இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 செப்டம்பர், 2020

பக்தி இலக்கிய வினா வங்கி 4

 1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள்

2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? 

    பாணபத்திரர்

3. திருவாலவுடையார் இயற்றியது -  சேரமானுக்கு இயற்றிய திருமுக பாசுரம்

4. திருமுக பாசுர காலம் எது? கி. பி. ஆறாம் நூற்றாண்டு

5. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன? புனிதவதியார்

6. காரைக்காலம்மையாரின் கணவர் பெயர்? பரமதத்தன்

7. காரைக்கலம்மையார் எங்கு முத்தி பெற்றார்? திருவாலங்காடு

8. காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து சென்ற இடம் எது? கயிலை

9. காரைக்கால் அம்மையாரின் காலம் - ஆறாம் நூற்றாண்டு

10. 63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அடியவர் யார்?

    காரைக்கலம்மையார்

11. சைவ சமய பக்திப் பாடல்களில் பழமையானவை யாருடைய பாடல்கள்? 

    காரைக்கலம்மையார் [திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்,  

    திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி]

12. கல்லாடர் இயற்றிய நூல் ? திருக்கண்ணப்பர் திருமறம்

13. நக்கீர தேவநாயனார் காலம் எது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு

14. திருமுருகாற்றுப்படை நீங்கலாக நக்கீரர் இயற்றிய நூல்கள் - 9

15. நக்கீரதேவ நாயனாரும் சங்க கால நக்கீரரும் வேறு எனக் கூறியவர் -

    உ.வே.சாமிநாத ஐயர்

16. கபிலதேவ நாயனார் காலம் - கி.பி. 11ஆம் நூற்றாண்டு

17. கபில தேவர் இயற்றிய நூல்கள் எத்தனை? 3 [மூத்தநாயனார் திருவிருட்டை 

    மணிமாலை, சிவ பெருமான் திருவந்தாதி,  சிவபெருமான் திருவிரட்டை 

    மணிமாலை

18. மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை - யாரைப் பற்றியது? விநாயகர் 

19. பரண தேவநாயனாரின் காலம் ? கி.பி 10 ஆம் நூற்.

20. பரண தேவர் நூல் எது? சிவபெருமான் திருவந்தாதி 

21. அதிரா அடிகளின் காலம் என்ன? கி.பி. 7ஆம் நூற்

22. மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவையின் ஆசிரியர் யார்? 

    அதிரா அடிகள்

23. சிவபெருமான் மும்மணிக்கோவை பாடியவர் யார்?எம்பெருமானடிகள்

24. எம்பெருமானடிகளின் வேறு பெயர் என்ன? இளம்பெருமானடிகள்

25. ஐயடிகள் காடவர் கோன் எம்மரபைச் சேர்ந்தவர்? பல்லவர்

26. சேத்திர வெண்பா பாடியவர் யார்? ஐயடிகள்

27. சேரமான் பெருமாள் நாயனாரின் இயற்பெயர்? பெருமாக்கோதையார்

28. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்கள் எத்தனை? 3 [திருக்கைலாய 

    ஞான உலா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை

29. பட்டினத்தடிகளின் இயற்பெயர் யாது? திருவெண்காடர்

30. பட்டினத்தடிகளின் காலம் - 10 ஆம் நூற்.

31. பதினோரு திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் யார்? 

    நம்பியாண்டார் நம்பி

32. யாருடைய வேண்டுகோளை ஏற்று நம்பி திருமுறைகளைத் தொகுத்தார்?         

        இராஜராஜ சோழன்

33. தமிழ் வியாசர் எனப்படுபவர் யார்? நம்பியாண்டார் நம்பி

34. நம்பியாண்டார் நம்பியின் ஊர் எது? திருநாரையூர்

35. பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பியின் எத்தனை நூல்கள் 

        இணைக்கப்பட்டு உள்ளன? 10

36. 63 நாயன்மாரின் வரலாற்றைத் தொகுத்து உருவாக்கப்பட்ட புராணம் எது? 

        பெரிய புராணம்

37. பெரிய புராணத்தின் ஆசிரியர் - சேக்கிழார்

38. சேக்கிழார் பெரிய புராணத்திற்கு இட்ட பெயர்? திருத்தொண்டர் புராணம்

39. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன? அருண்மொழித் தேவர்

40. சேக்கிழார் பெற்ற பட்டம் என்ன? உத்தமச்சோழ பல்லவன்

41. சேக்கிழாரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு ஆகும்.

42. சேக்கிழாரை கல்வெட்டு எவ்வாறு குறிக்கிறது? இராமத்தேவர்

43. தொண்டர் சீர் பரவுவார் எனப்பட்டவர் யார்? சேக்கிழார்

44. நாயன்மார் வாழ்வை அடிப்படையாக வைத்து சுந்தரர் பாடிய நூல்? 

    திருத்தொண்டர் தொகை [11 பாடல்கள் கொண்டது]

45. நம்பியாண்டார் நம்பி இயற்றிய சைவ அடியார் குறித்த நூல் எது? 

    திருத்தொண்டர் திருவந்தாதி [89 பாடல்கள்]

46. பெரிய புராணம் சார்பு நூல் என்றும், தொகை விரி என்றும்     

        குறிக்கப்படுகின்றது.

47. பெரிய புராணத்தை சேக்கிழார் மாக்கதை என்று குறிக்கின்றார்.

48. பெரிய புராணத்திற்கு 'உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தவர் யார்? 

        இறைவன்

49. பெரிய புராணத்திற்கு காப்பியத்தலைவன் சுந்தரர் என்றவர் யார்? பெரிய 

        புராணத்திற்கு உரை எழுதிய சி. கே. சுப்பிரமணிய முதலியார்

50. பெரிய புராணம் 13 சருக்கங்களையும், 4286 விருத்தப்பாக்களையும் 

        கொண்டிருக்கும்.

51. பெரிய புராணம் 63 தனியடியாரையும், 7 தொகையடியாரையும் பாடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...