தொல்காப்பியம்
1. விளி வேற்றுமை எவ்வாறு வரும்?
தம்மை ஏற்கும் பெயரோடு வரும்
2. விளியேற்கும் உயிர் ஈறுகள் யாவை?
இ, உ, ஐ, ஓ
3. விளியேற்கும் மெய் ஈறுகள் யாவை?
ன, ர, ல, ள
4. இ விளி ஏற்க எவ்வாறு திரியும்?
இ - ஈ ஆகும் ( நம்பி- நம்பீ)
5. ஐ விளி ஏற்க எவ்வாறு திரியும்?
ஐ - ஆய் ஆகும் ( மங்கை - மங்காய் )
6. உ, ஓ விளி ஏற்க எவ்வாறு திரியும்?
ஏ ஏற்கும்.
(திரு - திருவே, இளங்கோ - இளங்கோவே)
7. உயிர் ஈறுகள் அகப்பையில் எவ்வாறு விளி ஏற்கும்?
இயல்பாக விளியேற்கும். ஆனால் கூடுதல் மாத்திரைகளோடு விளி ஏற்கும். தோழீஇ - தோழீஇஇ, தோழீஇஇஇ
8. முறைப் பெயர்களில் ஐ எவ்வாறு விளியேற்கும்?
ஆய் ஆகாமல் ஆ ஆகும்.
அன்னை - அன்னா
9. அண்மை விளிப்பெயர்கள் எவ்வாறு விளியேற்கும்?
இயல்பாக விளியேற்கும்.
10. னகர ஈறுகள் எவ்வாறு விளியேற்கும்?
1. அன் - ஆ ஆகும். (முருகன்- முருகா)
2. ஆன் ஈற்றுப் பெயர் இயல்பாகும்.
( கோமான்)
3. அண்மை விளியில் ஈறு(ன) கெடும்.
(நண்பன் - நண்ப)
4. தொழிற் பெயர் ( வினையாலனையும் பெயர்) ஆன்- ஆய் ஆகும்.
( ஆண்டான்- ஆண்டாய்)
5. முறைப் பெயர் ஏகாரம் பெறும்.
( மகன்- மகனே)
6. பண்புப் பெயர் ஆன் ஆய் ஆகும்.
( கரியான்- கரியாய்)
11. விளி ஏற்கா னகர ஈற்று சொற்கள் யாவை?
தான், தான், அவன், இவன், உவன்
12. ரகர ஈறு எவ்வாறு விளியேற்கும்?
1. அர், ஆர் - ஈரொடு சிவணும் ( ஈர் ஆகும்)
நண்பர்- நண்பீர்
2. ரகர ஈற்றுத் தொழிற் பெயர், பண்பு
பெயர் ஏகாரம் பெறுதலும் உண்டு.
(வாழ்வார்- வாழ்வீர், வாழ்வீரே
கரியர்- கரியீர், கரியீரே)
3. அளபெடையில் மாத்திரை அளவு கூடும். வடிவு திரியாது.
(சிறாஅர்- சிறாஅஅர்)
13. விளியேற்கு ரகர ஈறுகள் யாவை?
அவர், இவர், உவர், நீயிர், யாவர்
14. ல,ள விளியில் எவ்வாறு திரியும்?
ஈற்றயல் ( இறுதிக்கு முன் உள்ள எழுத்து)
நீளும். ( தோன்றல்- தோன்றால்,
மக்கள் - மக்காள்)
15. ல, ள ஈற்றுச் சொல்லின் ஈற்றயல்
நெடியது எனில் இயல்பாக வரும்.
(ஆண்டாள், திருமால்)
16. ளகர ஈற்று பண்பு, தொழிற் பெயர் எவ்வாறு விளியேற்கும்?
ஆள் - ஆய் ஆகும். வென்றாள்- வென்றார்
செய்யாள் - செய்யாய்
17. ளகர ஈற்று முறைப் பெயர் எவ்வாறு விளியேற்கும்?
ஏகாரம் பெறும். மகள் - மகளே
18. அளபெடையில் மாத்திரை நீளும்.
19. விளியேலா ளகர ஈற்றுச் சொற்கள்?
அவள், இவள், உவள், யாவள்
20. அஃறிணைப் பெயர்கள் எவ்வாறு விளியேற்கும்?
மரமே, அணிலே, மாடே, குயிலே
21. உயர்திணை, ஆஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் மூன்றும் சேய்மையில் தன் மாத்தரை அளவு கடந்து ஒலிக்கும்.
22. விளி ஏற்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.
நன்னூல்
23. உயர்திணைப் பெயர்களில் விளி ஏற்கும் எழுத்துக்களாக நன்னூல் குறிப்பன
இ, உ, ஊ, ஐ, ஓ, ன, ள, ர, ல, ய [நம்பி, வேந்து, ஆடூ, விடலை, கோ, ஐயன், வேள், வணிகர், தோன்றல், சேய்]
24. பொதுப் பெயர்களில் விளி ஏற்கும் எழுத்துக்களாக நன்னூல் குறிப்பன?
ஆ, இ, உ, ஊ, ஐ, ண, ன, ள, ல, ய [பிதா, சாத்தி, கூற்று, அழிதூ[பேடி], தந்தை,
சாத்தன், கடவுள், தூங்கல், தாய், ஆண், ]
25. அஃறிணைப் பெயர்களில் விளி ஏற்கும் எழுத்துக்கள் என நன்னூல் குறிப்பன எத்தனை?
19 [மக, புறா, கிளி, தீ, முசு, பூ, சே, நாலை, சோ, மண்,
கராம், அலவன், நாய், தகர், குயில், தெவ், பூழ், புள், வண்டு]
26. நன்னூல் குறிப்பிடும் அஃறிணைப் பெயர்களில் விளி ஏற்கா எழுத்துக்கள் யாவை?
ஞ, ந, அளபெடையில் மட்டுமே மொழி இறுதியில் வரும் எ, ஒ, ஔ ஐந்து எழுத்துக்களும் அஃறிணைப் பெயர்களில் விளி ஏற்காது [இவை ஒழிந்த 19 எழுத்துக்களும் அஃறிணையில் விளி ஏற்கும்]
27. மூவகைப் பெயர்களும் விளி ஏற்க பொதுவாய் நிகழ்வன யாவை?
இயல்பாதல், ஏ மிகுதல், இ -ஈ ஆதல். [நம்பி - நம்பீ, மயில் -மயிலே]
28. ஐகார இறுதி எவ்வாறு விளி ஏற்கும் என நன்னூலார் கூறுகிறார்?
ஏ மிகல், ஆய், ஆ ஆகத்திரிதல் உண்டு. [அன்னை -அன்னாய், அன்னா]
29. னகர ஈற்று உயர்திணைப் பெயர்கள் எவ்வாறு விளி ஏற்கும்?
1. அளபெடுக்கும் [அம்பர் கிழான் - அம்பர் கிழாஅன்]
2. ஈறு கெடல் [புலவன் - புலவ]
3. ஈற்றயல் நீடல் [பெருமன் - பெருமான்]
4. ஈற்றயல் நீண்டு ஈறு கெடல் [மன்னன் - மன்னா]
5. ஈற்றயல் நீண்டு ஈறு கெட்டு ஓ மிகும் [ஐயன் - ஐயாவோ]
6. ஈறழிந்து ஓகாரம் மிக்கது [திரையன் - திரையவோ]
7. இறுதி யகரமாவது [வாயிலான் - வாயிலாய்]
8. இறுதி ய் ஆகி ஈற்றயல் ஆ ஆகி ஏ பெறல் [வாயிலான் - வாயிலோயே]
9. ஈறழிந்து அகரம் ஏகாரம் ஆகும் [ஐயன் -ஐயோ]
30. ளகர ஈற்று உயர்திணைப் பெயர்கள் எவ்வாறு விளி ஏற்கும்?
1. அளபெடுக்கும் [வேள் - வேஎள்]
2. ஈறு கெடல் [எல்லாள் - எல்லா]
3. ஈற்றயல் நீடல் [மக்கள் - மக்காள்]
4. ள - ய ஆதல் [குழையாள் - குழையாய்]
5. ஈற்றயல் அகரம் ஏ ஆதல் [அடிகள் - அடிகேள்]
31. ரகர ஈற்றுப் பெயர்கள் எவ்வாறு விளி ஏற்கும்?
33. அண்மையில் விளித்தலில் ஈறுகள் எவ்வாறு வரும்?
இயல்பாகவோ, ஈறு கெட்டோ வரும்.
34. சேய்மை விளித்தலில் நிகழ்வன யாவை?
அளபெடுத்தல், புலம்பல், ஓகாரம் மிகல்
35. விளி ஏலாப்பெயர்கள் யாவை?
தாம் [அசை நிலை], நுமன், நுமள், நுமர்[கிளைப்பெயர்], எவன், எவள், எவர்,
எவை, எது, யாவன், யாவள், யாவர், யாவை, யாது, ஏவன், ஏவள், ஏவர், ஏவை,
ஏது [வினாப்பெயர்]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக