- செய்யுள் ஈட்டச்சொற்கள் எத்தனை? 4 [இயற் சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல்]
- இயற்சொல் என்பது யாது? செந்தமிழ் நிலத்தில் பேசப்படும் வழக்கில் இருந்து வழாமல் இருப்பது.
- திரிசொல் எத்தனை வகைப்படும்? ஒரு பொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல்
- திசைச்சொல் என்றால் என்ன? செந்தமிழ் பேசும் பன்னிரு வகை நிலப்பிரிவுகளிலிருந்து வந்து வழங்கும் சொற்கள்.
- வட சொல் என்றால் என்ன? வடநிலத்தில் இருந்து வந்து, தமிழ் நிலத்தில் வழங்கும் சொற்கள் வட சொற்கள்
- செய்யுள் விகாரம் எத்தனை வகைப்படும்? 4 [வலித்தல், மெலித்தல், விரித்தல், தொகுத்தல்]
- பொருள்கோள் எத்தனை வகைப்படும்? தொல்காப்பியம் 4, நன்னூல் - 8, நேமிநாதம் - 9 [நன்னூல் கூறும் 8 - ஆற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, பூட்டு வில் [விற்பூண்], தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு, அடிமறிமாற்று]
- நிரல்னிறை பொருள்கோளின் வகைகள் யாவை? நேர்நிரல்நிறை, எதிர்நிரல்நிறை
- தொகைவகைகள் யாவை? ஆறு [வேற்றுமைத் தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை]
- வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல
- உவமத்தொகையே உவம இயல.
- வினையின் தொகுதி காலத்து இயலும்
- பண்புகள் எத்தனை வகைப்படும்? வண்ணம், வடிவம், அளவு, சுவை
- உம்மைப் பொருந்தி வரும் இடங்கள் யாவை? இரு பெயர்கள், பல பெயர்கள், முகத்தல் அளவுப் பெயர்கள், எண்ணுப் பெயர், நிறுத்தலளவைப் பெயர்கள், எண்ணுப்பெயர்கள் எண்ணும் ஆறு வகை இடங்கள் உம் பொருந்தி வரும் இடங்கள்
- எச்ச சொற்கள் எத்தனை வகைப்படும்? பத்து வகைப்படும் [பிரிநிலை எச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசை எச்சம், எதிர்மறை எச்சம், உம்மை எச்சம், என என்னும் எச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம்]
- இரத்தல் பொருளில் வரும் சொற்கள் யாவை? ஈ, தா, கொடு [ஈ-இழிந்தோன் கூறுதற்கு உரிய கூற்று, தா-ஒத்தவர் கூற்றுக்கு உரியது, கொடு- உயர்ந்தோருக்கு உரியது]
- இலக்கணம் வரையறுக்கப்படாத சொற்கள் யாவை? பெயர் நிலைக் கிளவி, திசைநிலைக் கிளவி, தொன்னெறி மொழி, மெய்நிலை மயக்கம், மந்திரப்பொருள்
- கடிசொல் இல்லைக் காலத்துப் படினே
- இடைசொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 30 அக்டோபர், 2020
எச்சவியல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக