- உரிச்சொல் எவற்றின் அடிப்படையில் தோன்றும்? இசை, குறிப்பு, பண்பு
- உரிச்சொல் எவற்றிற்கு உரியதாய் அமையும்? பெயர், வினை
- உரிச்சொல் எவ்வாறு பொருள் வழங்கும்? ஒருசொல் பலபொருட்கு உரியவை, பலசொல் ஒருபொருட்கு உரியவை
- உரிசொல் வகைகள் யாவை? வெளிப்படு சொல், வெளிப்பட வராத சொல்
- தொல்காப்பிய உரியியல் பேசும் உரிச்சொல் வகை யாது? வெளிப்பட வராத உரி சொல்
- மிகுதிப் பொருளுடைய உரிச்சொற்கள் யாவை? உறு, தவ, நனி
- உரு என்னென்னப் பொருளில் வரும்? உட்கு, அச்சம்
- புரை என்னப் பொருள் உடைய உரிச்சொல்? உயர்வு
- நிறப்பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை? குரு, கெழு
- இன்னாமை உரிச்சொற் எப்பொருளில் வரும் ? செல்லல், இன்னல்
- வளம் உணர்த்தும் உரிச்சொல் யாது? மல்லல்
- ஏ உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாவை? பெற்று, பெருக்கம்
- உகப்பு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்கள் யாவை? உயர்வு, மேன்மேல் உயர்தல்
- உவப்பு என்னும் உணர்த்தும் பொருட்கள் யாவை? உவகை, மகிழ்ச்சி
- பயப்பு உணர்த்து பொருள் யாவை? பயம், பயன்
- பசப்பு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது? நிறம் [பசலை நிறம், பிரிவால் ஏற்படும் ஒளி குறைந்தத் தோற்றம்]
- இயைபு உணர்த்தும் பொருள் யாது? புணர்ச்சி [கூடுதல், ஒருங்கிணைத்தல்]
- இசைப்பு உணர்த்தும் பொருள் யாது? இசைத்தல் [யாழ் இசைத்தல்]
- சுழற்சிப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை? அலமரல், தெருமரல்
- இளமைப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை? மழ, குழ
- சீர்த்தி உணர்த்தும் உரிச்சொற்கள் யாவை? மிகுபுகழ்
- சிறத்தல் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை? கூர்ப்பு [கூர்], கழிவு [கழி]
- விரைவுப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை? கதழ்வு, துனைவு
- நடுக்கப் பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை? அதிர்வு, விதிர்ப்பு
- நேர்பு [நேர்மை, நேரான]பொருளில் வரும் உரிச்சொற்கள் யாவை? [வார்] வார்தல், [போகு] போகல், [ஒழுங்கு] ஒழுகல்
- தீர்தல், தீர்த்தல் எனும் உரிச்சொற்கள் உணர்த்தும் பொருட்கள் யாவை? விடுதல், நீங்குதல், நீக்குதல், பிரிதல்
- மகிழ்ச்சியான விளையாட்டைக் குறிக்கும் உரிச்சொற்கள் யாவை? கெடவரல், பண்ணை
- பெருமை மற்றும் பெரிது என்னும் பொருளை உணர்த்தும் உரிச்சொற்கள் யாவை? தட, கய, நளி
- தட என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாவை? கோட்டம், வளைவு
- கய உணர்த்தும் பொருள் யாது? மென்மை
- நளி உணர்த்து பொருள் யாது? செறிவு
- பழுது உணர்த்தும் பொருள் யாது? பயமின்று [பயனில்லை]
- சாயல் உணர்த்தும் பொருள் யாது? மென்மை
- முழுது என்னும் உரிச்சொல் குறிக்கும் பொருள்? எஞ்சாமை [முழுமை]
- வம்பு என்னும் உரிச்சொல் குறிக்கும் பொருள்? நிலையின்மை
- மாதர் எனும் உரிச்சொலின் பொருள் என்ன? காதல்
- விருப்பத்தைக் குறிக்கும் உரிப்பொருள் யாது? நம்பு, மேவு
- உள்ளதன் நுணுக்கம் என்பதைக் குறிக்கு உரிச்சொல் யாது? ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்
- தனிமையை உணர்த்தும் உரிப்பொருள் யாது? புலம்பு
- நிறைவுப் பொருளில் உள்ள உரிப்பொருள் யாது? துவன்று
- முதிர்வுப் பொருளில் உள்ள உரிப்பொருள் யாது? முரஞ்சல்
- வெம்மை என்னும் உரிப்பொருள் விளக்கும் பொருள் யாது? வேண்டல், விரும்புதல்
- பொற்பு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? பொலிவு, அழகு
- வறிது என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? சிறிது
- ஏற்றம் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? நினைவு, துணிவு
- பெட்புப் பொருளுக்கான உரிச்சொல் யாது? பிணை, பேண் [பெட்பு என்பது பாதுகாத்தல், விரும்புதல், புறந்தருதல்]
- பணை என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? பிழை, பெரிது
- படர் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? நினைத்தல் [உள்ளல்], செல்லுதல்
- பையுள், சிறுமை எனும் உரிச்சொல்லின் பொருள் யாது? நோய், துன்பம்
- எய்யாமை உரிச்சொல்லின் பொருள் யாது? அறியாமை
- நன்று உணர்த்தும் பொருள்? நன்று
- தா என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது? வலிமை, வருத்தம்
- தெவு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது? கொள்ளுதல்
