- சங்ககால இலங்கைப்படைப்பாளர் யார்? ஈழத்துப் பூந்தேவனார்
- ஈழத்துப் பூந்தேவனார் இயற்றிய பாடல்கள் எத்தனை? ஏழு பாடல்கள் [அகம். 88, 231, 307, குறுந்தொகை 182, 343, 360, நற்றிணை 366]
- பனைமரம் பற்றி புதிய நோக்கில் இயற்றப்பட்ட ஈழ படைப்பு எது? காசினாத புலவர் தல புராணம் [சுப்பையா]
- சுப்பையா பாடிய வேறு புராணம் எது? கனகி புராணம்
- நீதிமன்றம் குறித்து உருவாக்கப்பட்ட ஈழத்து சிற்றிலக்கியம் எது? கோட்டுப்புராணம் [வே.இராமலிங்கம்]
- இலங்கையில் இயற்றப்பட்ட முதல் புதினம் யாது? தி.த. சரவண முத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி
- இலங்கையில் முதல் புதினம் வெளிவந்த ஆண்டு? 1895
- இலன்கையின் முதல் அறிவியல் நாவல் எது? அந்தரத்தீவு
- அந்தரத்தீவின் ஆசிரியர் யார்? கே. எஸ். மகேசன்
- யாழ்ப்பாணத்தில் பிறந்த பதிப்பு முதல்வர் யார்? சி.வை.தாமோதரம்பிள்ளை
- இலங்கையின் இலக்கிய விளக்கு எனப் போற்றப்படுபவர் யார்? ஆறுமுக நாவலர்
- ஆறுமுக நாவலரின் தந்தை யார்? கந்தப்பிள்ளை
- கந்தப்பிள்ளை இயற்றிய நாடகங்கள் எத்தனை 20
- கந்தப்பிள்ளையால் இயற்றப்பட்ட நாடகங்களில் புகழ்பெற்றன யாவை? இராமவிலாசம், சந்திர காசம்
- கோவலன் நாடகத்தை இயற்றியவர் யார்? இணுவிற் சின்னத்தம்பி
- இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோரின் முதல் கவிதைத் தொகுப்பு எது? துருவச் சுவடுகள்
- துருவச்சுவடுகள் எங்கிருந்து வெளிவந்தது? நார்வேயில் உள்ள சுவடுகள் பதிப்பகத்தில் இருந்து
- புலம்பெயர்ந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் குறிப்பிடத்தகுந்த பெண் படைப்பு எது? மறையாத மறுபாதி
- புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளர்கள் சஞ்சிகையில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு எது? மண்ணைத்தேடும் மனங்கள்
- மண்ணைத் தேடும் மனங்கள் வெளிவந்த ஆண்டு? 1986
- ஈழத்துப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைத்தொகுப்பு எது? புது உலகம் எமை நோக்கி
- இலங்கையில் புனைகதை இலக்கியத்தை வளர்த்தவர்கள் - சிவபாத சுந்தரம், டோமினிக் ஜீவா, டேனியல், எச். பொன்னுத்துரை, செ. கணேசலிங்கம்
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 21 செப்டம்பர், 2020
ஈழத்தமிழ் படைப்பாளர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக