இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 செப்டம்பர், 2020

ஈழத்தமிழ் படைப்பாளர்கள்

  1. சங்ககால இலங்கைப்படைப்பாளர் யார்? ஈழத்துப் பூந்தேவனார்
  2. ஈழத்துப் பூந்தேவனார் இயற்றிய பாடல்கள் எத்தனை? ஏழு பாடல்கள் [அகம். 88, 231, 307, குறுந்தொகை 182, 343, 360, நற்றிணை 366]
  3. பனைமரம் பற்றி புதிய நோக்கில் இயற்றப்பட்ட ஈழ படைப்பு எது? காசினாத புலவர் தல புராணம் [சுப்பையா]
  4.  சுப்பையா பாடிய வேறு புராணம் எது? கனகி புராணம்
  5. நீதிமன்றம் குறித்து உருவாக்கப்பட்ட ஈழத்து சிற்றிலக்கியம் எது? கோட்டுப்புராணம் [வே.இராமலிங்கம்]
  6. இலங்கையில் இயற்றப்பட்ட முதல் புதினம் யாது? தி.த. சரவண முத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி
  7. இலங்கையில் முதல் புதினம் வெளிவந்த ஆண்டு? 1895
  8. இலன்கையின் முதல் அறிவியல் நாவல் எது? அந்தரத்தீவு
  9. அந்தரத்தீவின் ஆசிரியர் யார்? கே. எஸ். மகேசன்
  10. யாழ்ப்பாணத்தில் பிறந்த பதிப்பு முதல்வர் யார்? சி.வை.தாமோதரம்பிள்ளை
  11. இலங்கையின் இலக்கிய விளக்கு எனப் போற்றப்படுபவர் யார்? ஆறுமுக நாவலர்
  12. ஆறுமுக நாவலரின் தந்தை யார்? கந்தப்பிள்ளை
  13. கந்தப்பிள்ளை இயற்றிய நாடகங்கள் எத்தனை 20
  14. கந்தப்பிள்ளையால் இயற்றப்பட்ட நாடகங்களில் புகழ்பெற்றன யாவை? இராமவிலாசம், சந்திர காசம்
  15. கோவலன் நாடகத்தை இயற்றியவர் யார்? இணுவிற் சின்னத்தம்பி
  16. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோரின் முதல் கவிதைத் தொகுப்பு எது? துருவச் சுவடுகள்
  17. துருவச்சுவடுகள் எங்கிருந்து வெளிவந்தது? நார்வேயில் உள்ள சுவடுகள் பதிப்பகத்தில் இருந்து
  18. புலம்பெயர்ந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் குறிப்பிடத்தகுந்த பெண் படைப்பு எது? மறையாத மறுபாதி
  19. புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளர்கள் சஞ்சிகையில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு எது? மண்ணைத்தேடும் மனங்கள்
  20. மண்ணைத் தேடும் மனங்கள் வெளிவந்த ஆண்டு? 1986
  21. ஈழத்துப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைத்தொகுப்பு எது? புது உலகம் எமை நோக்கி
  22. இலங்கையில் புனைகதை இலக்கியத்தை வளர்த்தவர்கள் - சிவபாத சுந்தரம், டோமினிக் ஜீவா, டேனியல், எச். பொன்னுத்துரை, செ. கணேசலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...