- எட்டாம் திருமுறை யாருடைய பாடல்களை உள்ளடக்கியது? மாணிக்க வாசகர்
- எட்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் யாவை? திருவாசகம், திருக்கோவையார்
- மாணிக்கவாசகரின் ஊர் எது? திருவாதவூர்
- மாணிக்கவாசகரின் காலம்? ஒன்பதாம் நூற்றாண்டு
- மாணிக்க வாசகர் எந்த மன்னனிடம் அமைச்சராக இருந்தார்? அரிமர்த்த பாண்டியன்
- அமைச்சராக மாணிக்கவாசகர் பெற்ற பட்டம்? தென்னவன் பிரம்மராயன்
- மாணிக்கவாசகரின் வேறு பெயர்? வாதவூரார்
- மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானாசிரியனாக வந்து ஞானம் தந்த இடம்? திருப்பெருந்துறையின் குருந்த மரத்தடி
- இறைவன் நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி திருவிளையாடல் செய்தது யாருக்காக? மாணிக்கவாசகர்
- மாணிக்கவாசகர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 32
- திருவாசகத்தின் முதல் பகுதி - சிவபுராணம்
- திருவாசகத்தின் இறுதிப்பகுதி - ஆச்சோப்பதிகம்
- திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 659
- முதல் கோவை இலக்கியம் எது? திருக்கோவையார்
- திருக்கோவையாரில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 400
- திருக்கோவையார் எந்தப் பாவால் ஆனது? கட்டளைக்கலித்துறை
- திருக்கோவையாருக்கு உரை எழுதியவர் யார்? பேராசிரியர்
- 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' - என்றவர் யார்? ஜி.யு.போப்
- திருவாசகத்தை 'ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்றவர்? வள்ளலார்
- 'மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிப்பு எய்தி' என திருவாசகத்தால் எழும் மெய்ப்பாட்டைப் புகழ்பவர் யார்? சிவப்பிரகாசர்
- மாணிக்க வாசகரின் மார்க்கம் என்ன? சன்மார்க்கம் [ஞான நெறி]
- சன்மார்க்கம் என்பது என்ன? ஆசிரியர் - மாணவர் உறவு
- ஒன்பதாம் திருமுறையைப் பாடியோர் - ஒன்பதின்மர் [திருமளிகைத்தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், பூந்துருத்தி காடவ நம்பி, கண்டராதிதர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சோதிராயர்]
- ஒன்பதாம் திருமுறையில் உள்ளவை? திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
- ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பதிகங்கள் உள்ளன? 29
- ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 301
- ஒன்பதாம் திருமுறையில் அதிகம் சிறப்பிக்கப்படும் ஊர்? சிதம்பரம்
- ஒன்பதாம் திருமுறையின் காலம்? கி.பி. 10/11 நூற்றாண்டு
- திருமளிகைத்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடி உள்ளார்? 4 [45 படல்]
- கருவூர்த்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 10 [105 பாடல்]
- சேந்தனார் பாடிய மொத்தப் பதிகங்கள் எத்தனை? 4 [47 பாடல்]
- பூந்துருத்தி காடவ நம்பி பாடிய பதிகங்கள் எத்தனை? 2 [12 பாடல்கள்]
- சாளரப்பண் என்ற புதிய பண்ணைப் பாடியவர் யார்? பூந்துருத்தி காடவ நம்பி
- கண்டராதித்தர் பாடிய பாடல்கள் - 10 [தில்லை பற்றியவை]
- வேணாட்டடிகள் பாடிய பாடல்கள் - 10 [சிதம்பரம் பற்றியவை]
- திருவாலி அமுதனார் எத்தனைப் பதிகங்கள் பாடினார்?4 [42 பாடல்கள்]
- புருடோத்தம நம்பி எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 2 [22 பாடல்கள்]
- சோதிராயர் எத்தனைப் பாடல்களைப் பாடினார்? 10
- பத்தாம் திருமுறையில் இடம் பெறுபவை? திருமந்திரம்
- திருமந்திரத்தை இயற்றியவர்? திருமூலர்
- திருமுறையில் உள்ள இயல்கள் எத்தனை? 9
- திருமுறையில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? 232
- திருமந்திரத்தில் உள்ள பாக்கள் எத்தனை? 3000
- 'அன்பே சிவம்' என்றவர் யார்? திருமூலர்
- 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் '- இது இடம்பெற்றுள்ள நூல்? திருமந்திரம்
- பதினோராம் திருமுறையை இயற்றியோர் - பன்னிருவர் [திருவாலவுடையார், காரைக்கால் அம்மையார், கல்லாட தேவ நாயனார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரண தேவ நாயணார், அதிரா அடிகள், எம்பெருமான் அடிகள், ஐயடிகள் கடவர்கோன், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி]
- பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்கள் எத்தனை? 40
- பதினோராம் திருமுறை இயற்றியோரில் இறைவன் என நம்பப்படுபவர்? திருவாலவுடையார்
- பன்னிரெண்டாம் திருமுறையாக விளங்கும் நூல்? பெரிய புராணம்
- பெரிய புராண ஆசிரியர்? சேக்கிழார்
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 20 செப்டம்பர், 2020
பக்தி இலக்கிய வினா வங்கி -3
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக