறு விளியேற்கும்?

      1. அர்,  ஆர் - ஈரொடு சிவணும் ( ஈர் ஆகும்)

            நண்பர்- நண்பீர் 

       2. ரகர ஈற்றுத் தொழிற் பெயர், பண்பு 

         பெயர் ஏகாரம்  பெறுதலும் உண்டு. 

          (வாழ்வார்- வாழ்வீர், வாழ்வீரே

            கரியர்- கரியீர்,  கரியீரே)

         3. அளபெடையில் மாத்திரை  அளவு                        கூடும். வடிவு திரியாது.

           (சிறாஅர்- சிறாஅஅர்)

  13. விளியேற்கு ரகர ஈறுகள் யாவை?

       அவர்,  இவர்,  உவர்,  நீயிர்,  யாவர் 

14. ல,ள விளியில் எவ்வாறு திரியும்?

      ஈற்றயல் ( இறுதிக்கு முன் உள்ள எழுத்து) 

      நீளும். ( தோன்றல்- தோன்றால்,  

                    மக்கள்  - மக்காள்)

15. ல, ள ஈற்றுச் சொல்லின் ஈற்றயல்       

       நெடியது எனில் இயல்பாக வரும். 

     (ஆண்டாள்,  திருமால்)

16. ளகர ஈற்று பண்பு, தொழிற் பெயர் எவ்வாறு விளியேற்கும்?

      ஆள் - ஆய் ஆகும். வென்றாள்- வென்றார்

            செய்யாள்  - செய்யாய்

17. ளகர ஈற்று முறைப் பெயர் எவ்வாறு விளியேற்கும்?

   ஏகாரம் பெறும். மகள் - மகளே

18. அளபெடையில் மாத்திரை நீளும்.

19.  விளியேலா ளகர ஈற்றுச் சொற்கள்?

        அவள், இவள், உவள்,  யாவள் 

20. அஃறிணைப் பெயர்கள் எவ்வாறு விளியேற்கும்?

      மரமே, அணிலே,  மாடே, குயிலே 

21. உயர்திணை, ஆஃறிணைப் பெயர்கள்,  விரவுப் பெயர்கள் மூன்றும் சேய்மையில் தன் மாத்தரை அளவு கடந்து ஒலிக்கும்.

22. விளி ஏற்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். 


நன்னூல்

23. உயர்திணைப் பெயர்களில் விளி ஏற்கும் எழுத்துக்களாக நன்னூல் குறிப்பன

        இ, உ, ஊ, ஐ, ஓ, ன, ள,  ர, ல, ய [நம்பி, வேந்து, ஆடூ, விடலை, கோ, ஐயன், வேள், வணிகர், தோன்றல், சேய்]

24. பொதுப் பெயர்களில் விளி ஏற்கும் எழுத்துக்களாக நன்னூல் குறிப்பன?

        ஆ, இ, உ, ஊ, ஐ, ண, ன, ள, ல, ய [பிதா, சாத்தி, கூற்று, அழிதூ[பேடி], தந்தை, 

        சாத்தன், கடவுள், தூங்கல், தாய், ஆண், ]

25. அஃறிணைப் பெயர்களில் விளி ஏற்கும் எழுத்துக்கள் என நன்னூல் குறிப்பன         எத்தனை?             

                   19 [மக, புறா, கிளி, தீ, முசு, பூ, சே, நாலை, சோ, மண், 

                கராம், அலவன், நாய், தகர், குயில், தெவ், பூழ், புள், வண்டு]

26. நன்னூல் குறிப்பிடும் அஃறிணைப் பெயர்களில் விளி ஏற்கா எழுத்துக்கள் யாவை?

        ஞ, ந, அளபெடையில் மட்டுமே மொழி இறுதியில் வரும்  எ, ஒ, ஔ ஐந்து எழுத்துக்களும் அஃறிணைப் பெயர்களில் விளி ஏற்காது [இவை ஒழிந்த 19 எழுத்துக்களும் அஃறிணையில் விளி ஏற்கும்]

27. மூவகைப் பெயர்களும் விளி ஏற்க பொதுவாய் நிகழ்வன யாவை? 

        இயல்பாதல், ஏ மிகுதல், இ -ஈ ஆதல். [நம்பி - நம்பீ, மயில் -மயிலே]

28. ஐகார இறுதி எவ்வாறு விளி ஏற்கும் என நன்னூலார் கூறுகிறார்?

        ஏ மிகல், ஆய், ஆ ஆகத்திரிதல் உண்டு. [அன்னை -அன்னாய், அன்னா]

29. னகர ஈற்று உயர்திணைப் பெயர்கள் எவ்வாறு விளி ஏற்கும்?

    1. அளபெடுக்கும்                                                  [அம்பர் கிழான் - அம்பர் கிழாஅன்]

    2. ஈறு கெடல்                                                                  [புலவன் - புலவ]

    3. ஈற்றயல் நீடல்                                                           [பெருமன் - பெருமான்] 

    4. ஈற்றயல் நீண்டு ஈறு கெடல்                               [மன்னன் - மன்னா]

    5. ஈற்றயல் நீண்டு ஈறு கெட்டு ஓ மிகும்            [ஐயன் - ஐயாவோ]

    6. ஈறழிந்து ஓகாரம் மிக்கது                                   [திரையன் - திரையவோ]

    7. இறுதி யகரமாவது                                                 [வாயிலான் - வாயிலாய்]

    8. இறுதி ய் ஆகி ஈற்றயல் ஆ ஆகி ஏ பெறல்   [வாயிலான் - வாயிலோயே]

    9. ஈறழிந்து அகரம் ஏகாரம் ஆகும்                      [ஐயன் -ஐயோ]

30. ளகர ஈற்று உயர்திணைப் பெயர்கள் எவ்வாறு விளி ஏற்கும்?

    1. அளபெடுக்கும்                                                  [வேள் - வேஎள்]

    2. ஈறு கெடல்                                                           [எல்லாள் - எல்லா]

    3. ஈற்றயல் நீடல்                                                    [மக்கள் - மக்காள்] 

    4. ள - ய ஆதல்                                                        [குழையாள் - குழையாய்]

    5. ஈற்றயல் அகரம் ஏ ஆதல்                             [அடிகள் - அடிகேள்]

31.  ரகர ஈற்றுப் பெயர்கள் எவ்வாறு விளி ஏற்கும்?


    1. அளபெடுத்தல்                                                  [சிறார் - சிறாஅர்]
    2. ஈற்றயல் அகரம் இகரம் ஆதல்                 [தெவ்வர் - தெவ்விர்]
    3. ஈற்றயல் அகரம் ஈகாரம் ஆதல்               [நாய்கர் - நாய்கீர்]
    4. ஈற்றயல் ஆகாரம் ஈகாரம் ஆதல்           [சான்றார் - சான்றீர்]
    5. ஈற்றயல் ஈகாரமாகி ஏ மிகல்                   [கணியார் - கணியீரே]
    6. ஈற்றயல் ஈ ஆகி, ஏ ஏற்று யா கெடல்     [நம்பியார் - நம்பீரே]
    7. ஈர் ஏற்றது                                                          [ எமர் - எமரீர்]

32.  லகர, யகர ஈற்றுப் பெயர்கள் எவ்வாறு விளி ஏற்கும்?

    1. அளபெடுத்தல்                             [மால் - மாஅல்]
    2. ஈற்றயல் நீளல்                              [தோன்றல் - தோன்றால்]
    3. யகர ஈறு  அளபெடுத்தல்        [ சேய் - சேஎய்]

 33. அண்மையில் விளித்தலில் ஈறுகள் எவ்வாறு வரும்?

    இயல்பாகவோ, ஈறு கெட்டோ வரும்.

34. சேய்மை விளித்தலில் நிகழ்வன யாவை?

    அளபெடுத்தல், புலம்பல், ஓகாரம் மிகல் 

35. விளி ஏலாப்பெயர்கள் யாவை?

    தாம் [அசை நிலை], நுமன், நுமள், நுமர்[கிளைப்பெயர்], எவன், எவள், எவர், 

    எவை, எது, யாவன், யாவள், யாவர், யாவை, யாது, ஏவன், ஏவள், ஏவர், ஏவை, 

    ஏது [வினாப்பெயர்]




 

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அறுவகைப் பெயர்

 பொருட்பெயர்

    தமன், நமன், நுமன், எமன்,  தமள், நமள், நுமள், எமள், தமர், நமர், நுமர், எமர், ஒருவன், ஒருத்தி, பொன்னன், பொன்னி, அவையத்தான், அவையத்தி

இடப்பெயர்

            குறத்தி, குறவன், எயிற்றி, எயினன், ஆயச்சி, ஆயன், உழவன், உழத்தி, வெற்பன், பொருப்பன், மறவன், இடையன், ஊரன், மகிழ்நன், சேர்ப்பன், துறைவன், சோழியன்,கொங்கன், கருவூரான், மதுரையான், வானத்தான், அகத்தான், புறத்தான், பரத்தி, மலையாட்டி, மலையாட்டி, கருவூரள், கருவூரி, வானத்தாள், அகத்தாள், புறத்தாள்  

காலப்பெயர்

            மூவாட்டையாள், வேனிலாள், பருவத்தாள், ஆதிரையாள், நெருநாலாள், மூவாட்டையான், வேனிலான், காரான், மாசியான், ஆதிரையான், ஓணத்தான், தையான், நெருநலான், காலையான்

சினைப்பெயர்

        திண்தோளன், திணிதோளன், செங்குஞ்சியன், வரைமார்பன், செங்கண்ணன், குழைக்காதன், குறுந்தாளன், நெடுங்கையன், திணிதோளல், சுரிகுழலாள், கார்குழலாள், நெடுமார்பள், தடங்கண்ணாள், குழைக்காதாள்,மூக்கி

குணப்பெயர்

        பெரியள், புலமையாள், பொன்னொளியாள், கூனள், கூனி, கரியள், மானுடத்தி, பார்ப்பினி, மானுடத்தி, மனைத்தலைவி, நல்லள், பெரியன், சிறியன், அறிஞன், புலவன், பொன்னொப்பன், கூனன், குறளன், மணியனையான், கரியன், செய்யன், மானுடத்தன், நல்லன், தீயன்

தொழிற்பெயர்

        ஓதுவான், ஈவான், கணக்கன், தச்சன், ஓதுவாள், ஈவாள், உழவன், உழத்தி


Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...