தொல்காப்பியம் தொல்காப்பியரால் இயற்றப்பட்டது. இதன் காலம் இடைச்சங்க காலம் எனக்குறிப்பிடப்படுகின்றது. பல அறிஞர்கள் தொலகாப்பிய காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு எனவும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனவும் கூறுகின்றனர். தொல்காபியர் என்ப, என்மனார் புலவர், யாப்பறி புலவர், தொன்மொழிப் புலவர் எனக் குறிப்பிடுவதால் அவர் காலத்திற்கு முன்னரே இலக்கண நூல்கள் இருந்தமையை உணர்த்துகின்றன. தொல்காப்பிய சிறப்புப்பாயிரத்தை இயற்றிய பனம்பாரனார் ஆவார். அவர் தொகாப்பியம் நிலந்தருத்திருவிற் பாண்டியன் அவையில் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களாக இருபத்தியேழு இயல்கள் அமைந்துள்ளன. தொல்காப்பியம் சூத்திர யாப்பால் அமைந்த 1610 நூற்பாக்களாலானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக