இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பக்தி இலக்கிய வினா வங்கி -3

  1.  எட்டாம் திருமுறை யாருடைய பாடல்களை உள்ளடக்கியது? மாணிக்க வாசகர்
  2. எட்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் யாவை? திருவாசகம், திருக்கோவையார்
  3. மாணிக்கவாசகரின் ஊர் எது? திருவாதவூர்
  4. மாணிக்கவாசகரின் காலம்?  ஒன்பதாம் நூற்றாண்டு
  5. மாணிக்க வாசகர் எந்த மன்னனிடம் அமைச்சராக இருந்தார்?         அரிமர்த்த பாண்டியன்
  6. அமைச்சராக மாணிக்கவாசகர் பெற்ற பட்டம்? தென்னவன் பிரம்மராயன்
  7. மாணிக்கவாசகரின் வேறு பெயர்? வாதவூரார்
  8. மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானாசிரியனாக வந்து ஞானம் தந்த இடம்? திருப்பெருந்துறையின் குருந்த மரத்தடி
  9. இறைவன் நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி திருவிளையாடல் செய்தது யாருக்காக? மாணிக்கவாசகர்
  10. மாணிக்கவாசகர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 32 
  11. திருவாசகத்தின் முதல் பகுதி - சிவபுராணம்
  12. திருவாசகத்தின் இறுதிப்பகுதி - ஆச்சோப்பதிகம்
  13. திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 659
  14. முதல் கோவை இலக்கியம் எது? திருக்கோவையார்
  15. திருக்கோவையாரில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 400
  16. திருக்கோவையார் எந்தப் பாவால் ஆனது? கட்டளைக்கலித்துறை
  17. திருக்கோவையாருக்கு உரை எழுதியவர் யார்? பேராசிரியர்
  18. 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' - என்றவர் யார்? ஜி.யு.போப்
  19. திருவாசகத்தை 'ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்றவர்? வள்ளலார் 
  20. 'மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிப்பு எய்தி' என திருவாசகத்தால் எழும் மெய்ப்பாட்டைப் புகழ்பவர் யார்? சிவப்பிரகாசர்
  21. மாணிக்க வாசகரின் மார்க்கம் என்ன? சன்மார்க்கம் [ஞான நெறி]
  22. சன்மார்க்கம் என்பது என்ன? ஆசிரியர் - மாணவர் உறவு
  23. ஒன்பதாம் திருமுறையைப் பாடியோர் - ஒன்பதின்மர் [திருமளிகைத்தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், பூந்துருத்தி காடவ நம்பி, கண்டராதிதர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சோதிராயர்]
  24. ஒன்பதாம் திருமுறையில் உள்ளவை? திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
  25. ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பதிகங்கள் உள்ளன? 29
  26. ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 301
  27. ஒன்பதாம் திருமுறையில் அதிகம் சிறப்பிக்கப்படும் ஊர்? சிதம்பரம்
  28. ஒன்பதாம் திருமுறையின் காலம்? கி.பி. 10/11 நூற்றாண்டு
  29. திருமளிகைத்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடி உள்ளார்? 4 [45 படல்]
  30. கருவூர்த்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 10 [105 பாடல்]
  31. சேந்தனார் பாடிய மொத்தப் பதிகங்கள் எத்தனை? 4 [47 பாடல்]
  32. பூந்துருத்தி காடவ நம்பி பாடிய பதிகங்கள் எத்தனை? 2 [12 பாடல்கள்]
  33. சாளரப்பண் என்ற புதிய பண்ணைப் பாடியவர் யார்? பூந்துருத்தி காடவ நம்பி
  34. கண்டராதித்தர் பாடிய பாடல்கள் - 10 [தில்லை பற்றியவை]
  35. வேணாட்டடிகள் பாடிய பாடல்கள் - 10 [சிதம்பரம் பற்றியவை]
  36. திருவாலி அமுதனார் எத்தனைப் பதிகங்கள் பாடினார்?4 [42 பாடல்கள்]
  37. புருடோத்தம நம்பி எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 2 [22 பாடல்கள்]
  38. சோதிராயர் எத்தனைப் பாடல்களைப் பாடினார்? 10
  39. பத்தாம் திருமுறையில் இடம் பெறுபவை? திருமந்திரம்
  40. திருமந்திரத்தை  இயற்றியவர்? திருமூலர்
  41. திருமுறையில் உள்ள இயல்கள் எத்தனை? 9
  42. திருமுறையில் உள்ள அதிகாரங்கள்  எத்தனை? 232
  43. திருமந்திரத்தில் உள்ள பாக்கள் எத்தனை? 3000
  44. 'அன்பே சிவம்' என்றவர் யார்? திருமூலர்
  45. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் '- இது  இடம்பெற்றுள்ள நூல்? திருமந்திரம்
  46. பதினோராம் திருமுறையை இயற்றியோர் - பன்னிருவர் [திருவாலவுடையார், காரைக்கால் அம்மையார், கல்லாட தேவ நாயனார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரண தேவ நாயணார், அதிரா அடிகள், எம்பெருமான் அடிகள், ஐயடிகள் கடவர்கோன், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி]
  47. பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்கள் எத்தனை? 40
  48. பதினோராம் திருமுறை இயற்றியோரில் இறைவன் என நம்பப்படுபவர்? திருவாலவுடையார்
  49. பன்னிரெண்டாம்  திருமுறையாக விளங்கும் நூல்? பெரிய புராணம்
  50. பெரிய புராண ஆசிரியர்? சேக்கிழார்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...