- தெவ்வு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது? பகைமை [தெவ்வர் - பகைவர்]
- செறிவுப் பொருள் உணர்த்தும் உரிப்பொருள் யாது? விறப்ப், உறப்பு, வெறிப்பு
- விறப்பு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? அச்சம் [வெரூஉ]
- அரவம் [ஆரவாரம், பேரோசை] பொருளிலான உரிச்சொற்கள் யாவை? கம்பலை, சும்மை, கலி, அழுங்கல்
- அழுங்கல் உணர்த்தும் பொருள் யாது? அரவம், இரக்கம், கேடு
- மயக்கம் பொருளில் வரும் உரிச்சொல் யாது? கழுமு
- செழுமை எனும் உரிப்பொருள் உணர்த்தும் பொருள் யாது ? வளம், கொழுப்பு
- விழுமம் உரிப்பொருள் உணர்த்து பொருள்? சீர்மை, சிறப்பு, இடும்பை
- கருவி உரிப்பொருளின் பொருள் யாது? தொகுதி
- கமம் உரிப்பொருளின் பொருள் யாது? நிறைவு
- அரி என்னும் உரிப்பொருளின் பொருள் யாது? ஐம்மை, நொய்ம்மை, மென்மை
- கவவு என்னும் உரிப்பொருள் உணர்த்தும் பொருட்கள் யாவை? அகத்திடுதல், தழுவுதல்
- இசைத்தல் பொருளிலான உரிப்பொருள் யாது? துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல்
- கழிந்த பொருளைக் குறிக்கும் உரிப்பொருள் யாது? இரங்கல்
- வறுமை என்னும் பொருள் உணர்த்தும் உரிச்சொல் யாது? இலம்பாடு, ஒற்கம்
- பரத்தல் [பரப்புதல்] பொருளிலான உரிச்சொல் யாது? ஞெமிர்தல், பாய்தல்
- கவர்வு உரிச்சொல்லின் பொருள் யாது? விருப்பு
- சேர் உரிச்சொல்லின் பொருள் யாது? திரட்சி
- அகலப் பொருளில் வரும் உரிச்சொல் யாது? வியல்
- அச்சப்பொருளில் வரும் உரிச்சொல் யாது? பேம், நாம், உரும்
- வய என்னு உரிச்சொல்லின் பொருள் யாது? வலிமை
- ஒளி என்னும் பொருளிலான உரிச்சொல் யாது? வாள்
- அறிவின் திரிபை உணர்த்தும் உரிச்சொல் யாது? துயவு
- உயா என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்? உயங்கல் [வருந்துதல், துயரப்படுதல்]
- சூழ்ச்சி [சூழுதல்]ப் பொருளிலான உரிச்சொல் யாது? உசா
- வேட்கைப் பெருக்கப் பொருளிலான உரிச்சொல் யாது? வயா
- வெகுளி என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? கறுப்பு, சிவப்பு
- நிறவேறுபாட்டை உணர்த்தும் உரிச்சொல் யாது? கறுப்பு, சிவப்பு
- நுண்மை [நுணுக்கமான அறிவு] என்னும் பொருளின் உரிச்சொல் யாவை? நொசிவு, நுழைவு, நுணங்கு
- குழந்தை ஈணுவதைக் குறிக்கும் உரிச்சொல் யாது? புனிறு
- நனவு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது? களன், அகலம்
- மதவு, மத என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? மதன், வலிமை
- மத என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? மிகுதி, வனப்பு
- யாணர் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? புது வரவு
- அமர்தல் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? மேவல் [விருப்பம்]
- யாண் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? கவின் [அழகு]
- வாழ்த்தல், வழிபடுதல் பொருளிலான உரிச்சொல் யாது? பரவுதல், பழிச்சுதல்
- கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள் யாது? வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், தெய்வத்தின் முன் சத்தியம் செய்தல் [முன் தேற்று]
- கடி என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? ஐயம், கரிப்பு
- ஐ என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? வியப்பு
- முனைவு என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? முனிதல் [சினத்தல், வெறுத்தல்]
- வை என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? கூர்மை
- எறுள் என்னும் உரிச்சொல்லின் பொருள் யாது? வலிமை
- உரிச்சொல்லுக்கு எவ்வாறு பொருளுணர வேண்டும்? அதற்கு முன்னும் பின்னும் உள்ள சொற்களோடு தொடர்புப்படுத்திப் பொருளறிய வேண்டும் .
- ஒரு உரிச்சொல்லின் பொருளுக்குப் பொருள் தேடினால் அது வரம்பின்றிப் போகும். [பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே]
- உரிப்பொருளுக்கான பொருளை அறிவது உணர்வோரின் உணர்ச்சி, அறிவு, சார்ந்தது [உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே]
- உரிச்சொல்லில் எழுத்துப் பிரிந்து வராது [எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல்பன்றே]
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 29 அக்டோபர், 2020
உரியியல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக